என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக்: பாட்னா ஆதிக்கத்தை தெலுங்கு டைட்டன்ஸ் தடுக்குமா?
    X

    புரோ கபடி லீக்: பாட்னா ஆதிக்கத்தை தெலுங்கு டைட்டன்ஸ் தடுக்குமா?

    • இதில் வெற்றி பெறும் அணி குவாலியர் 2 (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) ஆட்டத்தில் புனே அணியுடன் நாளை மோதும்.
    • பாட்னா அணி தொடர்ச்சியாக 8 ஆட்டத்தில் வெற்றி பெற்று முன்னேறி வருகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர்-3 ஆட்டத்தில் பாட்னா-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி குவாலியர் 2 (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) ஆட்டத்தில் புனே அணியுடன் நாளை மோதும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    பாட்னா அணி தொடர்ச்சியாக 8 ஆட்டத்தில் வெற்றி பெற்று முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நட்சத்திர வீரர் அயனின் அபாரமான ஆட்டமே காரணம். அவர் இந்த தொடரில் இதுவரை 294 ரைடு புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

    Next Story
    ×