என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? புனே-தெலுங்கு டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை
    X

    புரோ கபடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? புனே-தெலுங்கு டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை

    • இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் தபாங் டெல்லியை சந்திக்கும்.
    • இறுதிப்போட்டி வருகிற 31-ந்தேதி (வெள்ளிக் கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    புதுடெல்லி:

    12-வது புரோ கபடி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் குவாலிபயர்-2 (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) ஆட்டத்தில் புனேரி பல்தான்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் தபாங் டெல்லியை சந்திக்கும். தோற்கும் அணி வெளியேற்றப்படும். பாட்னாவின் ஆதிக்கத்துக்கு தெலுங்கு டைட்டன்ஸ் முடிவு கட்டியது. நேற்று நடந்த எலிமினேட்டர்-3 போட்டியில் அந்த அணி 46-39 என்ற கணக்கில் பாட்னாவை தோற்கடித்தது.

    இரு அணிகளும் இந்த தொடரில் மோதிய முதல் ஆட்டத்தில் புனேயும் (39-33),2-வது போட்டியில் தெலுங்கு டைட்டன்சும் ( 40-31) வெற்றி பெற்றன. இதனால் 2-வதாக இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இறுதிப்போட்டி வருகிற 31-ந்தேதி (வெள்ளிக் கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    Next Story
    ×