என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மீண்டும் பிறவா வரமும் பிறந்தால் நாராயணரை மறவா மனமும் வேண்டும்!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மீண்டும் பிறவா வரமும் பிறந்தால் நாராயணரை மறவா மனமும் வேண்டும்!

    • சாதாரணமாக காண்பவர்களுக்கு செடியின் உருவமாக வும், பிணிகளைத் தீர்க்கும் மருந்து செடியாகவும் தெரிவாள்.
    • தெய்வீக நோக்குடன் காணும் போது உலகத்தை காக்கும் மகாலட்சுமியின் உருவமாக காட்சியளிக்கிறாள் ஸ்ரீ துளசி மாதா.

    அதற்கு அவள் மீண்டும் பிறவா வரமும், பிறந்தால் நாராயணரை மறவா மனமும் வேண்டும் என்றாள்.

    பிறகு ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பாதார விந்தங்களில் பணிந்தாள்.

    அவளது உயிர் மகா விஷ்ணுவின் பாதங்களில் ஒளி வடிவாக சென்றடைந்தது. அவளது உடல் கண்டகி என்னும் நதியாக மாறியது.

    அவளது கேசம் துளசி செடியாக துளசி வசமானது. ஸ்ரீ மகாவிஷ்ணு அந்த துளசியை மாலையாக்கி அணிந்து காட்சி அளித்தார்.

    மனைவியை பிரிந்த சங்க சூடன் சக்தி அற்றவனாக மாறினான்.

    அவன் முற்பகலில் செய்த கொடுமைகளே பிற்பகலில் அவன் அழிவிற்கு வழி வகுத்தன.

    அவனை ஸ்ரீ மகாவிஷ்ணு எளிதில் வதம் செய்து எல்லோருக்கும் மங்கலங்கள் தந்தருளினார்.

    ஸ்ரீதேவியின் ஓர் அங்கம் பூவுலகில் தங்கி தம் மக்களின் உடற்பிணி உள்ளப்பிணி ஆகிய பிணிகளைப் போக்கி, பேரின்ப வாழ்வளிக்க எடுத்த வடிவமே ஸ்ரீ துளசி.

    சாதாரணமாக காண்பவர்களுக்கு செடியின் உருவமாக வும், பிணிகளைத் தீர்க்கும் மருந்து செடியாகவும் தெரிவாள்.

    ஆனால் தெய்வீக நோக்குடன் காணும் போது உலகத்தை துளங்க வைக்கும் மகாலட்சுமியின் உருவமாக காட்சியளிக்கிறாள் ஸ்ரீ துளசி மாதா.

    Next Story
    ×