என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி எலிமினேட்டர் 2 சுற்றுக்கு முன்னேறியது பாட்னா
    X

    புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி எலிமினேட்டர் 2 சுற்றுக்கு முன்னேறியது பாட்னா

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக்கில் நேற்று முன்தினத்தோடு லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.

    புனே, டெல்லி, பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா, மும்பை, பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய அணிகள் முறையே முதல் 8 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நேற்று ஆரம்பித்தன.

    இன்று நடந்த எலிமினேட்டர் 1 சுற்று போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.

    ஆரம்பத்தில் இருந்தே பாட்னா அணி அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தது.

    இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 48-32 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி எலிமினேட்டர் 2 சுற்றுக்கு முன்னேறியது.

    நாளை நடைபெற உள்ள எலிமினேட்டர் 2 சுற்றில் பாட்னா அணி பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதுகிறது.

    Next Story
    ×