என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    • இக்கோவிலில் பக்தர்கள் வேண்டும் அனைத்து வேண்டுதல்களும் நடக்கும் என்று கூறப்படுகிறது.
    • இந்த கோவிலை 1820-ம் ஆண்டு மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டியதாக கூறப்படுகிறது.

    கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரியில் அமைந்துள்ளது ஓம்காரேஸ்வரர் கோவில். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.

    இக்கோவிலின் மத்தியில் வசீகரமான குவி மாடமும், அதன் நான்கு முனைகளில் ஸ்தூபிகளும் உள்ளன. அதைச்சுற்றி ரிஷபங்களும் இருக்கின்றன. குவி மாடத்திற்கு மேல் முலாம் பூசிய உருண்டையும், திசை காட்டும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் வேண்டும் அனைத்து வேண்டுதல்களும் நடக்கும் என்று கூறப்படுகிறது. தங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார வழிபட்டு செல்கிறார்கள். வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கு நெய்விளக்கு ஏற்றியும், புது வஸ்திரம் சாற்றியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

    இந்த கோவிலை 1820-ம் ஆண்டு மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டியதாக கூறப்படுகிறது. கொடுங்கோலனான அவன் தன் அரசியல் ஆசை மற்றும் வளர்ச்சிக்காக நேர்மை மிக்க ஒரு அந்தணரை கொன்றான். அந்தணரை கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்து கொண்டது. கனவிலும், நனவிலும் வந்து மன்னனை உலுக்கி எடுத்தார் அந்தணர்.

    சித்திரவதை தாங்காத அவன், ஆன்மிக பெரியவர்களின் யோசனைப்படி சிவனுக்கு கோவில் கட்டினான். அங்கு காசியில் இருந்து லிங்கத்தை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தான். அதுவே ஓம்காரேஸ்வரர் கோவில் ஆயிற்று.

    இக்கோவில் தினமும் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் திறந்திருக்கும்.

    பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்த சிவனை பூஜித்து வழிபட்டால் நன்மை உண்டாகும்.

    • சமையலறையில் வடகிழக்கில் அமையுமாறு பார்த்துக் கொள்ளவும்.
    • தென்கிழக்கில் வீட்டின் பெரிய படுக்கையறை வேண்டாம்.

    சமையலறையில் கட்டாயம் பாத்திரம் கழுவும் தொட்டி சிங் அமைக்க வேண்டும். இது சமையலறையில் வடகிழக்கில் அமையுமாறு பார்த்துக் கொள்ளவும்.

    மாவு அரைக்கும் கிரைண்டர் பிரிட்ஜ் போன்றவை தென்மேற்கில் வைக்கலாம். சமையலுக்கு தேவைப்படும் மசாலா மளிகை பொருட்களை அடுக்கி வைக்கும் மாடத்தை அறையில் தெற்கு மேற்கு பக்கம் அமைக்கலாம். சமையல் அரை மேடை மேல் கருப்பு வண்ணம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். தென்கிழக்கு பகுதி சுக்கிரன் ஆட்சி பெற்ற பகுதி என்பர். எனவே சுக்கிரனுக்கு உகந்த வெளிர்மஞ்சள் ஐஓரி வண்ணத்தை சமையலறை சுவர்களுக்கு தீட்டலாம்.

    சுக்கிரன் ஆட்சி உச்சம் ஜாதகத்தில் உடையவர்கள் வீட்டில் சமையலறையில் பூஜை அறையும் வைக்கலாம்.

    அக்னி மூலையில் பொதுவாக நீர் தொட்டி கழிப்பறை போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தென்கிழக்கில் வீட்டின் பெரிய படுக்கையறை வேண்டாம். அதற்கு பதில் விருந்தினர்கள் தங்குமரை வைக்கலாம்.

    • பகை கிரகங்களின் தசை நடக்கும் ஆண், பெண் ஜாதகங்களை தவிப்பது நல்லது.
    • சூரிய தசை நடந்தால் ராகு/கேது தசை நடப்பவரை திருமணம் செய்யக் கூடாது.

    தசையை நடத்தும் கிரகத்தை விட தசையை நடத்தும் கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு வலிமை அதிகம். பலர் கேந்திர திரிகோணதிபதிகள் தசை நடக்கும் போது கூட சந்திக்கும் இடர்பாடுகளுக்கு தசை நடத்தும் கிரகம் நிற்கும் நட்சத்திரமே காரணமாக அமைகிறது. திருமணம் முடிந்து பல வருடங்களான தம்பதிகள் கூட பகை கிரகங்களின் தசை புத்தி காலங்களில் கருத்து வேறுபாட்டை சந்திக்கின்றனர். எனவே பகை கிரகங்களின் தசை நடக்கும் ஆண், பெண் ஜாதகங்களை இணைப்பதை இயன்றவரை தவிர்த்தால் தம்பதியர்கள் அன்புடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

    சூரியன் + ராகு/கேது

    சூரிய தசை நடந்தால் ராகு/கேது தசை நடப்பவரை திருமணம் செய்யக் கூடாது. இந்த கிரக சம்பந்தம் கிரகண தோஷம். ஆண், பெண் இருவருக்கும் பிரச்சினைகள் தரும். கவுரவத்தை குறைக்கும். ஊர், உலகத்திற்காக வாழ நேரிடும். அரசு வகை ஆதரவை தடை செய்யும். ஆண் வாரிசு குறையும். இது போன்ற பகை கிரக தசை புத்தியால் சிரமங்களை சந்திக்கும் தம்பதிகள் கிரகண காலங்களில் பித்ரு தர்பணம் செய்ய விரைவில் சுப பலன் கிட்டும்.

    சந்திரன்+ புதன்

    இந்த பகை கிரக தசை புத்தி காலங்களில் நரம்பு, தோல் சம்பந்தப்பட்ட நோய் உருவாகும். சிலருக்கு மனநோய், மன அழுத்தம் ஏற்படும். சிலருக்கு இந்த தசை புத்தி திருமணத்திற்கு பிறகு தவறான நட்பை ஏற்படுத்துகிறது. மனசஞ்சலத்தால் எளிதில் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்த தசை புத்தியால் சிரமத்தை சந்திக்கும் தம்பதிகள் புதன் கிழமை சக்கரத்தாழ்வாரை 108 முறை வலம் வர வேண்டும்.

    சந்திரன் + சுக்கிரன்

    சந்திரன் மாமியார்,சுக்கிரன் மருமகள். இந்த தசை, புத்தி காலங்களில் ஆண் பெண் இருவருக்கும் மாமியார் டார்ச்சர் உண்டு. சந்திரன் வலிமை குறைந்து இருக்கும் மருமகளை மாமியார்கள் பிறந்த வீட்டிற்கு அனுப்ப எந்த பழியையும் சுமத்த தயங்குவதில்லை. சுக்கிரன் வலிமை படைத்த பெண்கள் மாமியாரை வீட்டு வேலை செய்யும் அடிமையாக்கி விடுகிறார்கள். ஆண்கள் மனைவியின் அன்பிற்காக மாமியாரை அனுசரித்து வாழும் நிலையை ஏற்படுத்துகிறது. பிடிக்காத மாமியாருக்காக மனைவியை புகுந்த வீட்டிற்கே அனுப்பாமல் இருக்கும் கணவரும் உண்டு. இந்த அமைப்பு பிறந்த வீட்டு பெண்ணிற்கும், புகுந்த வீட்டுப் பெண்களுக்கும் மனஸ்தாபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கணவன், மனைவி உறவில் விரிசல் ஏற்படுகிறது. சிலருக்கு பண இழப்பு மிகுதியாக இருக்கும். இது போன்ற அவஸ்தை இருக்கும் தம்பதிகள் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பச்சரிசி மாவில் மாவிளக்கு தீபம் ஏற்றி மாரியம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.

    சந்திரன் + சனி

    சந்திர தசை, சனி தசை நடக்கும் ஜாதகத்தை பொருத்தக் கூடாது. ஆண், பெண் இருவரையும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் பாதிக்கும். வாழ்கையில் தடை, தாமதத்தை அதிகம் தருகிறது. காலாகாலத்தில் எதுவும் நடக்காது. எல்லாம் கால தாமதமாகவே நடக்கும். தாமதத் திருமணம், மன உளைச்சல் நிம்மதியின்மை, தாயார் வழி விரயம், வியாதி, அடிக்கடி தொழில், வேலையை மாற்றுதல் இருக்கும். கால்சிய சத்து குறைவு, மூட்டு தேய்மானம் போன்ற அவஸ்த்தையை தரும். இவர்கள் சனிக்கிழமைகளில் பசுவிற்கு பச்சரிசி, அகத்திக்கீரை வழங்க வேண்டும்.

    சந்திரன் + ராகு/கேது

    சந்திர தசை நடப்பவர்களுக்கு ராகு/கேது தசை நடக்கும் தசை நடக்கும் ஜாதகத்தை இணைக்க கூடாது. இந்த கிரகச் சேர்க்கை ஆண், பெண்களை மனம் ஒன்றி வாழ விடுவதில்லை. தீராத மன உளைச்சல், மன நோயை மிகுதியாக்கி குடும்ப வாழ்க்கையை வெறுத்து தனிமைப்படுத்தி விடுகிறது. சட்ட ரீதியாக விவாகரத்து பெற்றவர்களுக்கு இந்த கிரக தசை, புத்தி சம்பந்தம் இருக்கும். இவர்களின் பிரிவினைக்கு சொல்லிக் கொள்ளும்படியான பெரிய காரணமே இருக்காது. இது போன்ற பிரச்சினை இருக்கும் தம்பதிகள் சர்ப்பம் உள்ள புற்றிற்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    செவ்வாய் + புதன்

    செவ்வாய், புதன் பகை கிரகங்கள் என்பதால் இந்த கிரகங்களின் தசை நடக்கும் ஜாதகங்களை சேர்க்க கூடாது.அத்துடன் திருமணத்திற்கு பிறகும் இந்த கிரகங்களின் தசை சந்திப்பு இருக்க கூடாது. தைரியமான தவறான நட்பை திருமணத்திற்கு பிறகு ஏற்படுத்தி விடும். 7-ம் பாவகம் வலிமையானவர்களை இது பாதிக்காது. இவர்கள் செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு செய்ய வேண்டும்.

    செவ்வாய் + சனி

    திருமணத்திற்கு முன்னும், பின்னும் செவ்வாய், சனி தசை சந்திப்பு ஆண், பெண் இருவருக்கும் இருக்க கூடாது. பெண்களுக்கு மாங்கல்ய தோஷமும் ஆண்களுக்கு தொழில் நெருக்கடியும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி விபத்து கண்டம், சொத்து தகராறை ஏற்படுத்தும். இவர்கள் செவ்வாய் கிழமை சிவப்பு துவரை தர வேண்டும். சனிக்கிழமைகளில் பருப்பு சாதத்தை அன்னதானம் செய்ய வேண்டும்.

    செவ்வாய் + ராகு/கேது

    செவ்வாய் தசை நடப்பவருக்கு ராகு/கேது தசை நடப்பவருடன் திருமணம் செய்யக் கூடாது. ஆண்களுக்கு உடன் பிறந்தவர்க ளுடனும், பெண் களுக்கு கணவருடனும் மன வேதனையை ஏற்படுத்தும் பல பெண்களுக்கு திருமணத்தை நடத்துவதில் சிரமத்தை தருகிறது. திருமணம் நடந்த பிறகு கல்யாணம் செய்யாமலே வாழ்வை கழித்து இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படியான பகை கிரக சேர்க்கை. எதை தின்னால் பித்தம் தெளியும் என்று கணவரை கவுரவப்படுத்தி சமுதாயத்தில் வலம் வர முயன்று மன நோயை வரவழைக்கும் பெண்களே அதிகம். பெண்களை கடுமையாக பாதித்து கணவரிடம் இருந்து பிரிக்கும் தசை புத்தியில் செவ்வாய் + ராகு /கேதுக்களே முதலிடம். கணவனை பாம்பு என்று தாண்டவும் முடியாமல் பழுது என்று நினைத்து மிதிக்கவும் முடியாமல் வாழ வைக்கிறது. இவர்கள் மாதவிடாய் நின்ற சுமங்கலிப் பெண்களிடம் ஆசி பெற வேண்டும்.

    சுக்கிரன் + கேது

    சுக்கிரன்,கேது தசை நடக்கும் ஜாதகங்களை இணைக்க கூடாது. ஆண்களுக்கு சாதகமற்ற பகை கிரகச் சேர்க்கை . சுக்கிரன் + ராகு இரண்டும் போகத்தை தரும் நட்பு கிரகம் என்பதால் பெரிய பாதிப்பை தராது. பல ஆண்களுக்கு திருமணத்தையே நடத்தி தராத கிரகச் சேர்க்கை. திருமணத்திற்கு பெண் தேடியே திருமணத்தில் வெறுப்பை ஏற்படுத்தும். திருமணம் நடந்த பிறகு குடும்ப பிரச்சினைக்காக பஞ்சாயத்திற்கு நடந்தே வாழ்க்கை முடிந்து விடும். இந்த அமைப்பு பல கணவன், மனைவியை விரோதியாகவே வாழ வைக்கிறது. இவர்கள் வீட்டின் பூஜை அறையில் 2 டைமன் கல்கண்டு போட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் நிம்மதி அதிகரிக்கும்.

    சனி +ராகு/கேது

    இந்த 3 கிரகங்களும் கர்ம வினை ஊக்கிகள் என்பதால் சனி, ராகு, கேது தசை நடக்கும் ஜாதகங்களை ஒன்றோடு ஒன்று இணைக்க கூடாது. இந்த கிரக தசை நடக்கும் ஜாதகங்கள் தாளமுடியாத வினைப் பதிவால் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இந்த தசை, புத்தி நடப்பில் இருக்கும் தம்பதிகள் சனிக்கிழமை அசைவ உணவைத் தவிர்த்து சிவ வழிபாட்டை கடைபிடித்தால் துக்கம் குறையும். முறையான திருமணப் பொருத்தம் மட்டுமே நிம்மதியான திருமண வாழ்க்கை யைத் தருகிறது. மானிட வாழ்வில் நன்மை, தீமைகளை தீர்மானிப்பதில் தசை புத்தியின் வலிமையே அதிகம். இருவர் ஜாதகத்திலும் நன்மை தரும் தசை ஒருசேர வருவது போலும் தீமை தரும் தசை வரும் காலங்க ளில் ஒருவருக்கு வரும் தீமை மற்றவரின் தசையால் சரிசெய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • புதுக்கோட்டை நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் திருவருள் புரிகிறாள்.
    • கரூர் மாரியம்மன் காணாமல் போன பொருட்கள் திரும்பக்கிடைக்க அருள்கிறாள்.

    1. விருதுநகர் : விருதுநகரில் உள்ள இருக் கன்குடி மாரியம்மன் சிவாம் சம் கொண்டவள். அதனால் கருவறையில் தேவிக்குமுன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றருள்கிறார். கண்நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷே கம் செய்த நீரால் கண்களைக் கழுவினால் நோய் நீங்குகிறது.

    2. மதுரை : மதுரை சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசாதமான தீர்த்தத்தை அருந்தினால் நோய் மறைகிறது.

    3. மதுரை- எல்லீஸ் : மதுரை- எல்லீஸ் நகரில் அருளும் தேவி கருமாரியம் மனை அனைத்து மதத்தினரும் வழிபட்டு நலம் பெறுகிறார்கள்.

    4. புதுக்கோட்டை : புதுக்கோட்டை நார்த்தா மலையில் முத்துமாரியம்மன் திருவருள் புரிகிறாள். இங்கு அக்கினி காவடி எடுத்தால் தீராத நோய் தீருகிறது. மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள்.

    5. நீலகிரி : நீலகிரி, குன்னூரில் தந்தி மாரியம்மன் அருளாட்சி புரி கிறாள். தண்ணீர் பஞ்சம் ஏற் பட்டால் இந்த மாரியிடம் மன முருக வேண்டிக்கொள்ள, உட னே பெருமழை பெய்கிறது.6. ஊட்டி : ஊட்டியில் மகாமாரி, மகா காளி இருவரும் ஒரே கருவறை யில் அருள்கின்றனர். இங் குள்ள காட்டேரியம்மன் சந்நதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு, தோஷங்கள், நோய்கள், பில்லி சூனியம் விலக்குகின்றன.

    7. நாமக்கல் -ராசிபுரம் : நாமக்கல்- ராசிபுரத்தில் நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால் இப்பெயர். ஐப்பசி மாதம் புதுக் கம்பம் நடும்போது தயிர்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர்சாத பிரசாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப்பேறு கிட்டுகிறது.

    8. கோவை : கோவையில் ஆட்சிபுரியும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும் தீராத நோய்கள் தீர்ந்திடவும் அருள்கிறாள்.

    9. சமயபுரம் : சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக் கடனாகச் செலுத்துகிறார்கள்.

    10. மணப்பாறை : திருச்சி மணப்பாறையி லுள்ள மாரியம்மன் கோவிலில் திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சந்நதியின் பின்னே உள்ள வேப்பமரத்தில் கட்டி நேர்ந்து கொள்ள, விரைவில் மணவாழ்வு கிட்டுகிறது.

    11. திருப்பூர் : கோடீஸ்வரிமாரி என்ற கோட்டைமாரி திருப்பூரில் அருள்கிறாள். கருவறையில் அம்மனின் இருபுறங்களிலும் லட்சுமி, சரஸ்வதி இருவரும் அம்மனைப் போலவே சுயம்பு வாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த அன்னையிடம் பூவாக்கு கேட்பது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு.

    12. தேனி -பெரியகுளம் : தேனி-பெரிய குளத்தில் உள்ள கவுமாரியம்மனுக்கு விவசாயம் செழிக்க தானியங்கள், காய்கறிகள், கனிகளைப் படைக்கின்றனர்.

    13. கரூர் : கரூர் மகா மாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக்கிடைக்க அருள்கிறாள்.

    14. திண்டுக்கல் : திண்டுக்கல் -கோட்டை மாரியம்மனை பிரார்த்தித்து உப்பையும் மஞ்சளையும் கொடிமரத்தில் சமர்ப்பித்தால், வேண்டுதல் நிறைவேறுகிறது.

    15. தஞ்சை -புன்னைநல்லூர் : தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், துளஜாமன்னர் மகளின்கண்நோய் தீர்த்தவள். புற்றுருவாய் இருந்த இந்த அம்மனுக்கு யந்திரப் பிரதிஷ்டை செய்தவர் நெரூர் சதா சிவப்பிரம்மேந்திரர்.

    16. காரைக்குடி : காரைக்குடி, முத்துப்பட்டினம், மீனாட்சிபுரத்திலுள்ள முத்துமாரியம்மனுக்கு தக்காளி பழத்தை காணிக்கையாக்கி, தக்காளி பழச்சாறால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    17. உடுமலைப்பேட்டை : கோவை- உடுமலைப் பேட்டை மாரியம்மன் ஆலயத்தில், மார்கழி திருவாதிரை அன்று 108 தம்பதியருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படுகிறது.

    18. ஈரோடு : ஈரோடு- பெரிய மாரியம்மன், வெப்பநோய்களை நீக்குகிறாள். அம்மை நோய் கண்ட அவர்களை அன்னை குணப்படுத்துகிறாள்.

    19. கோபிசெட்டிபாளையம் : கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் ஆலயத்தில் மண் சட்டியில் நெருப்பை ஏந்தி பூசாரி வருவதை தரிசித்தால் வாழ்வு வளம் பெறுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

    20. கருங்கல்பாளையம் : ஈரோடு-கருங்கல் பாளையம், சின்ன மாரியம்மன் மழலை வரம் அருள்கிறாள். இத்தல விபூதி பிரசாதத்தை நெற்றியில் பூசியும் தண்ணீரில் கரைத்தும் அருந்தினால் நோய்கள் நீங்குகின்றன.

    • அனுமனை வழிபட்டால் நீண்ட ஆயுளை பெறலாம்.
    • ஆஞ்சநேயரை வழிபட்டால் அல்லல் அகன்று ஆனந்தம் பெறுவர்.

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ராஜகோபால சாமி கோவில் என அழைக்கப்படும் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் நித்ய வாசஸ்தலம் என்பதால் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட கால நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் வழிபடலாம். இருப்பினும் சில குறிப்பிட்ட காலங்களில் வழிபடும்போது அதிக பயனை பெறலாம். மார்கழி மாதம் மூல நட்சத்திரத்துடன் கூடிய அமாவாசை ஆஞ்சநேயருக்கு அவதாரத் திருநாள். அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் சிறப்பு.

    மாதந்தோறும் அமாவாசை திதியிலும் மூல நட்சத்திரத்திலும் ஆஞ்சநேயரை வழிபட்டு் பயன்பெறலாம். ராகுகாலம், அஷ்டமி திதி ஆகிய தீய நேரங்களிலும் அனுமனை வழிபட்டு தீமைகளை விலக்கி கொள்ளலாம். வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை, எலுமிச்சம்பழ மாலை ஆகியவை அனுமனுக்கு உகந்தவை ஆகும். அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால் நம் துன்பங்கள் வெப்பம் பட்ட வெண்ணெய் போல் கரைந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அனுமனுக்கு குங்குமத்தினால் அர்ச்சனை செய்தும், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், சுண்டல், வடைமாலை ஆகிய பிரசாதங்களை நைவேத்யம் செய்தும் பக்தர்களுக்கு வழங்கியும் நலம் பெறலாம். ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி உள்ளதால் அவரை வழிபட்டால் நவக்கிரகங்களால் பாதிப்புகள் ஏற்படாது. உடல், மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், ஊழ்வினையால் துன்பப்படுபவர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டால் அல்லல் அகன்று ஆனந்தம் பெறுவர்.

    • செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
    • எல்லோருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

    ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு விசேஷம் இருக்கும். அதுபோல சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்தால் 'சொந்த வீடு' கனவு நனவாகும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து உள்ளது. இதனால் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக இங்குள்ள முருகனை நாடி வரும் பக்தர்கள் கூட்டம்தான் அதிகமாக காணப்படுகிறது. அதுவும் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் இக்கோவிலை நாடி வரும் பக்தர்கள் அதிகம். பக்கத்து மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் இந்த கோவிலை கேள்விப்பட்டு ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

    நாம் எல்லோருக்கும் எப்படியும் வாழ்க்கையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தாங்கள் படும் கஷ்டங்களில் இருந்து மீள சொந்த வீடு கனவு ரொம்பவே அதிகமாக இருக்கும். ஆனால் எல்லோரும் அந்த கனவை அவ்வளவு எளிதாக அடைந்து விட முடிவதில்லை. சிலருக்கு கையில் பணம் இருந்து ஏதோ ஒரு காரணத்தினால் சொந்த வீடு கட்டுவதில் பல தடைகள் ஏற்படுவது உண்டு. இதுபற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. உங்கள் உள்ளத்தில் உந்துசக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்து தருகிறேன் என்கிறார் சிறுவாபுரி முருகன்.

    ஆம் சிறுவாபுரிக்கு வந்து முருகனை உள்ளன்போடு வணங்கினால் நாம் நினைத்த காரியம் நினைத்தபடியே நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள். கூட்டு பிரார்த்தனைக்கு பலன் அதிகம் உண்டு என்று சொல்வார்கள். இதனால் இங்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு எப்படியாவது சொந்த வீடு வேண்டும் என மனமுருகி வேண்டுவதால் அவர்கள் எண்ணங்களை இந்த முருகன் உடனடியாக நிறைவேற்றி தருவதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

    இதற்காக பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள பகுதிகளில் செங்கற்களை அடுக்கி வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம் தெளிக்கிறார்கள். பின்னர் அகல் விளக்குகள் ஏற்றி பூக்கள் வைத்து முருகனை நினைத்து வழிபடுகின்றனர். சிலர் சிறு சிறு கற்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து வழிபாடு நடத்துகின்றனர். இதற்காக அருகிலேயே செற்கற்களும் கிடைக்கிறது.

    பின்னர் 6 வாரம் தொடர்ந்து இந்த கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தால் உங்களது ஆசை பூர்த்தியாகும் என்பது ஐதீகம். உங்களிடம் சொந்த வீடு கட்ட எந்த ஒரு வசதியும் இல்லை. கையில் அதற்கான பணமும் இல்லை என நினைப்பவர்கள் கூட நம்பிக்கையோடு சிறுவாபுரி வந்து முருகனை வணங்கலாம். அதே போல 'திருப்புகழ்' பதிகத்தையும் தொடர்ந்து உச்சரித்து வர வேண்டும்.

    இப்படி செய்வதினால் உங்களின் பொருளாதார நிலை உயர்ந்து ஏழ்மைநிலை மாறி சொந்த வீடு கட்டுவதற்கான சிறப்பான சூழ்நிலை உருவாகும். நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் கிட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • 30 வயதைக் கடந்தும் ஆண்கள், பெண்கள் பலருக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது.
    • திருமண தடை நீங்க இந்த கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்க்கலாம்.

    பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி. அதில் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான, திருமணத் தடையும் இருக்கலாம். 30 வயதைக் கடந்தும், ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது. இதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் விலகி நிம்மதியாக வாழ்வதற்கு சித்தர்கள் மூலமாக சிவபெருமான் பல வழிகளைக் காட்டியுள்ளார். அவற்றில் ஒன்றுதான், இந்த பெருகமணி அகத்தீஸ்வரர் கோவில் வழிபாடு.

    ஆம்.. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், திருமணத் தடை விலகி விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.

    30 வயதைக் கடந்தும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அகத்தியர் பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் அன்று, இங்கே வருகை தருவது மேலும் சிறப்பான அருளைப் பெற்றுத் தரும் என்கிறார்கள். அப்படி வரும் போது, இங்குள்ள மூலவருக்கும், அம்பாளுக்கும் ஒரு மரிக்கொழுந்து மாலை மற்றும் ஒரு மல்லிகைப் பூ மாலை அணிவித்து ஒரு முகூர்த்த நேரம் (90 நிமிடங்கள்) பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    மேலும் தலவிருட்சமான வில்வ மரத்தை, அகத்தியருக்கு பிடித்த 8 எண் இலக்கத்தை குறிக்கும் வகையில் எட்டின் மடங்குகளில் வலம் வர வேண்டும். அப்போது 'அகத்தீசாய நமக' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதற்கான பலனை திருமணமாகாதவர்கள், விரைவில் அடைவார்கள்.

    திருச்சியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருகமணி என்ற ஊர். இங்கு ஆனந்தவல்லி உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    • இந்த 15 நாட்கள் மட்டுமே பித்ருக்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும்.
    • சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாளய பட்சம் தொடங்குகிறது. நாளை முதல் அடுத்த 15 நாட்களுக்கு முன்னோர் வழிபாடு செய்வது குடும்பத்துக்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு மனிதனும், தேவகடன், பித்ருகடன், ரிஷிகடன் ஆகியவற்றைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனில் இருந்து விடுபடலாம்.

    தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றைத் தக்க காலங்களில் செய்வதன் மூலம் பித்ருகடனில் இருந்தும், முனிவர்கள் அருளிய உயர்ந்த படைப்புகளை பாராயணம் செய்து உபாசிப்பதன் மூலம், குருமார்களையும் ரிஷிகளையும் ஆராதித்தல், வீடு தேடி வரும் சன்யாசிகளுக்கு உணவளித்தல், அவர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தல் போன்றவற்றின் மூலம், ரிஷிகடனில் இருந்தும் நிவர்த்தி அடையலாம்.

    பித்ரு லோகத்தில் வசிப்பவர்கள், மாதப்பிறப்பு, அமாவாசை, மகாளய பட்சம், அவரவர் மறைந்த திதி ஆகிய நாட்களில் மட்டுமே பூலோகப் பிரவேசம் செய்ய இயலும். அதில், மகாளய பட்சம், 'பித்ருக்களின் பிரம்மோற்சவம்' என்று சிறப்பிக்கப்படுகிறது.

    இந்த 15 நாட்கள் மட்டுமே அவர்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும். அவர்கள், இவ்வாறு வாசம் செய்ய பூலோகம் வரும் போது, அவர்களை நினைத்துச் செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு.

    • ஜாதகத்தின் சகல தோஷங்களையும் குரு பார்வை நீக்கி விடும்.
    • இன்று புவனேஸ்வரி அம்மன் அவதரித்த நாள்.

    இன்று குருபகவான் ஜெயந்தி. குரு பகவான் நவகிரகங்களில் பூரண சுபராகக் கருதப்படுகிறார். ஜாதகத்தின் சகல தோஷங்களையும் குரு பார்வை நீக்கி விடும். "குரு பார்க்க கோடி புண்ணியம்" என்று ஜோதிடத்தில் சொல்வார்கள்.

    குரு ஜெயந்தியான இன்று அருகாமையில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். குருவே தெய்வம் என்பதால் பகவானை குருவாக நினைத்து வழிபட வேண்டும்.

    புவனம் என்றால் உலகம். உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரியாக (தலைவியாக) இருந்து கொண்டு அனைத்து உலகங்களையும் ஆள்வதால் அம்பாள் புவனேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். தச மகாவித்யையில் 4-வதாக காட்சி தரும் புவனேஸ்வரி அம்மன் அவதரித்த நாளான இன்று (புதன்கிழமை) நாமும் புவனேஸ்வரி தேவியை பூஜை செய்து பாடல் பாடி மந்திரம் சொல்லி பலனை அடையலாம்.

    • நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.
    • தனித்தனி சன்னதியில் நவக்கிரங்கள் இருப்பதால் நவக்கிரக தோஷமும் நிவர்த்தியாகும்.

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ள பழமையான கோவில் அழகம்மன் கோவில். வடிவு என்றால் அழகு. அதனுடன் ஈஸ்வரன் என்ற சொற்கள் இணைந்து வடிவீஸ்வரம் ஆனது என்றும் வடிவு ஈஸ்வரிபுரம் வடிவீஸ்வரம் ஆனது என்றும் கூறுகிறார்கள். பழையாற்றின் வலது கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் சமேதராக காட்சி தருவது சிறப்பு.

    இந்த கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5.45 மணிக்கு பள்ளியறை பூஜை, 6.00 மணிக்கு அபிஷேகம், காலை 11 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6.30 மணிக்கு தீபாராதனை, 7.45 மணிக்கு ஸ்ரீபலி, 8.00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

    அழகம்மன் கோவிலில் வழிபாடு செய்தால் திருமண தோஷம், தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். சுவாமி, அம்மன் தனி சன்னதியில் இங்கு காட்சியளிப்பதால் இங்கு வழிபாடு செய்யும் பெண் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றால் விரைவில் திருமணம் நடைபெறும். தனித்தனி சன்னதியில் நவக்கிரங்கள் இருப்பதால் நவக்கிரக தோஷமும் நிவர்த்தியாகும்.

    • ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபட்டு பயன் பெறலாம்.
    • கல்வியில் மேம்பட இக்கோவிலில் வித்யாரம்ப வழிபாடு நடத்தப்படுகிறது.

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே போலார் பகுதியில் அடைந்துள்ளது போலார் மங்களாம்பிகை கோவில். கோவிலின் வெளிப்புறத்தில் அரசமரத்தடியில் நாகராஜா சன்னதி உள்ளது. அங்கு சிறிய பாம்பு சிலை அமைந்திருக்கிறது.

    கண்நோய், தோல் வியாதி விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இக்கோவிலை நாடி பக்தர்கள் வருகின்றார்கள். அவர்கள் அம்பாளை வழிபட்டு பூஜை செய்கிறார்கள். ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபடுகிறார்கள். கல்வியில் மேம்பட இக்கோவிலில் வித்யாரம்ப வழிபாடு நடத்தப்படுகிறது. துலாபாரமும் எடுக்கிறார்கள்.

    மங்களாதேவி அம்மனின் சிரசு வைக்கப்பட்டு உள்ள சன்னதியில் செவ்வந்தி மாலை சாத்தி வழிபடுவதால் ஆரோக்கிய வாழ்வு கிடைக்கிறது.

    சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி பூஜிப்பவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் சகல ஐஸ்வர்யம், குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. எதிரிகள் செயலிழந்து போவார்கள் என்று சொல்லப்படுகிறது.

    கோவிலின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் நாகராஜ சன்னதியில் வீற்றிருக்கும் பாம்பு சிலைக்கு பால், இளநீர் அபிஷேகம் செய்தால் கண்நோய், தோல் வியாதி விலகுவதுடன், குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

    ஜாதக ரீதியாக ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜாவை வழிபட்டு பயன் பெறலாம். இங்கு தரப்படும் விபூதியை தரிசித்தால் பாலபீடை என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் விலகும் என்றும் சொல்லப்படுகிறது.

    இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    • இன்று தூர்வா என்னும் அருகம்புல்லை பூஜை செய்ய வேண்டும்.
    • அருகம்புல்லுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வணங்க வேண்டும்.

    ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும். இன்று தூர்வா என்னும் அருகம்புல்லை பூஜை செய்ய வேண்டும். அதாவது சுத்தமான இடத்தில் அருகம்புல் வளர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்றோ, அல்லது அருகம்புல்லை ஒரு தாம்பாளத்தில் வைத்தோ, அதற்கு (அருகம்புல்லுக்கு) சந்தனம், குங்குமம் இட்டு வணங்கி பிரார்த்திக்க வேண்டும்.

    அப்போது, "அருகம்புல்லே!, நீ அம்ருதத்திலிருந்து உண்டானாய், தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுகிறாய்.

    எங்களுக்கு சவுபாக்யத்தையும், குழந்தைச் செல்வத்தையும் தந்து அனைத்து காரியங்களையும் வெற்றியடையச் செய். எவ்வாறு நீ கிளை, உபகிளை என பரந்து விரித்து பூமி முழுவதும் பரவுகின்றாயோ, அவ்வாறே எனது வம்சத்தையும் மகன், மகள், பேரன், பேத்தி, அவர்களுக்கு குழந்தை என விரிவடையச் செய்வாயாக" என்று சொல்லி அருகம்புல்லை வணங்க வேண்டும்.

    இதனால் அனைத்து பலன்களும் நிச்சயம் கிட்டும்.

    ×