என் மலர்
விளையாட்டு

புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி எலிமினேட்டர் 2 சுற்றுக்கு முன்னேறியது பாட்னா
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக்கில் நேற்று முன்தினத்தோடு லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
புனே, டெல்லி, பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா, மும்பை, பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய அணிகள் முறையே முதல் 8 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நேற்று ஆரம்பித்தன.
இன்று நடந்த எலிமினேட்டர் 1 சுற்று போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே பாட்னா அணி அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தது.
இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 48-32 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி எலிமினேட்டர் 2 சுற்றுக்கு முன்னேறியது.
நாளை நடைபெற உள்ள எலிமினேட்டர் 2 சுற்றில் பாட்னா அணி பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதுகிறது.
Next Story






