என் மலர்
முக்கிய விரதங்கள்
ஜாதகத்திலோ ராகு - கேதுகளுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்திருந்தால் அது கால சர்ப்பதோஷமாகும். இந்த தோஷ நிவர்த்திக்கான பரிகாரத்தை பார்க்கலாம்.
ஒரு ஆணின் ஜாதகத்திலோ, பெண்ணின் ஜாதகத்திலோ ராகு - கேதுகளுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்திருந்தால் அது கால சர்ப்பதோஷமாகும்.
இப்படிப்பட்ட சர்ப்பதோஷம் அமைந்த ஜாதகங்கள் சந்தோஷத்தை சந்திப்பது அரிதாக இருக்கும். அதுபோல் ஜாதகம் அமைந்தவர்களுக்கு திருமணத்தடை ஏற்படலாம். பிள்ளை பிறக்கவும் தடை ஏற்பட வழி உண்டு.
அவர்கள் தங்கள் ஜாதகத்தில் ராகு - கேது இருக்கும் இடத்தை நன்கு ஆராய்ந்து அது யார் காலில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குரிய நட்புக்கிரகத்தின் நாளில் அதிகாலையில் நீராடி, புளிப்பு கலந்த பதார்த்தத்தையும், அன்னம், உளுந்து கலந்த பலகாரத்தையும் தயாரித்து தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் படைத்து, மந்தாரை மலரை ராகு படத்திற்குச் சூட்டி வழிபட்டு விரதம் இருப்பது நல்லது.
அதே போல் கேதுவிற்கு புளிப்பு சேர்ந்த சாதம், கொள்ளு கலந்த பலகாரம் படைத்து ஐந்துவித மலர்களை மாலைகளாக்கி கேது படத்திற்கு சூட்டி வழிபட வேண்டும். விரதம் இருந்து நாக கவசத்தை நாள்தோறும் அல்லது வெள்ளிதோறும் அல்லது பூஜிக்கும் தினத்தில் பாடி வழிபட்டால் சர்ப்பகிரகங்கள் சந்தோஷமான வாழ்வை வழங்கும்.
அருகில் உள்ள நாகத்துடன் கூடிய விநாயகப் பெருமானையும் வழிபட்டு, பின்னோக்கி ராகுவுக்கு நான்கு சுற்றும், கேதுவுக்கு ஏழு சுற்றும் வர வேண்டும். ஸ்ரீ விக்னேஸ்வரா என்றாலே சர்ப்பதோஷம் நீங்கி விடும்.
கால சர்ப்ப தோஷத்தை போக்கும் சிறப்பான விநாயகர் தலங்களில் தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுக மங்கலம் தலமும் ஒன்றாகும். ஆயிரம் என்கிற எண்ணோடு சம்பந்தப்பட்ட விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்று. இவர் 2300 ஆண்டுகளுக்கு முன் வந்தவர் என்றும் தமிழ்நாட்டின் முதல் பிள்ளையார் என்றும் கூறப்படுகிறது. பாண்டிய அரசனின் யாகத்திற்காக இந்த விநாயகர் நர்மதை நதிக்கரையிலிருந்து வரழைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டவர் என்றும் ஓர் வரலாறு உள்ளது.
ஒருசமயம் ஒரு பணக்காரர் 1008 பேர்களுக்கு அன்னம்பாலித்தபோது எண்ணிக்கையில் ஒருவர் குறைந்தது. என்ன செய்வதென்று யோசித்த அவர் விநாயகரிடம் வேண்டிக் கொண்டார். உடனே விநாயகர் இளைஞனாக இத்தலத்தில் வந்த சலனத்தைப் போக்கி ஆயிரத்தெண் பிள்ளையார் ஆனார்.
கேது கிரகத்தின் அதிஷ்டான தேவதையாக விளங்குவதால் ராகு கேது பரிகாரம் மற்றும் காலசர்ப்ப தோஷ நிவர்த்தித் தலம். அபிஷேகம் மற்றும் சதுர் தேங்காய் 108, 1008 விடப்பட்டு வழிப்படப்படுகிறது. மேலும் கொட்டாரக்குறிச்சி கிராமத்தில் வீராசாமி, உச்சி மாகாளியம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் ஆலயங்கள் உள்ளன.
திருச்செந்தூரில் அரங்கேறிய சுப்பிரமணிய புஜங்த்தை ஆதிசங்கரர் பாடியதற்கு முன் இந்த ஊரின் விநாயகர் மேல் கணேச பஞ்சரத்தினம் பாடியதாகத் தகவல். ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க கணேச பஞ்ச ரத்தினம் பாடியது இவரை வைத்துத் தான் என்றும் நம்பப்படுகிறது.
அவர்கள் தங்கள் ஜாதகத்தில் ராகு - கேது இருக்கும் இடத்தை நன்கு ஆராய்ந்து அது யார் காலில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குரிய நட்புக்கிரகத்தின் நாளில் அதிகாலையில் நீராடி, புளிப்பு கலந்த பதார்த்தத்தையும், அன்னம், உளுந்து கலந்த பலகாரத்தையும் தயாரித்து தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் படைத்து, மந்தாரை மலரை ராகு படத்திற்குச் சூட்டி வழிபட்டு விரதம் இருப்பது நல்லது.
அதே போல் கேதுவிற்கு புளிப்பு சேர்ந்த சாதம், கொள்ளு கலந்த பலகாரம் படைத்து ஐந்துவித மலர்களை மாலைகளாக்கி கேது படத்திற்கு சூட்டி வழிபட வேண்டும். விரதம் இருந்து நாக கவசத்தை நாள்தோறும் அல்லது வெள்ளிதோறும் அல்லது பூஜிக்கும் தினத்தில் பாடி வழிபட்டால் சர்ப்பகிரகங்கள் சந்தோஷமான வாழ்வை வழங்கும்.
அருகில் உள்ள நாகத்துடன் கூடிய விநாயகப் பெருமானையும் வழிபட்டு, பின்னோக்கி ராகுவுக்கு நான்கு சுற்றும், கேதுவுக்கு ஏழு சுற்றும் வர வேண்டும். ஸ்ரீ விக்னேஸ்வரா என்றாலே சர்ப்பதோஷம் நீங்கி விடும்.
கால சர்ப்ப தோஷத்தை போக்கும் சிறப்பான விநாயகர் தலங்களில் தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுக மங்கலம் தலமும் ஒன்றாகும். ஆயிரம் என்கிற எண்ணோடு சம்பந்தப்பட்ட விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்று. இவர் 2300 ஆண்டுகளுக்கு முன் வந்தவர் என்றும் தமிழ்நாட்டின் முதல் பிள்ளையார் என்றும் கூறப்படுகிறது. பாண்டிய அரசனின் யாகத்திற்காக இந்த விநாயகர் நர்மதை நதிக்கரையிலிருந்து வரழைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டவர் என்றும் ஓர் வரலாறு உள்ளது.
ஒருசமயம் ஒரு பணக்காரர் 1008 பேர்களுக்கு அன்னம்பாலித்தபோது எண்ணிக்கையில் ஒருவர் குறைந்தது. என்ன செய்வதென்று யோசித்த அவர் விநாயகரிடம் வேண்டிக் கொண்டார். உடனே விநாயகர் இளைஞனாக இத்தலத்தில் வந்த சலனத்தைப் போக்கி ஆயிரத்தெண் பிள்ளையார் ஆனார்.
கேது கிரகத்தின் அதிஷ்டான தேவதையாக விளங்குவதால் ராகு கேது பரிகாரம் மற்றும் காலசர்ப்ப தோஷ நிவர்த்தித் தலம். அபிஷேகம் மற்றும் சதுர் தேங்காய் 108, 1008 விடப்பட்டு வழிப்படப்படுகிறது. மேலும் கொட்டாரக்குறிச்சி கிராமத்தில் வீராசாமி, உச்சி மாகாளியம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் ஆலயங்கள் உள்ளன.
திருச்செந்தூரில் அரங்கேறிய சுப்பிரமணிய புஜங்த்தை ஆதிசங்கரர் பாடியதற்கு முன் இந்த ஊரின் விநாயகர் மேல் கணேச பஞ்சரத்தினம் பாடியதாகத் தகவல். ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க கணேச பஞ்ச ரத்தினம் பாடியது இவரை வைத்துத் தான் என்றும் நம்பப்படுகிறது.
சாய்பாபாவின் 9 வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சாய்பாபாவின் இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் அனுஷ்டிக்கலாம். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.
1) ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும் (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும்.
2) சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9-வது வியாழக்கிழமை இந்த சாய் விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும் (5 அல்லது 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில்).
3) விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும்.
4) மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.
விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.
1) ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும் (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும்.
2) சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9-வது வியாழக்கிழமை இந்த சாய் விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும் (5 அல்லது 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில்).
3) விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும்.
4) மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.
வீடு, மனை, தோட்டம் போன்ற செல்வங்களை அருளும் கஜலட்சுமி எண்ணி, இன்று பெண்கள் விரதம் அனுஷ்டிப்பார்கள். இதனால், அவர்களின் செல்வமும் உயரும் என்பது பெரியோர்களின் வாக்கு.
அஷ்டலட்சுமிகளில் சிறப்பான வடிவமாகப் போற்றப்படுபவள், கஜலட்சுமி. பார்க்கடலைக் கடைந்தபோது வெளியான திருமகளை, அஷ்ட திக்கிலும் இருந்த தேவயானைகள் கூடிவந்து, தங்களது மனைவியரோடு மங்கள நீராட்டி, பிளிறலை எழுப்பி வழிபட்டன என்று புராணங்கள் சொல்கின்றன.
எனவேதான் ஆதிலட்சுமி, கஜலட்சுமி என்று போற்றப்படுகிறாள். அஷ்டலட்சுமிகளில், கஜலட்சுமி நடுநாயகமாக வீற்றிருப்பவள். இவள், நம் வீட்டின் நிலைப்படிமேல் அமர்ந்துள்ளதால், திருநிலை நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். தாமரை மலரில் பத்மாசன நிலையில் திருமகள் வீற்றிருக்க, இருபுறமும் தேவ யானைகள் நின்று புனித நீரால் அபிஷேகம் செய்யும் நிலையில் கஜலட்சுமி இருப்பாள். சில படங்களில், யானைகள் லட்சுமிக்கு கவரி வீசுவது போலவும் காணப்படும்.
தயாலக்ஷ்மி, சாந்தலக்ஷ்மி என அழைக்கப்படும் இந்த கஜலட்சுமியே நிலங்களை அளிப்பவள். வீட்டின் அமைதிக்கும் இவளையே வணங்க வேண்டும். இரு கைகளில் தாமரை மலர்களை ஏந்தியும் மற்ற இரு கரங்களில் அபய, வர முத்திரை காட்டியும் அருளும் இந்த கஜலட்சுமி தேவியின் 'கஜலட்சுமி விரதம்' இன்றுதான் அனுஷ்டிக்கப்படுகிறது.
வீடு, மனை, தோட்டம் போன்ற செல்வங்களை அருளும் இந்தத் தாயாரை எண்ணி, இந்த நாளில் பெண்கள் விரதம் இருப்பார்கள். கஜலட்சுமியை விரதம் இருந்து வழிபடும் ஒருவருக்கு கருணையும், கொடுக்கும் எண்ணமும் வளரும். இதனால், அவர்களின் செல்வமும் உயரும் என்பது பெரியோர்களின் வாக்கு. கஜலட்சுமி விரத நாளான இன்று, இந்த லட்சுமி தேவியை வணங்கி, அருளைப் பெறுவோம்.
எனவேதான் ஆதிலட்சுமி, கஜலட்சுமி என்று போற்றப்படுகிறாள். அஷ்டலட்சுமிகளில், கஜலட்சுமி நடுநாயகமாக வீற்றிருப்பவள். இவள், நம் வீட்டின் நிலைப்படிமேல் அமர்ந்துள்ளதால், திருநிலை நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். தாமரை மலரில் பத்மாசன நிலையில் திருமகள் வீற்றிருக்க, இருபுறமும் தேவ யானைகள் நின்று புனித நீரால் அபிஷேகம் செய்யும் நிலையில் கஜலட்சுமி இருப்பாள். சில படங்களில், யானைகள் லட்சுமிக்கு கவரி வீசுவது போலவும் காணப்படும்.
தயாலக்ஷ்மி, சாந்தலக்ஷ்மி என அழைக்கப்படும் இந்த கஜலட்சுமியே நிலங்களை அளிப்பவள். வீட்டின் அமைதிக்கும் இவளையே வணங்க வேண்டும். இரு கைகளில் தாமரை மலர்களை ஏந்தியும் மற்ற இரு கரங்களில் அபய, வர முத்திரை காட்டியும் அருளும் இந்த கஜலட்சுமி தேவியின் 'கஜலட்சுமி விரதம்' இன்றுதான் அனுஷ்டிக்கப்படுகிறது.
வீடு, மனை, தோட்டம் போன்ற செல்வங்களை அருளும் இந்தத் தாயாரை எண்ணி, இந்த நாளில் பெண்கள் விரதம் இருப்பார்கள். கஜலட்சுமியை விரதம் இருந்து வழிபடும் ஒருவருக்கு கருணையும், கொடுக்கும் எண்ணமும் வளரும். இதனால், அவர்களின் செல்வமும் உயரும் என்பது பெரியோர்களின் வாக்கு. கஜலட்சுமி விரத நாளான இன்று, இந்த லட்சுமி தேவியை வணங்கி, அருளைப் பெறுவோம்.
ஜோதிடம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய கலைகளில் மேதாவிவிலாசம் பெறுவதற்கு வேண்டுபவர்கள் உச்சிஷ்ட கணபதியை விரதம் இருந்து உபாசனை செய்ய வேண்டும்.
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி துரிதமாக பலன்களை தருவார் என்று மாண்டுக்ய உபநிசத் கூறுகிறது. ஜோதிடம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய கலைகளில் மேதாவிவிலாசம் பெறுவதற்கு வேண்டுபவர்கள் உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்ய வேண்டும். இவருடைய பெருமையை அதர்வண வேதமும் உட்டாமரேச தந்திரமும், பேத்கார தந்திரமும் பல ரிக்குகளில் விவரிக்கின்றன.
மனிதர்களோ, தெய்வங்களோ எந்த காரியத்தை தொடங்க ஆரம்பிப்பதற்கு முன், முதலில் விநாயகரை வணங்கித்தான் தங்கள் செயல்களை செய்யவேண்டும். அப்படி செய்யாவிட்டால் காரியங்களில் தடை உண்டாகும் என்பது நம்பிக்கை.
விநாயகர் பூஜை செய்வதினால் தூய்மையான உள்ளம், தர்மம் மற்றும் நேர்வழி சிந்தனை, லட்சுமி கடாட்சம், தெளிந்த நல் அறிவு, சமயோஜித புத்தி, வாக்குசாதுரியம், நுண்ணறிவு, பெருந்தன்மை, தைரியம், நற்புகழ் முகப்பொலிவு கிடைக்கும்.
விநாயகரை விரதம் இருந்து உள்ளன்போடு பூஜிப்பவர்களுக்கு இவரே குருவாக விளங்குகிறார். அவர்கள் மந்திர உபதேசம் பெறுவதற்காக எவரையும் தேடி செல்ல வேண்டியதில்லை. விநாயகர் சந்நிதியில் அமர்ந்து கொண்டு எந்த மந்திரத்தை சொன்னாலும் பலிதமாகும். மாத்ருகா அட்சரங்கள் 51. ஒரு அட்சரத்துக்கு கனபதிகள் உண்டு. சுப காரியங்கள் ஆரம்பிக்கும் போது பதினாறு கணபதியின் பெயர்களை சொல்ல வேண்டும்.
என்ன! அன்பர்களே பிள்ளையாரின் மகிமையைப் படித்தீர்கள் அல்லவா! இனி நீங்களும் உங்கள் மனைவி குழந்தைகளும் தினமும் வீட்டில் விநாயகரை விரதம் இருந்து பூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
அப்புறம் பாருங்க....
கல்யாணத் தடையா, குழந்தை இல்லையா? வேலை கிடைக்க வில்லையா?, வீடுகட்ட முடியவில்லையா, கடனை தீர்க்க முடியவில்லையா, எல்லாபிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
மனிதர்களோ, தெய்வங்களோ எந்த காரியத்தை தொடங்க ஆரம்பிப்பதற்கு முன், முதலில் விநாயகரை வணங்கித்தான் தங்கள் செயல்களை செய்யவேண்டும். அப்படி செய்யாவிட்டால் காரியங்களில் தடை உண்டாகும் என்பது நம்பிக்கை.
விநாயகர் பூஜை செய்வதினால் தூய்மையான உள்ளம், தர்மம் மற்றும் நேர்வழி சிந்தனை, லட்சுமி கடாட்சம், தெளிந்த நல் அறிவு, சமயோஜித புத்தி, வாக்குசாதுரியம், நுண்ணறிவு, பெருந்தன்மை, தைரியம், நற்புகழ் முகப்பொலிவு கிடைக்கும்.
விநாயகரை விரதம் இருந்து உள்ளன்போடு பூஜிப்பவர்களுக்கு இவரே குருவாக விளங்குகிறார். அவர்கள் மந்திர உபதேசம் பெறுவதற்காக எவரையும் தேடி செல்ல வேண்டியதில்லை. விநாயகர் சந்நிதியில் அமர்ந்து கொண்டு எந்த மந்திரத்தை சொன்னாலும் பலிதமாகும். மாத்ருகா அட்சரங்கள் 51. ஒரு அட்சரத்துக்கு கனபதிகள் உண்டு. சுப காரியங்கள் ஆரம்பிக்கும் போது பதினாறு கணபதியின் பெயர்களை சொல்ல வேண்டும்.
என்ன! அன்பர்களே பிள்ளையாரின் மகிமையைப் படித்தீர்கள் அல்லவா! இனி நீங்களும் உங்கள் மனைவி குழந்தைகளும் தினமும் வீட்டில் விநாயகரை விரதம் இருந்து பூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
அப்புறம் பாருங்க....
கல்யாணத் தடையா, குழந்தை இல்லையா? வேலை கிடைக்க வில்லையா?, வீடுகட்ட முடியவில்லையா, கடனை தீர்க்க முடியவில்லையா, எல்லாபிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
சாய்பாபாவுக்கு உகந்த இந்த விரதத்தை 9 வாரங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும். இந்த விரதம் கடைபிடிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம். அதாவது தன்னிடமிருந்த சட்கா எனும் குச்சியால் பாபா உருவாக்கிய அணையா துனி நெருப்பை 21, 48, 54 அல்லது 108 முறை என அவரவர் சௌகரியம் போல் செய்யலாம்.
பூஜையறையை துடைத்து கோலம் போட்டு மஞ்சள் துணியை பலகையில் விரித்து பாபா படத்தை அதன்மீது வைத்து ஊதுவத்தி ஏற்றி, ஒரு மட்டைத் தேங்காயை வைத்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அவர் முன் வைக்க வேண்டும். ‘புக்கே’ எனும் (தேங்காய் துருவல், அவல், சர்க்கரை) கலந்த இனிப்பை நிவேதிக்க வேண்டும்.
9 வாரம் இந்த பூஜையை தொடர்ந்து செய்யவேண்டும். முதல் வாரம் மட்டைத் தேங்காயை துனியில் போடவேண்டும். அந்த ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவை தவிர்த்தல் நலம். 9ம் வாரம் மஞ்சள் நிற இனிப்பைத் தயாரித்து எளியோர்க்கு விநியோகம் செய்யவேண்டும்.
மேற்காணும் வழிபாட்டு முறைகளில் அவரவர் விருப்பப்படி முடிந்த பூஜையினை செய்து சகல வளங்களும் பெறலாம். நாம் தினமும் பார்த்து அதன்படி திட்டமிட உதவும் காலண்டர் வேறு; பாபா வைத்திருக்கும் காலண்டர் வேறு.
நம் பிரார்த்தனைகள் நம் காலண்டர்படி இன்ன தேதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்காமல் அவர் மீது நம்பிக்கை வைத்து செயலாற்ற வேண்டும். ஏனென்றால் நமக்கு எதை எப்போது தரவேண்டும் என்பதை அவர் தன் காலண்டர்படி தீர்மானித்து அப்படித்தான் நமக்கு அருள்வார்.
பூஜையறையை துடைத்து கோலம் போட்டு மஞ்சள் துணியை பலகையில் விரித்து பாபா படத்தை அதன்மீது வைத்து ஊதுவத்தி ஏற்றி, ஒரு மட்டைத் தேங்காயை வைத்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அவர் முன் வைக்க வேண்டும். ‘புக்கே’ எனும் (தேங்காய் துருவல், அவல், சர்க்கரை) கலந்த இனிப்பை நிவேதிக்க வேண்டும்.
9 வாரம் இந்த பூஜையை தொடர்ந்து செய்யவேண்டும். முதல் வாரம் மட்டைத் தேங்காயை துனியில் போடவேண்டும். அந்த ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவை தவிர்த்தல் நலம். 9ம் வாரம் மஞ்சள் நிற இனிப்பைத் தயாரித்து எளியோர்க்கு விநியோகம் செய்யவேண்டும்.
மேற்காணும் வழிபாட்டு முறைகளில் அவரவர் விருப்பப்படி முடிந்த பூஜையினை செய்து சகல வளங்களும் பெறலாம். நாம் தினமும் பார்த்து அதன்படி திட்டமிட உதவும் காலண்டர் வேறு; பாபா வைத்திருக்கும் காலண்டர் வேறு.
நம் பிரார்த்தனைகள் நம் காலண்டர்படி இன்ன தேதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்காமல் அவர் மீது நம்பிக்கை வைத்து செயலாற்ற வேண்டும். ஏனென்றால் நமக்கு எதை எப்போது தரவேண்டும் என்பதை அவர் தன் காலண்டர்படி தீர்மானித்து அப்படித்தான் நமக்கு அருள்வார்.
முதன் முதலாக எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் விநாயகரை விரதம் இருந்து வழிபாடு செய்த பின்னர் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
வெள்ளிக்கிழமை விரதம்
செவ்வாய்க்கிழமை விரதம்
சதுர்த்தி விரதம்
குமார சஷ்டி விரதம்
தூர்வா கணபதி விரதம்
சித்தி விநாயகர் விரதம்
துர்வாஷ்டமி விரதம்
நவராத்திரி விரதம்
வெள்ளிப் பிள்ளையார் விரதம்
செவ்வாய்ப் பிள்ளையார் விரதம்
செவ்வாய்க்கிழமை விரதம்
சதுர்த்தி விரதம்
குமார சஷ்டி விரதம்
தூர்வா கணபதி விரதம்
சித்தி விநாயகர் விரதம்
துர்வாஷ்டமி விரதம்
நவராத்திரி விரதம்
வெள்ளிப் பிள்ளையார் விரதம்
செவ்வாய்ப் பிள்ளையார் விரதம்
ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.
விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம்.
சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும். “ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று.
இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது.
ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.
விரதங்களும் பலன்களும்
விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.
திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவான் பரிபூர அன்பைப் பெறலாம்.
செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள. தீரும்.
வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.
சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும். “ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று.
இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது.
ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.
விரதங்களும் பலன்களும்
விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.
திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவான் பரிபூர அன்பைப் பெறலாம்.
செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள. தீரும்.
வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.
விநாயகருக்கு ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி விசாக நட்சத்திரம் கூடிய சுப தினம் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடப்படுகிறது.
உலகத்துக்கே அன்னையும் பிதாவுமாக விளங்கும் சிவன்-பார்வதியின் மூத்த மகனாக கருதப்படுபவர் விநாயகர். பாசம், அங்குசம், அபயம், வரதம், மோதகம் ஆகியவற்றை தாங்கிய நான்கு கரங்கள் மற்றும் ஐந்தாவது கரமான தும்பிக்கையின் மூலமாக, படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைதல் என்னும் ஐந்தொழில்களை ஆற்றுவதால் மும்மூர்த்திகளும் இவருள் அடக்கம் என்கிறது விநாயக புராணம். அதன் அடிப்படையிலேயே இவரை முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றோம்.
மகாபாரதத்தை எழுத விரும்பிய வேதவியாசர், அதை எழுதுவதற்கு தகுந்த நபராக விநாயகரை தேர்வு செய்து, மகாபாரதம் எழுதித்தர வேண்டினார்.
அதற்கு விநாயகர், ‘நீ விரும்பிய வண்ணம் நாம் எழுதுவோம். ஆனால் நீ நிறுத்தாமல் சொல்லவேண்டும்’ என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார். 8,800 சுலோகங்கள் கொண்ட மகாபாரதம் விநாயகப்பெருமானால் எழுதப்பட்டது.
விநாயகர் வழிபாடு ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே இருந்துள்ளது என்று கூறப்பட்டாலும், அவர் நான்கு யுகங்களின் அதிபதியாக திகழ்கிறார் என்கிறது ஒரு புராண குறிப்பு. கிருதாயுகத்தில் காஷ்யபர்-அருந்ததி தம்பதிகளின் மகனாகவும் (மகோற்கடர்), திரேதாயுகத்தில் அம்பிகையின் பிள்ளையாக பிறந்து மயிலோடு விளையாடுவதில் நாட்டம் கொண்டவராகவும் (மயுரேசர்), துவாபராயுகத்தில் பரராசமுனிவர் - வத்ஸலா தம்பதியினரின் வளர்ப்பு குமாரராகவும் (விக்னராசர்), கலியுகத்தில் சிவன் - பார்வதிதேவியின் மகனாகவும் (விநாயகர்) அவரது பிறப்பு நீண்டுகொண்டே வந்துள்ளது. யுகங்களை கடந்தவர் என்பதால், காலந்தோறும் அவரை வழிபடுவது பின்பற்றப்பட்டு வருகின்றது. ஒரு காலகட்டத்தில் ஒரு கூட்டத்தினர் கணபதியை மட்டுமே வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அத்தகைய வழிபாட்டை ‘காணாபாத்யம்’ என்று குறிப்பிடுவர்.
விநாயகருக்கு யானைத் தலை அமைந்ததால் வருத்தம் கொண்ட அம்பாளை, சிவன் சமாதானம் செய்தார். ‘இந்த உருவிலேயே அவன் உலகப்புகழ் பெறுவான். மக்கள் எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகனை வழிபட்ட பின்னரே தொடங்குவர். காரிய தடை ஏற்படும் போதும், அதனை விலக்குமாறு அவனையே வேண்டுவர்’ என்றார்.
இன்றும் சிவனுக்கும் பார்வதிக்கும், அவர்களது இன்னொரு மகனான முருகனுக்கும் ஊர்கள் தோறும் ஆலயங்கள் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் விநாயகருக்கு ஊர்கள் தோறும் ஆலயம் உள்ளது. அது கற்றளியாகவோ, கூரை கொட்டகையாகவோ இருக்கலாம். ஏன் சில ஊர்களில் மரத்தடியிலும் கூட இடம்பிடித்திருப்பார். இதற்கு காரணம் சிவனின் அருளாசியும் அதனடிப்படையில் மக்கள் விநாயகர் மீது கொண்டிருந்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புமே ஆகும். மேலும் இதை விநாயகரின் தனிச்சிறப்பாகவும் கூறலாம்.
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என நம் முன்னோர்கள் அறிவுறுத்தியதை கடைப்பிடிப்போர், முதலில் கட்டுவது விநாயகர் கோவில்களை தாம். ஊர்கள் தோறும் சிறிய ஆலயங்களில் தனித்து இருக்கும் விநாயகர், பெரிய ஆலயங்களில் தனி சன்னிதானத்தில் இடம் பிடித்திருப்பார். விநாயகரின் தோற்றம் ஒரு அபூர்வ வடிவமாகும். அவரது முகம் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் தோற்றத்தையும், திருவடிகள் ஞானத்தையும், பெருவயிறு எல்லாப்பொருளும் தன்னகத்தே அடக்கம் என்பதையும், கரங்கள் ஐந்தொழிலையும், கொம்புகள் அறிவிற்கு முன்னுரிமை தருவதையும், தாழ்செவிகள் கேட்பனவற்றை எல்லாம் உள் செலுத்தாதே.. சரியானதை மட்டும் தேர்வுசெய் என்பதையும் உணர்த்துகின்றன. மொத்தத்தில் தனக்கு தானே தலைவனாய் தன்னிகரின்றி விளங்குபவர், விநாயகப் பெருமான்.

விநாயகருக்கு ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி விசாக நட்சத்திரம் கூடிய சுப தினம் மிக உகந்த நாளாகும். அன்றைய தினம் தான் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகருக்கு மோதகம் எனப்படும் கொழுக்கட்டை செய்து வழிபடுவது வழக்கம். மஞ்சள், மண், பசுஞ்சாணம், மாவு, வெல்லம் ஆகியவற்றில் பிள்ளையார் பிடித்து ஆவாஹானம் செய்து வழிபடப்படுகின்றது. விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போடுவது, சிதறு தேங்காய் உடைப்பது, அருகம்புல் சாத்துவது போன்ற வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்கிறார்கள்.
விரதம் இருப்பது எப்படி?
விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று காலை எழுந்து நீராடி, களி மண் அல்லது சந்தனத்தில் பிள்ளையாரை செய்து வைத்து அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். அப்போது விநாயகர் கவசம் மற்றும் விநாயகரைப் பற்றிய துதிப் பாடல்களை பாடி வழிபட வேண்டும். மறுநாள் காலை விநாயகருக்கு மோதகம், கொழுக்கட்டை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், அவல், பொரி, பழ வகைகளை நிவேதனமாக வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும்.
அதன்பிறகு விரதம் இருப்பவர், முதல் நாளில் இருந்து செய்து வழிபட்ட பிள்ளையாரை ஆற்றிலோ, கடலிலோ கொண்டு போய் விட்டு விட்டு வந்த பின் உணவருந்த வேண்டும். அல்லது வேறு ஒருவர் மூலமாகவும், விநாயகரை ஆற்றிலோ, கடலிலோ கரைக்கக் கூறி விட்டு விரதம் இருப்பவர் விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த விரதத்தை மேற்கொள்வதால், புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.
மகாபாரதத்தை எழுத விரும்பிய வேதவியாசர், அதை எழுதுவதற்கு தகுந்த நபராக விநாயகரை தேர்வு செய்து, மகாபாரதம் எழுதித்தர வேண்டினார்.
அதற்கு விநாயகர், ‘நீ விரும்பிய வண்ணம் நாம் எழுதுவோம். ஆனால் நீ நிறுத்தாமல் சொல்லவேண்டும்’ என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார். 8,800 சுலோகங்கள் கொண்ட மகாபாரதம் விநாயகப்பெருமானால் எழுதப்பட்டது.
விநாயகர் வழிபாடு ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே இருந்துள்ளது என்று கூறப்பட்டாலும், அவர் நான்கு யுகங்களின் அதிபதியாக திகழ்கிறார் என்கிறது ஒரு புராண குறிப்பு. கிருதாயுகத்தில் காஷ்யபர்-அருந்ததி தம்பதிகளின் மகனாகவும் (மகோற்கடர்), திரேதாயுகத்தில் அம்பிகையின் பிள்ளையாக பிறந்து மயிலோடு விளையாடுவதில் நாட்டம் கொண்டவராகவும் (மயுரேசர்), துவாபராயுகத்தில் பரராசமுனிவர் - வத்ஸலா தம்பதியினரின் வளர்ப்பு குமாரராகவும் (விக்னராசர்), கலியுகத்தில் சிவன் - பார்வதிதேவியின் மகனாகவும் (விநாயகர்) அவரது பிறப்பு நீண்டுகொண்டே வந்துள்ளது. யுகங்களை கடந்தவர் என்பதால், காலந்தோறும் அவரை வழிபடுவது பின்பற்றப்பட்டு வருகின்றது. ஒரு காலகட்டத்தில் ஒரு கூட்டத்தினர் கணபதியை மட்டுமே வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அத்தகைய வழிபாட்டை ‘காணாபாத்யம்’ என்று குறிப்பிடுவர்.
விநாயகருக்கு யானைத் தலை அமைந்ததால் வருத்தம் கொண்ட அம்பாளை, சிவன் சமாதானம் செய்தார். ‘இந்த உருவிலேயே அவன் உலகப்புகழ் பெறுவான். மக்கள் எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகனை வழிபட்ட பின்னரே தொடங்குவர். காரிய தடை ஏற்படும் போதும், அதனை விலக்குமாறு அவனையே வேண்டுவர்’ என்றார்.
இன்றும் சிவனுக்கும் பார்வதிக்கும், அவர்களது இன்னொரு மகனான முருகனுக்கும் ஊர்கள் தோறும் ஆலயங்கள் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் விநாயகருக்கு ஊர்கள் தோறும் ஆலயம் உள்ளது. அது கற்றளியாகவோ, கூரை கொட்டகையாகவோ இருக்கலாம். ஏன் சில ஊர்களில் மரத்தடியிலும் கூட இடம்பிடித்திருப்பார். இதற்கு காரணம் சிவனின் அருளாசியும் அதனடிப்படையில் மக்கள் விநாயகர் மீது கொண்டிருந்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புமே ஆகும். மேலும் இதை விநாயகரின் தனிச்சிறப்பாகவும் கூறலாம்.
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என நம் முன்னோர்கள் அறிவுறுத்தியதை கடைப்பிடிப்போர், முதலில் கட்டுவது விநாயகர் கோவில்களை தாம். ஊர்கள் தோறும் சிறிய ஆலயங்களில் தனித்து இருக்கும் விநாயகர், பெரிய ஆலயங்களில் தனி சன்னிதானத்தில் இடம் பிடித்திருப்பார். விநாயகரின் தோற்றம் ஒரு அபூர்வ வடிவமாகும். அவரது முகம் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் தோற்றத்தையும், திருவடிகள் ஞானத்தையும், பெருவயிறு எல்லாப்பொருளும் தன்னகத்தே அடக்கம் என்பதையும், கரங்கள் ஐந்தொழிலையும், கொம்புகள் அறிவிற்கு முன்னுரிமை தருவதையும், தாழ்செவிகள் கேட்பனவற்றை எல்லாம் உள் செலுத்தாதே.. சரியானதை மட்டும் தேர்வுசெய் என்பதையும் உணர்த்துகின்றன. மொத்தத்தில் தனக்கு தானே தலைவனாய் தன்னிகரின்றி விளங்குபவர், விநாயகப் பெருமான்.
விநாயகர் வழிபாடு இந்தியாவில் உருவானாலும் நேபாளம், பர்மா, ஜாவா, சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, சீனா, வியட்நாம், ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் இந்துக்கள் அல்லாதவர்களாலும் வழிபடப்படுவது அதற்குரிய தனிச்சிறப்பாகக் கூறலாம்.

விரதம் இருப்பது எப்படி?
விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று காலை எழுந்து நீராடி, களி மண் அல்லது சந்தனத்தில் பிள்ளையாரை செய்து வைத்து அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். அப்போது விநாயகர் கவசம் மற்றும் விநாயகரைப் பற்றிய துதிப் பாடல்களை பாடி வழிபட வேண்டும். மறுநாள் காலை விநாயகருக்கு மோதகம், கொழுக்கட்டை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், அவல், பொரி, பழ வகைகளை நிவேதனமாக வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும்.
அதன்பிறகு விரதம் இருப்பவர், முதல் நாளில் இருந்து செய்து வழிபட்ட பிள்ளையாரை ஆற்றிலோ, கடலிலோ கொண்டு போய் விட்டு விட்டு வந்த பின் உணவருந்த வேண்டும். அல்லது வேறு ஒருவர் மூலமாகவும், விநாயகரை ஆற்றிலோ, கடலிலோ கரைக்கக் கூறி விட்டு விரதம் இருப்பவர் விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த விரதத்தை மேற்கொள்வதால், புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.
விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள், விநாயகரின் அருள் பெற்று அனைத்து நலன்களையும் சுகங்களையும் பெறுவார்கள். வாழ்க்கையில் துன்பம், இடைஞ்சல்கள் வராது.
விநாயகனே...! வினை தீர்ப்பவனே...!
வருகிற 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் என்றால் தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது.
‘ஓம்’ எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார். சிவபெருமானின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு.
‘கணபதி பூஜை கைமேற்பலன்’ என்பது பழமொழி. விநாயகர் ஏழை, எளியவர்களுக்கு கண்கண்ட தெய்வம் மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், சாணத்திலும் விநாயகரை பிடித்து வழிபடலாம். அந்த வடிவில் அவர் எழுந்தருளி அருள்புரிவார். அவரை வழிபட சாஸ்திரங்கள் தேவையில்லை. கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வருகின்ற வில்லங்கங்கள், இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் எந்த சுபகாரிய தொடக்கத்திலும் அன்று தொட்டு இன்று வரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறோம்.
பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய் இவ்வாறு எல்லாமாக விளங்குபவர் விநாயகர். அவர் ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், யானை முகத்தினை உடையவர்.
கும்பம் ஏந்திய திருக்கரம் ஆக்கும் தொழிலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய திருக்கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே, விநாயகர் ஐம்பெரும் தொழில்களை ஐந்து திருக்கரங்களில் புரிந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
விநாயகர் வழிபாட்டுக்கு சதுர்த்தி உகந்தது. சதுர்த்தி என்பது ஒரு திதி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற நாலாவது நாள் சதுர்த்தி ஆகும். ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
இது விநாயகர் பெருமான் பிறந்த தினமாகும். விநாயகர் அவதாரம் மகிமை வாய்ந்தது. கயமுகன் என்ற அரக்கன் சிவபெருமானிடம் வரங்கள் பல பெற்றிருந்தான். அந்த வரத்தின் மகிமையால் தேவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவன் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். கயமுகனை சம்காரம் செய்து தேவர்களை காப்பாற்றுவதற்காக விநாயக பெருமான் சதுர்த்தி அன்று அவதரித்தார். விநாயகர், கயமுகனுடன் போர் புரிந்தார். அவன் ஆயுதங்களால் அழியாத வரம் பெற்றவன். விநாயகர் தனது வலக்கொம்பை ஒடித்து சிவமந்திரத்தை உச்சரித்து ஏவ அது கயமுகனை சாய்த்தது. அவன் பெருச்சாளி வடிவில் எதிர்த்து வந்தான். விநாயகர் அவன் மீது கருணை புரிந்தார். அவன் அறியாமை அகன்றது. விநாயகரை வணங்கி நின்றான். விநாயகர் அவனை தன் வாகனம் ஆக்கி அருள் புரிந்தார்.
எந்த மங்களகரமான நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரின் நாமமே உச்சரிக்கப்பட வேண்டும் என சிவபெருமான் கட்டளையிட்டார். விநாயகரின் முக்கியத்துவத்தை உலக மக்கள் உணரும் விதத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியில் அவரது சிலையை சிவபெருமானே முன்னின்று பிரதிஷ்டை செய்தார்.
விநாயகர் பல திருவிளையாடல்களை செய்தார். காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து காவிரி நதியை கவிழ்த்து பெருகி ஓடச்செய்தார். விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் சென்ற ரங்கநாதர் சிலையை தடுக்கும் விதத்தில் பாலகன் வடிவில் வந்து லீலைகள் புரிந்து சிலையை ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார். முருகன், வள்ளியை மணம் புரிவதற்கு யானை வடிவில் சென்று உதவி செய்தார். அனலாசுரன், சிந்தூரன் ஆகிய அசுரர்களை விநாயகர் விசுவரூபம் எடுத்து அழித்தார். வியாசர் சொல்ல சொல்ல மகாபாரதத்தை எழுதினார்.
விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டை சுத்தம் செய்து கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். வாழை மரம், மா இலை தோரணம் கட்ட வேண்டும் பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும். அதன் மீது தலை வாழை இலையை போட வேண்டும். நுனி பாகம் வடக்குமுகமாக இருக்க வேண்டும். அந்த இலை மீது பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்ரகத்தை எழுந்தருளச் செய்ய வேண்டும்.
விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார்தான் விசேஷம். விநாயகருக்கு மங்கல ஆரத்தி காட்டி, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எனும் முக்கனிகளை, கரும்பு, எள், கடலை, அப்பம், மோதகம், பொரி உருண்டை போன்றவற்றை நிவேதனம் செய்து கணேச அஷ்டகம் கூறி பூஜை செய்து அவரை வழிபட வேண்டும். விநாயகர் புராணம் படித்து மங்கல ஆரத்தி எடுக்க வேண்டும். மறுநாள் புனர் பூஜையை கொண்டாட வேண்டும். தயிர் சாதம், நெய்வேத்தியம் செய்ய வேண்டும். அதன் பிறகு கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் பிள்ளையாரை கரைத்துவிடலாம்.
பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல்லும் எருக்கம் பூவும் விசேஷமானதாகும். விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள், விநாயகரின் அருள் பெற்று அனைத்து நலன்களையும் சுகங்களையும் பெறுவார்கள். வாழ்க்கையில் துன்பம், இடைஞ்சல்கள் வராது.
இலை வழிபாடு பலன்
விநாயகரை மருத இலையால் வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும். அரச இலையால் வழிபட எதிரிகள் வீழ்வர். அகத்தி இலையால் வழிபட்டால் துயரங்கள், வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் இன்பம் பெருகும். வெள்ளெருக்கால் வழிபட சுகம் கிடைக்கும். மாதுளை இலையால் வழிபட நற்புகழ் அடைவர். கண்டங்கத்தரி இலையால் வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
வருகிற 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் என்றால் தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது.
‘ஓம்’ எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார். சிவபெருமானின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு.
‘கணபதி பூஜை கைமேற்பலன்’ என்பது பழமொழி. விநாயகர் ஏழை, எளியவர்களுக்கு கண்கண்ட தெய்வம் மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், சாணத்திலும் விநாயகரை பிடித்து வழிபடலாம். அந்த வடிவில் அவர் எழுந்தருளி அருள்புரிவார். அவரை வழிபட சாஸ்திரங்கள் தேவையில்லை. கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வருகின்ற வில்லங்கங்கள், இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் எந்த சுபகாரிய தொடக்கத்திலும் அன்று தொட்டு இன்று வரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறோம்.
பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய் இவ்வாறு எல்லாமாக விளங்குபவர் விநாயகர். அவர் ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், யானை முகத்தினை உடையவர்.
கும்பம் ஏந்திய திருக்கரம் ஆக்கும் தொழிலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய திருக்கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே, விநாயகர் ஐம்பெரும் தொழில்களை ஐந்து திருக்கரங்களில் புரிந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
விநாயகர் வழிபாட்டுக்கு சதுர்த்தி உகந்தது. சதுர்த்தி என்பது ஒரு திதி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற நாலாவது நாள் சதுர்த்தி ஆகும். ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
இது விநாயகர் பெருமான் பிறந்த தினமாகும். விநாயகர் அவதாரம் மகிமை வாய்ந்தது. கயமுகன் என்ற அரக்கன் சிவபெருமானிடம் வரங்கள் பல பெற்றிருந்தான். அந்த வரத்தின் மகிமையால் தேவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவன் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். கயமுகனை சம்காரம் செய்து தேவர்களை காப்பாற்றுவதற்காக விநாயக பெருமான் சதுர்த்தி அன்று அவதரித்தார். விநாயகர், கயமுகனுடன் போர் புரிந்தார். அவன் ஆயுதங்களால் அழியாத வரம் பெற்றவன். விநாயகர் தனது வலக்கொம்பை ஒடித்து சிவமந்திரத்தை உச்சரித்து ஏவ அது கயமுகனை சாய்த்தது. அவன் பெருச்சாளி வடிவில் எதிர்த்து வந்தான். விநாயகர் அவன் மீது கருணை புரிந்தார். அவன் அறியாமை அகன்றது. விநாயகரை வணங்கி நின்றான். விநாயகர் அவனை தன் வாகனம் ஆக்கி அருள் புரிந்தார்.
எந்த மங்களகரமான நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரின் நாமமே உச்சரிக்கப்பட வேண்டும் என சிவபெருமான் கட்டளையிட்டார். விநாயகரின் முக்கியத்துவத்தை உலக மக்கள் உணரும் விதத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியில் அவரது சிலையை சிவபெருமானே முன்னின்று பிரதிஷ்டை செய்தார்.
விநாயகர் பல திருவிளையாடல்களை செய்தார். காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து காவிரி நதியை கவிழ்த்து பெருகி ஓடச்செய்தார். விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் சென்ற ரங்கநாதர் சிலையை தடுக்கும் விதத்தில் பாலகன் வடிவில் வந்து லீலைகள் புரிந்து சிலையை ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார். முருகன், வள்ளியை மணம் புரிவதற்கு யானை வடிவில் சென்று உதவி செய்தார். அனலாசுரன், சிந்தூரன் ஆகிய அசுரர்களை விநாயகர் விசுவரூபம் எடுத்து அழித்தார். வியாசர் சொல்ல சொல்ல மகாபாரதத்தை எழுதினார்.
விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டை சுத்தம் செய்து கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். வாழை மரம், மா இலை தோரணம் கட்ட வேண்டும் பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும். அதன் மீது தலை வாழை இலையை போட வேண்டும். நுனி பாகம் வடக்குமுகமாக இருக்க வேண்டும். அந்த இலை மீது பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்ரகத்தை எழுந்தருளச் செய்ய வேண்டும்.
விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார்தான் விசேஷம். விநாயகருக்கு மங்கல ஆரத்தி காட்டி, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எனும் முக்கனிகளை, கரும்பு, எள், கடலை, அப்பம், மோதகம், பொரி உருண்டை போன்றவற்றை நிவேதனம் செய்து கணேச அஷ்டகம் கூறி பூஜை செய்து அவரை வழிபட வேண்டும். விநாயகர் புராணம் படித்து மங்கல ஆரத்தி எடுக்க வேண்டும். மறுநாள் புனர் பூஜையை கொண்டாட வேண்டும். தயிர் சாதம், நெய்வேத்தியம் செய்ய வேண்டும். அதன் பிறகு கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் பிள்ளையாரை கரைத்துவிடலாம்.
பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல்லும் எருக்கம் பூவும் விசேஷமானதாகும். விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள், விநாயகரின் அருள் பெற்று அனைத்து நலன்களையும் சுகங்களையும் பெறுவார்கள். வாழ்க்கையில் துன்பம், இடைஞ்சல்கள் வராது.
இலை வழிபாடு பலன்
விநாயகரை மருத இலையால் வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும். அரச இலையால் வழிபட எதிரிகள் வீழ்வர். அகத்தி இலையால் வழிபட்டால் துயரங்கள், வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் இன்பம் பெருகும். வெள்ளெருக்கால் வழிபட சுகம் கிடைக்கும். மாதுளை இலையால் வழிபட நற்புகழ் அடைவர். கண்டங்கத்தரி இலையால் வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று வர்ணிக்கப்படும் அந்தப் புருஷோத்தமனை புரட்டாசி மாதத்தில் புகழ்பாடி விரதம் இருந்து வழிபடுவோம். பொருள் வரவை நாம் பெறுவோம்.
வழிபாடுகள் தான் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றது. நாளும் நல்ல பலன்கள் நடைபெறவும், விதியின் வலிமையை மாற்றவும், துன்பங்கள் விலகவும், மனம் அமைதி பெறவும் ஒவ்வொருவரும் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்கிறோம். முழு முதற்கடவுள் கணபதி முதல் சண்டிகேஸ்வரர் வரை எண்ணற்ற தெய்வங்களை வணங்கி வருகிறோம்.
அவற்றில் கிழமைக்கேற்ற வழிபாடு, வாரத்திற்கேற்ற வழிபாடு, திதிக்கேற்ற வழிபாடு, மாதத்திற்கேற்ற வழிபாடு, வருடத்திற்கு ஒருமுறை வழிபடும் வழிபாடு என்று எண்ணற்ற முறைகள் இருக்கின்றன. இவை நீங்கலாக முன்னோர் வழிபாடு என்பது நம் முன்னேற்றத்திற்கு முதற்படியாக அமைகின்றது. இத்தனை வழிபாடுகளுடன் குல தெய்வ வழிபாட்டையும் நாம் அன்றாடம் மேற்கொண்டால் வாழ்வில் வளமும் நலமும் வந்து சேரும்.
அந்த அடிப்படையில் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் புண்ணிய காரியங்கள் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். பிறர் பொறாமைப்படும்படியும், திறமைக்கு மதிப்பு கொடுப்பவர்களாகவும் திகழ்வர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற தாரக மந்திரத்தை வாழ்வில் ஏற்று நடப்பவர்களாகவும் இருப்பார்கள். போற்றுதலுக்குரிய மாதம், புனிதமான மாதம் புரட்டாசி என்பதை அறிந்துகொள்ளுங் கள்.
புரட்டாசி மாதம் என்றாலே பொன், பொருளை வழங்கும் புருஷோத்தமன் வழிபாடுதான் நினைவில் வரும். எல்லா சனிக்கிழமைகளைக் காட்டிலும் புண்ணிய மாதமாகக் கருதப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தநாளில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டுவந்தால் வெற்றி மீது வெற்றி வந்து குவியும். ‘அவதார புருஷர்களில் உத்தமமானவன்’ என்பதால் விஷ்ணுவை ‘புருஷோத்தமன்’ என்று அழைக் கிறார்கள்.
விஷ்ணு அவதாரங்களில் ராமாவதாரம் மிகவும் முக்கியமானது. காரணம் ராமன் ஒழுக்கம் தவறாமல், உத்தமனாக வாழ்ந்தது தான். ராமர் பட்டாபிஷேகப் படம் வைத்து அதன் முன்னிலையில் எத்தனையோ வீடுகளில், கோவில்களில் ராமாயணம் படிக்கின்றார்கள். ராமாயணம் படிப்பவர்கள் மற்றும் படிப்பவர்களின் இல்லங்களிலும், அந்த ராமகாதையைக் கேட்பவர்கள் இல்லங்களிலும் காரியத் தடைகள் அனைத்தும் அகலும். மண மாலை சூடவும், மழலைகள் பிறக்கவும், தொழில் சிறக்கவும், தொல்லைகள் தீரவும், கடன் அகலவும், தனம் பெருகவும் ராமாயணம் படிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வது நல்லது. அதிலும் பட்டாபிஷேகத்தன்று கலந்துகொண்டால் ராஜயோகத்தோடு வாழும் அமைப்பு கிடைக்கும்.
பூ மகளின் அருகிலிருக்கும் விஷ்ணுவை நோக்கி, புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஆலயம் சென்று வழிபாடு செய்து வந்தால் நாளும் நன்மைகள் நடைபெறும்.
திருப்பதி வெங்கடாஜலபதிப் பெருமாள், அலர்மேலுமங்கைத் தாயார், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில், கூடலழகியப் பெருமாள் என சிறப்பு மிகுந்த எண்ணற்ற பெருமாள் கோவில்கள் இருக்கின்றன. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கொங்கரத்தி வன்புகழ் நாராயண சுவாமி கோவில், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவில், திருப்பத்தூர் நின்றநாராயணப் பெருமாள், அரியக்குடி திருவேங்கடமுடையான், கீழச்சிவல்பட்டி சுந்தரராஜப் பெருமாள், கூடலழகிய சுந்தரராஜப் பெருமாள், செவ்வூர் ரோட்டுப் பெருமாள் கோவில், கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் என அவரவர்களுக்கு அருகில் இருக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வாழ்க்கையும், வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளுங்கள். தவிர புரட்டாசி சனிக் கிழமைகளில் அன்னதானம், வஸ்திர தானம், சொர்ண தானங்களை மேற்கொண்டால் மேலும் பல நல்ல பலன்களைப் பெறலாம்.
விஷ்ணு அலங்காரப் பிரியர் என்பதால், சனிக்கிழமைகளில் அவரை அலங்கரித்து அழகு பார்க்க வேண்டும். செந்தாமரை மலர் சூட்டி, பச்சைப் பட்டு அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது உகந்தது. அதே வேளையில் ராமதூதரான அனுமனுக்கும் விளக்கேற்றி, வடைமாலை அணிவித்து, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் துன்பங்கள், தடைகள் அகலும்.
தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று வர்ணிக்கப்படும் அந்தப் புருஷோத்தமனை புரட்டாசி மாதத்தில் புகழ்பாடி வழிபடுவோம். பொருள் வரவை நாம் பெறுவோம்.
புருஷோத்தமன் வழிபாடு நீங்கலாக.. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில், சிவாலயத்திற்குச் சென்று சனீஸ்வரர் சன்னிதியில் எள் தீபத்தை ஏற்றி, சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ‘சனி பகவானால் நெருங்க முடியாத தெய்வம்’ என்று விநாயகப் பெருமானையும், அனுமனையும் சொல்வார்கள். அவர்களை இடைவிடாது வழிபட்டு வந்தாலும் அற்புத பலன்கள் நமக்குக் கிடைக்கும். இந்த புரட்டாசி மாதம் ராமநாமத்தைச் சொல்லி நாளும் வழிபட்டால், ராமபிரானின் அருள் அதிகம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒன்பது இரவுகள் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டு வந்தால், பொன், பொருள் குவியும். துர்க்காஷ்டமி அன்று துயரங்கள் விலக நாம் துர்க்கையை விரதம் இருந்து வழிபடுவது அவசியமாகும்.
மாசி மாதத்தில் சிவனுக்கு உகந்த ‘சிவராத்திரி’ வருவது போல், புரட்டாசி மாதம் அம்பிகையைக் கொண்டாட உகந்தநாள் ‘நவராத்திரி’ வருகின்றது. ‘நவம்’ என்றால் ‘ஒன்பது’ என்று பொருள். ‘ராத்திரி’ என்றால் ‘இரவு’ என்று பொருள். ஒன்பது இரவுகள் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டு வந்தால், பொன் - பொருள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் இந்த மாதம் புரட்டாசியில் நவராத்திரி தொடங்கினாலும், புரட்டாசி 31-ந் தேதி (17.10.2018) அன்று துர்க்காஷ்டமி வருகின்றது.
ஐப்பசி முதல் நாள் தான் சரஸ்வதி பூஜையும், அடுத்த நாள் விஜயதசமியும் வருகின்றது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியை வழிபட்டால் ஒப்பற்ற பலன்கள் நமக்குக் கிடைக்கும். இந்த நவராத்திரி நாட்களில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். கொலுவில் இடம்பெறும் பொம்மைகள் எல்லாம் ஒவ்வொரு உண்மைகளைச் சொல்லும் விதத்தில் அலங்கரித்து வைத்து, அதற்கு மேலே நடுநாயகமாக ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒன்பது வடிவங்களில் அலங்கரித்து விழா கொண்டாடுவது வழக்கம். வீட்டில் கொலு வைத்துக் கொண்டாடுவதன் மூலம், விருந்தினரை உபசரிக்கும் குணம் நமக்கு வருகிறது. வழிபடுவதன் மூலம் வளர்ச்சியும் ஏற்படுகிறது.
‘கல்வியா? செல்வமா? வீரமா? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா?’ என்று கவியரசு கண்ணதாசன் எழுதியிருக்கிறார். ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் இருந்தால் தான், கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும். எனவே தான் ‘வீரம்’ தரும் துர்க்கை அம்மனை முதல் மூன்று நாட்களும், ‘செல்வம்’ தரும் லட்சுமிதேவியை அடுத்த மூன்று தினங்களும், ‘கல்வி’ தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட்டால் இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளமாக நடைபெறத் தொடங்கும்.
தேவியின் அருள் கிடைக்க, தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற முயற்சி எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில், எல்லா பொருட்களும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக நாம் கொலு வைத்துக் கொண்டாடு கிறோம். அசையாத பொம்மைகள் மூலம் அசைந்து வரும் வாழ்க்கை உண்மைகளை உலகிற்கு உணர்த்துவதே இந்த நவராத்திரி விழாவாகும்.
ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை வழிபட்டால் தடை, தாமதங்கள் அகலும். தனவரவும் கூடும். வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும். அந்த அடிப்படையில் உருவானது தான் நவராத்திரி விழா.
கொலு படிகள் ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப் படையில் அமைக்க வேண்டும். படிக்கட்டுக்களில் வெள்ளை அல்லது மஞ்சள் துணிகளை விரிக்க வேண்டும். முதல் படிக்கட்டில் கலசத்தை வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு விதத்தில் அலங்காரங்கள் செய்து நவரத்தின மாலைகள் மற்றும் மலர் மாலைகள் சூட்டி அலங்காரம் செய்து வழிபட வேண்டும்.
நைவேத்தியப் பொருட்களாக வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கடலை, பொரி, தேங்காய், பழம் வைக்க வேண்டும். வீட்டிற்கு வருபவர்களுக்கு குங்குமம், புஷ்பம் மற்றும் நைவேத்தியப் பொருட்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வழங்கி அன்போடு வருபவர்களை உபசரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அம்பிகையின் பாடல்களை ஒவ்வொரு ராகத்தில் பாடி அம்பிகையைக் குளிர்விக்க வேண்டும். ஆலயத்திற்குச் சென்றும் நாம் அன்றாடம் அம்பிகையை வழிபட்டு வர வேண்டும்.
கொலு வைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிரினங் களான புல், செடி, கொடி, தாவர வகைகளை வைக்கவேண்டும். இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட உயிரினங்களான நத்தை, சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்யவேண்டும். மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும். நான்காவது படியில் நான்குஅறிவு கொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகளையும், ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் பொம்மைகளையும், ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும்.
ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், சிறு தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்கவேண்டும். ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகைளையும், அவர் களின் துணைவிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகியோரது உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.
துர்க்காஷ்டமி அன்று துயரங்கள் விலக நாம் துர்க்கையை வழிபடுவது அவசியமாகும். வலது கை, இடது கை நீங்கலாக, நம்பிக்கை என்ற ‘கை’ நமக்குத் தேவை. அந்த நம்பிக்கையை துர்க்கை மீது வைத்து வழிபடுவதற்கு உகந்த நாள் தான் துர்க்காஷ்டமி. செம்பருத்தி, செவ்வரளி மாலை சூட்டி, சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து விரதம் இருந்து வழிபட்டு வருவது நல்லது.
-“ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.
ஐப்பசி முதல் நாள் தான் சரஸ்வதி பூஜையும், அடுத்த நாள் விஜயதசமியும் வருகின்றது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியை வழிபட்டால் ஒப்பற்ற பலன்கள் நமக்குக் கிடைக்கும். இந்த நவராத்திரி நாட்களில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். கொலுவில் இடம்பெறும் பொம்மைகள் எல்லாம் ஒவ்வொரு உண்மைகளைச் சொல்லும் விதத்தில் அலங்கரித்து வைத்து, அதற்கு மேலே நடுநாயகமாக ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒன்பது வடிவங்களில் அலங்கரித்து விழா கொண்டாடுவது வழக்கம். வீட்டில் கொலு வைத்துக் கொண்டாடுவதன் மூலம், விருந்தினரை உபசரிக்கும் குணம் நமக்கு வருகிறது. வழிபடுவதன் மூலம் வளர்ச்சியும் ஏற்படுகிறது.
‘கல்வியா? செல்வமா? வீரமா? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா?’ என்று கவியரசு கண்ணதாசன் எழுதியிருக்கிறார். ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் இருந்தால் தான், கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும். எனவே தான் ‘வீரம்’ தரும் துர்க்கை அம்மனை முதல் மூன்று நாட்களும், ‘செல்வம்’ தரும் லட்சுமிதேவியை அடுத்த மூன்று தினங்களும், ‘கல்வி’ தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட்டால் இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளமாக நடைபெறத் தொடங்கும்.
தேவியின் அருள் கிடைக்க, தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற முயற்சி எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில், எல்லா பொருட்களும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக நாம் கொலு வைத்துக் கொண்டாடு கிறோம். அசையாத பொம்மைகள் மூலம் அசைந்து வரும் வாழ்க்கை உண்மைகளை உலகிற்கு உணர்த்துவதே இந்த நவராத்திரி விழாவாகும்.
ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை வழிபட்டால் தடை, தாமதங்கள் அகலும். தனவரவும் கூடும். வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும். அந்த அடிப்படையில் உருவானது தான் நவராத்திரி விழா.
கொலு படிகள் ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப் படையில் அமைக்க வேண்டும். படிக்கட்டுக்களில் வெள்ளை அல்லது மஞ்சள் துணிகளை விரிக்க வேண்டும். முதல் படிக்கட்டில் கலசத்தை வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு விதத்தில் அலங்காரங்கள் செய்து நவரத்தின மாலைகள் மற்றும் மலர் மாலைகள் சூட்டி அலங்காரம் செய்து வழிபட வேண்டும்.
நைவேத்தியப் பொருட்களாக வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கடலை, பொரி, தேங்காய், பழம் வைக்க வேண்டும். வீட்டிற்கு வருபவர்களுக்கு குங்குமம், புஷ்பம் மற்றும் நைவேத்தியப் பொருட்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வழங்கி அன்போடு வருபவர்களை உபசரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அம்பிகையின் பாடல்களை ஒவ்வொரு ராகத்தில் பாடி அம்பிகையைக் குளிர்விக்க வேண்டும். ஆலயத்திற்குச் சென்றும் நாம் அன்றாடம் அம்பிகையை வழிபட்டு வர வேண்டும்.
கொலு வைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிரினங் களான புல், செடி, கொடி, தாவர வகைகளை வைக்கவேண்டும். இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட உயிரினங்களான நத்தை, சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்யவேண்டும். மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும். நான்காவது படியில் நான்குஅறிவு கொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகளையும், ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் பொம்மைகளையும், ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும்.
ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், சிறு தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்கவேண்டும். ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகைளையும், அவர் களின் துணைவிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகியோரது உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.
துர்க்காஷ்டமி அன்று துயரங்கள் விலக நாம் துர்க்கையை வழிபடுவது அவசியமாகும். வலது கை, இடது கை நீங்கலாக, நம்பிக்கை என்ற ‘கை’ நமக்குத் தேவை. அந்த நம்பிக்கையை துர்க்கை மீது வைத்து வழிபடுவதற்கு உகந்த நாள் தான் துர்க்காஷ்டமி. செம்பருத்தி, செவ்வரளி மாலை சூட்டி, சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து விரதம் இருந்து வழிபட்டு வருவது நல்லது.
-“ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.
பெருமாளுக்கு உகந்த சில முக்கியமான விரதங்கள் உள்ளன. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு உகந்த விரதங்கள் என்னவென்று பார்க்கலாம்.
அமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.
சஷ்டி - லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வ மங்கலங்களையும் அருளும்.
கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம்கொண்ட பசு மாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.
ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.
சஷ்டி - லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வ மங்கலங்களையும் அருளும்.
கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம்கொண்ட பசு மாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.






