என் மலர்
ஆன்மிகம்
- பசுமை நிறைந்த வயல்களும் பிரம்மாண்ட மலைகளும் சூழ்ந்திருக்கும் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த ஆலயம்
- இத்தலத்தின் புராண பிரசித்தி பெற்ற அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சத்தியவேடு தாலுகாவில், சென்னை, ஊத்துக்கோட்டை, பிச்சாட்டூர் புத்தூர் வழித்தடத்தில் நாகலாபுரத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் ஆரணியாற்றங்கரையில் அமைந்திருக்கும் பாடல் பெற்ற திருத்தலமே ராமகிரி என்று அழைக்கப்படும் திருக்காரிக்கரை கிராமம்.
ஒரு செவியில் குண்டலமும், மறு செவியில் தோடும் அணிந்து, ருத்திராட்ச மாலையுடன் தத்ரூபமாகத் திகழும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிற்பம் ஒன்றே அதற்கு சான்று கூறப்போதுமானது.
பஸ் நிற்கும் இடத்தில் இருந்து வடக்கே சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் மலை அடிவாரத்தில் இத்தலம் அமைந்து இருக்கிறது.
இத்தலத்தின் புராண பிரசித்தி பெற்ற அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
பசுமை நிறைந்த வயல்களும் பிரம்மாண்ட மலைகளும் சூழ்ந்திருக்கும் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் பல்லவர்கால சிற்பக்கலை நயத்துடன் திகழ்கிறது.
இயற்கை எழிலுடன் அமைதியான சூழ்நிலையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தை தரிசிக்கும் பக்தர்கள் தெய்வ அருளைப் பெறுவதுடன் மனநிறைவு அடைவதும் திண்ணம்.
- அதிகம் சிரித்தால் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்வதை விட்டும் உள்ளம் மரணித்துவிடும்.
- ஐந்து விஷயங்களை ஒவ்வொரு மனிதரும் பேணி நடந்தால் அவர்தான் உண்மையிலே உயர்ந்த பண்புள்ளவராவார்.
இஸ்லாம் மனித வாழ்க்கையை இரண்டாக குறிப்பிடுகிறது. ஒன்று இம்மை எனப்படும் இந்த உலக வாழ்க்கை. அடுத்தது
இறைவனின் நெருக்கத்தில் வாழும் மறுமை வாழ்க்கை. இந்த இரண்டில் மறுமை வாழ்க்கையே சிறந்தது என்று ஏக இறைவன் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகின்றான்.
இறையச்சத்துடன், நற்பண்புகளுடன், உயர்ந்த சிந்தனைகளுடன், பிறருக்கு உதவும் உள்ளத்துடன் ஒருவன் இம்மையில் வாழ்ந்தால் மறுமையில் அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும். ஒரு மனிதன் உயர்ந்த பண்புள்ளவராக வாழ 5 முக்கிய அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும். இது குறித்த நபி மொழியை காண்போம்.
ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் இவ்வாறு கூறினார்கள்:
'நான் சில செய்திகளை கூறுகிறேன், அதை செயலாற்றுபவர் யார்?, அல்லது செயலாற்றும் நபருக்கு கற்றுக் கொடுப்பவர் எவரும் உண்டா?'.
நபிகளார் இவ்வாறு கூறிய தும் நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள், 'நானிருக்கிறேன் நாயகமே' என்றார். உடனே நபிகள் நாயகம் அவ ரது கையை பிடித்து 5 விஷயங்களை கூறினார்கள். அவை வருமாறு:-
1) இறைவன் எவற்றை தடை செய்துள்ளானோ அவற்றை விட்டு விலகி, பயந்து நடந்து கொண்டால் மிகப்பெரிய வணக்கம் புரிந்தவராகலாம்.
இறைவனுக்கு இணை வைத்தல், மது அருந்துவது. வட்டி வாங்கி சாப்பிடுவது. கொள்ளை அடிப்பது, விபச் சாரம் புரிவது, சூனியம் செய்வது, கொலை செய்வது போன்றவை பெரும்பாவங்கள் ஆகும். இவை அனைத் தும் இறைவனால் தடுக்கப்பட்டவை. இது போன்ற எந்தப் பெரும் பாவமும் செய்யாத போதிலும் தொழுகை, நோன்பு நோற்பது, ஜகாத், ஹஜ் போன்ற நல்ல காரியங்களை ஒருவர் செய்வதில்லை என்றால் அவர் குற்றவாளி தான்.
அதே போன்று இதற்கு மாற்றமாக எல்லா நல்ல காரியங்களையும் செய்கிறார், அதேபோல பாவங்களையும் செய்கிறார் என்றால் இவரும் குற்றவாளி தான். மனிதன் தான் செய்யும் நல்ல காரியங்கள் யாவும், பாவ மான காரியங்களை விட்டும் தடுப்பவையாக அமைய வேண்டும். இவ்விரண்டையும் ஒரு மனிதன் பேணி செயல்படும் போது அவர்தான் அதிக வணக்கமுடையவராக கருதப்படுகிறார்.
2) இறைவன் எதை பங்கிட்டு வழங்கியுள்ளானோ அதை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ளும் பண்பு இருக்குமேயானால் அவர் தான் அதிகம் வசதி படைத்தவராவார்". இறைவன் ஒரு மனிதனுக்கு என்ன தேவை ஏற்படுமோ அதை அந்தந்த காலகட்டங்களில் வழங்கிக்
வழங்கிக் கொண்டுதான் இருக்கிறான். அதில் எவ்வித குறையும் செய்யமாட்டான்.
உயர்ந்த பண்புகள் முழுமையாக ஒரே நேரத்தில் வழங்குவதில்லை. உதாரணமாக, ஒரு மனிதன் 90 ஆண்டு வாழ்கிறான் என்றால், அவனுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள உணவு, குடிநீர் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டால் சேமித்து வைத்து உண்ணாமல் குடிக்காமல் திகைத்து விடுவான். அதுமட்டுமல்லாமல் சோம்பேறியாகி உடல் நலமே கெட்டுவிடும். கல்லுக்குள் இருக்கும் ஜீவராசிக்கு உணவு வழங்கும் வன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டான் என்ற நம் பிக்கை வரவேண்டும். அதே சமயம் வீட்டில் முடங்கிக் கிடப்பதும் கூடாது. கொடுப்பவன் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுப்பான் என்று எண்ணக் கூடாது. நம்மிடமிருந்தும் உழைப்பு வேண்டும், அதன் மூலம் கிடைப்பதை ஏற்றுக் கொண்டு, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற சொல்லுக்கேற்ப நடப் பது தான் பெரும் வசதி படைத்தவர் என்று எண்ணப்படும்.
3) 'பக்கத்து வீட்டினரிடம் உபகாரமுடன் நடந்து கொள்ள வேண்டும்'. அப்படி நடந்தால் தான் உண்மையான முறையில் விசுவாசங்கொண்டவராக முடியும். அண்டை வீட்டாரிடம் எந்த அளவுக்கு உபகாரமுடன் நடக்க வேண்டும் என்றால், சொந்தங்களிடம் நடப்பதைப் போல் நடக்க வேண்டும் என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
4) தனக்கு எதை விரும்புவாரோ அதையே பிறருக்கும் விரும்பவேண்டும். அப்பொழு துதான் முழுமையாக வழிபட்டவராக முடியும். மனிதனின் இயல்பு தனக்கு பிடிக்காத பொருளை அடுத்தவருக்கு பிடிக்கும் என்று வழங்குவதுதான். ஆனால், நபிகள் (ஸல்) அப்படிக் கூறவில்லை. மாறாக தனக்கு விருப்பமான பொருளைத்தான் அடுத்தவருக்கும் வழங்க வேண்டும். அப்பொழுதுதான் நன்மை உண்டு. கெட்டுப்போன உணவுகளைக் கூட மற்ற உயிரினங்களுக்கு போடக்கூடாது என்பது ஷரீஅத் சட்டமாகும்.
5) அதிகமாக சிரிப்பது கூடாது'. அப்படி சிரித்தால் உள்ளம் மரணித்துவிடும். அதாவது சந்தோஷமான நேரத்திலும் கூட நடுநிலையை கடைப்பிடிக்க வேண்டும். அதிகம் சிரித்தால் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்வதை விட்டும் உள்ளம் மரணித்துவிடும். அதிகமாக சிரிப்பதால் ஆபத்துக்கள் கூட ஏற்படலாம்.
இந்த ஐந்து விஷயங்களை ஒவ்வொரு மனிதரும் பேணி நடந்தால் அவர்தான் உண்மையிலே உயர்ந்த பண்புள்ளவராவார். நாமும் முயற்சி செய்வோம், முன்னேற்றப் பாதையில் வெற்றி காண்போம்.
- நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர், எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை யாரும் கண்டறியாத ஒன்றாக இருக்கிறது.
- ஒரு குளத்தைச் சுற்றிய நிலையில் இந்த ஆலயம் முழுமை அடைந்து விடும்.
இந்தியாவில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளதோடு, வியக்க வைக்கும் பல கட்டிடக் கலை கொண்ட கோயில்கள் ஏராளம். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள ஒரு நந்தி கோயிலில், நந்தியின் வாயிலிருந்து தொடர்ச்சியாக நீர் வடியும் அதிசயம் நிகழ்ந்து வருகின்றது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது. ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயில்.
இந்த கோயிலின் சிறப்பே அங்கு அமைந்துள்ள நந்தியின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றாக ஊறி கொட்டிக் கொண்டிருப்பது தான். அதே போல் எல்லா சிவாலயங்களிலும், நந்தி சிவபெருமானுக்கு எதிராக தான் அமைக்கப்பட்டிருப்பார். ஆனால் இந்த ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயிலில், நந்தி பெருமானோ சிவ லிங்கத்திற்கு மேல் உள்ள தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அதோடு அந்த நந்தியிலிருந்து வடியும் தீர்த்தம், சிவ லிங்கத்தின் தலையில் விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிவனை அபிஷேகம் செய்வது போன்று அந்த தீர்த்தம் விழுந்து பின்னர் அந்த நீர், அங்குள்ள தெப்பக்குளத்தில் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நதியின் வாயில் எப்படி நீர் ஊறுகின்றது என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. சேற்றில் புதைந்து கிடந்துள்ளது. அதனை, சில தன்னார்வலர்கள் 1997ம் ஆண்டு கண்டுபிடித்து கோயிலை மீட்டெடுத்துள்ளனர்.

இந்த கோயில் அமைந்துள்ள இடம் அப்பகுதியிலேயே மிக தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால், அங்கிருந்து வரும் நீரூற்று, நந்தி வாயின் வழியே வெளியேறும் வண்ணம் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நீர் கீழே உள்ள லிங்கத்தின் மீது விழுந்து, பின்னர் குளத்தில் கலப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிசயம் நிகழ்வாதாக கூறுகின்றனர்.
நந்தி தீர்த்தம் விழும் சிவலிங்கத்திற்கு என்று தனி சன்னதியோடு, இந்த கோயிலில் விநாயகருக்கு என்று தனி சன்னதியும், நவகிரகத்திற்கு என்று சன்னதிகள் உண்டு.
- 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஏசாயா என்னும் தீர்க்கதரிசி தான்.
- ஏசாயா தீர்க்கதரிசியின் காலம் கி.மு.740 முதல் 680 வரை எனப்படுகிறது.
அன்பானவர்களோ ஜவேதாகமதியா கோரேஸ் 1 (சைரஸ்) என்ற ராஜாவைப் பற்றி ஏசாயா என்னும் தீர்க்கதரிசி கூறிய தீர்க்கதரிசன வார்த்தைகள் எவ்வாறு நிறைவேறியது என்பது பற்றி பார்ப்போம்.
பெர்சியப் பேரரசின் முக்கியமான ராஜாவான சைரஸ் கி.மு.539-ல் உலக சரித்திரத்தில் தன் முத்திரையைப் பதித்தார் என்று வரலாற்றின் மூலம் அறியலாம். ஏனெனில் கி.மு.539-ல் தான் மகா பாபிலோனிய அரசை கோரேஸ் (சைரஸ்) வீழ்த்தி, அதுவரை கோலோச்சிக் கொண்டிருந்த பாபிலோனிய அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் இப்படி ஒரு ராஜா வரப் போகிறார் என்றும், அவர் பாபிலோனிய அரசை வீழ்த்துவார் என்றும், இஸ்ரவேல் மக்களுக்கு ஆதரவாக இருப்பார் என்றும் முன்னறிவித்தது யார் தெரியும்?
150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஏசாயா என்னும் தீர்க்கதரிசி தான்.
இப்படி இந்த ராஜாவினுடைய பெயரை 150 ஆண்டுகளுக்கு முன்பாக குறிப்பிட்டது மட்டுமல்ல, அவர் செய்யப் போகிற ஒவ்வொரு காரியங்களைப் பற்றியும் முன்னறிவிக்கிறார் ஏசாயா.

கிமு 558-ல் பெர்சியா எனப்பட்ட இன்றைய ஈரானை ஆண்ட பேரரசரான சைரஸ் (கி.மு.590-529) இஸ்ரவேல் மக்களுக்கு ஆதரவாக இருந்தார். மேதிய பெர்சிய ராஜியம் எனப்படும் பாரசீகப் பேரரசை நிறுவிய இவர், பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டிருந்த யூதர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பவும், எருசலேமில் தேவாலயத்தை மீண்டும் கட்டவும் இவர் கொடுத்த ஆதரவு இஸ்ரவேல் வரலாற்றில் மிக முக்கிய சம்பவங்களாக கருதப்படுகின்றன.
ஏசாயா தீர்க்கதரிசியின் காலம் கி.மு.740 முதல் 680 வரை எனப்படுகிறது. இந்த நாட்களில் பாபிலோனிய பேரரசே உருவாகவில்லை. ஏசாயாவின் காலத்திற்கு பின்பு தான், அது ஆரம்பிக்கிறது (கி.மு.645 முதல் 539). ஆனால் அதற்கு முன்பாகவே அந்த பாபிலோனிய பேரரசை வீழ்த்துகிற கோரேஸ் (சைரஸ்) பற்றின துல்லியமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளது எத்தனை ஆச்சரியம் பாருங்கள்.
நேபுகாத்நேச்சாரின் காலத்தைபாபிலோனிய பேரரசின் உன்னதமான காலங்கள் ஆரம்பிக்கிற வருஷங்களாக எடுத்துக் கொண்டால் பாபிலோனின் சிறப்பான காலம் என்பது கி.மு.624-ல் இருந்து ஆரம்பிக்கிறது.
நேபுகாத்நேச்சாரின் காலத்தை பாபிலோனிய பேரரசின் உன்னதமான காலம் எனலாம். அதன் வல்லமை, பராக்கிரமம், அதிகரித்துக் கொண்டே போன காலம். பல வகைகளிலும் பாபிலோன் புகழ் பெற்றது. குறிப்பாக ராணுவ பலம், அதன் தலைநகர், முக்கிய நதியான யூப்பி ரட்டீஸ் நதியோரம் அமைந்திருந்ததால் செழிப்பான நகரமாக இருந்தது. சைரசின் ஆட்சிக்காலத்தில் அவர் பல வெற்றிவாகைகளை சூடிக்கொண்டிருந்தபோது கி.மு. 539-ம் ஆண்டில் பாபிலோன் அரசு அவர் போரிடாமலேயே சைரஸ் பேரரசரிடம் சரணடைந்தது.
ஏசாயா தனக்கு பின் தோன்றுகிற கோரேஸ் (சைரஸ்) மகாராஜாவைப் பற்றி கூறுகிறார்:
'கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும். அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும் படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலது கையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது: நான் உனக்கு முன்னே போய், கோணலான வைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர் சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவ னாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள் களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல் களையும் உனக்குக் கொடுப்பேன், நான் என் தாசனாகிய யாக்கோபி , நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித் னிமித்தமும் தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை என்று அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்' கூறுகிறார்.
வரலாற்றில் நீங்கள் முதலாம் சைரசை பற்றி படித்து பாருங்கள். இவர் சென்ற இடமெல்லாம் வெற்றிபெற்று சிறந்த பராக்கிரமம் நிறைந்த ராஜாவாக இருந்தார்.
பிரியமானவர்களே, இன்றைக்கு உங்களைப் பார்த்து கர்த்தர் சொல்லுகிறார். நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்".

ஆம் அன்பானவர்களே, எந்த காரியங்கள் உங்களுக்கு தடையாக இருக்கிறதோ, அந்த காரியங்களில் நிச்சயமாக ஜெயம் பெறுவீர்கள். தடைகளை மாற்றுகிற தேவன் உங் களுக்கு முன்னே சென்று, தடைகளை மாற்றுவார். நீங்கள் எதிர்பார்க்கும் விஷயத்தில் வெற்றியைத் தருவார்.
அன்றைக்கு கோரேஸ் மகாராஜாவுக்கு (சைரஸ்) உலக சாம்ராஜ்யமாக திகழ்ந்த பாபிலோனை திறந்து கொடுத்த தேவன், இன்றைக்கு உங்கள் வாழ்க்கையிலும் எதைக் கண்டு நீங்கள் அஞ்சி பயப்படுகிறீர்களோ, அந்த காரி யத்தில் வெற்றி தர போதுமானவராய் இருக்கிறார். திறக் கப்படாத வாசல்கள் எல்லாம் உங்களுக்கு திறக்கும்.
நீங்கள் சிலுவையில் அறையப்பட்டு, உயிரோடு எழுந்த கர்த்தராகிய இயேசுவை நோக்கி பாருங்கள், அவர் உங்கள் காரியங்களில் ஜெயத்தை தருவார், பதிலைத் தருவார், தாமதித்தாலும் காத்திருங்கள், நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் நிச்சயமாக கைகூடும், ஆமேன்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
- சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
28-ந்தேதி (செவ்வாய்)
* காஞ்சிபுரம் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜர், மதுரை கூடலழகர் தலங்களில் விடையாற்று உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமா வாளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
* மேல்நோக்கு நாள்.
29-ந் தேதி (புதன்)
* காஞ்சிபுரம் வரதராசர் பல்லக்கில் தீர்த்தவாரி.
* அகோபிலமடம் திருமத் 27-வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
30-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
31-ந் தேதி (வெள்ளி)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராத்திரி மூவர் உற்சவம் ஆரம்பம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு. திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
1-ந் தேதி (சனி)
* திருவரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழ கர், திருவள்ளூர் வீர ராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
* திருப்பதி ஏழுமலை யான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
2-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* திருத்தணி முருகப் பெருமான் பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
3-ந் தேதி (திங்கள்)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
- மதுரை ஸ்ரீகூடலழகர் விடையாற்று உற்சவம்.
- முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, வைகாசி 15 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பஞ்சமி பிற்பகல் 3.25 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம் : உத்திராடம் காலை 9.46 மணி வரை. பிறகு திருவோணம்.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
நாளை அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி. திருவோண விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காஞ்சிபுரம் ஸ்ரீவரதாஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு. மதுரை ஸ்ரீகூடலழகர் விடையாற்று உற்சவம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - ஆரோக்கியம்
மிதுனம் -வெற்றி
கடகம் - சாதனை
சிம்மம் - பாசம்
கன்னி - உதவி
துலாம் - நட்பு
விருச்சிகம் - ஆர்வம்
தனுசு - போட்டி
மகரம் - ஆக்கம்
கும்பம் - பாராட்டு
மீனம் - பக்தி
- சிவபெருமான் பார்வதியை அடைய வழிபட்ட துளசியே!
- எல்லாத் தேவர்களும், தேவ மாதர்களும், கின்னரர்களும் வணங்கிய துளசியே!
மாயோனுக்கு மகிழ்ச்சி கொடுப்பவளும், பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவளும், பகவானால் திரு முடியில் ஏற்றுக் கொள்பவளும், திருமாலின் சர்வாக்க சம்பந்தம் பெற்றவளுமான துளசியே, உன் இலைகளால் பூஜிப்பவர்களுக்கு அருள் செய்வாயாக!
பகவானின் பூஜைப் பொருட்களுள் மிக முக்கியமானவளும், பகவானின் திரு வடிகளை அடைய இடையூறான பாவங்களைப் போக்குபவளும்,
உலக நன்மைக்காகவும், கோமதி ஆற்றில் கிருஷ்ணனால் வளர்க்கப்பட்டவளும், கோகுல வளர்ச்சிக்காகவும், கோபியர்களின் நலத்திற்காகவும், கம்சனுடய அழிவிற் காகவும் கண்ணனால் பூஜிக் கப்பட்ட துளசியே!
வசிஷ்டரின் ஆணைப்படி ராமருக்கு முன்னால் சரயூ நதிக்கரையில் அரக்கர்களின் அழிவுக்காகவும், முனிவர்களின் தவ விருத்திக்காகவும், நடப்பெற்ற துளசியே!
ராமனின் பிரிவால் அசோக வனத்தில் துயருற்ற சீதா பிராட்டியார், அறம் வளர்த்த நாயகனை அடைவதற்காக வணங்கிய துளசியே!
சிவபெருமான் பார்வதியை அடைய வழிபட்ட துளசியே!
எல்லாத் தேவர்களும், தேவ மாதர்களும், கின்னரர்களும் வணங்கிய துளசியே!
தண்ட காரண்யத்தில் உலக நன்மையின் பொருட்டு ராமர், சீதை, லக்குமணன் ஆகியோர் வழிபட்ட துளசியே அறன்மிக ஆரண்யத்திலும் கயையிலும், பித்ருக்கள் வணங்கிய துளசியே!
மூவுலகிலும் பெருமை பெற்ற கங்கையைப் போன்ற துளசியே, சுக்ரீவன் வாலியின் அழிவிற்கு ரிஷ்ய முக பர்வதத்தில் தொழப்பட்ட துளசியே!
கடலைக்கடந்து சீதையைக் காண அனுமனுக்கு உதவிய துளசியே!
தேவர்களுக்குத் தலைவியே மாலுக்கு பிரியமானவளே! உன்னைச் சரண் புகுந்து வழிபடுகின்றேன். எனக்கு அருள் புரிவாயாக.
இந்த துளசியின் ஸ்தோத் திரத்தை துவாதசி திதியில் கூறினால் 32 ஆபிசாரங்களும் விலகும். இளமை, முதுமை ஆகிய பருவங்களில் செய்த பாவங்கள் அகலும் இதில் சந் தேகமே இல்லை.
துளசியும், நாராயணனும் மகிழ்ச்சி அடைந்து செல்வத்தைத் தருவார்கள். பகைவர் அழிவர். நற்சுகமும், நற் கல்வியும் அடைவர். முக்தியும் கிடைக்கும்.
- மீண்டும் வலம்வந்து கற்கண்டு தாம்பூலம் நிவேதனம் செய்து மீண்டும் 3 முறை நமஸ்கரிக்கவும்.
- அவ்வாறு செய்தால் கன்னிப்பெண்களுக்கு திருமணம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.
வெள்ளிக்கிழமை காலை துளசி செடிக்கு சந்தனம் குங்குமம் வைத்து பூசாரி மும்முறை வலம் வந்து இந்த மந்திரத்தை 12 முறை படித்து
மீண்டும் வலம்வந்து கற்கண்டு தாம்பூலம் நிவேதனம் செய்து மீண்டும் 3 முறை நமஸ்கரிக்கவும்.
அவ்வாறு செய்தால் கன்னிப்பெண்களுக்கு திருமணம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.
துளசி ஸ்தோத்திர மந்திரமாக பிருந்தா, பிருந்தாஸனி, விச்வ பூஜிதா, விஸ்வபாவினீ, புஷ்பஸாரா, நந்தனீச, துளசி கிருஷ்ண ஜீவனீ ஏகத் நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்திரம் நாமார்த்த சம்யுதம் ய: படேத் தாம்சே சம்பூஜ்ய ஹோச்வமேத பலம் லபேத் என்று ஜபிக்க வேண்டும்.
துளசி தீர்த்தம் 400 க்கும் மேற்பட்ட நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. துளசியில் உடனடி பலன் பெறும் சில நோய்கள் விவரம் வருமாறு:
1. உண்ட விஷத்தை முறிக்க
2. விஷஜுரம் குணமாக
3. ஜன்னிவாத ஜுரம் குணமாக
4. வயிற்றுப்போக்குடன் ரத்தம் போவது நிற்க
5. காது குத்து வலி குணமாக
6. காது வலி குணமாக
7. தலைசுற்று குணமாக
8. பிரசவ வலி குறைய
9. அம்மை அதிகரிக்காதிருக்க
10. மூத்திரத் துவார வலி குணமாக
11. வண்டு கடி குணமாக
12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக
13. எந்த வியாதியும் உண்டாகாமலிருக்க
14. தோல் சம்பந்தமான நோய் குணமாக
15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற
16. அஜீரணம் குணமாக
17. கெட்ட ரத்தம் சுத்தமாக
18. குஷ்ட நோய் குணமாக
19. குளிர்காய்ச்சல் குணமாக
20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக
21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க
22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க
23. காக்காய்வலிப்புக் குணமாக
24. ஜலதோஷம் குணமாக
25. ஜீரண சக்தி உண்டாக
26. தாதுவைக் கட்ட
27. சொப்பன ஸ்கலிதம் குணமாக
28. இடிதாங்கியாகப் பயன்பட
29. தேள்கொட்டு குணமாக
30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக
31. கண்ணில் விழுந்த மண், தூசியை வெளியேற்ற
32. வாதரோகம் குணமாக
33. காய்ச்சலின் போது தாகம் தணிய
34. பித்தம் குணமாக
35. குழந்தைகள் வாந்தியை நிறுத்த
36. குழந்தைகள் வயிற்றுப்போக்கை நிறுத்த
37. சகல விதமான வாய்வுகளும் குணமாக
38. மாலைக்கண் குணமாக
39. எலிக்கடி விஷம் நீங்க
40. காய்ச்சல் வரும் அறிகுறி தோன்றினால்
41. ரணத்தில் ரத்தம் ஒழுகினால் நிறுத்த
42. வாந்தியை நிறுத்த
43. தனுர்வாதம் குணமாக
44. வாதவீக்கம் குணமாக
45. மலேரியாக் காய்ச்சல் குணமாக
46. வாய்வுப் பிடிப்பு குணமாக
47. இருமல் குணமாக
48. இன்புளூயன்சா காய்ச்சல் குணமாக
49. காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த
50. இளைப்பு குணமாக
51. பற்று, படர்தாமரை குணமாக
52. சிரங்கு குணமாக
53. கோழை, கபக்கட்டு நீங்க
- துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
- மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் படிப்படியாக கரையும்.
துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் படிப்படியாக கரையும்.
இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷ நீர் கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.
பெண்களுக்கு உதவும் துளசி
துளசி இலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக் கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறிய பின் பத்திரப் படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக் கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந் தால் பெண்க ளுக்கு உண் டாகும் பெரும் பாடு (ரத்தப் போக்கு) குணமாகும்.
- துளசியை தீர்த்தமாகவும், பூஜை பொருட்களாக மட்டுமின்றி உணவாகவும் சாப்பிடலாம்.
- இந்த சாதம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவாகும்.
துளசியை தீர்த்தமாகவும், பூஜை பொருட்களாக மட்டுமின்றி உணவாகவும் சாப்பிடலாம்.
துளசி சாதம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
துளசி இலை&1/2 கப்
சாதம்&1 கப்
கடலை பருப்பு&1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு&1 ஸ்பூன்
கடுகு சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
எண்ணெய்&1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை சிறிதளவு
பச்சை மிளகாய்&2
வெங்காயம்&1
செய்முறை...
துளசி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு போட்டு வதக்கவும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு சிறிது வதங்கியதும் துளசி இலை, தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
பின்னர் சாதத்தை போட்டு சிறிது நேரம் கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். இந்த சாதம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவாகும்.
- இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. ரத்த ஓட்டம் சீராகும்.
- இதயமும் பலம் பெறும். சிறுநீரில் உள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது.
காலத்தின் மாற்றத்திற்கேற்ப நாம் உட்கொள்ளும் விஷத்தன்மை கொண்ட உணவுப்பழக்க வழக்கத்தால் தற்போது கல்லீரல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகிறது.
கல்லீரலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒவ்வாமையை அடிப்படையாக கொண்டு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும்.
ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவில்லை என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித் தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து சலித்து எடுக்கவும்.
ஒரு கிலோ பனை வெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும்.
இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை 6, மதி யம் 12, மாலை 6 மணிக்கு) நெல்லிக்காய் அளவு எடுத்துச் சுவைத்து சாப்பிடவும், இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல் லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.
கல்லீரலை வலுவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனியும், துளசி இலைகளும் தான்.
அவற்றைக் கொஞ்சம் எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய் 4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகி வர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
துளசி கசாயம், துளசி சிரப், ஆஸ்த்துமா, இளைப்பு நோய், மூளைக்காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச் சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மதுபானம், போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல் லீரல் மெல்ல, மெல்ல சிதை வடையும்.
முற்றிய நிலையில் ரத்த வாந்தி எடுத்து அறுவை சிகிச்சைக்கு ஆட்பட வேண்டிய நிலை ஏற்படும்.
இதற்கு எலுமிச்சம்பழமும் தேனும், தக்காளி ரசமும் சம அளவு கலந்து காலை, மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர்கேடுகள் மறைந்து, உடம்பு தெம்பாக இருக்கும்.
இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. ரத்த ஓட்டம் சீராகும்.
இதயமும் பலம் பெறும். சிறுநீரில் உள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது.
ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும் பாலில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உடனே சாப்பிட்டு வாருங்கள். சீக்கிரத்தில் குணமாகும்,






