என் மலர்
நீங்கள் தேடியது "புரோ கபடி லீக்"
- புனேரி பல்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
- ப்ரோ கபடி லீக்கில் பெங்களூரு அணிக்காக 64 Tackle புள்ளிகளை தமிழக வீரர் தீபக் சங்கர் எடுத்தார்.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடைபெற்றது. லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்த நிலையில் தபாங் டெல்லி, புனேரி பல்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி அணியும், புனேரி பல்தான் அணியும் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தன. முதல் பாதி முடிவில் டெல்லி அணி 20-14 என முன்னிலை பெற்றது.
இறுதியில், தபாங் டெல்லி அணி 31-28 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
இந்நிலையில் புரோ கபடி லீக்கில் பெங்களூரு அணிக்காக 64 Tackle புள்ளிகள் எடுத்து பலரையும் கவர்ந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் தீபக் சங்கர், இந்த சீசனின் புதிய இளம் வீரருக்கான விருதை வென்று அசத்தியுள்ளார்.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது.
- இன்று நடந்த இறுதிச்சுற்றில் புனேரி பல்தான் தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடைபெற்றது. லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்த நிலையில் தபாங் டெல்லி, புனேரி பல்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இன்று நடந்த இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி அணியும், புனேரி பல்தான் அணியும் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தன. முதல் பாதி முடிவில் டெல்லி அணி 20-14 என முன்னிலை பெற்றது.
இறுதியில், தபாங் டெல்லி அணி 31-28 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
- நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் 3 முறை மோதி இருக்கின்றன.
- 3 தடவையும் சமனில் முடிந்ததால் ஆட்டத்தில் டைபிரேக்கர் மூலமே முடிவு கிடைத்தது.
புதுடெல்லி:
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி தொடங்கியது. இதில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான தபாங் டெல்லி-புனேரி பால்டன் அணிகள் சந்திக்கின்றன. அஷூ மாலிக் தலைமையிலான தபாங் டெல்லி அணி லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 2-வது இடம் பெற்றதுடன், முதலாவது தகுதி சுற்றில் டைபிரேக்கரில் (6-4) புனேரி பால்டனை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. டெல்லி 2019-ம் ஆண்டில் 2-வது இடமும், 2021-22-ம் ஆண்டில் சாம்பியன் பட்டமும் வென்றிருந்தது.
அஸ்லாம் இனாம்தார் தலைமையிலான புனேரி பால்டன் அணி லீக் சுற்று பிரிவில் முதலிடம் பிடித்தது. 2-வது தகுதி சுற்றில் சரிவில் இருந்து மீண்டு வந்து 50-45 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வெளியேற்றி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. புனே அணி 2022-ம் ஆண்டு 2-வது இடமும், 2023-ம் ஆண்டு சாம்பியன் பட்டமும் கைப்பற்றி இருந்தது.
நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் 3 முறை மோதி இருக்கின்றன. 3 தடவையும் சமனில் முடிந்ததால் ஆட்டத்தில் டைபிரேக்கர் மூலமே முடிவு கிடைத்தது. இதில் டெல்லி 2 ஆட்டத்திலும், புனே ஒரு ஆட்டத்திலும் வெற்றி கண்டன. இன்றைய ஆட்டத்திலும் இரு அணிகளும் நீயா-நானா? என கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசாக வழங்கப்படும். இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் தபாங் டெல்லியை சந்திக்கும்.
- இறுதிப்போட்டி வருகிற 31-ந்தேதி (வெள்ளிக் கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது.
புதுடெல்லி:
12-வது புரோ கபடி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் குவாலிபயர்-2 (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) ஆட்டத்தில் புனேரி பல்தான்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் தபாங் டெல்லியை சந்திக்கும். தோற்கும் அணி வெளியேற்றப்படும். பாட்னாவின் ஆதிக்கத்துக்கு தெலுங்கு டைட்டன்ஸ் முடிவு கட்டியது. நேற்று நடந்த எலிமினேட்டர்-3 போட்டியில் அந்த அணி 46-39 என்ற கணக்கில் பாட்னாவை தோற்கடித்தது.
இரு அணிகளும் இந்த தொடரில் மோதிய முதல் ஆட்டத்தில் புனேயும் (39-33),2-வது போட்டியில் தெலுங்கு டைட்டன்சும் ( 40-31) வெற்றி பெற்றன. இதனால் 2-வதாக இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதிப்போட்டி வருகிற 31-ந்தேதி (வெள்ளிக் கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த எலிமினேட்டர் 3 ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
புனே, டெல்லி, பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா, மும்பை, பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய அணிகள் முறையே முதல் 8 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இன்று நடந்த எலிமினேட்டர் 3 சுற்று போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தன.
இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-39 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி 2-வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
நாளை நடைபெற உள்ள 2வது தகுதிச்சுற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி புனேரி பால்டன் அணியுடன் மோதுகிறது.
- இதில் வெற்றி பெறும் அணி குவாலியர் 2 (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) ஆட்டத்தில் புனே அணியுடன் நாளை மோதும்.
- பாட்னா அணி தொடர்ச்சியாக 8 ஆட்டத்தில் வெற்றி பெற்று முன்னேறி வருகிறது.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர்-3 ஆட்டத்தில் பாட்னா-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி குவாலியர் 2 (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) ஆட்டத்தில் புனே அணியுடன் நாளை மோதும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.
பாட்னா அணி தொடர்ச்சியாக 8 ஆட்டத்தில் வெற்றி பெற்று முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நட்சத்திர வீரர் அயனின் அபாரமான ஆட்டமே காரணம். அவர் இந்த தொடரில் இதுவரை 294 ரைடு புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார்.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக்கில் நேற்று முன்தினத்தோடு லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
புனே, டெல்லி, பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா, மும்பை, பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய அணிகள் முறையே முதல் 8 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. தற்போது பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த மினி குவாலிபையர் சுற்று போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே தெலுங்கு டைட்டன்ஸ் அணி சிறப்பாக ஆடியது.
இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-32 என்ற புள்ளிக் கணக்கில் வென்று எலிமினேட்டர் 3 சுற்றுக்கு முன்னேறியது.
இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் 2 சுற்றில் பாட்னா அணி பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதுகிறது.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக்கில் நேற்று முன்தினத்தோடு லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
புனே, டெல்லி, பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா, மும்பை, பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய அணிகள் முறையே முதல் 8 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நேற்று ஆரம்பித்தன.
இன்று நடந்த எலிமினேட்டர் 1 சுற்று போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே பாட்னா அணி அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தது.
இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 48-32 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி எலிமினேட்டர் 2 சுற்றுக்கு முன்னேறியது.
நாளை நடைபெற உள்ள எலிமினேட்டர் 2 சுற்றில் பாட்னா அணி பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதுகிறது.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக்கில் நேற்று முன்தினத்தோடு லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
புனே, டெல்லி, பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா, மும்பை, பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய அணிகள் முறையே முதல் 8 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில், பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பித்தன.
இன்று நடந்த முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின.
இறுதியில் ஜெய்ப்பூர் அணி 30-27 என்ற புள்ளிக் கணக்கில் வென்று எலிமினேட்டர் 1 சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியும், யு மும்பா அணியும் மோதின. ஆரம்பம் முதலே பாட்னா அணி அதிரடியாக ஆடி புள்ளிகளைக் குவித்தது.
இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 40-31 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி எலிமினேட்டர் 1 சுற்றுக்கு முன்னேறியது. மும்பையிடம் லீக் போட்டியில் அடைந்த தோல்விக்கு பாட்னா இன்று பழிதீர்த்துக் கொண்டது.
தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
நாளை நடைபெற உள்ள எலிமினேட்டர் 1 சுற்றில் ஜெய்ப்பூர், பாட்னா அணிகள் மோதுகின்றன.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
முதல் கட்டமாக நடந்த லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன.
இந்நிலையில், லீக் சுற்று முடிவில் புனேரி பால்டன், தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
தமிழ் தலைவாஸ் உள்பட 4 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.
போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. ஆரம்பம் முதலே பாட்னா அணி அதிரடியாக ஆடி புள்ளிகளைக் குவித்தது.
இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 33-18 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 18 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று 16 புள்ளிகள் பெற்றுள்ள பாட்னா பைரேட்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் நுழைந்தது.
மற்ற போட்டிகளில் பெங்களூரு புல்ஸ் குஜராத் அணியையும், யுபி யோதாஸ் யு மும்பா அணியையும் வீழ்த்தியது.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த போட்டியில் தொடக்கம் முதலே பாட்னா அணி அதிரடியாக ஆடி புள்ளிகளைக் குவித்தது.
இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 61-26 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 17 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றுள்ள பாட்னா பைரேட்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.






