என் மலர்
கோவில்கள்
புண்ணிய தலமாகவும், முக்தி தலமாகவும் போற்றப்படும் இந்த ஆலயம், காசியை விடவும், மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மணிமுக்தாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது, விருத்தகிரீஸ்வரர் கோவில். இத்தல இறைவனுக்கு ‘பழமலைநாதர்’ என்ற பெயரும் உண்டு. பிரம்மதேவனும், அகத்தியரும் வழிபாடு செய்த இந்த ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று பெருமைகளையும் கொண்ட சிறப்புமிக்கது. முன்காலத்தில் இத்தல இறைவன் மலையாக காட்சியளித்தவர் என்பதால் இவருக்கு ‘முதுகுன்றீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. இந்த ஊரும் முன்காலத்தில் ‘திருமுதுகுன்றம்’ என்றே அழைக்கப்பட்டுள்ளது.
இத்தல அம்பாளின் திருநாமம், பெரியநாயகி என்பதாகும். ‘விருத்தாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார். குரு நமச்சிவாயத்திற்கு இளமையாக காட்சி கொடுத்ததால், ‘பாலம்பிகை’, ‘இளையநாயகி’ என்ற பெயரும் உண்டு. புண்ணிய தலமாகவும், முக்தி தலமாகவும் போற்றப்படும் இந்த ஆலயம், காசியை விடவும், மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு
நான்கு புறமும் 26 அடி உயரமுள்ள மதில் சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் கொண்ட பரந்து விரிந்த ஆலயமாக, விருத்தகிரீஸ்வரர் கோவில் விளங்குகிறது. கோவிலின் நான்கு புறங்களிலும் விண்ணை முட்டும் உயரத்தில் 7 நிலை கோபுரங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் தல விநாயகராக, ‘ஆழத்து விநாயகர்’ போற்றப்படுகிறார். இவரது சன்னிதி, கோவிலின் உள்ளே கிழக்கு நோக்கி சுமார் 18 அடி ஆழத்துக்குள் அமைந்து இருப்பதால், இந்தப் பெயர் வந்தது. விநாயகரின் ஆறு படைவீடுகளில் இது 2-வது படைவீடாகும். இதற்கு தனி மூன்று நிலை கோபுரமும், கொடிமரமும் உள்ளது.
சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இதை விளக்கும் விதமாக 28 லிங்கங்களை இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ததாக தல வரலாறு சொல்கிறது. இந்த 28 லிங்கங்களும், தனித்தனி சன்னிதிகளாக அமைந்துள்ளன. இந்த லிங்கங்களுக்கு நடுவே விநாயகரும், வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமானும் காட்சி யளிக்கின்றனர். கோவிலில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர், காசியில் இருப்பது போன்ற வடிவமைப்பை கொண்டவர். இவரது கையில் வில் உள்ளது மற்றொரு தனிச் சிறப்பு.
சிவபெருமானை வழிபடும் அடியார்களின் அடிப்படை மந்திரமாக திகழ்வது, ‘நமசிவாய.’ இதனை ‘பஞ்சாட்சரம்’ என்பார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு, இங்கே ஐந்தாக அமைந்த விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றில் 5 பிரகாரங்கள், 5 கோபுரங்கள், 5 கொடிமரங்கள், 5 நந்திகள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் முக்கியமானவை. மாசி மக பெருவிழாவின் போது, 5 கொடி மரங் களிலும் பெருவிழா கொடியேற்றம் நடைபெறும்.
இவ்வாலயத்தின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. இக்கோவில் திருப்பணி செய்த விபசித்து முனிவர் என்பவர், திருப்பணி செய்தவர்களுக்கு, வன்னி மரத்தின் இலையை ஒரு துணியில் வைத்து முடிந்து கொடுத்துள்ளார். அதை வேலை செய்தவர்கள் வீட்டிற்குச் சென்று பிரித்து பார்த்தபோது, அவர்களின் கூலித் தொகை அதில் இருந்ததாகவும், இத்தல புராணம் பதிவு செய்கிறது.
இத்தல அம்பாளின் திருநாமம், பெரியநாயகி என்பதாகும். ‘விருத்தாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார். குரு நமச்சிவாயத்திற்கு இளமையாக காட்சி கொடுத்ததால், ‘பாலம்பிகை’, ‘இளையநாயகி’ என்ற பெயரும் உண்டு. புண்ணிய தலமாகவும், முக்தி தலமாகவும் போற்றப்படும் இந்த ஆலயம், காசியை விடவும், மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு
நான்கு புறமும் 26 அடி உயரமுள்ள மதில் சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் கொண்ட பரந்து விரிந்த ஆலயமாக, விருத்தகிரீஸ்வரர் கோவில் விளங்குகிறது. கோவிலின் நான்கு புறங்களிலும் விண்ணை முட்டும் உயரத்தில் 7 நிலை கோபுரங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் தல விநாயகராக, ‘ஆழத்து விநாயகர்’ போற்றப்படுகிறார். இவரது சன்னிதி, கோவிலின் உள்ளே கிழக்கு நோக்கி சுமார் 18 அடி ஆழத்துக்குள் அமைந்து இருப்பதால், இந்தப் பெயர் வந்தது. விநாயகரின் ஆறு படைவீடுகளில் இது 2-வது படைவீடாகும். இதற்கு தனி மூன்று நிலை கோபுரமும், கொடிமரமும் உள்ளது.
சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இதை விளக்கும் விதமாக 28 லிங்கங்களை இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ததாக தல வரலாறு சொல்கிறது. இந்த 28 லிங்கங்களும், தனித்தனி சன்னிதிகளாக அமைந்துள்ளன. இந்த லிங்கங்களுக்கு நடுவே விநாயகரும், வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமானும் காட்சி யளிக்கின்றனர். கோவிலில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர், காசியில் இருப்பது போன்ற வடிவமைப்பை கொண்டவர். இவரது கையில் வில் உள்ளது மற்றொரு தனிச் சிறப்பு.
சிவபெருமானை வழிபடும் அடியார்களின் அடிப்படை மந்திரமாக திகழ்வது, ‘நமசிவாய.’ இதனை ‘பஞ்சாட்சரம்’ என்பார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு, இங்கே ஐந்தாக அமைந்த விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றில் 5 பிரகாரங்கள், 5 கோபுரங்கள், 5 கொடிமரங்கள், 5 நந்திகள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் முக்கியமானவை. மாசி மக பெருவிழாவின் போது, 5 கொடி மரங் களிலும் பெருவிழா கொடியேற்றம் நடைபெறும்.
இவ்வாலயத்தின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. இக்கோவில் திருப்பணி செய்த விபசித்து முனிவர் என்பவர், திருப்பணி செய்தவர்களுக்கு, வன்னி மரத்தின் இலையை ஒரு துணியில் வைத்து முடிந்து கொடுத்துள்ளார். அதை வேலை செய்தவர்கள் வீட்டிற்குச் சென்று பிரித்து பார்த்தபோது, அவர்களின் கூலித் தொகை அதில் இருந்ததாகவும், இத்தல புராணம் பதிவு செய்கிறது.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் சாப்பிட்டால், எவ்வித நோயாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற 274 சிவன் கோவில்களில், 258-வது தேவாரத் தலமாக இது விளங்குகிறது. 5 நிலைகளுடன் அமைந்த இவ்வாலயத்தின் மூலவர் வீற்றிருக்கும் விமானத்திற்கு ‘சதுர்வஸ்தம்’ என்று பெயர்.ஒரு முறை அபயதீட்சிதர் என்ற பக்தர், இறைவனை தரிசிக்க வந்தார். அப்போது பெரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவிலுக்குள் செல்ல முடியவில்லை.
அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால், இறைவனின் முதுகுப்பகுதியைத்தான் தரிசிக்க முடிந்தது. “இறைவா.. உன் முகம் காட்டு’ என்று அவர் வேண்டியதன் பேரில், இறைவன் மேற்கு முகமாக திரும்பி தன் முக தரிசனத்தை வழங்கினார். இதனால் இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்கிறார்.கோவில் பிரகாரத்தில் அகத்தியருக்கும், வால்மீகிக்கும், சிவபெருமான் காட்சி கொடுத்த வன்னிமரம் உள்ளது.
தினமும் அதிகாலையில் கோ பூஜை செய்யப்பட்ட பிறகே, இத்தல இறைவனான மருந்தீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்யப்படும்.அகத்தியர் இத்தலம் வந்து ஈசனை வழிபட்டார். அவருக்கு வன்னி மரத்தடியில் காட்சி தந்த ஈசன், உலகில் தோன்றியுள்ள நோய்கள் பற்றியும், அதற்கான மருந்துகளையும், மருந்துகளை தயார் செய்வதற்கான மூலிகைகளையும் பற்றி உபதேசித்தார்.
எனவேதான் இத்தல இறைவன் ‘மருந்தீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார்.மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் சாப்பிட்டால், எவ்வித நோயாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது ஐதீகம், பாவங்களும் தீரும். வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்கினால் முக்தி கிடைக்கும்.
சென்னை அடுத்த திருவான்மியூரில் அமைந்துள்ளது, மருந்தீஸ்வரர் திருக்கோவில்.
இத்தல மூலவரான மருந்தீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் போன்ற பெயர்களும் உண்டு. உற்சவர் திருநாமம், ‘தியாகராஜர்’ என்பதாகும்.
கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி, மனம் திருந்திட எண்ணம் கொண்டு இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். அவருக்கு வன்னி மரத்தடியில் இறைவன் காட்சி கொடுத்தார். இதனால் இந்த ஊர் ‘திருவான்மீகியூர்’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி ‘திருவான்மியூர்’ ஆனது.
இவ்வாலயத்தில் திரிபுரசுந்தரி அம்மன், நடராஜர், அருணகிரியாரால் பாடப்பட்ட முத்துக்குமாரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்ச லிங்கங்கள் ஆகிய தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால், இறைவனின் முதுகுப்பகுதியைத்தான் தரிசிக்க முடிந்தது. “இறைவா.. உன் முகம் காட்டு’ என்று அவர் வேண்டியதன் பேரில், இறைவன் மேற்கு முகமாக திரும்பி தன் முக தரிசனத்தை வழங்கினார். இதனால் இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்கிறார்.கோவில் பிரகாரத்தில் அகத்தியருக்கும், வால்மீகிக்கும், சிவபெருமான் காட்சி கொடுத்த வன்னிமரம் உள்ளது.
தினமும் அதிகாலையில் கோ பூஜை செய்யப்பட்ட பிறகே, இத்தல இறைவனான மருந்தீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்யப்படும்.அகத்தியர் இத்தலம் வந்து ஈசனை வழிபட்டார். அவருக்கு வன்னி மரத்தடியில் காட்சி தந்த ஈசன், உலகில் தோன்றியுள்ள நோய்கள் பற்றியும், அதற்கான மருந்துகளையும், மருந்துகளை தயார் செய்வதற்கான மூலிகைகளையும் பற்றி உபதேசித்தார்.
எனவேதான் இத்தல இறைவன் ‘மருந்தீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார்.மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் சாப்பிட்டால், எவ்வித நோயாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது ஐதீகம், பாவங்களும் தீரும். வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்கினால் முக்தி கிடைக்கும்.
சென்னை அடுத்த திருவான்மியூரில் அமைந்துள்ளது, மருந்தீஸ்வரர் திருக்கோவில்.
இத்தல மூலவரான மருந்தீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் போன்ற பெயர்களும் உண்டு. உற்சவர் திருநாமம், ‘தியாகராஜர்’ என்பதாகும்.
கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி, மனம் திருந்திட எண்ணம் கொண்டு இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். அவருக்கு வன்னி மரத்தடியில் இறைவன் காட்சி கொடுத்தார். இதனால் இந்த ஊர் ‘திருவான்மீகியூர்’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி ‘திருவான்மியூர்’ ஆனது.
இவ்வாலயத்தில் திரிபுரசுந்தரி அம்மன், நடராஜர், அருணகிரியாரால் பாடப்பட்ட முத்துக்குமாரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்ச லிங்கங்கள் ஆகிய தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோவில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து திருமணம் உடனே நடந்து விடுகிறது.
புராண பெயர்(கள்): மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி
மூலவர்: உத்வாகநாதர், அருள்வள்ளநாதர்
தாயார்: கோகிலா
தல விருட்சம்:கருஊமத்தை
ஊர்: திருமணஞ்சேரி
மாவட்டம்: மயிலாடுதுறை
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில் அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது.
சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 25 வது தேவாரத்தலம் ஆகும்.
இங்கு நவகிரகங்கள் கிடையாது. மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார். இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி,கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன. கோவிலுக்கு திருமண வரம் வேண்டி, குழந்தைப் பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் கோவில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜை சாமான்கள் விற்கும் இடத்திலேயே பொருட்களை வாங்கி பூஜை செய்வது சிறப்பு.
ராகு கிரக தோச நிவர்த்திக்கும் இந்த தலம் சால சிறப்புடையது. ராகு தோசம் பிடிக்கப்பட்டு புத்திர பாக்கியம் இத்தலத்தில் வழிபட்டு குழந்தைப்பாக்கியம் பெறுகிறார்கள். பிரிந்த தம்பதியர், மற்றும் அண்ணன் தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேசமான மற்றொரு அம்சம். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் உத்வாகநாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோவில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து திருமணம் உடனே நடந்து விடுகிறது. திருமண பிரார்த்தனைக்காக இத்தலத்தில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை என்பது மிகவும் பிரசித்தமானது. இந்த கல்யாண அர்ச்சனைக்கு (திருமணத்திற்கு முன்பாகவும் திருமணம் முடிந்த பிறகும்) இரண்டு மாலை, இரண்டு தேங்காய், மற்றும் மஞ்சள், குங்குமம், சூடம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், சர்க்கரை வாங்கி வரவேண்டும். கல்யாண அர்ச்சனை என்பதால் இதில் குறிப்பாக கற்கண்டு இருந்தாக வேண்டும்.
கோவிலுக்குள் இருக்கும் மற்ற மூர்த்திகளையெல்லாம் வணங்கி விட்டு கல்யாணசுந்தரர் சன்னதி முன்பாக இருக்கும் பெரிய ஹாலில் நீண்ட வரிசையாக அமர்கிறார்கள். இதில் கல்யாண வரம் வேண்டுவோர் ஒருவரிசையாகவும், இத்தலத்தில் வேண்டிக் கொண்டு கல்யாணம் ஆகப்பெற்ற புதுமணத்தம்பதிகள் ஒருவரிசையாகவும் அமர்கிறார்கள். பின்பு பூஜைக்குரிய சாமான்களை அர்ச்சகர் வாங்கிக் கொண்டு கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்கிறார்.சுவாமி மீத சாத்திய மாலையில் ஒன்றை ஒவ்வொருவருக்கும் தருகிறார். தம்பதிகள் தங்களுக்குள் அந்த மாலையை மாற்றிக் கொள்கின்றனர். திருமண வரம் வேண்டி அமர்ந்திருப்போருக்கு அவர்களது கழுத்தில் மாலை அர்ச்சகரால் அணிவிக்கப்படுகிறது.
இங்கு அர்ச்சித்து தரப்படும் எலுமிச்சை ஆரோக்கியத்தையும், மாலை சந்தோசத்தையும்,விபூதி இஷ்டபூர்த்தியையும், குங்குமம் லட்சுமி கடாச்சத்தையும், மஞ்சள் சுபகாரிய அனுகிரகத்தையும் அளிக்கிறது என்று பொருள்.அர்ச்சனை செய்த பின் தரப்படும் மாலையை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இங்கு தரப்படும் எலுமிச்சம்பழத்தை மறுநாள் காலையில் சாறு பிழிந்து ஆகாரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும்.பின் விரைவில் கல்யாணம் நடக்கும்.கல்யாணம் நடந்தபின் அந்த பழைய மாலையை திரும்பவும் எடுத்து வந்து தம்பதிகள் சமேதமாக இத்தலத்தில் கல்யாணசுந்தரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு பிரார்த்தனையை பூர்த்தி செய்தல் வேண்டும்.
அமாவாசை அன்று இத்தலத்துக்கு வர வேண்டும்.இத்தலத்தில் ராகுபகவான் முழு உருவத்தோடு இருக்கிறார்.மனித உருவில் கவச குண்டலத்தோடு இருக்கிறார் என்பது விசேசம்.இவருக்கு அம்மாவாசை அன்று பால் அபிசேகம் செய்து பால் பாயாசம் நைவேத்தியம் செய்த பூஜை செய்து சாப்பிட்டால் குழந்தை வரம் கண்டிப்பாக கூடிய விரைவில் கிடைக்கப்பெறுவர். குழந்தை பிறந்தவுடன் இத்தலத்திற்கு மீண்டும் வருகிறார்கள். ஆண்குழந்தைவரம் வேண்டி அதுபடி கிடைக்கப்பெற்றவர்கள் சுவாமிக்கு தண்டக் கொலுசு வாங்கிப் போடுகிறார்கள்.பெண் குழந்தைவரம் வேண்டிக் கொண்டவர்கள் கொலுசு வாங்கிப் போடுகிறார்கள்.ஆசைக்கு குழந்தைவரம் வேண்டியவர்கள் ஓசைக்கு மணிவாங்கிக் கட்டுகிறார்கள்.விளக்கு போல் பிரகாசிக்க குழந்தைவரம் வேண்டியவர்கள் விளக்குகள் வாங்கி வைத்து வழிபடுகிறார்கள்.தவிர உண்டியல் காணிக்கையும் போடுகிறார்கள்.
சிவபெருமானின் தியானத்தை கலைக்கும் பொருட்டு அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது நெற்றிக்கண்ணால் திருக்குறுக்கை என்ற தலத்தில் மன்மதன் எரிந்து போனான். அறியாமை மேலிட்டதால் மன்மதன் சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுக்க அதனால் அவரது நெற்றிக்கண் தீக்கு இலக்கான மன்மதன் தன் தவறுணர்ந்ததும் மனம் நொந்து திருந்தி ஈசனைத் துதிக்க எம்பெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறு பெற வரமருளியதும் இத்தலத்தில்தான்.
இத்தலவரலாற்றோடு தொடர்புடைய ஊர்கள்: தேரழந்தூரில் அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்டது. அக்காட்டில் அம்பிகை பசு உரு ஏற்றும், கோமலில் திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து பசுக்களை பராமரித்து வந்ததாகவும் திருக்குளம்பத்தில் ஈசன் பசுவின் குளம்புத்தழும்பை ஏற்றதாகவும், திருவாடுதுறையில் பசுவுக்கு முக்தி கொடுக்கப்பட்டதாகவும், திருந்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி நடத்திய யாக வேள்வியில் உமை மங்கை தோன்றினார் எனவும் அறிய கிடக்கின்றன. திருவேள்விக் குடியில் திருமணத்திற்காக கங்கணதாரணமும் மங்கள நாமமும் செய்து குறுமுலைப்பாளையில் பாலிகை ஸ்தாபனமும் செய்தும், எதிர்கொள்பாடியில் இறைவனை எதிர் கொண்டழைத்தும், திருமணஞ்சேரியில் எம்பெருமான் உமையாளை காப்பாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறுகின்றனர்.இது நித்திய கல்யாண ஷேத்திரம். ராகு தோச நிவர்த்தி தலம் இது.ராகு பகவான் இங்கு முழு உருவில் உள்ளார். மனித உருவத்தில் கவச குண்டலத்தோடு காட்சி தருகிறார். இத்தலத்தின் தீர்த்தம் சப்த சாகரம் என்பது ஏழு கடலும் மாலையாக இறைவன் திருமணத்திற்கு வந்ததாக ஐதீகம்.
சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும்போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, தாராளமாக என்றார் ஈசன்.ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள் நகன்று கொண்டே இருந்தது. இதனால் அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார்.இதனால் சினம்கொண்ட சிவபெருமான் உமா தேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்க செய்து விட்டார்.பின் சாப விமோசனம் வேண்டி பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார். ஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபிரான் உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து பரத மகரிஷி நடத்திய யாக வேள்வி குண்டத்தில் தோன்றி உமையாளை திருமணஞ்சேரியில் திருமணம் செய்து அருளினார் என்பது தல வரலாறு.
மூலவர்: உத்வாகநாதர், அருள்வள்ளநாதர்
தாயார்: கோகிலா
தல விருட்சம்:கருஊமத்தை
ஊர்: திருமணஞ்சேரி
மாவட்டம்: மயிலாடுதுறை
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில் அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது.
சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 25 வது தேவாரத்தலம் ஆகும்.
இங்கு நவகிரகங்கள் கிடையாது. மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார். இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி,கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன. கோவிலுக்கு திருமண வரம் வேண்டி, குழந்தைப் பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் கோவில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜை சாமான்கள் விற்கும் இடத்திலேயே பொருட்களை வாங்கி பூஜை செய்வது சிறப்பு.
ராகு கிரக தோச நிவர்த்திக்கும் இந்த தலம் சால சிறப்புடையது. ராகு தோசம் பிடிக்கப்பட்டு புத்திர பாக்கியம் இத்தலத்தில் வழிபட்டு குழந்தைப்பாக்கியம் பெறுகிறார்கள். பிரிந்த தம்பதியர், மற்றும் அண்ணன் தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேசமான மற்றொரு அம்சம். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் உத்வாகநாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோவில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து திருமணம் உடனே நடந்து விடுகிறது. திருமண பிரார்த்தனைக்காக இத்தலத்தில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை என்பது மிகவும் பிரசித்தமானது. இந்த கல்யாண அர்ச்சனைக்கு (திருமணத்திற்கு முன்பாகவும் திருமணம் முடிந்த பிறகும்) இரண்டு மாலை, இரண்டு தேங்காய், மற்றும் மஞ்சள், குங்குமம், சூடம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், சர்க்கரை வாங்கி வரவேண்டும். கல்யாண அர்ச்சனை என்பதால் இதில் குறிப்பாக கற்கண்டு இருந்தாக வேண்டும்.
கோவிலுக்குள் இருக்கும் மற்ற மூர்த்திகளையெல்லாம் வணங்கி விட்டு கல்யாணசுந்தரர் சன்னதி முன்பாக இருக்கும் பெரிய ஹாலில் நீண்ட வரிசையாக அமர்கிறார்கள். இதில் கல்யாண வரம் வேண்டுவோர் ஒருவரிசையாகவும், இத்தலத்தில் வேண்டிக் கொண்டு கல்யாணம் ஆகப்பெற்ற புதுமணத்தம்பதிகள் ஒருவரிசையாகவும் அமர்கிறார்கள். பின்பு பூஜைக்குரிய சாமான்களை அர்ச்சகர் வாங்கிக் கொண்டு கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்கிறார்.சுவாமி மீத சாத்திய மாலையில் ஒன்றை ஒவ்வொருவருக்கும் தருகிறார். தம்பதிகள் தங்களுக்குள் அந்த மாலையை மாற்றிக் கொள்கின்றனர். திருமண வரம் வேண்டி அமர்ந்திருப்போருக்கு அவர்களது கழுத்தில் மாலை அர்ச்சகரால் அணிவிக்கப்படுகிறது.
இங்கு அர்ச்சித்து தரப்படும் எலுமிச்சை ஆரோக்கியத்தையும், மாலை சந்தோசத்தையும்,விபூதி இஷ்டபூர்த்தியையும், குங்குமம் லட்சுமி கடாச்சத்தையும், மஞ்சள் சுபகாரிய அனுகிரகத்தையும் அளிக்கிறது என்று பொருள்.அர்ச்சனை செய்த பின் தரப்படும் மாலையை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இங்கு தரப்படும் எலுமிச்சம்பழத்தை மறுநாள் காலையில் சாறு பிழிந்து ஆகாரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும்.பின் விரைவில் கல்யாணம் நடக்கும்.கல்யாணம் நடந்தபின் அந்த பழைய மாலையை திரும்பவும் எடுத்து வந்து தம்பதிகள் சமேதமாக இத்தலத்தில் கல்யாணசுந்தரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு பிரார்த்தனையை பூர்த்தி செய்தல் வேண்டும்.
அமாவாசை அன்று இத்தலத்துக்கு வர வேண்டும்.இத்தலத்தில் ராகுபகவான் முழு உருவத்தோடு இருக்கிறார்.மனித உருவில் கவச குண்டலத்தோடு இருக்கிறார் என்பது விசேசம்.இவருக்கு அம்மாவாசை அன்று பால் அபிசேகம் செய்து பால் பாயாசம் நைவேத்தியம் செய்த பூஜை செய்து சாப்பிட்டால் குழந்தை வரம் கண்டிப்பாக கூடிய விரைவில் கிடைக்கப்பெறுவர். குழந்தை பிறந்தவுடன் இத்தலத்திற்கு மீண்டும் வருகிறார்கள். ஆண்குழந்தைவரம் வேண்டி அதுபடி கிடைக்கப்பெற்றவர்கள் சுவாமிக்கு தண்டக் கொலுசு வாங்கிப் போடுகிறார்கள்.பெண் குழந்தைவரம் வேண்டிக் கொண்டவர்கள் கொலுசு வாங்கிப் போடுகிறார்கள்.ஆசைக்கு குழந்தைவரம் வேண்டியவர்கள் ஓசைக்கு மணிவாங்கிக் கட்டுகிறார்கள்.விளக்கு போல் பிரகாசிக்க குழந்தைவரம் வேண்டியவர்கள் விளக்குகள் வாங்கி வைத்து வழிபடுகிறார்கள்.தவிர உண்டியல் காணிக்கையும் போடுகிறார்கள்.
சிவபெருமானின் தியானத்தை கலைக்கும் பொருட்டு அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது நெற்றிக்கண்ணால் திருக்குறுக்கை என்ற தலத்தில் மன்மதன் எரிந்து போனான். அறியாமை மேலிட்டதால் மன்மதன் சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுக்க அதனால் அவரது நெற்றிக்கண் தீக்கு இலக்கான மன்மதன் தன் தவறுணர்ந்ததும் மனம் நொந்து திருந்தி ஈசனைத் துதிக்க எம்பெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறு பெற வரமருளியதும் இத்தலத்தில்தான்.
இத்தலவரலாற்றோடு தொடர்புடைய ஊர்கள்: தேரழந்தூரில் அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்டது. அக்காட்டில் அம்பிகை பசு உரு ஏற்றும், கோமலில் திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து பசுக்களை பராமரித்து வந்ததாகவும் திருக்குளம்பத்தில் ஈசன் பசுவின் குளம்புத்தழும்பை ஏற்றதாகவும், திருவாடுதுறையில் பசுவுக்கு முக்தி கொடுக்கப்பட்டதாகவும், திருந்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி நடத்திய யாக வேள்வியில் உமை மங்கை தோன்றினார் எனவும் அறிய கிடக்கின்றன. திருவேள்விக் குடியில் திருமணத்திற்காக கங்கணதாரணமும் மங்கள நாமமும் செய்து குறுமுலைப்பாளையில் பாலிகை ஸ்தாபனமும் செய்தும், எதிர்கொள்பாடியில் இறைவனை எதிர் கொண்டழைத்தும், திருமணஞ்சேரியில் எம்பெருமான் உமையாளை காப்பாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறுகின்றனர்.இது நித்திய கல்யாண ஷேத்திரம். ராகு தோச நிவர்த்தி தலம் இது.ராகு பகவான் இங்கு முழு உருவில் உள்ளார். மனித உருவத்தில் கவச குண்டலத்தோடு காட்சி தருகிறார். இத்தலத்தின் தீர்த்தம் சப்த சாகரம் என்பது ஏழு கடலும் மாலையாக இறைவன் திருமணத்திற்கு வந்ததாக ஐதீகம்.
சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும்போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, தாராளமாக என்றார் ஈசன்.ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள் நகன்று கொண்டே இருந்தது. இதனால் அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார்.இதனால் சினம்கொண்ட சிவபெருமான் உமா தேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்க செய்து விட்டார்.பின் சாப விமோசனம் வேண்டி பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார். ஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபிரான் உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து பரத மகரிஷி நடத்திய யாக வேள்வி குண்டத்தில் தோன்றி உமையாளை திருமணஞ்சேரியில் திருமணம் செய்து அருளினார் என்பது தல வரலாறு.
ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மூலவர் காம நாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் லிங்கம், வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறது தல புராணம்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில். வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள நான்காவது திருத்தலமான இது, வாயுலிங்க தலமாகும். இந்த ஆலயம் சிவத்தலமாக மட்டுமின்றி, அஷ்ட பைரவர்கள் வீற்றிருப்பதால், பைரவத் தலமாகவும் திகழ்கிறது.
ஆறு அகழிகளால் சூழப்பட்டிருப்பதால், இந்த ஊர் ‘ஆறகளூர்’ எனப்பெயர் பெற்றது. ஆறும்(நதியும்), அகழியும் உள்ள ஊர் என்பதாலும் ‘ஆறகளூர்’ எனப் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்த தலம் ‘ஆறை நகர்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மூலவர் காம நாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் லிங்கம், வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறது தல புராணம். அம்பாளின் திருநாமம் பெரியநாயகி என்பதாகும்.
மன்மதன் வழிபட்ட தலம் :
இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. இந்த மரத்தடியில் அமர்ந்துதான் இத்தல இறைவனை மன்மதன் வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது. முருகப்பெருமானின் அவதாரத்திற்கு முன்பாக, அதாவது மன்மதனை சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் தகனம் செய்வதற்கு முன்பாகவே, மன்மதன் தனது மனைவி ரதியுடன் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுச் சென்றுள்ளான் என்று கூறப்படுகிறது. மன்மதன் வழிபட்டதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘காமநாதீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது.
காமம் என்றால் விருப்பம், ஆசை என்ற பொருளும் உண்டு. தமது பக்தர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி தரும் பெருமான் என்பதாலும் ‘காமநாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.
இந்த திருத்தலம் மன்மதனுக்கு உகந்த இடம் என்பதால், திருமணமான இளம் தம்பதியினர் இங்கு வந்து இறைவனை தரிசித்தால் இல்லறம் இன்பமாக இருக்கும். விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல பிரிந்த தம்பதியர் இங்கு வந்து மனமுருக இறைவனை தரிசித்தால் ஒன்று படுவார்கள் என்பதும் பக்தர்களது நம்பிக்கை.
ஆலய அமைப்பு :
இந்தக் கோவிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரமும், கருவறையில் ஆனந்த விமானமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறை சதுரவடிவமானது. இறைவனின் கரு வறைக்கு வடபுறம் தனிச் சன்னிதியில் பெரியநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார். அம்பிகை முன்பும் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தாயாருக்கு பிரஹன்நாயகி என்ற பெயரும் உண்டு.
கருவறைக்கு முன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளன. முதல் சுற்றில் உற்சவ மண்டபம், திருக்குளம், தலவிருட்சம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-ம் சுற்றின் தாழ்வறையில் சந்திர, சூரியன், பைரவர், சமயக்குரவர்கள் காட்சி தருகின்றனர். கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், விஷ்ணு துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர், முருகன், நவக்கிரக சன்னிதிகளும் உள்ளன.
இங்கு பிரம்மாவிற்கும், நடராஜருக்கும் தனித்தனி சன்னிதி இருக்கிறது. கோவிலின் வடபக்கம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணிய சுவாமி மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
அஷ்டபைரவர்கள் :
காமநாதீஸ்வரர் கோவிலில் அஷ்ட பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், கால பைரவர் ஆகியோர் எட்டு திசைகளில் இருந்து அருள்புரிகிறார்கள். இவர்களை வழிபட்டால் நம்முடைய பயம் நீங்கும், நமது எதிரிகள் பயந்து விலகுவர் என்பது நம்பிக்கை. மாதந்தோறும், தேய்பிறை அஷ்டமி நாளில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடக்கிறது. இந்த பூஜையில் கலந்துகொண்டு பைரவரை வழிபாடு செய்தால் திருமணத்தடை, நவக்கிரக தோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்கும் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமி பூஜையின்போது காலபைரவருக்கு தேன், பழம், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வார்கள்.
பின்னர் வெள்ளிக வசம், சந்தனகாப்பு, புஷ்ப அலங்காரம் உள்ளிட்ட சர்வ சிறப்பு அலங்காரங்களுடன் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவு 12 மணி அளவில் காலபைரவர் உள்ளிட்ட எட்டு பைரவர்களுக்கும் பூஜைகள் நடக்கும்.
திருவிழாக்கள் :
ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருவாதிரை, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, கிருத்திகை, கார்த்திகை தேய்பிறை, பைரவாஷ்டமி, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மாசி சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும்.
ஆறகளூர் காமநாதீஸ்வரரை வழிபட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். கல்வி, வியாபாரம், தொழில் செழிக்கும். அரசு சம்பந்தப்பட்ட வாய்ப்புகள், வேலைகள் கிட்டும். இந்த கோவிலின் தலவிருட்சமான மகிழமரத்தின் இலையை அரைத்து தண்ணீரில் கலக்கி குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
சேலம்-கடலூர் நெடுஞ்சாலையில் தலைவாசலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. சேலத்தில் இருந்து ஆத்தூர் 52 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கிருந்து ஆறகளூருக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேய்பிறை அஷ்டமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஆறகளூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆறு அகழிகளால் சூழப்பட்டிருப்பதால், இந்த ஊர் ‘ஆறகளூர்’ எனப்பெயர் பெற்றது. ஆறும்(நதியும்), அகழியும் உள்ள ஊர் என்பதாலும் ‘ஆறகளூர்’ எனப் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்த தலம் ‘ஆறை நகர்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மூலவர் காம நாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் லிங்கம், வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறது தல புராணம். அம்பாளின் திருநாமம் பெரியநாயகி என்பதாகும்.
மன்மதன் வழிபட்ட தலம் :
இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. இந்த மரத்தடியில் அமர்ந்துதான் இத்தல இறைவனை மன்மதன் வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது. முருகப்பெருமானின் அவதாரத்திற்கு முன்பாக, அதாவது மன்மதனை சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் தகனம் செய்வதற்கு முன்பாகவே, மன்மதன் தனது மனைவி ரதியுடன் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுச் சென்றுள்ளான் என்று கூறப்படுகிறது. மன்மதன் வழிபட்டதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘காமநாதீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது.
காமம் என்றால் விருப்பம், ஆசை என்ற பொருளும் உண்டு. தமது பக்தர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி தரும் பெருமான் என்பதாலும் ‘காமநாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.
இந்த திருத்தலம் மன்மதனுக்கு உகந்த இடம் என்பதால், திருமணமான இளம் தம்பதியினர் இங்கு வந்து இறைவனை தரிசித்தால் இல்லறம் இன்பமாக இருக்கும். விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல பிரிந்த தம்பதியர் இங்கு வந்து மனமுருக இறைவனை தரிசித்தால் ஒன்று படுவார்கள் என்பதும் பக்தர்களது நம்பிக்கை.
ஆலய அமைப்பு :
இந்தக் கோவிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரமும், கருவறையில் ஆனந்த விமானமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறை சதுரவடிவமானது. இறைவனின் கரு வறைக்கு வடபுறம் தனிச் சன்னிதியில் பெரியநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார். அம்பிகை முன்பும் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தாயாருக்கு பிரஹன்நாயகி என்ற பெயரும் உண்டு.
கருவறைக்கு முன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளன. முதல் சுற்றில் உற்சவ மண்டபம், திருக்குளம், தலவிருட்சம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-ம் சுற்றின் தாழ்வறையில் சந்திர, சூரியன், பைரவர், சமயக்குரவர்கள் காட்சி தருகின்றனர். கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், விஷ்ணு துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர், முருகன், நவக்கிரக சன்னிதிகளும் உள்ளன.
இங்கு பிரம்மாவிற்கும், நடராஜருக்கும் தனித்தனி சன்னிதி இருக்கிறது. கோவிலின் வடபக்கம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணிய சுவாமி மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
அஷ்டபைரவர்கள் :
காமநாதீஸ்வரர் கோவிலில் அஷ்ட பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், கால பைரவர் ஆகியோர் எட்டு திசைகளில் இருந்து அருள்புரிகிறார்கள். இவர்களை வழிபட்டால் நம்முடைய பயம் நீங்கும், நமது எதிரிகள் பயந்து விலகுவர் என்பது நம்பிக்கை. மாதந்தோறும், தேய்பிறை அஷ்டமி நாளில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடக்கிறது. இந்த பூஜையில் கலந்துகொண்டு பைரவரை வழிபாடு செய்தால் திருமணத்தடை, நவக்கிரக தோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்கும் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமி பூஜையின்போது காலபைரவருக்கு தேன், பழம், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வார்கள்.
பின்னர் வெள்ளிக வசம், சந்தனகாப்பு, புஷ்ப அலங்காரம் உள்ளிட்ட சர்வ சிறப்பு அலங்காரங்களுடன் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவு 12 மணி அளவில் காலபைரவர் உள்ளிட்ட எட்டு பைரவர்களுக்கும் பூஜைகள் நடக்கும்.
திருவிழாக்கள் :
ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருவாதிரை, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, கிருத்திகை, கார்த்திகை தேய்பிறை, பைரவாஷ்டமி, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மாசி சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும்.
ஆறகளூர் காமநாதீஸ்வரரை வழிபட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். கல்வி, வியாபாரம், தொழில் செழிக்கும். அரசு சம்பந்தப்பட்ட வாய்ப்புகள், வேலைகள் கிட்டும். இந்த கோவிலின் தலவிருட்சமான மகிழமரத்தின் இலையை அரைத்து தண்ணீரில் கலக்கி குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
சேலம்-கடலூர் நெடுஞ்சாலையில் தலைவாசலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. சேலத்தில் இருந்து ஆத்தூர் 52 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கிருந்து ஆறகளூருக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேய்பிறை அஷ்டமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஆறகளூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
வில்லின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் வழியில், ராமாயண காவியத்தின் முழுக் கதையும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் விசயநகரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ ராமநாராயணம் திருக்கோவில். சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஆலயம், ‘வில்-அம்பு’ வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. வில்லில் பொருத்தப்பட்ட அம்பு, விடுவதற்கு தயார் நிலையில் இருக்கும்போது எப்படி இருக்குமோ, அந்த அமைப்பில் கோவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
அம்பின் அடிப்பகுதி இருக்கும் பகுதியில் கோவில் நுழைவு வாசல் இருக்கிறது. அம்பு மற்றும் இரு பக்க நாண் போன்றவை அடியில் தூண்கள் அமைக்கப்பட்டு பாலம் போல் அமைந்துள்ளது. வில்லில் நாண் பூட்டப்படும் இரண்டு பக்கத்திலும் இரண்டு திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அதே போல் அம்பின் நுனிப் பகுதியில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

வில்லில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு நாணின் வழியாகச் சென்று, வில்லின் ஒரு முணையில் உள்ள அமர்ந்த கோல திருமால், மற்றும் சயனக் கோல திருமாலை தரிசிக்கலாம். அங்கிருந்து வில்லின் மறு முனைக்குச் சென்று அங்குள்ள சீதா, லட்சுமணர் சமேத ராமபிரானை வழிபாடு செய்யலாம். வில்லின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு செல்லும் வழியில், ராமாயண காவியத்தின் முழுக் கதையும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் விசயநகரம் இருக்கிறது.
அம்பின் அடிப்பகுதி இருக்கும் பகுதியில் கோவில் நுழைவு வாசல் இருக்கிறது. அம்பு மற்றும் இரு பக்க நாண் போன்றவை அடியில் தூண்கள் அமைக்கப்பட்டு பாலம் போல் அமைந்துள்ளது. வில்லில் நாண் பூட்டப்படும் இரண்டு பக்கத்திலும் இரண்டு திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அதே போல் அம்பின் நுனிப் பகுதியில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

வில்லில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு நாணின் வழியாகச் சென்று, வில்லின் ஒரு முணையில் உள்ள அமர்ந்த கோல திருமால், மற்றும் சயனக் கோல திருமாலை தரிசிக்கலாம். அங்கிருந்து வில்லின் மறு முனைக்குச் சென்று அங்குள்ள சீதா, லட்சுமணர் சமேத ராமபிரானை வழிபாடு செய்யலாம். வில்லின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு செல்லும் வழியில், ராமாயண காவியத்தின் முழுக் கதையும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் விசயநகரம் இருக்கிறது.
சிறப்பு வாய்ந்த இந்த ஆலய பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை, வேலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பிரம்மபுரம் ஊராட்சியில் உள்ளது, சஞ்சீவிராயர் மலை. இங்கு மிகவும் பழமைவாய்ந்த பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புவாக இருப்பதால், இந்த ஆலயம் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மலை மீது அமைந்த இந்த ஆலயத்தை அடைய, 520 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். பழங்காலத்தில் உள்ள சுயம்பு மூர்த்தியுடன், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சிலை, சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டுள்ளது.
ஆனந்த நிலையம் என்ற சிறிய கருவறையில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவர் எதிரே பெரிய திருவடியான கருட பகவான் வீற்றிருக்கிறார். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பழமையான கொடிமரமும், அதற்கு அருகில் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதியும் உள்ளது.
கோவில் வரலாறு
இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்பதற்காக, இலங்கை அரசனான ராவணனுடன் யுத்தம் செய்தார், ராமபிரான். அனுமன் தலைமையிலான வானர சேனைகளும் ராமருடன் சேர்ந்து ராவணப் படைக்கு எதிராகப் போரிட்டனர். போரின் ஒரு கட்டத்தில் ராவணனின் மகன் இந்திரஜித் விட்ட நாகாஸ்திரத்தின் தாக்கத்தால், லட்சுமணன் மற்றும் வானர சேனைகள் பலரும் மூர்ச்சையடைந்தனர்.
இதையடுத்து சுகேசன் என்ற வைத்தியர் போர் முனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர், அனைவரது மயக்கமும் தெளிய வேண்டுமானால், இமயத்தில் இருக்கும் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைகளை பறித்துவர வேண்டும் என்றார். அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்கு, அனுமனை பணித்தார், ராமபிரான். தன் பிரபுவின் கட்டளை வந்தவுடனேயே இமயம் நோக்கி புயலென பறந்தார், அனுமன். அங்கு சென்றதும், மூலிகைகள் எவை எவை என்று அறிந்து பறிப்பதற்கு நேரமில்லாததால், சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தார். அப்படி அனுமன் வரும் வழியில் சில இடங்களில் சஞ்சீவி மலையில் இருந்து சிறு சிறு துண்டுகள் கீழே விழுந்து குன்றுகளாக மாறின. அவை அனைத்துமே புகழ்பெற்ற திருத்தலங்களாகவும் விளங்குகின்றன. அப்படி சஞ்சீவி மலையில் இருந்து விழுந்த சிறு பகுதியே, பிரம்மபுரத்தில் உள்ள சஞ்சீவிராயர் மலையாகும்.
இந்த மலையின் அடிவாரமான பிரம்மபுரத்தில், ஆயர் குலத்தைச் சேர்ந்த சனந்தன் என்ற சிறுவனின் குடும்பமும் வசித்து வந்தது. சனந்தன் தினமும், பசுக்களை ஓட்டிக்கொண்டு சஞ்சீவிராயர் மலைக்குச் செல்வான். அங்கு பசுக்களை மேயவிட்டு, பாதுகாப்பாக மாலையில் வீடு வந்து சேர்வான்.
ஒரு நாள் முதல் தார பிள்ளையான சனந்தனை தனியாக விட்டு விட்டு, அவரது தந்தையும், சித்தியும் திருமலைக்கு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்கச் சென்றனர். யாத்திரை முடிந்து திரும்பியதும், வெங்கடேசப் பெருமாளின் பெருமைகளை தனது மகனிடம் கூறினார், சனந்தனின் தந்தை. இதையடுத்து வெங்கடேசப் பெருமாளின் மீது சனந்தனுக்கு மானசீக ஈர்ப்பு ஏற்பட்டது. அவரை தினமும் மனதால் நினைத்து வழிபட்டு வந்தான்.
ஏழுமலையானும் தன்னைப்போலவே சிறுவனாக இருப்பான். அவனுக்கும் பசி எடுக்கும் என்று எண்ணம் கொண்ட சனந்தன், சஞ்சீவிராயர் மலையில் மாடுகளை மேய்க்கும் போது, பாலும், அன்னமும் எடுத்து தனியாக வைத்திருப்பான். எப்போதாவது வெங்கடேசப் பெருமாள் வந்தால், அவரது பசியை ஆற்ற இது உதவும் என்று அவன் நினைத்தான்.
மலையில் தவம் செய்து வந்த முனிவர் ஒருவர், சிறுவனின் இந்த தினசரி நடவடிக்கையை கண்டு ஆச்சரியம் கொண்டார். அந்தச் சிறுவனிடம், “குழந்தாய்.. இங்கே தினமும் பால், அன்னத்துடன் யாருக்காக காத்திருக்கிறாய்” என்று கேட்டார்.
அதற்கு சனந்தன், “ஐயா.. நான் திருமலை வெங்கடேசப் பெருமாளை காண்பதற்காக காத்திருக்கிறேன். அவர் திருமலையில் ஒரு புற்றுக்குள் மறைந்து இருந்து பாலை பருகினாராம். அவர் இவ்வழியாக பசியுடன் வந்தால் அவரின் பசியாற்றுவதற்காக இவற்றை வைத்திருக்கிறேன்” என்றான்.
அறியாமை என்றாலும், சிறுவனின் பக்தி முனிவரை மலைக்க வைத்தது. அவர், “குழந்தாய் இப்பிறவியில் அவதரித்த மற்றொரு பிரகலாதன் நீ. நிச்சயம் வெங்கடேசப் பெருமாள் உனக்கு தரிசனம் தருவார். ஆனால் அதற்கு உன்னை உருக்கி தவம் செய்ய வேண்டும்” என ஆசி கூறிச் சென்றார்.
அவரது வார்த்தையை கேட்ட சனந்தன் அன்று முதல், நீர் ஆகாரம் கூட எடுத்துக் கொள்ளாமல் திருமலை வெங்கடேசப் பெருமாளை நினைத்து தவம் இருக்கத் தொடங்கினான். 6 நாட்கள் இவ்வாறு கழிந்தது. ஏழாம் நாளில், சனந்தனின் பசியற்ற தவநிலை அவனை மயக்கத்தில் ஆழ்த்தியது. அவன் பாறை மீது மோதி ரத்தவெள்ளத்தில் தரையில் வீழ்ந்தான்.
சிறு பிள்ளையான சனந்தனின் பக்தியால் மகிழ்ந்த திருமலை வெங்கடேசப் பெருமாள், திருப்பதி திருமலை ஆனந்த நிலையத்தில் இருந்து, சஞ்சீவிராயர் மலைக்கு வந்தார். சனந்தனின் முன்பாக ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் காட்சியளித்தார். அந்த பிரகாசமான ஜோதியைக் கண்டு, சனந்தன் மீண்டும் மயங்கினான். இதையடுத்து வெங்கடேசப் பெருமாள், தன்னை ஒரு மானிடச் சிறுவனாக மாற்றிக்கொண்டு, மயக்கத்தில் இருந்த சனந்தனை எழுப்பினார். “சனந்தா.. நான்தான் சீனிவாசன் வந்திருக்கிறேன். பசிக்கிறது பால் கொடு” என்று கேட்டார்.
அதைக் கேட்டதும் கண்விழித்த சனந்தன் பரவச நிலையை அடைந்தான். உடனே தன்னிடம் இருந்த பாலையும், அன்னத்தையும் வெங்கடேசப் பெருமாளிடம் கொடுத்தான். அதை வெங்கடேசப் பெருமாள் மனித ரூபமாகவே உண்டு மகிழ்ந்தார். சிறிதுநேரம் சனந்தனுடன் விளையாடினார். அந்தி சாயும் நேரம் வந்ததும், “சனந்தா.. நான் புறப்படும் நேரம் வந்துவிட்டது. உன்னுடன் விளையாடிய நான் சிறியவனின் உருவத்திலேயே, இங்கே வீற்றிருந்து பக்தர்களை காப்பேன். இந்த தலம், திருமலையைப் போன்று புகழ்பெறும்” என்று கூறி மறைந்தார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலய பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை, வேலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த ஆலயம் வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஆனந்த நிலையம் என்ற சிறிய கருவறையில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவர் எதிரே பெரிய திருவடியான கருட பகவான் வீற்றிருக்கிறார். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பழமையான கொடிமரமும், அதற்கு அருகில் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதியும் உள்ளது.
கோவில் வரலாறு
இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்பதற்காக, இலங்கை அரசனான ராவணனுடன் யுத்தம் செய்தார், ராமபிரான். அனுமன் தலைமையிலான வானர சேனைகளும் ராமருடன் சேர்ந்து ராவணப் படைக்கு எதிராகப் போரிட்டனர். போரின் ஒரு கட்டத்தில் ராவணனின் மகன் இந்திரஜித் விட்ட நாகாஸ்திரத்தின் தாக்கத்தால், லட்சுமணன் மற்றும் வானர சேனைகள் பலரும் மூர்ச்சையடைந்தனர்.
இதையடுத்து சுகேசன் என்ற வைத்தியர் போர் முனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர், அனைவரது மயக்கமும் தெளிய வேண்டுமானால், இமயத்தில் இருக்கும் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைகளை பறித்துவர வேண்டும் என்றார். அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்கு, அனுமனை பணித்தார், ராமபிரான். தன் பிரபுவின் கட்டளை வந்தவுடனேயே இமயம் நோக்கி புயலென பறந்தார், அனுமன். அங்கு சென்றதும், மூலிகைகள் எவை எவை என்று அறிந்து பறிப்பதற்கு நேரமில்லாததால், சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தார். அப்படி அனுமன் வரும் வழியில் சில இடங்களில் சஞ்சீவி மலையில் இருந்து சிறு சிறு துண்டுகள் கீழே விழுந்து குன்றுகளாக மாறின. அவை அனைத்துமே புகழ்பெற்ற திருத்தலங்களாகவும் விளங்குகின்றன. அப்படி சஞ்சீவி மலையில் இருந்து விழுந்த சிறு பகுதியே, பிரம்மபுரத்தில் உள்ள சஞ்சீவிராயர் மலையாகும்.
இந்த மலையின் அடிவாரமான பிரம்மபுரத்தில், ஆயர் குலத்தைச் சேர்ந்த சனந்தன் என்ற சிறுவனின் குடும்பமும் வசித்து வந்தது. சனந்தன் தினமும், பசுக்களை ஓட்டிக்கொண்டு சஞ்சீவிராயர் மலைக்குச் செல்வான். அங்கு பசுக்களை மேயவிட்டு, பாதுகாப்பாக மாலையில் வீடு வந்து சேர்வான்.
ஒரு நாள் முதல் தார பிள்ளையான சனந்தனை தனியாக விட்டு விட்டு, அவரது தந்தையும், சித்தியும் திருமலைக்கு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்கச் சென்றனர். யாத்திரை முடிந்து திரும்பியதும், வெங்கடேசப் பெருமாளின் பெருமைகளை தனது மகனிடம் கூறினார், சனந்தனின் தந்தை. இதையடுத்து வெங்கடேசப் பெருமாளின் மீது சனந்தனுக்கு மானசீக ஈர்ப்பு ஏற்பட்டது. அவரை தினமும் மனதால் நினைத்து வழிபட்டு வந்தான்.
ஏழுமலையானும் தன்னைப்போலவே சிறுவனாக இருப்பான். அவனுக்கும் பசி எடுக்கும் என்று எண்ணம் கொண்ட சனந்தன், சஞ்சீவிராயர் மலையில் மாடுகளை மேய்க்கும் போது, பாலும், அன்னமும் எடுத்து தனியாக வைத்திருப்பான். எப்போதாவது வெங்கடேசப் பெருமாள் வந்தால், அவரது பசியை ஆற்ற இது உதவும் என்று அவன் நினைத்தான்.
மலையில் தவம் செய்து வந்த முனிவர் ஒருவர், சிறுவனின் இந்த தினசரி நடவடிக்கையை கண்டு ஆச்சரியம் கொண்டார். அந்தச் சிறுவனிடம், “குழந்தாய்.. இங்கே தினமும் பால், அன்னத்துடன் யாருக்காக காத்திருக்கிறாய்” என்று கேட்டார்.
அதற்கு சனந்தன், “ஐயா.. நான் திருமலை வெங்கடேசப் பெருமாளை காண்பதற்காக காத்திருக்கிறேன். அவர் திருமலையில் ஒரு புற்றுக்குள் மறைந்து இருந்து பாலை பருகினாராம். அவர் இவ்வழியாக பசியுடன் வந்தால் அவரின் பசியாற்றுவதற்காக இவற்றை வைத்திருக்கிறேன்” என்றான்.
அறியாமை என்றாலும், சிறுவனின் பக்தி முனிவரை மலைக்க வைத்தது. அவர், “குழந்தாய் இப்பிறவியில் அவதரித்த மற்றொரு பிரகலாதன் நீ. நிச்சயம் வெங்கடேசப் பெருமாள் உனக்கு தரிசனம் தருவார். ஆனால் அதற்கு உன்னை உருக்கி தவம் செய்ய வேண்டும்” என ஆசி கூறிச் சென்றார்.
அவரது வார்த்தையை கேட்ட சனந்தன் அன்று முதல், நீர் ஆகாரம் கூட எடுத்துக் கொள்ளாமல் திருமலை வெங்கடேசப் பெருமாளை நினைத்து தவம் இருக்கத் தொடங்கினான். 6 நாட்கள் இவ்வாறு கழிந்தது. ஏழாம் நாளில், சனந்தனின் பசியற்ற தவநிலை அவனை மயக்கத்தில் ஆழ்த்தியது. அவன் பாறை மீது மோதி ரத்தவெள்ளத்தில் தரையில் வீழ்ந்தான்.
சிறு பிள்ளையான சனந்தனின் பக்தியால் மகிழ்ந்த திருமலை வெங்கடேசப் பெருமாள், திருப்பதி திருமலை ஆனந்த நிலையத்தில் இருந்து, சஞ்சீவிராயர் மலைக்கு வந்தார். சனந்தனின் முன்பாக ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் காட்சியளித்தார். அந்த பிரகாசமான ஜோதியைக் கண்டு, சனந்தன் மீண்டும் மயங்கினான். இதையடுத்து வெங்கடேசப் பெருமாள், தன்னை ஒரு மானிடச் சிறுவனாக மாற்றிக்கொண்டு, மயக்கத்தில் இருந்த சனந்தனை எழுப்பினார். “சனந்தா.. நான்தான் சீனிவாசன் வந்திருக்கிறேன். பசிக்கிறது பால் கொடு” என்று கேட்டார்.
அதைக் கேட்டதும் கண்விழித்த சனந்தன் பரவச நிலையை அடைந்தான். உடனே தன்னிடம் இருந்த பாலையும், அன்னத்தையும் வெங்கடேசப் பெருமாளிடம் கொடுத்தான். அதை வெங்கடேசப் பெருமாள் மனித ரூபமாகவே உண்டு மகிழ்ந்தார். சிறிதுநேரம் சனந்தனுடன் விளையாடினார். அந்தி சாயும் நேரம் வந்ததும், “சனந்தா.. நான் புறப்படும் நேரம் வந்துவிட்டது. உன்னுடன் விளையாடிய நான் சிறியவனின் உருவத்திலேயே, இங்கே வீற்றிருந்து பக்தர்களை காப்பேன். இந்த தலம், திருமலையைப் போன்று புகழ்பெறும்” என்று கூறி மறைந்தார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலய பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை, வேலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த ஆலயம் வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சபரிமலை செல்பவர்கள், ஐயப்பன் குடிகொண்டுள்ள மேலும் சில கோவில்களையும் தரிசிப்பது சிறப்பு. அவற்றை ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று கூட அழைக்கிறார்கள்.
சபரிமலையில் தர்மசாஸ்தாவான ஐயப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, பக்தர்கள் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக அருள்பாலிக்கிறார். சபரிமலை செல்பவர்கள், ஐயப்பன் குடிகொண்டுள்ள மேலும் சில கோவில்களையும் தரிசிப்பது சிறப்பு. அவற்றை ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று கூட அழைக்கிறார்கள்.
எருமேலி:- ஐயப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். (கோவில் கேரளாவில் உள்ளது)
ஆரியங்காவு:- ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன்
அரசராக காட்சித் தருகிறார் ஐயப்பன். (தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் உள்ளது.)
அச்சன்கோவில்:- வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்திக் காட்சித் தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். (செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.)
பந்தளம்:- இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப்பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்குதான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திருஆபரணங்கள் உள்ளன. மகரவிளக்கின் போது ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும்.
குளத்துப்புழா:-இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறிய அளவிலேயே கட்டப்பட்டு உள்ளது. (செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது.)
சபரிமலை:-ஐயப்பனை மணந்து கொள்ள விரும்பிய மகிஷி மாளிகப்புரத்து அம்மனாக சபரிமலையில் ஐயப்பனின் இடது பக்கத்தில் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். தன்னை மணிகண்டன் நிச்சயம் திருமணம் செய்து கொள்வார் என்ற பூரண நம்பிக்கையில், அவள் இன்றும் காத்திருப்பதாக நம்பப்படுகிறது.
எருமேலி:- ஐயப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். (கோவில் கேரளாவில் உள்ளது)
ஆரியங்காவு:- ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன்
அரசராக காட்சித் தருகிறார் ஐயப்பன். (தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் உள்ளது.)
அச்சன்கோவில்:- வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்திக் காட்சித் தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். (செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.)
பந்தளம்:- இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப்பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்குதான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திருஆபரணங்கள் உள்ளன. மகரவிளக்கின் போது ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும்.
குளத்துப்புழா:-இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறிய அளவிலேயே கட்டப்பட்டு உள்ளது. (செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது.)
சபரிமலை:-ஐயப்பனை மணந்து கொள்ள விரும்பிய மகிஷி மாளிகப்புரத்து அம்மனாக சபரிமலையில் ஐயப்பனின் இடது பக்கத்தில் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். தன்னை மணிகண்டன் நிச்சயம் திருமணம் செய்து கொள்வார் என்ற பூரண நம்பிக்கையில், அவள் இன்றும் காத்திருப்பதாக நம்பப்படுகிறது.
உப்பில்லாத நைவேத்தியங்களை ஏற்பதால், ‘உப்பிலியப்பன்’என்றும், ஒப்பில்லாத பெருமை கொண்டவர் என்பதால் ‘ஒப்பிலியப்பன்’ என்றும் இத்தல பெருமாளுக்கு பெயர் வந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம். இங்குள்ள நாகநாதசுவாமி ஆலயத்தின் அருகில், உப்பிலியப்பன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பை இங்கே பார்க்கலாம்.
சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 13-வது தலமாக திகழ்கிறது.
நம்மாழ்வாருக்கு இந்த ஆலயத்தில், திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் ஆகிய ஐந்து கோலங்களில் பெருமாள் காட்சி தந்தருளினார். இதில் முத்தப்பன் சன்னிதி இப்போது இல்லை.
உப்பில்லாத நைவேத்தியங்களை ஏற்பதால், ‘உப்பிலியப்பன்’என்றும், ஒப்பில்லாத பெருமை கொண்டவர் என்பதால் ‘ஒப்பிலியப்பன்’ என்றும் இத்தல பெருமாளுக்கு பெயர் வந்தது.
இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, 12 ஆழ்வார்களில் குறிப்பிடத்தக்கவர்களான, நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
கருவறையில் நின்ற கோலத்தில் உப்பிலியப்பனை தரிசிக்கலாம். அவருக்குவலது புறத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் பூமாதேவியும், இடதுபுறத்தில் மார்க்கண்டேயரும் காட்சி தருகின்றனர்.
பாதம் நோக்கியபடி இருக்கும் மூலவரின் வலது கரத்தில் ‘மாம் ஏகம் சரணம் விரஜ’ என்று எழுதப்பட்டிருக்கும். கீதை உபதேசமான இதற்கு, ‘என்னை சரணடைபவர்களை காப்பேன்’ என்பது பொருள்.
பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், இறைவனுக்கு இடதுபுறத்தில்தான் பூமாதேவி இருப்பார். பூமாதேவியை பெருமாள் மணம் முடித்த தலம் இது என்பதால், இறைவனுக்கு வலதுபுறத்தில் தாயார் இருக்கிறார். தன் மகளாக அவதரித்த பூமாதேவியை, பெருமாளுக்கு மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்தபோது, ‘மகளை ஒருபோதும் பிரியக்கூடாது’ என்று நிபந்தனை விதித்தார். எனவே உற்சவ காலங்களில் கூட, பெருமாள் தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.
திருமால், மார்க்கண்டேயரிடம் பெண் கேட்டுவந்தது ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரம் ஆகும். பெருமாள், பூமாதேவி திருமணம், ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் நடந்தது. எனவே இந்த ஆலயத்தில் ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் இறைவனுக்கு, சாம்பிராணிதூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை தரிசித்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
திருப்பதி வெங்கடாஜலபதிக்கு இருப்பது போல, தனி சுப்ரபாதம் இத்தல உப்பிலியப்ப பெருமாளுக்கு உண்டு.
மார்க்கண்டேயர் வழிபாடு செய்த திருத்தலம் என்பதால், இங்கு ஆயுள் விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் ஆகியவை நடத்தப்படுகிறது.
ஆவணி திருவோண நட்சத்திரம் அன்று, காலையில் பெருமாள்கருட வாகனத்தில் ‘உதய கருட சேவை’ புரிவார். பின் ‘தட்சிண கங்கை’ என்று அழைக்கப்படும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுவார். தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெறும்.
தல வரலாறு
மார்க்கண்டேய மகரிஷிக்கு மகளாக துளசி செடியின் கீழ் பூமாதேவி அவதரித்தாள். அவளுக்கு ‘துளசி’ என்று பெயரிட்டு வளர்த்தார், மார்க்கண்டேயர். திருமண வயது வந்ததும், திருமால் ஒரு வயோதிகர் வடிவில் வந்து துளசியை பெண் கேட்டார். மார்க்கண்டேயர் மறுத்துவிட்டார். ஆனாலும் முதியவர் வேடத்தில் வந்த பெருமாள் விடவில்லை. அப்போது மார்கண்டேயர் “என் மகள் சிறு பெண். அவளுக்கு உணவில் சரியாக உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாது. அப்படிப்பட்ட பெண்ணை நீங்கள் மணம் முடிப்பது சரியாக இருக்காது” என்றார். அதற்கு முதியவராக வந்த பெருமாள், “உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக்கொள்கிறேன்” என்றார். அவரது உறுதியைக் கண்டு, வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தனது மகளை பெருமாளுக்கு மணம் முடித்துக் கொடுத்ததாக தல வரலாறு சொல்கிறது.
சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 13-வது தலமாக திகழ்கிறது.
நம்மாழ்வாருக்கு இந்த ஆலயத்தில், திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் ஆகிய ஐந்து கோலங்களில் பெருமாள் காட்சி தந்தருளினார். இதில் முத்தப்பன் சன்னிதி இப்போது இல்லை.
உப்பில்லாத நைவேத்தியங்களை ஏற்பதால், ‘உப்பிலியப்பன்’என்றும், ஒப்பில்லாத பெருமை கொண்டவர் என்பதால் ‘ஒப்பிலியப்பன்’ என்றும் இத்தல பெருமாளுக்கு பெயர் வந்தது.
இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, 12 ஆழ்வார்களில் குறிப்பிடத்தக்கவர்களான, நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
கருவறையில் நின்ற கோலத்தில் உப்பிலியப்பனை தரிசிக்கலாம். அவருக்குவலது புறத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் பூமாதேவியும், இடதுபுறத்தில் மார்க்கண்டேயரும் காட்சி தருகின்றனர்.
பாதம் நோக்கியபடி இருக்கும் மூலவரின் வலது கரத்தில் ‘மாம் ஏகம் சரணம் விரஜ’ என்று எழுதப்பட்டிருக்கும். கீதை உபதேசமான இதற்கு, ‘என்னை சரணடைபவர்களை காப்பேன்’ என்பது பொருள்.
பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், இறைவனுக்கு இடதுபுறத்தில்தான் பூமாதேவி இருப்பார். பூமாதேவியை பெருமாள் மணம் முடித்த தலம் இது என்பதால், இறைவனுக்கு வலதுபுறத்தில் தாயார் இருக்கிறார். தன் மகளாக அவதரித்த பூமாதேவியை, பெருமாளுக்கு மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்தபோது, ‘மகளை ஒருபோதும் பிரியக்கூடாது’ என்று நிபந்தனை விதித்தார். எனவே உற்சவ காலங்களில் கூட, பெருமாள் தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.
திருமால், மார்க்கண்டேயரிடம் பெண் கேட்டுவந்தது ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரம் ஆகும். பெருமாள், பூமாதேவி திருமணம், ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் நடந்தது. எனவே இந்த ஆலயத்தில் ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் இறைவனுக்கு, சாம்பிராணிதூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை தரிசித்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
திருப்பதி வெங்கடாஜலபதிக்கு இருப்பது போல, தனி சுப்ரபாதம் இத்தல உப்பிலியப்ப பெருமாளுக்கு உண்டு.
மார்க்கண்டேயர் வழிபாடு செய்த திருத்தலம் என்பதால், இங்கு ஆயுள் விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் ஆகியவை நடத்தப்படுகிறது.
ஆவணி திருவோண நட்சத்திரம் அன்று, காலையில் பெருமாள்கருட வாகனத்தில் ‘உதய கருட சேவை’ புரிவார். பின் ‘தட்சிண கங்கை’ என்று அழைக்கப்படும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுவார். தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெறும்.
தல வரலாறு
மார்க்கண்டேய மகரிஷிக்கு மகளாக துளசி செடியின் கீழ் பூமாதேவி அவதரித்தாள். அவளுக்கு ‘துளசி’ என்று பெயரிட்டு வளர்த்தார், மார்க்கண்டேயர். திருமண வயது வந்ததும், திருமால் ஒரு வயோதிகர் வடிவில் வந்து துளசியை பெண் கேட்டார். மார்க்கண்டேயர் மறுத்துவிட்டார். ஆனாலும் முதியவர் வேடத்தில் வந்த பெருமாள் விடவில்லை. அப்போது மார்கண்டேயர் “என் மகள் சிறு பெண். அவளுக்கு உணவில் சரியாக உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாது. அப்படிப்பட்ட பெண்ணை நீங்கள் மணம் முடிப்பது சரியாக இருக்காது” என்றார். அதற்கு முதியவராக வந்த பெருமாள், “உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக்கொள்கிறேன்” என்றார். அவரது உறுதியைக் கண்டு, வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தனது மகளை பெருமாளுக்கு மணம் முடித்துக் கொடுத்ததாக தல வரலாறு சொல்கிறது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் உள்ளது, பழமையும், பெருமையும் வாய்ந்த சிவகாமி அம்பாள் உடனாய குலசேகரநாத சுவாமி திருக்கோவில்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் உள்ளது, காருகுறிச்சி என்ற ஊர். கன்னடியன் கால்வாயின் வடகரையில் அமைந்திருக்கும் வளம்மிக்க ஊர் இது.
இங்கு பழமையும், பெருமையும் வாய்ந்த சிவகாமி அம்பாள் உடனாய குலசேகரநாத சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்றிணையவும், குழந்தை இன்றி தவிப்பவர்களுக்கு தீர்வாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.
தல வரலாறு
கி.பி. 655-ம் ஆண்டில் இந்தப் பகுதியை பூதல வீர உதய மார்த்தாண்டன் என்ற சிற்றரசன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. அதோடு அவனது மனைவியும் சில கருத்து வேறுபாடு காரணமாக அவனை விட்டு பிரிந்து சென்று விட்டாள். இதனால் மனமுடைந்து போன மன்னன், இத்தலம் வந்து, குலசகேரநாதரை மனமுருக வேண்டினான்.
இதையடுத்து சில நாட்களிலேயே மன்னனின் மனைவி, அவனைத் தேடி வந்தாள். அவளுடன் இணைந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்திய மன்னனுக்கு, சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் கிடைத்தது. மன்னனின் வம்சம் விருத்தியாக அருள்புரிந்ததால், இத்தல இறைவனுக்கு ‘வம்ச விருத்தீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு.
இத்தல அம்பாளான சிவகாமி அம்மன், மிகச்சிறந்த வரப்பிரசாதியாகவும், பெருங்கருணை கொண்ட நாயகியாகவும் திகழ்கிறார். அம்பாள் நின்ற கோலத்தில், தனது வலது கரத்தில் நீலோற்பவ மலரை ஏந்தியபடியும், இடது கரத்தை தொங்க விட்டபடியும் அருள்பாலிக்கிறார். அம்பாளின் கருவறை விமானம் ‘கஜபிருஷ்ட’ கலை அம்சத்தில் வடிக்கப்பட்டுள்ளது. கருவறையில் மூலவராக குலசேகரநாதர் எழுந்தருளியுள்ளார். மகா மண்டபத்தின் வலதுபுறம் நடராஜர்- சிவகாமி அம்மன் சன்னிதி உள்ளது. அர்த்த மண்டப வாசலில் விநாயகர், சுப்பிரமணியர் இருவரும் காட்சி தருகின்றனர்.
களத்திர தோஷம் இருப்பவர்கள், இத்தலத்திற்கு வந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் குலசேகரநாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவகாமி அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றவாறு தரிசனம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இன்றி தவிப்பவர்கள், தங்கள் பெயர், நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், இறைவன், இறைவியின் பரிபூரண அருளால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியரும், விரைவிலேயே ஒன்றாக இணைந்துவிடுவர்.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, திரயோதசி திதிகளில் ‘துளசி விவாக உற்சவம்’ நடத்தப்படுகிறது. திருமண பந்தத்தில் இணையும் தம்பதியர், மனம் ஒத்து இணைந்து வாழவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்பவர்கள், மீண்டும் ஒன்றாக கூடி வாழவும் பரிகார விழாவாக இந்த உற்சவம் நடத்தப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து சேரன்மாதேவி வழியாக பாபநாசம் செல்லும் சாலையில் 26 கிலோமீட்டர் தூரத்தில் காருகுறிச்சி திருத்தலம் உள்ளது.
இங்கு பழமையும், பெருமையும் வாய்ந்த சிவகாமி அம்பாள் உடனாய குலசேகரநாத சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்றிணையவும், குழந்தை இன்றி தவிப்பவர்களுக்கு தீர்வாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.
தல வரலாறு
கி.பி. 655-ம் ஆண்டில் இந்தப் பகுதியை பூதல வீர உதய மார்த்தாண்டன் என்ற சிற்றரசன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. அதோடு அவனது மனைவியும் சில கருத்து வேறுபாடு காரணமாக அவனை விட்டு பிரிந்து சென்று விட்டாள். இதனால் மனமுடைந்து போன மன்னன், இத்தலம் வந்து, குலசகேரநாதரை மனமுருக வேண்டினான்.
இதையடுத்து சில நாட்களிலேயே மன்னனின் மனைவி, அவனைத் தேடி வந்தாள். அவளுடன் இணைந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்திய மன்னனுக்கு, சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் கிடைத்தது. மன்னனின் வம்சம் விருத்தியாக அருள்புரிந்ததால், இத்தல இறைவனுக்கு ‘வம்ச விருத்தீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு.
இத்தல அம்பாளான சிவகாமி அம்மன், மிகச்சிறந்த வரப்பிரசாதியாகவும், பெருங்கருணை கொண்ட நாயகியாகவும் திகழ்கிறார். அம்பாள் நின்ற கோலத்தில், தனது வலது கரத்தில் நீலோற்பவ மலரை ஏந்தியபடியும், இடது கரத்தை தொங்க விட்டபடியும் அருள்பாலிக்கிறார். அம்பாளின் கருவறை விமானம் ‘கஜபிருஷ்ட’ கலை அம்சத்தில் வடிக்கப்பட்டுள்ளது. கருவறையில் மூலவராக குலசேகரநாதர் எழுந்தருளியுள்ளார். மகா மண்டபத்தின் வலதுபுறம் நடராஜர்- சிவகாமி அம்மன் சன்னிதி உள்ளது. அர்த்த மண்டப வாசலில் விநாயகர், சுப்பிரமணியர் இருவரும் காட்சி தருகின்றனர்.
களத்திர தோஷம் இருப்பவர்கள், இத்தலத்திற்கு வந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் குலசேகரநாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவகாமி அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றவாறு தரிசனம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இன்றி தவிப்பவர்கள், தங்கள் பெயர், நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், இறைவன், இறைவியின் பரிபூரண அருளால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியரும், விரைவிலேயே ஒன்றாக இணைந்துவிடுவர்.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, திரயோதசி திதிகளில் ‘துளசி விவாக உற்சவம்’ நடத்தப்படுகிறது. திருமண பந்தத்தில் இணையும் தம்பதியர், மனம் ஒத்து இணைந்து வாழவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்பவர்கள், மீண்டும் ஒன்றாக கூடி வாழவும் பரிகார விழாவாக இந்த உற்சவம் நடத்தப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து சேரன்மாதேவி வழியாக பாபநாசம் செல்லும் சாலையில் 26 கிலோமீட்டர் தூரத்தில் காருகுறிச்சி திருத்தலம் உள்ளது.
வாழ்வில் உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்... மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் “பைரவா... காப்பாற்று’’ என்று அழைத்துப் பாருங்கள், ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவர்.
27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர்களும், தலங்களும் வருமாறு:-
1.அஸ்வினி: ஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைவருக்கு நாய் வாகனம் இல்லை.
2.பரணி: ஸ்ரீமகா பைரவர்- திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.
3.கார்த்திகை: ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை.
4.ரோகிணி: ஸ்ரீகால பைரவர்-பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்- கண்டியூர், தஞ்சாவூர்.
5.மிருகசீரிஷம்: ஸ்ரீ சேத்திரபால பைரவர்- சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)
6.திருவாதிரை: ஸ்ரீவடுக பைரவர்-ஆண்டாள் கோவில் (பாண்டிச்சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி.மீ.)
7.புனர்பூசம்: ஸ்ரீவிஜய பைரவர்-பழனி சாதுசுவாமிகள் மடாலயம்.
8.பூசம்: ஸ்ரீ ஆவின் பைரவர்-(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.
9.ஆயில்யம்: ஸ்ரீ பாதாள பைரவர்-காளஹஸ்தி.
10.மகம்: ஸ்ரீநர்த்தன பைரவர்-வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.
11.பூரம்: ஸ்ரீ கோட்டை பைரவர்-பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில்.
12.உத்திரம்: ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்-சேரன்மாதேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.
13.அஸ்தம்: ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.
14.சித்திரை: ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி-மல்லிகார்ச்சுன -காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.
15.சுவாதி: ஸ்ரீ ஜடா முனி பைரவர்- புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.
16.விசாகம்: ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.
17.அனுஷம்: ஸ்ரீ சொர்ண பைரவர்- கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.
18.கேட்டை: ஸ்ரீகதாயுத பைரவர்-சூரக்குடி-சொக்கநாதர் கோவில்.
19.மூலம்: ஸ்ரீ சட்டநாதர் பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.
20.பூராடம்: ஸ்ரீகால பைரவர்-அவிநாசி- அவிநாசியப்பர் கோவில்.
21.உத்திராடம்: ஸ்ரீவடுகநாதர் பைரவர்-கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.
22.திருவோணம்:திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர்-வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.
23.அவிட்டம்: சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி.
24.சதயம்: ஸ்ரீசர்ப்ப பைரவர்-சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.
25.பூரட்டாதி: கோட்டை பைரவர்- ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்மலிங்கேஸ்வரர் கோவில்.
26.உத்திரட்டாதி: ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்-சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்பகோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.
27.ரேவதி: ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்-தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்.
1.அஸ்வினி: ஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைவருக்கு நாய் வாகனம் இல்லை.
2.பரணி: ஸ்ரீமகா பைரவர்- திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.
3.கார்த்திகை: ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை.
4.ரோகிணி: ஸ்ரீகால பைரவர்-பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்- கண்டியூர், தஞ்சாவூர்.
5.மிருகசீரிஷம்: ஸ்ரீ சேத்திரபால பைரவர்- சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)
6.திருவாதிரை: ஸ்ரீவடுக பைரவர்-ஆண்டாள் கோவில் (பாண்டிச்சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி.மீ.)
7.புனர்பூசம்: ஸ்ரீவிஜய பைரவர்-பழனி சாதுசுவாமிகள் மடாலயம்.
8.பூசம்: ஸ்ரீ ஆவின் பைரவர்-(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.
9.ஆயில்யம்: ஸ்ரீ பாதாள பைரவர்-காளஹஸ்தி.
10.மகம்: ஸ்ரீநர்த்தன பைரவர்-வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.
11.பூரம்: ஸ்ரீ கோட்டை பைரவர்-பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில்.
12.உத்திரம்: ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்-சேரன்மாதேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.
13.அஸ்தம்: ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.
14.சித்திரை: ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி-மல்லிகார்ச்சுன -காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.
15.சுவாதி: ஸ்ரீ ஜடா முனி பைரவர்- புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.
16.விசாகம்: ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.
17.அனுஷம்: ஸ்ரீ சொர்ண பைரவர்- கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.
18.கேட்டை: ஸ்ரீகதாயுத பைரவர்-சூரக்குடி-சொக்கநாதர் கோவில்.
19.மூலம்: ஸ்ரீ சட்டநாதர் பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.
20.பூராடம்: ஸ்ரீகால பைரவர்-அவிநாசி- அவிநாசியப்பர் கோவில்.
21.உத்திராடம்: ஸ்ரீவடுகநாதர் பைரவர்-கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.
22.திருவோணம்:திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர்-வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.
23.அவிட்டம்: சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி.
24.சதயம்: ஸ்ரீசர்ப்ப பைரவர்-சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.
25.பூரட்டாதி: கோட்டை பைரவர்- ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்மலிங்கேஸ்வரர் கோவில்.
26.உத்திரட்டாதி: ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்-சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்பகோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.
27.ரேவதி: ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்-தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்.
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குப் பிறகு மிகவும் அதிகமாக வழிபாட்டாளர்கள் திரளாக வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
மாதா வைஷ்ணொ தேவி , மாதா ராணி , வைஷ்ணவி போன்ற பெயர்களால் அழைக்கப்படும் மிகவும் புனிதமான இந்து சமய பெண் தெய்வமாவார். வைஷ்ணொ தேவி கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத் தலமாகும், இந்த கோவில் இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணொ தேவி மலையில் அமைந்துள்ளது.
கோவில்
வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும், கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் (7.45 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் சுமார் 8,00,000 பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வந்து தமது காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குப் பிறகு மிகவும் அதிகமாக வழிபாட்டாளர்கள் திரளாக வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இக்கோவிலை ஸ்ரீ மாதா வைஷ்ணொ தேவி கோவில் குழு பராமரித்து வருகிறது. உதம்பூர் என்ற இடத்தில் இருந்து கத்ரா வரை புனித யாத்திரை மேற்கொள்வதற்காக இரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ஜம்மு விமானநிலையமாகும். இங்கு அதிகமான விமான போக்குவரத்து உள்ளது. அனைத்து உள்ளூர் விமான சேவை வழங்கும் நிறுவனங்களும் ஜம்மு விமான நிலையத்திற்கு சேவைகள் வழங்கி வருகின்றன.
புராண வரலாறு
திரேதா யுகத்தில், தீமை மற்றும் கொடுங்கோன்மை ஆட்சியால் பூமி சுமையாக இருந்தபோது,முப்பெரும் தேவியரும் ரேமா (லட்சுமி), உமா (காளி) மற்றும் வாணி (சரஸ்வதி) ஆகிய வடிவம் கொண்டு வைஷ்ணொ தேவியை உருவாக்கினர்.ஒளிப்பிழம்பு வடிவிலான தேவி திரிகூட மலை உச்சியில் உள்ள குகையில் தோன்றினார். பூமிக்கு சுமையாக இருந்த தீமை மற்றும் பேய்களை அழித்தபின், வைஷ்ணொ தேவி பூமியில் வசிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார், இதனால் அவள் மனித அவதாரம் எடுக்க முடிவு செய்தாள்.
அதன்படி இந்தியாவின் தெற்கு பாகத்தில் நீண்ட நாட்களாக குழந்தை பேறு கிடைக்காமல் வாழ்ந்து வந்த ரத்னாகர்சாகர்-சம்ரிதி தேவி தம்பதியர் வீட்டில் அன்னை வைஷ்ணொ தேவி பிறந்தார்.குழந்தைப்பருவத்தில் அன்னை வைஷ்ணொ தேவி, திரிகுடா என அழைக்கப்பெற்றார்.விஷ்ணுவின் தீவிர பக்தரான ரத்னாகர் அவரது குழந்தை பெருமாளின் அவதாரமாகக் கருதப்பட்டதால் அவர் வைஷ்ணவி என நாமம் சூட்டினார். திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும், அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள தந்தையிடம் அனுமதி கேட்டார்.
திரிகுடா ராமர் ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டார். ராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார். அவரது கண்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் மேல் விழுந்தது. திரிகுடா ராமரிடம் அவரை தனது கணவராக ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். ராமர் அவரிடம் இந்த அவதாரத்தில் அவர் தமது மனைவியான சீதைக்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார்.
இருந்தாலும் என்றேனும் ஒருநாள் அவரை மணந்து கொள்வதாக வாக்களித்தார்.அதேசமயத்தில் ராமர் திரிகுடாவிடம் வட இந்தியாவில் நிலை கொண்டுள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத்தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அன்னை அவர்கள் 'நவராத்திரி'யின் பொழுது ராமர் ராவணனுக்கு எதிராக வெற்றி காண்பதற்காக நோன்பு மேற்கொண்டார். இந்த தொடர்பை நினைவு கூறுவதற்காகவே நவராத்திரியின் ஒன்பது நாட்களில், மக்கள் இராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.
ராவண வதம் நடந்த பிறகு அயோத்தியின் அரசராக பதவியேற்றுக்கொண்ட ராமர் ஒரு முதியவர் ரூபம் கொண்டு திரிகுடா தேவி முன் தோன்றி அவரை மணந்து கொள்ளும்படி வேண்டினார். வந்திருப்பது யாரென அறியாத தேவி அவரை நிராகரித்தார். பின்னர் உண்மை உருவில் வெளிவந்த இறைவன் இப்பிறவியில் ஏகபத்தினி விரதம் பூண்டிருப்பதாகவும் கலியுகத்தில் அவர் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப்போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார்.மேலும் திரிகுடா மிகவும் புகழ்பெற்ற அன்னை வைஷ்ணொ தேவியாக மாறுவார் மற்றும் என்றென்றைக்கும் அமரராக நிலைத்திருப்பார் அனைத்து உலகமும் அன்னை வைஷ்ணொ தேவியின் புகழைப்பாடுவார்கள் எனவும் வரமளித்தார்.
அமைவிடம்
வைஷ்ணொ தேவி மலைக்கோயில் ஜம்மு நகரத்திலிருந்து 40 கி. மீ., தொலைவில் உள்ள, கட்ரா எனும் நகரத்திற்கு அருகில் 13 கி. மீ., தொலைவில், இமயமலையில் அமைந்துள்ளது. இக்கோயில் இமயமலையில் 5200 அடி உயரமுள்ள திரிகூடமலையின் உச்சியில் இருக்கும் இந்த புனித குகைக்கோயில், முப்பெரும் தேவியர்களான இலக்குமி, சரசுவதி மற்றும் காளி ஆகியோரின் உறைவிடமாகும்.
ஜம்முவிலிருந்து 42 கி.மி. தொலைவில் இருக்கும் இந்த குகை, 30 மி. நீளத்தையும், 1.5 மீ. உயரத்தையும் கொண்டுள்ளது.இந்த குகையின் முடிவில் சூலத்தின் மூன்று முனைகள் போல மூன்று பாறைகள் சுயம்புவாக உள்ளது அது முப்பெரும் தேவியர்களான இலக்குமி, சரசுவதி மற்றும் காளி ஆகியோரின் அருவ வடிவமாகும். பிந்தி என அழைக்கப்படும் அந்த வடிவங்களே மாதா ராணியாக வணங்கப்படுகிறது.
பக்தர்களுக்கான சேவைகள்
பதிமூன்று கிலோ மீட்டர் தொலைவை மலையில் நடந்து பயணிக்கும் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு ஒன்றை கிலோ மீட்டர் தொலைவிற்கு இலவச கழிப்பிடங்களும், ஓய்வு எடுக்க மண்டபங்களும், தாகம், பசி நீக்கிக் கொள்ள தேனீர் கடைகளும், சிற்றுண்டிச்சாலைகளும் உள்ளது. மலைக்கோயில் பாதையில் இரவுநேரப் பயணித்தின் போது உறங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் மூன்று இடங்களில் வசதி செய்துள்ளனர் கோயில் நிர்வாகம்.
மேலும் உயரமான மலை என்பதால் பிராணவாயு குறைவாக இருக்கும். எனவே நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கும், அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், கோயில் நிர்வாகம் ஆங்காங்கே மருத்துவர்களும், மருத்துவ வசதிகளுடன் கூடிய முதலுதவி மையங்கள் அமைத்துள்ளனர். மலையில் நடக்கவும், குதிரைகள் மீது ஏறி பயணிக்க முடியாத பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் வைஷ்ணவ தேவி மலைகோயிலுக்கு செல்ல ஹெலிகாப்டர் வசதி செய்துள்ளது.
கோவில்
வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும், கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் (7.45 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் சுமார் 8,00,000 பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வந்து தமது காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குப் பிறகு மிகவும் அதிகமாக வழிபாட்டாளர்கள் திரளாக வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இக்கோவிலை ஸ்ரீ மாதா வைஷ்ணொ தேவி கோவில் குழு பராமரித்து வருகிறது. உதம்பூர் என்ற இடத்தில் இருந்து கத்ரா வரை புனித யாத்திரை மேற்கொள்வதற்காக இரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ஜம்மு விமானநிலையமாகும். இங்கு அதிகமான விமான போக்குவரத்து உள்ளது. அனைத்து உள்ளூர் விமான சேவை வழங்கும் நிறுவனங்களும் ஜம்மு விமான நிலையத்திற்கு சேவைகள் வழங்கி வருகின்றன.
புராண வரலாறு
திரேதா யுகத்தில், தீமை மற்றும் கொடுங்கோன்மை ஆட்சியால் பூமி சுமையாக இருந்தபோது,முப்பெரும் தேவியரும் ரேமா (லட்சுமி), உமா (காளி) மற்றும் வாணி (சரஸ்வதி) ஆகிய வடிவம் கொண்டு வைஷ்ணொ தேவியை உருவாக்கினர்.ஒளிப்பிழம்பு வடிவிலான தேவி திரிகூட மலை உச்சியில் உள்ள குகையில் தோன்றினார். பூமிக்கு சுமையாக இருந்த தீமை மற்றும் பேய்களை அழித்தபின், வைஷ்ணொ தேவி பூமியில் வசிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார், இதனால் அவள் மனித அவதாரம் எடுக்க முடிவு செய்தாள்.
அதன்படி இந்தியாவின் தெற்கு பாகத்தில் நீண்ட நாட்களாக குழந்தை பேறு கிடைக்காமல் வாழ்ந்து வந்த ரத்னாகர்சாகர்-சம்ரிதி தேவி தம்பதியர் வீட்டில் அன்னை வைஷ்ணொ தேவி பிறந்தார்.குழந்தைப்பருவத்தில் அன்னை வைஷ்ணொ தேவி, திரிகுடா என அழைக்கப்பெற்றார்.விஷ்ணுவின் தீவிர பக்தரான ரத்னாகர் அவரது குழந்தை பெருமாளின் அவதாரமாகக் கருதப்பட்டதால் அவர் வைஷ்ணவி என நாமம் சூட்டினார். திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும், அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள தந்தையிடம் அனுமதி கேட்டார்.
திரிகுடா ராமர் ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டார். ராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார். அவரது கண்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் மேல் விழுந்தது. திரிகுடா ராமரிடம் அவரை தனது கணவராக ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். ராமர் அவரிடம் இந்த அவதாரத்தில் அவர் தமது மனைவியான சீதைக்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார்.
இருந்தாலும் என்றேனும் ஒருநாள் அவரை மணந்து கொள்வதாக வாக்களித்தார்.அதேசமயத்தில் ராமர் திரிகுடாவிடம் வட இந்தியாவில் நிலை கொண்டுள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத்தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அன்னை அவர்கள் 'நவராத்திரி'யின் பொழுது ராமர் ராவணனுக்கு எதிராக வெற்றி காண்பதற்காக நோன்பு மேற்கொண்டார். இந்த தொடர்பை நினைவு கூறுவதற்காகவே நவராத்திரியின் ஒன்பது நாட்களில், மக்கள் இராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.
ராவண வதம் நடந்த பிறகு அயோத்தியின் அரசராக பதவியேற்றுக்கொண்ட ராமர் ஒரு முதியவர் ரூபம் கொண்டு திரிகுடா தேவி முன் தோன்றி அவரை மணந்து கொள்ளும்படி வேண்டினார். வந்திருப்பது யாரென அறியாத தேவி அவரை நிராகரித்தார். பின்னர் உண்மை உருவில் வெளிவந்த இறைவன் இப்பிறவியில் ஏகபத்தினி விரதம் பூண்டிருப்பதாகவும் கலியுகத்தில் அவர் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப்போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார்.மேலும் திரிகுடா மிகவும் புகழ்பெற்ற அன்னை வைஷ்ணொ தேவியாக மாறுவார் மற்றும் என்றென்றைக்கும் அமரராக நிலைத்திருப்பார் அனைத்து உலகமும் அன்னை வைஷ்ணொ தேவியின் புகழைப்பாடுவார்கள் எனவும் வரமளித்தார்.
அமைவிடம்
வைஷ்ணொ தேவி மலைக்கோயில் ஜம்மு நகரத்திலிருந்து 40 கி. மீ., தொலைவில் உள்ள, கட்ரா எனும் நகரத்திற்கு அருகில் 13 கி. மீ., தொலைவில், இமயமலையில் அமைந்துள்ளது. இக்கோயில் இமயமலையில் 5200 அடி உயரமுள்ள திரிகூடமலையின் உச்சியில் இருக்கும் இந்த புனித குகைக்கோயில், முப்பெரும் தேவியர்களான இலக்குமி, சரசுவதி மற்றும் காளி ஆகியோரின் உறைவிடமாகும்.
ஜம்முவிலிருந்து 42 கி.மி. தொலைவில் இருக்கும் இந்த குகை, 30 மி. நீளத்தையும், 1.5 மீ. உயரத்தையும் கொண்டுள்ளது.இந்த குகையின் முடிவில் சூலத்தின் மூன்று முனைகள் போல மூன்று பாறைகள் சுயம்புவாக உள்ளது அது முப்பெரும் தேவியர்களான இலக்குமி, சரசுவதி மற்றும் காளி ஆகியோரின் அருவ வடிவமாகும். பிந்தி என அழைக்கப்படும் அந்த வடிவங்களே மாதா ராணியாக வணங்கப்படுகிறது.
பக்தர்களுக்கான சேவைகள்
பதிமூன்று கிலோ மீட்டர் தொலைவை மலையில் நடந்து பயணிக்கும் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு ஒன்றை கிலோ மீட்டர் தொலைவிற்கு இலவச கழிப்பிடங்களும், ஓய்வு எடுக்க மண்டபங்களும், தாகம், பசி நீக்கிக் கொள்ள தேனீர் கடைகளும், சிற்றுண்டிச்சாலைகளும் உள்ளது. மலைக்கோயில் பாதையில் இரவுநேரப் பயணித்தின் போது உறங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் மூன்று இடங்களில் வசதி செய்துள்ளனர் கோயில் நிர்வாகம்.
மேலும் உயரமான மலை என்பதால் பிராணவாயு குறைவாக இருக்கும். எனவே நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கும், அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், கோயில் நிர்வாகம் ஆங்காங்கே மருத்துவர்களும், மருத்துவ வசதிகளுடன் கூடிய முதலுதவி மையங்கள் அமைத்துள்ளனர். மலையில் நடக்கவும், குதிரைகள் மீது ஏறி பயணிக்க முடியாத பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் வைஷ்ணவ தேவி மலைகோயிலுக்கு செல்ல ஹெலிகாப்டர் வசதி செய்துள்ளது.
திண்டுக்கல் அருகே காம்பார்பட்டியில் பெருமாள், திருமால் மற்றும் 1008 லிங்க, ஆத்மலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அதிகாரிபட்டி அருகே உள்ளது காம்பார்பட்டி. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உருவானது ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை மாதா புவனேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலுக்கு வந்தால் ஒரே இடத்தில் 1008 சிவலிங்கங்களை காணலாம்.
கோபால்பட்டி அருகே காம்பார்பட்டியில் இந்த அழகிய திருத்தலம் அமைந்துள்ளது. சிவபெருமான் மீது பற்று கொண்ட சிவத்தொண்டர் சச்சிதானந்த சாமிகள், பல யுகங்களுக்கு முன் சித்தர் ராமதேவர் எப்போதும் இங்கு வழிபாடு செய்ததாகவும், ஒரு பெரிய சிவன் கோவில் இந்த இடத்தின் அடியில் இருந்ததை இவர் ஞானப்பார்வையால் அறிந்ததாகவும் கூறுகிறார்.
தென்னாடுடைய சிவன் மேல்கொண்ட அன்பின் உச்சநிலை இக்கோயில். மக்களின் துயர் தீர்க்கும் ஒரு கோயிலாக இது அமையவேண்டும் என்ற இவரது விருப்பத்தால் 1998ல் ஆரம்பித்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் புவனேஸ்வரியம்மாள் உடனுறை ஆத்மலிங்கேஸ்வரர் ஆலயமாக முதல் கும்பாபிஷேகம் 2012, மே 6&ல் நடத்தப்பட்டது.
ஒரு நாள் இவர் உறங்கி கொண்டிருக்கும் வேளையில் லிங்கத்திலிருந்து தோன்றிய சிவன், 2016 சிவலிங்கங்களும் ஒரு சகஸ்ரலிங்கமும், 1007 லிங்கங்களும் கட்டி, பிரதிஷ்டை செய்யுமாறு கூறியதும், சிவபெருமான் லிங்கத்திற்குள் மறைந்து விட்டாராம். சிவபெருமானின் அருளால் இதற்கான நிலம் கிடைக்கப்பெற்றதும், வேலைகளை இவர் தொடங்கினார்.
இதுவரை மக்கள் 1008 சிவலிங்கங்களை தானமாக வழங்கி உள்ளனர். இங்குள்ள சிறப்பே ஒரே கோயிலில் 1008 சிவலிங்கங்கள், 80 டன் எடையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 20 அடி நீளம் கொண்ட பிரமாண்ட பள்ளி கொண்டபெருமாள், மாவட்டத்திலேயே பெரிய நந்தீஸ்வரர், திருமாலின் மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம், வாமன அவதாரம், நரசிம்மாவதாரம், பரசுராம அவதாரம், பலராம அவதாரம், ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகிய 9 அவதாரங்கள் இங்குள்ளது.
கொடிமரத்தில் நான்கு பக்கமும் பிரம்மா, சரஸ்வதி, லிங்கம், நந்தீஸ்வரர் என இடம் பெற்றிருப்பது கொடி மரத்தின் சிறப்பு. மேலும் இங்கு மாதா புவனேஸ்வரி அம்மன், ஆத்மலிங்கேஸ்வரர், பாலமுருகன், காசிலிங்கம், மகாலட்சுமி, சித்தி விநாயகர், நாகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, தன்வந்திரி, நவ கிரகங்கள், ஆஞ்சநேயர், நந்தீஸ்வரர் மற்றும் 1008 சிவலிங்கங்கள் என அனைத்து தெய்வங்களையும் வழிபடலாம்.
இவை தவிர காவல்தெய்வங்களான கருப்பசாமி, அய்யனாரும் உள்ளனர். அய்யப்பன், நடராஜர் சிலைகள் தயாராகி வருகிறது.
மகா சிவராத்திரி அன்று விடிய விடிய சிறப்பு பூஜைகள் 1008 லிங்கங்களுக்கும் நடைபெறும். ஒவ்வொரு பிரதோஷம், சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை பூஜைகளும் உண்டு. தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். தினமும் காலை 6 மணிமுதல் 11 மணிவரையும், மாலை 4 மணிமுதல் 8.30 மணிவரையும் கோயில் திறந்திருக்கும். காலை 6 மணிமுதல் 8 மணிவரை பூஜை நடைபெறும்.
இயற்கை எழில் கொஞ்சும் காம்பார்பட்டியில் தெய்வீக மனம் கமலும் ஆலயமாக இந்த திருத்தலம் அமைந்துள்ளது. காக்கும் கடவுள், படைக்கும் கடவுள், அழிக்கும் கடவுள் மற்றும் பரிவார தெய்வங்கள், எல்லை தெய்வங்கள் ஆகியவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இங்கு நாமும் ஒரு முறை சென்று வணங்கினால் வேண்டிய வரங்களை பெற்று மன நிம்மதி அடையலாம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அதிகாரிபட்டி அருகே உள்ளது காம்பார்பட்டி. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உருவானது ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை மாதா புவனேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலுக்கு வந்தால் ஒரே இடத்தில் 1008 சிவலிங்கங்களை காணலாம்.
கோபால்பட்டி அருகே காம்பார்பட்டியில் இந்த அழகிய திருத்தலம் அமைந்துள்ளது. சிவபெருமான் மீது பற்று கொண்ட சிவத்தொண்டர் சச்சிதானந்த சாமிகள், பல யுகங்களுக்கு முன் சித்தர் ராமதேவர் எப்போதும் இங்கு வழிபாடு செய்ததாகவும், ஒரு பெரிய சிவன் கோவில் இந்த இடத்தின் அடியில் இருந்ததை இவர் ஞானப்பார்வையால் அறிந்ததாகவும் கூறுகிறார்.
தென்னாடுடைய சிவன் மேல்கொண்ட அன்பின் உச்சநிலை இக்கோயில். மக்களின் துயர் தீர்க்கும் ஒரு கோயிலாக இது அமையவேண்டும் என்ற இவரது விருப்பத்தால் 1998ல் ஆரம்பித்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் புவனேஸ்வரியம்மாள் உடனுறை ஆத்மலிங்கேஸ்வரர் ஆலயமாக முதல் கும்பாபிஷேகம் 2012, மே 6&ல் நடத்தப்பட்டது.
ஒரு நாள் இவர் உறங்கி கொண்டிருக்கும் வேளையில் லிங்கத்திலிருந்து தோன்றிய சிவன், 2016 சிவலிங்கங்களும் ஒரு சகஸ்ரலிங்கமும், 1007 லிங்கங்களும் கட்டி, பிரதிஷ்டை செய்யுமாறு கூறியதும், சிவபெருமான் லிங்கத்திற்குள் மறைந்து விட்டாராம். சிவபெருமானின் அருளால் இதற்கான நிலம் கிடைக்கப்பெற்றதும், வேலைகளை இவர் தொடங்கினார்.
இதுவரை மக்கள் 1008 சிவலிங்கங்களை தானமாக வழங்கி உள்ளனர். இங்குள்ள சிறப்பே ஒரே கோயிலில் 1008 சிவலிங்கங்கள், 80 டன் எடையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 20 அடி நீளம் கொண்ட பிரமாண்ட பள்ளி கொண்டபெருமாள், மாவட்டத்திலேயே பெரிய நந்தீஸ்வரர், திருமாலின் மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம், வாமன அவதாரம், நரசிம்மாவதாரம், பரசுராம அவதாரம், பலராம அவதாரம், ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகிய 9 அவதாரங்கள் இங்குள்ளது.
கொடிமரத்தில் நான்கு பக்கமும் பிரம்மா, சரஸ்வதி, லிங்கம், நந்தீஸ்வரர் என இடம் பெற்றிருப்பது கொடி மரத்தின் சிறப்பு. மேலும் இங்கு மாதா புவனேஸ்வரி அம்மன், ஆத்மலிங்கேஸ்வரர், பாலமுருகன், காசிலிங்கம், மகாலட்சுமி, சித்தி விநாயகர், நாகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, தன்வந்திரி, நவ கிரகங்கள், ஆஞ்சநேயர், நந்தீஸ்வரர் மற்றும் 1008 சிவலிங்கங்கள் என அனைத்து தெய்வங்களையும் வழிபடலாம்.
இவை தவிர காவல்தெய்வங்களான கருப்பசாமி, அய்யனாரும் உள்ளனர். அய்யப்பன், நடராஜர் சிலைகள் தயாராகி வருகிறது.
மகா சிவராத்திரி அன்று விடிய விடிய சிறப்பு பூஜைகள் 1008 லிங்கங்களுக்கும் நடைபெறும். ஒவ்வொரு பிரதோஷம், சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை பூஜைகளும் உண்டு. தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். தினமும் காலை 6 மணிமுதல் 11 மணிவரையும், மாலை 4 மணிமுதல் 8.30 மணிவரையும் கோயில் திறந்திருக்கும். காலை 6 மணிமுதல் 8 மணிவரை பூஜை நடைபெறும்.
இயற்கை எழில் கொஞ்சும் காம்பார்பட்டியில் தெய்வீக மனம் கமலும் ஆலயமாக இந்த திருத்தலம் அமைந்துள்ளது. காக்கும் கடவுள், படைக்கும் கடவுள், அழிக்கும் கடவுள் மற்றும் பரிவார தெய்வங்கள், எல்லை தெய்வங்கள் ஆகியவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இங்கு நாமும் ஒரு முறை சென்று வணங்கினால் வேண்டிய வரங்களை பெற்று மன நிம்மதி அடையலாம்.






