என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துளசி தேவி"

    • அதில் முதலாவது பொருள் கள்ளம், கபடம் இல்லாத பிள்ளை உள்ளம் கொண்ட பக்தர்களின் நல் இதயம்.
    • இரண்டாவது நமது வீட்டு முற்றத்தில் வளர்ந்து தெய்வீக மணம் பரப்பும் துளசி.

    பாம்பணை மேல் பள்ளி கொண்ட பரந்தாமனுக்கு இரண்டே இரண்டு பொருட்களின் மீது தீராத காதல் என்று திருமால் அடியவர்கள் சொல்கிறார்கள்.

    அதில் முதலாவது பொருள் கள்ளம், கபடம் இல்லாத பிள்ளை உள்ளம் கொண்ட பக்தர்களின் நல் இதயம்.

    இரண்டாவது நமது வீட்டு முற்றத்தில் வளர்ந்து தெய்வீக மணம் பரப்பும் துளசி.

    துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரில்லாத பெண் என்று பொருள்.

    வைஷ்ணவ சம்பிரதாயத்தில் துளசியை திருத்துழாய் என்று அழைப்பார்கள்.

    ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமாக துளசி கருதப்படுவது.

    அனுவரதமும் பெருமாளின் திருமார்பை அலங்கரிக்கும்.

    புனிதமிக்க ஆபரணம் ஆகவும் துளசி திகழ்கிறது.

    துளசியின் ஒவ்வொரு அங்கமும் புனிதமானது.

    அதன் இலை, கிளை, வேர் மட்டுமல்ல, துளசி செடியை தாங்கி புண்ணியம் பெற்ற மண்ணும் மகத்துவம் பெற்ற தாகவே கருதப்படுகிறது.

    துளசியின் வேர்களில் சகல தேவதைகளும் வாழ்வதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இவ்வளவு பெருமை வாய்ந்த துளசி சரித்திரத்தை மனமுவந்து படிப்பவருக்கும் படிப்பதை கேட்பவருக்கும் ஸ்ரீ துளசி மாதாவின் பெரும் கருணையும் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான்.
    • அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான்.

    முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான்.

    அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான்.

    வரத்தின் மூலம் கிடைத்த பலத்தால் அவன் பல கொடுமைகளை செய்து வந்தான்.

    குழந்தைகளை மிதித்தும். குணசீலர்களை கொடுமைப்படுத்தியும், யாகங்களை சிதைத்தும், பெண்களின் கர்ப்பை சூறையாடியும் களியாட்டம் போட்டு வந்தான்.

    அவனது கொடுமைகளை தாங்க முடியாமல் மண்ணவரும், விண்ணவரும் பெரும் துயரம் அடைந்தனர்.

    சங்கசூடனை அழிக்க வழி தெரியாமல் திணறினார்கள்.

    கடைசியாக அவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள்.

    அதனால் கோபம் அடைந்த மும்மூர்த்திகளுக்கும் சங்கசூடனுக்கும் யுத்தம் நடந்தது.

    ஆனால் சங்கசூடனை யாராலும் வெல்ல முடிய வில்லை.

    அதற்கு காரணம் அவன் கடுந்தவம் புரிந்து அதன் பயனாய் பெற்று தன் கழுத்தில் அணிந்திருந்த ஸ்ரீகிருஷ்ண கவசம் ஆகும்.

    அந்த கவசம் அவன் கழுத்தில் இருக்கும் வரை அவனை யாராலும் வெல்லவோ, அழிக்கவோ முடியாது என்று மும் மூர்த்திகளும் உணர்ந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிறகு 10 தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார்.
    • வைகுந்தவாசனே தன்னை துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள்.

    சங்கசூடனின் மனைவி துளசி மகாபதி விரதை, கற்புக்கரசி கணவன் சொல்லை மீறி எந்த செயலும் செய்யாதவள்.

    அழகு, அன்பு, கருணை, அனைத்தும் நிறைந்தவள். அவளின் கற்பின் திறன் கணவனுக்கு அரணாக விளங்கியது.

    துளசியின் கற்பின் மகிமையை உணர்ந்த பரந்தாமன் கற்புக்கு அரணாக விளங்கும் துளசியை புகழ்ந்து ஸ்தோத்திரம் சொல்வதை தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்.

    பிறகு 10 தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார்.

    வைகுந்தவாசனே தன்னை துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள்.

    நெஞ்சம் நெகிழ்ந்தாள் மிகவும் மகிழ்ந்தாள். அன்பை பொழிந்தாள். அவரை வாயார போற்றிப்பாடினாள்.

    ஆடினாள். கற்புக்கனலாக நின்ற அவளை நாராயணர் ஆதரவாகப் பார்த்து வேண்டிய வரங்களைக் கேள் என்றார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதாரணமாக காண்பவர்களுக்கு செடியின் உருவமாக வும், பிணிகளைத் தீர்க்கும் மருந்து செடியாகவும் தெரிவாள்.
    • தெய்வீக நோக்குடன் காணும் போது உலகத்தை காக்கும் மகாலட்சுமியின் உருவமாக காட்சியளிக்கிறாள் ஸ்ரீ துளசி மாதா.

    அதற்கு அவள் மீண்டும் பிறவா வரமும், பிறந்தால் நாராயணரை மறவா மனமும் வேண்டும் என்றாள்.

    பிறகு ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பாதார விந்தங்களில் பணிந்தாள்.

    அவளது உயிர் மகா விஷ்ணுவின் பாதங்களில் ஒளி வடிவாக சென்றடைந்தது. அவளது உடல் கண்டகி என்னும் நதியாக மாறியது.

    அவளது கேசம் துளசி செடியாக துளசி வசமானது. ஸ்ரீ மகாவிஷ்ணு அந்த துளசியை மாலையாக்கி அணிந்து காட்சி அளித்தார்.

    மனைவியை பிரிந்த சங்க சூடன் சக்தி அற்றவனாக மாறினான்.

    அவன் முற்பகலில் செய்த கொடுமைகளே பிற்பகலில் அவன் அழிவிற்கு வழி வகுத்தன.

    அவனை ஸ்ரீ மகாவிஷ்ணு எளிதில் வதம் செய்து எல்லோருக்கும் மங்கலங்கள் தந்தருளினார்.

    ஸ்ரீதேவியின் ஓர் அங்கம் பூவுலகில் தங்கி தம் மக்களின் உடற்பிணி உள்ளப்பிணி ஆகிய பிணிகளைப் போக்கி, பேரின்ப வாழ்வளிக்க எடுத்த வடிவமே ஸ்ரீ துளசி.

    சாதாரணமாக காண்பவர்களுக்கு செடியின் உருவமாக வும், பிணிகளைத் தீர்க்கும் மருந்து செடியாகவும் தெரிவாள்.

    ஆனால் தெய்வீக நோக்குடன் காணும் போது உலகத்தை துளங்க வைக்கும் மகாலட்சுமியின் உருவமாக காட்சியளிக்கிறாள் ஸ்ரீ துளசி மாதா.

    • கன்னிப்பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனை பெறுவார்கள்.
    • சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்க சவுமாங்கல்யத்தையும் சகல சவுபாக்கியங்களையும் பெறுவார்கள்

    ஸ்ரீ மகாலட்சுமியே இந்த துளசி செடியாய் மாறி ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கு மிகவும் விருப்பமுள்ள மலராக விளங்குகிறார்.

    துளசி இல்லாத பூஜையை மகா விஷ்ணு ஏற்றுக்கொள்வதில்லை.

    திருத்துழாய் என்ற பெயரில் பெருமாள் கோவில்களில் சிறந்த பூஜை பொருளாக விளங்குவது இந்த துளசியே.

    துளசி உள்ள இடத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு எப்போதும் வாசம் செய்கிறார்.

    துளசியினால் விஷ்ணுவை பூஜித்தால் ஆயிரம் பால் குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்த மனமகிழ்ச்சியை ஸ்ரீமகா விஷ்ணு அடைகிறார்.

    கடைசி காலத்தில் துளசி தீர்த்தம் உட்கொண்டால் பிறவி நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும்.

    துளசியினால் ஸ்ரீமகா விஷ்ணுவை மட்டுமின்றி ஸ்ரீ மகா தேவனையும் அர்ச்சிக்கலாம். ஏனெனில் அவர் ஸ்ரீ சங்கர நாராயணராக இருக்கிறார்.

    இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீ துளசியை நம் வீடுகளில் அழகிய மாடங்களில் வளர்த்து பக்தி சிரத்தையுடன் பூஜித்தால் வாழ்க்கையில் சர்வ மங்கலங்களையும் பெறலாம்.

    கன்னிப்பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனை பெறுவார்கள்.

    சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்க சவுமாங்கல்யத்தையும் சகல சவுபாக்கியங்களையும் பெறுவார்கள்

    • கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான்.
    • விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு.

    கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான்.

    விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு.

    கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன்.

    ஐந்து தலைநாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன்.

    எனவே தான் கண்ணன் துளசி மாலை அணிந்து இருப்பான்.

    வீடுகளின் பின் பக்கத்தில் துளசி மாடம் அமைப்பதும், இதனால் தான்.

    பூச்சிகள் நுழையாமல் தடுக்க வீட்டின் பின்புறத்தில் துளசி மாடம் வைத்து அதனை வழி பட்டார்கள்.

    தற்போதும் இந்த முறை பல வீடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.

    துளசி இருக்கும் இடத்தில் லட்சுமி வசிப்பாள்.

    விஷ்ணுவின் அருளும் பரிபூரணமாய் கிடைக்கும்.

    வீட்டின் தென் மேற்கு பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபட வேண்டும்.

    துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றிகோல மிட்டு வழிபட்டு வந்தால், நல்லது.

    துளசி மாலையை விஷ்ணுவுக்கு அணிவித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    துளசிக்கு வேறு பல பெயர்களும் உள்ளன.

    1. திருத்துழாய் (ஆண்டா ளுக்கு முதலில் இந்த பெயரே இருந்தது)

    2. துளபம்

    3. துளவம்

    4. சுகந்தா

    5. பிருந்தா

    6. வைஷ்ணவி

    7. லட்சுமி

    8. கவுரி

    9. மாதவி

    10. ஹரிபிரியா

    11. அம்ருதா

    12. சுரபி

    • துளசியை நினைத்தால் பாவம் போக்கும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான்.
    • துளசியை வழிபட்டால் ஆயுள் பலம் புகழ், செல்வம், மக்கட்பேறு முதலியன பெருகும்.

    துளசி இலை சாறை சூடாக்கி எட்டில் ஒரு பங்கு தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

    இதனை ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும்.

    பெண்கள் மாத விடாயின் போது துளசி விதைகளை ஒரு ஸ்பூன் நீருடன் அரைத்து அந்த மூன்று நாட்கள் உட்கொண்டால் கருப்பை சுத்தமாகி புத்திரபாக்கியம் கிட்டும்.

    பாவம் போக்கும் துளசி மாலை

    துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள் அசுவினிதேவர் இருவர் ஆகியோர் வசிக்கின்றனர்.

    இலையின் நுனியில் பிரம்மன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி, சரசுவதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர்.

    துளசியை நினைத்தால் பாவம் போக்கும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான்.

    துளசியை வழிபட்டால் ஆயுள் பலம் புகழ், செல்வம், மக்கட்பேறு முதலியன பெருகும்.

    துளசி காஸ்ட (கட்டை) மாலையை கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும் துளசி தீர்த்தத்தை பருகினால் பரமபதம் செல்வர்.

    • சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்று பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும்.
    • துளசி இலையை தெய்வ பிரசாதமாக உண்பவர்களுக்கு சகல பாவங்களும் தொலைந்து போகும்.

    எந்த இடத்தில் துளசி செடி வளர்ந்து இருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள்.

    சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்று பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும்.

    துளசி இலையை தெய்வ பிரசாதமாக உண்பவர்களுக்கு சகல பாவங்களும் தொலைந்து போகும்.

    எவரது இல்லத்தில் துளசி செடிகள் நிறைய இருக்கிறதோ அந்த இடம் புண்ணியமான திருத்தலமாகும்.

    அங்கு அகால மரணம் வியாதி முதலியன ஏற்படாது.

    துளசி செடிகளை திருமாலின் அம்சமாக மதித்து பூஜை செய்ய வேண்டும்.

    துளசி தளத்தால் திருமாலை அர்ச்சனை செய்து பூஜிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

    துளசியை பூஜை செய்ததன் பயனாக சீதைக்கு ராமபிரான் கணவராக கிடைத்தார் என்று துளசி ராமாயணம் கூறுகிறது.

    விஷ்ணு பூஜைக்கு பிறகு சந்தன தீர்த்தத்துடன், துளசி தளத்தை பிரசாதமாக பெறுவது பக்தர்களுக்கு ஒப்பானதாகும்.

    இதை சரணா அமிர்தம், தீர்த்தப் பிரசாதம், பெருமாள் தீர்த்தம் என்றெல்லாம் சிறப்பித்து கூறுவார்கள்.

    இதைப்பற்றி ஆகம நூல் துளசி தளம் கலந்த ஸ்ரீமன் நாராயணனின் ஸ்ரீபாத தீர்த்தத்தை பருகி வருபவர்களுக்கு மறுபிறப்பு இல்லை.

    அகால மரணம், உடல், உள்ளம் பற்றிய வியாதிகள் எல்லாமே விலகும் என்கிறது.

    • தர்மத்துவஜன் மாதவி என்ற தம்பதியினருக்கு கார்த்திகை மாதம் பவுர்ணமி திதியில் துளசி அவதரித்தாள்.
    • ஏகாதசி தினத்தில் விரதம் இருப்பவர்கள் துவாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்தியே விரதத்தை நிறைவு செய்வார்கள்.

    தர்மத்துவஜன் மாதவி என்ற தம்பதியினருக்கு கார்த்திகை மாதம் பவுர்ணமி திதியில் துளசி அவதரித்தாள்.

    பிரம்மனை நோக்கி தவம் செய்து வரம் பெற்ற துளசி பெண் வடிவத்தை விட்டு செடி வடிவம் தாங்கி திருமாலுக்கு பிரியமானவளாக விளங்குவதாக புராணங்கள் சொல்லுகின்றன.

    துளசி செடியின் அடியில் தேங்கி நிற்கும் தீர்த்தத்தில் பாவங்களை போக்கும் புண்ணியங்களை தரும் சக்தி இருப்பதாக ஐதீகம் உண்டு.

    ஹரி வம்சம் என்ற நூல் மகாவிஷ்ணு ஒரு முறை தன்னை மகிழ்விக்கும் துளசியை தான் மகிழ்விக்கும் பொருட்டு துளசி பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.

    கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தில் திருமால் அந்த பூஜையை செய்ததாகவும் அன்றையதினம் நாமும் செய்தால் துளசி மனம் மகிழ்ந்து வரங்களை கேட்காமலேயே தருவாள் என்று பயன் பெற்றவர்கள் நெஞ்சம் நெகிழ சொல்கிறார்கள்.

    நமது முன்னோர்கள் நெருப்பு வடிவான சிவபெருமானுக்கு குளிர்ச்சி தருகின்ற வில்வ பத்திரத்தையும், குளிர் மேகம் போன்ற விஷ்ணுவுக்கு, வெப்பத்தை தரும் துளசி பத்திரத்தையும் பூஜை பொருளாக வைத்திருக்கிறார்கள்.

    ஏகாதசி தினத்தில் விரதம் இருப்பவர்கள் துவாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்தியே விரதத்தை நிறைவு செய்வார்கள்.

    தைமாத வெள்ளிக்கிழமையும், மாசி மாத சுக்லபட்ச துவாதசியும், பங்குனி மாத அம்மாவாசை மற்றும் பவுர்ணமி சித்திரை மாத பவுர்ணமி, ஆனி மாத சுக்ல பட்ச தசமி மார்கழி மாத விடியற்காலை நேரம் துளசி தேவியை பூஜை செய்வதற்கு சிறந்த நேரம் என்று முன்னோர்கள் வகுத்து கொடுத்து இருக்கிறார்கள்.

    • மகப்பேறு இல்லாத தம்பதியினர் துளசி வழிபாடு செய்தால் நல்ல பலனை கைமேல் பெறுவார்கள்.
    • நீங்களும் தினசரி துளசி வழிபாடு செய்து பாருங்கள்.

    ஸ்ரீ பத்ம புராணத்தில் துளசியின் மகாத்மியம் ஒன்று சொல்லப்பட்டு உள்ளது.

    தசரத மகாராஜனுக்கு குழந்தைப்பேறு வேண்டி அவன் முதன்முதலில் பட்டத்து ராணிகளோடு துளசி பூஜை செய்ததாகவும்

    துளசி தேவியே நேரில் தோன்றி துளசி காஷ்டம் என்ற துளசி குச்சிகளை கொண்டு புத்திரகாமேஷ்டி யாகம் செய்,

    உனக்கு பகவானே மகனாக பிறப்பான் என்று வரம் கொடுத்ததாகவும் இருக்கிறது.

    எனவே துளசி வழிபாடு என்பது சகல பாவங்களையும் போக்குவது மட்டுமல்ல குழந்தை வரத்தையும் தருகின்றது என்பது தெளிவாக தெரிகிறது.

    மகப்பேறு இல்லாத தம்பதியினர் துளசி வழிபாடு செய்தால் நல்ல பலனை கைமேல் பெறுவார்கள்.

    துளசி பூஜை செய்யும் போது மிகவும் கண்டிப்பாக ஸ்ரீகிருஷ்ணன் ஆக கருதப்படும் நெல்லி மரத்தின் கிளையை அருகில் வைத்து செய்ய வேண்டும்.

    தொடர்ச்சியாக பூஜை செய்யப்படும் போது நெல்லி மரக்கிளை வாடிவிடும் என்பதனால் ஸ்ரீ கிருஷ்ணனின் திருவுருவப்படமும் பிரதிமையோ வைத்து பூஜை செய்யலாம்.

    நீங்களும் தினசரி துளசி வழிபாடு செய்து பாருங்கள்.

    மனதில் மகிழ்ச்சியும் இல்லத்தில் இன்பமும் வாழ்வில் ஒருவித தெம்பும் கிடைப்பதை கண் கூடாக காணலாம். துளசி மாதா உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தருவாள்.

    • இல்லங்களில் துளசியை வளர்த்து பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம்.
    • எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ, அந்த இல்லத்தை துர்சக்திகள் அண்டாது.

    இல்லங்களில் துளசியை வளர்த்து பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம்.

    துளசியின் மஞ்சரியை ஸ்ரீ கிருஷ்ணருக்கு சமர்ப்பித்தவர் எல்லாவித பூக்களையும் சமர்ப்பித்த பலனை அடைவார்கள் என்று ஸ்ரீ பத்ம புராணம் கூறுகிறது.

    துளசி இலை ஹரியின் பூஜையில் சேர்க்கப்படாவிட்டால் அந்த பூஜையின் பலன் முழுமையாக நமக்கு கிடைப்பதில்லை.

    மேலும் நிவேதனத்தின் போதும் துளசியின் ஸ்பரிசம் இருந்தால் மட்டுமே அந்த நிவேதனத்தை இறைவன் ஏற்கிறார்.

    ஆகவே துளசி தீர்த்தத்தால் மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.

    துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோருருத்திரர்களும், பன்னிரண்டு ஆதித்தியர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.

    ஸ்ரீ கிருஷ்ணரை துளசியால் அர்ச்சனை செய்பவர் தம் முன்னோர்களையும் பிறவித்தளையிலிருந்து விடுவிக்கிறார்.

    துளசி நிறைந்த காட்டுக்குள் பிரவேசிப்பவரது பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகிறது.

    எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ, அந்த இல்லத்தை துர்சக்திகள் அண்டாது.

    அதனால்தான் வீட்டு முற்றத்தில் துளசி வளர்க்கும் மரபு உண்டாக்கியது.

    மேலும் அந்த இல்லத்தில் வசிப்பவர்களுக்கு எம பயம் கிடையாது.

    துளசியை வளர்த்து தரிசித்து பூஜிப்பதால் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும்.  

    ×