என் மலர்
விளையாட்டு

புரோ கபடி லீக்: எலிமினேட்டர் 3 சுற்றுக்கு முன்னேறியது தெலுங்கு டைட்டன்ஸ்
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக்கில் நேற்று முன்தினத்தோடு லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
புனே, டெல்லி, பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா, மும்பை, பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய அணிகள் முறையே முதல் 8 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. தற்போது பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த மினி குவாலிபையர் சுற்று போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே தெலுங்கு டைட்டன்ஸ் அணி சிறப்பாக ஆடியது.
இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-32 என்ற புள்ளிக் கணக்கில் வென்று எலிமினேட்டர் 3 சுற்றுக்கு முன்னேறியது.
இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் 2 சுற்றில் பாட்னா அணி பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதுகிறது.
Next Story






