என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடலில் 18 இடங்களில் பூசிக்கொள்ள வேண்டும்.
    • அவ்வையார் 'நீறில்லா நெற்றி பாழ்' என்று குறிப்பிடுகிறார்.

    சைவ நெறியைப் பின்பற்றுபவர்களின் புனிதச் சின்னமாக இருப்பது, திருநீற்றுப் பட்டை. இந்தத் திருநீறானது, பசுஞ்சாணத்தை எரியூட்டி பெறப்படுகிறது. சிறப்புமிக்க அந்தத் திருநீற்றை, தலை முதல் கால் வரை, உடலில் 18 இடங்களில் பூசிக்கொள்ள வேண்டும் என்று வரைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    திருஞானசம்பந்தர், திருநீற்றின் சிறப்பைப் பற்றி 'திருநீற்றுப் பதிகம்' பாடல் தொகுப்பையே வழங்கியிருக்கிறார். 'மந்திரமாவது நீறு..' என்று தொடங்கும் அந்த பதிகப் பாடல், கூன் பாண்டியனின் வெப்பு நோயை நீக்குவதற்காக, ஞானசம்பந்தரால் பாடப்பட்டது ஆகும். அவ்வையாரும் கூட 'நீறில்லா நெற்றி பாழ்' என்று குறிப்பிடுகிறார்.

    அந்த திருநீறானது, 'கல்பம், அனுகல்பம், உபகல்பம், அகல்பம்' என்று நான்கு வகைப்படும். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

    * கன்றுடன் ஆரோக்கியமாக வாழும் பசுவின் சாணம், கீழே விழும் முன்பாக, தாமரை இலையில் பிடித்து, வேதமந்திரங்கள் ஓதி, முறைப்படி தாயரிக்கப்படுவது 'கல்ப திருநீறு.'

    * பசுமை நிறைந்த புற்களை மட்டுமே மேயும், பசுக்களின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுவது 'அனுகல்ப திருநீறு' ஆகும்.

    * ஒரே இடத்தில் கூட்டமாக இருக்கும் பசுக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் சாணத்தை, அக்னியில் எரித்துக் கிடைப்பதுவே 'உபகல்ப திருநீறு.'

    * வெவ்வேறு இடங்களில் இருக்கும் பல்வேறு பசுக்களிடம் இருந்து கிடைக்கும் சாணத்தைக் கொண்டு தயார் செய்யப்படுவது, 'அகல்ப திருநீறு.'

    • அவதாரங்களில் முக்கியமானது கிருஷ்ண அவதாரம்.
    • துவாபர யுகத்தின் முடிவில், கிருஷ்ணரின் அவதாரமும் முடிவுக்கு வந்தது.

    காக்கும் தெய்வம் என்று அழைக்கப்படுபவர் மகாவிஷ்ணு. இந்த உலகத்தில் எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுபவர்.

    அவரது அவதாரங்களில் முக்கியமானது, கிருஷ்ண அவதாரம். அவர் அவதரித்த நாளையே 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடுகிறோம்.

    வசுதேவர்- தேவகி தம்பதியருக்கு ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவில் சிறைச்சாலைக்குள் பிறந்தவர், கிருஷ்ணர். ஆனால் அவர் வளர்ந்தது கோகுலத்தில் உள்ள நந்தகோபர்- யசோதா தம்பதியரிடம்.

    தன்னுடைய 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது காலங்கள் கழிந்தன.

    இந்த காலகட்டங்களில் கிருஷ்ணர், பல அரக்கர்களை அழித்ததோடு, பல அற்புதங்களை செய்து கோபியர்களையும், கோகுலவாசிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    பிறந்தது முதலே கிருஷ்ணரைக் கொல்ல ஏராளமான அரக்கர்களை அனுப்பிய கம்சனுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியாக அவன், கிருஷ்ணரை மதுராவிற்கு அழைத்து கொன்று விட முடிவு செய்தான்.

    அதன்படி "நான் தனுர்யாகம் செய்யப்போகிறேன். அதற்கு வேண்டிய பொருட்களுடன் நந்தகோபரை குடும்பத்துடன் இங்கு வரச் சொல்லுங்கள்" என்று அமைச்சர் அக்ரூரரிடம் கூறி அனுப்பினான். அவரும் நந்தகோபரிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். இதையடுத்து பலராமரும், கிருஷ்ணரும் மதுராவிற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

    ஆனால் அங்கு மல்யுத்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான், கம்சன். கண்ணனை அழிப்பதற்காக சானூரன், முஷ்டிகன், கூடன், சலன் போன்ற பலம் வாய்ந்த மல்லர்களை தயார் செய்து வைத்திருந்தான். அவர்களுடன், கிருஷ்ணரையும், பலராமரையும் யுத்தம் செய்யும்படி கம்சன் உத்தரவிட்டான்.

    அப்போது கிருஷ்ணருக்கு 10-க்கும் குறைவான வயதுதான். ஆனால் கிருஷ்ணரும், பலராமரும் எந்த தயக்கமும் இன்றி, மாமிச மலைபோல் இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்கள் அனைவரையும் கொன்றனர்.


    இறுதியில் கம்சனையும், கிருஷ்ணர் வதம் செய்தார். பின்னர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்த, பெற்றோரான வசுதேவர்- தேவகி, பாட்டனார் உக்கிரசேனர் ஆகியோரை விடுவித்தார்.

    அதன்பிறகுதான் தங்களின் கல்வியையே கிருஷ்ணரும், பலராமரும் கற்கத் தொடங்கினர். அவர்களின் குருவாக இருந்து கல்வியை கற்பித்தவர், சாந்திபனி முனிவர். இவரிடம் சகலக் கலைகளையும் கற்றுத் தேர்ந்த கிருஷ்ணர், அவருக்கு குரு தட்சணையாக வெகு காலத்திற்கு முன்பு, கடலில் விழுந்த குருவின் மகனை, உயிருடன் மீட்டுக்கொண்டு வந்து கொடுத்தார்.

    துவாபர யுகத்தின் முடிவில், கிருஷ்ணரின் அவதாரமும் முடிவுக்கு வந்தது. இதையெல்லாம் நினைவுகூரும் வகையில்தான் ஆண்டுதோறும், கிருஷ்ணரின் அவதார நாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் குதூகலம் நிறைந்திருக்க வாசல் முழுவதும் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை சின்னச் சின்ன காலடிச் சுவடுகளை வரைவார்கள். மாயக்கண்ணன் இளமையில் செய்த சேட்டைகளை நினைத்தாலே பரமானந்தத்தை தரும்.

    அவற்றில் முக்கியமானது, கோபியர் வீடுகளில் உறியில் கட்டியிருக்கும் பானைகளை உடைத்து வெண்ணெயை எடுத்து தின்றது. இதை நினைவுகூரும் வகையில்தான், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பல இடங்களிலும் உறியடித் திருவிழா நடத்தப்படுகின்றன.

    கிருஷ்ணர் தனக்காக இல்லாமல், உலகத்தின் உயிர்களுக்காக வாழ்ந்தவர். அதனால்தான் அவரை 'கண்ணா', 'முகுந்தா' என்று அழைக்கிறோம். 'கண்ணன்' என்றால் 'கண் போல காப்பவன்' என்று பொருள். 'முகுந்தா' என்றால் 'வாழ்வதற்கு இடம் அளித்து முக்தி அளிப்பவன்' என்று பொருள்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று பகவான் கிருஷ்ணர், நம் அனைவரின் வீட்டிற்கும் வந்து அருள்பாலிப்பார் என்பதே முக்கியமாக அம்சமாக பார்க்கப்படுகிறது. அவரை வரவேற்கும் விதமாகத்தான், அவரது பிஞ்சுப் பாதங்களை வீட்டில் வரைகிறோம்.

    வீட்டில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு அல்லது படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. அதோடு கிருஷ்ணருக்கு பிடித்த 'தஹிகலா'வை படைத்து வழிபட வேண்டும்.

    'தஹிகலா' என்பது பல்வேறு தின்பண்டங்களுடன் தயிரும், பாலும், வெண்ணெயும் ஆகியவற்றை கலந்து செய்வதாகும். தவிர சீடை, முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளையும் கிருஷ்ணருக்கு படைக்க வேண்டும். இவ்வாறு நைவேத்தியம் படைக்க முடியாதவர்கள், தங்களால் முடிந்ததை செய்யலாம்.

    ஏனெனில் "ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம், கொஞ்சம் தண்ணீர், அதோடு தூய்மையான பக்தியையும் சேர்த்து அளித்தால், நான் அவர்களுக்கு தேவையானதைச் செய்வேன்" என்று கீதையில் கண்ணன் சொல்லியிருக்கிறார்.


    கிருஷ்ணனின், மனைவியும்.. பிள்ளைகளும்..

    கண்ணனைப் பற்றி பேசும் போதெல்லாம், அவர் மீது அன்பு கொண்ட, அவரால் அன்பு செய்யப்பட்ட மூன்று பெண்கள் நினைவுக்கு வருவார்கள். அவர்கள்தான், ராதை, ருக்மணி, சத்யபாமா. கண்ணனுக்கு ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரவிந்தா, நாக்னஜிதி, பத்திரா, லக்குமனை என்று 8 பட்டத்து ராணிகள் உண்டு.

    இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 குழந்தைகள் பிறந்தன. கிருஷ்ணரின் பிள்ளைகளில் பிரத்யும்னன், அனுருத்தன், தீப்திமான், பானு சாம்பன், மது, பருஹத்பானு, சித்ரபானு, விருகன், அருணன், புஷ்கரன், வேதபாசு, ஸ்ருததேவன், சுருந்தனன், சித்திரபாகு, விருபன், கவிநியோக்தன் ஆகியோர் புகழ்பெற்றவர்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிருஷ்ணர் பாதத்துக்கு பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
    • மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுபவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணர் பாதத்துக்கு பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

    மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும். பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும்.

    சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும். வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், சிராவண மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் நடுஇரவில், ரோகிணி நட்சத்திரத்தில் விருஷப ராசியில் பிறந்தார். கோகுலாஷ்டமி திதியில், கிருஷ்ண தத்துவம் இப்பூவுலகில் 1000 மடங்கு அதிகம் ஆகியுள்ளது.

    மீதி நாட்களைக் காட்டிலும் அன்றைக்கு கிருஷ்ண தத்துவம் அதிக செயலாற்றலைக் கொண்டிருப்பதால் 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என நாமஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனைக் கொடுக்கும்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-7 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: சதுர்த்தி பிற்பகல் 3.48 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 1.35 மணி வரை. பிறகு அசுவினி.

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருமாலிஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் கோவிலில் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தேர்ச்சி

    ரிஷபம்-பயணம்

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-ஆர்வம்

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-பாசம்

    துலாம்- வாழ்வு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- வெற்றி

    மகரம்-உழைப்பு

    கும்பம்-பெருமை

    மீனம்-இன்பம்

    • மலையைச் சுற்றி வரும்போது சஞ்சீவி மலை இருக்கும் இடம் ஒன்று வருகின்றது.
    • அவ்விடத்தில் வேப்ப மரங்கள் மிகுதியாக உள்ளன. கலுங்கல்மேடைகளும், ஒரு கிணறும் உள்ளன.

    மாணிக்கவாசக சுவாமிகளும் இங்கிருந்தே இறைவனை கண்டு திருப்பாடல் பாடியுள்ளார்.

    இறைவனும் அவருக்கு குருவடிவாக எழுந்தருளில் காட்சியளித்துள்ளார். இதனை மணிவாசகரே

    "கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து

    காட்டினாய்க் கழுக்குன்றிலே"

    எனக் குறிப்பிட்டு உணர்த்துகின்றார்.

    இத்தலத்து மலையை கிரிவலமாக சுற்றி வரும்போது சுற்று முடிவதற்குள் சிறிது தூரத்தில் மூவர்பேட்டை அமைந்துள்ளது.

    மலையைச் சுற்றி வரும்போது சஞ்சீவி மலை இருக்கும் இடம் ஒன்று வருகின்றது.

    அவ்விடத்தில் வேப்ப மரங்கள் மிகுதியாக உள்ளன. கலுங்கல்மேடைகளும், ஒரு கிணறும் உள்ளன.

    இம்மலையைச் சுற்றி வருகின்றவர்கள், சிறிது நேரம் இங்கு உட்கார்ந்து வேப்பங்காற்றையும், துய்த்து, இம்மலையடிவாரத்தில் உள்ள செம்மண்ணை எடுத்து நெற்றியிலும், உச்சியிலும் பூசிக் கொள்வார்கள்.

    இவ்வாறு பயன்படுத்தப்படும் மண், மலை மருந்து என்றும், இதனை அவ்வாறு பயன்படுத்துவதால் நோய் நீங்கும் என்றும் கூறுவார்கள். கிணற்றுநீர் சஞ்சீவி மலையின் ஊற்றுநீர் என்று அதனையும் பருகி இன்புறுவார்கள்.

    இச்சஞ்சீவி மலை பகுதியை கடந்து செல்லும்போது மாணிக்கவாசகருக்கு இறைவன் திருவடிதரிசனம் தந்த திருவடிகளை காணலாம். அவற்றை கடந்ததும் சிறுகுன்றின் மேல் திருமலை சொக்கம்மாள் கோவிலை கண்டு வணங்கலாம்.

    • இத்தலத்து மலையில் எழுந்தருளியிருக்கும் வேதகிரீசுவரர் மீது 12 ஆண்டுக்கு ஒருமுறை இயற்கை இடிவிழும்.
    • லிங்கத்தின் மீது விழுந்தும், லிங்கத்திற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுவதில்லை.

    பிரம்மனும், விஷ்ணுவும் இத்தலத்தில் இறைவனை பூஜைகள் செய்து வழிபட்டதற்கு சான்றாகவே இத்தலத்து கோவில் கருவறையில் பிரம்மன், விஷ்ணு முதலியோர் திருவுருவங்களும் காட்சி தருகின்றன.

    இத்தலத்து மலையில் எழுந்தருளியிருக்கும் வேதகிரீசுவரர் மீது 12 ஆண்டுக்கு ஒருமுறை இயற்கை இடிவிழும்.

    லிங்கத்தின் மீது விழுந்தும், லிங்கத்திற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுவதில்லை. இதனை 'இடிமுழக்கு' என்று சொல்கிறார்கள். அதாவது இந்திரன் பூசை செய்வதாக ஐதீகம்.

    வேதங்களே இத்தலத்தில் மலைவடிவமாக விளங்குவதால் நாயன்மார்கள் மூவரும் மலை மீது ஏறி செல்லவில்லை. மலையடி வாரத்திலிருந்தே இறைவனைப் போற்றி பதிகங்கள் பாடிச் சென்றுள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் நின்று பதிகம் பாடிய இடம் இப்போது 'மூவர்பேட்டை' என்று வழங்கப்படுகின்றது.

    இங்கு மூவர் திருவுருவங்களும் அமைந்த திருக்கோவில் உள்ளது.

    • வேதங்கள் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வழிபட்டதனாலேயே இத்தலத்து இறைவனுக்கு வேதகிரீசுவரர் என்னும் திருப்பெயரும் உண்டு.
    • இத்தலத்து மலைக்கு வேதகிரி என்னும் திருப்பெயரும் உண்டு.

    இத்தலத்தில் காலந்தோறும் இறைவனைப் பூசித்துப் பேறு பெற்ற கழுகுகள் விபரம் வருமாறு:

    கிரேதாயுகத்தில் &சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகள்.

    திரேதாயுகத்தில் &சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகள்

    துவாபரயுகத்தில் &சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகள்

    கலியுகத்தில் &சம்பு, ஆதி என்னும் கழுகுகள்.

    இந்த 2 கழுகுகளும் பூசித்துப் பேறுபெற இத்தலத்து மலையை வணங்கிக் கொண்டு வருகின்றன.

    கழுகுகள் மட்டுமின்றி இத்தலத்தில் நந்திதேவர், அட்டவசுக்கள், பசு, இந்திரன், வராகன், வேதங்கள், விஷ்ணு, பிரமன், முருகன், சந்திரன், கோடிருத்திரர் ஆகியோரும் இறைவனைப் பூசித்து வழிபட்டு பேறுகள் பெற்றுள்ளனர்.

    கோடிருத்திரர் இத்தலத்தில் இறைவனை பூசித்ததற்கு சான்றாக, இத்தலத்து சங்கு தீர்த்தக்கரைக்கு தென்கிழக்கில் சிறிது தூரத்தில் ருத்திரகோடீசுவரர் திருக்கோவில் அமைந்திருப்பதை காணலாம்.

    வேதங்கள் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வழிபட்டதனாலேயே இத்தலத்து இறைவனுக்கு வேதகிரீசுவரர் என்னும் திருப்பெயரும் உண்டு.

    இத்தலத்து மலைக்கு வேதகிரி என்னும் திருப்பெயரும் உண்டு.

    இத்தலத்து மலையே வேத வடிவமானது. இம்மலை ரிக், யசுர், சாம, அதர்வணம் போல நான்கு குன்றுகள் இணைந்திருப்பதே இதற்கு சான்று.

    • சிவபெருமான் திருக்கழுக்குன்றம் மலையில் வீற்றிருந்த போதுதான் பார்வதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார்
    • எனவே இத்தலம் திருமண வரம் அருளும் தலமாக திகழ்கிறது.

    ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகர சரசுவதி சங்கராச்சாரிய சுவாமிகள் தம் 37-வது ஆண்டு ஆரம்பத்தில் 25-12-1930 பிரமோதூத வருடம் மார்கழி மாதம் 10-ம் நாள் வியாழக்கிழமை மாலை யானை, குதிரை பரிவாரங்களுடன், அடிவாரத்தில் வந்து தங்கி 10 நாட்கள் இருந்தார் 2-1-1931 வெள்ளிக்கிழமை பட்டணப் பிரவேசம் செய்தார். (நகர்வலம் வந்தார்) 4-1-1931 மாலை புறப்பட்டுச் சென்றார்.

    இரண்டாவது முறையாக இரண்டாண்டு கழித்து ஆங்கிரஸ வருடம் மாசி மாதம் வந்து மேலவீதியில் நான்கு நாட்கள் தங்கினார்.

    மூன்றாம் முறையாக சுமார் 12 ஆண்டு கழித்து வந்து சங்குதீர்த்த வடக்கு கரையில் பசுமடத்தில் தங்கி காலை, மாலை இருவேளையும் சங்குதீர்த்தத்தில் மூழ்கி, இறைவனை வழிபட்டார்.

    இத்தலத்தில் திருவாவடுதுறை ஆதீனமடம், குன்றக்குடி ஆதீனமடம் முதலியன உள்ளன.

    சிவபெருமான் திருக்கழுக்குன்றம் மலையில் வீற்றிருந்த போதுதான் பார்வதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார் என்று புராண வரலாற்று குறிப்புகள் உள்ளன.

    எனவே இத்தலம் திருமண வரம் அருளும் தலமாக திகழ்கிறது.

    • இத்தலம் வேதகிரி, வேதாசலம், கங்காசலம், கழுக்குன்றம் எனும் பெயர்களுடன் பட்சிதீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது.
    • இறைவன் மலையின் உச்சியில் கொழுந்து உருவில் இருப்பதால் இறைவனுக்கு மலைக்கொழுந்து என்றும் பெயருண்டு.

    1. திருக்கழுக்குன்றத்தில் நான்கு வேதங்கள் மலையாகவும், அதன் உச்சியில் சிவபெருமான் சுடர் கொழுந்தாய் - சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார். (சுயம்புமூர்த்தியின் மீது சிவலிங்கத் திருமேனியை பொருத்தியிருக்கிறார்கள் அபிஷேகம் முதலியன செய்ய).

    2. இத்தலம் வேதகிரி, வேதாசலம், கங்காசலம், கழுக்குன்றம் எனும் பெயர்களுடன் பட்சிதீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது.

    3. இறைவன் மலையின் உச்சியில் கொழுந்து உருவில் இருப்பதால் இறைவனுக்கு மலைக்கொழுந்து என்றும் பெயருண்டு.

    4. மாமல்லையை ஆண்ட சுரகுரு சக்கரவர்த்தியால் புதுப்பிக்கப்பெற்ற ஆலயம் தாழக்கோவில் என்று வழங்குகிறது. தாழ்வரைக் கோவில் என்பது தாழக்கோவில் என மருவிவந்த பெயராகும்.

    5. ருத்திரகோடியர் பூஜித்த கோவில் மலையின் தென்கிழக்கு மூலையில் உருத்திரர் கோவில் எனும் பெயருடன் இருக்கிறது.

    6. பலவகைப்பட்ட அசுரர்களை கொன்ற பாவம் நீங்க உருத்திரகோடியரும், பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற பாவம் நீங்க நாராயணரும், சாவித்திரியினால் சபிக்கப்பட்ட பாவம் நீங்க பிரம்மதேவரும் இறைவன் சொல்லை மறுத்த பாவம் நீங்க நந்திதேவரும் மற்றும் எண் வசுக்களும் பிற தேவர்களும் முனிவர்களும் இத்தலத்தை வழிபட்டார்கள்.

    7. திருஞானசம்பந்தர் மலையை வலம் வந்து தமிழ்மாலை பாடிய தலம். அவர் இறைவன் காதலித் துறையும் இடம் கழுக்குன்றே என்று சிறப்பிக்கின்றார்.

    8. திருநாவுக்கரசர் "கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன்" என்றும் 'கழுக்குன்றத் துச்சியாய் கடவுளே' என்றும் போற்றியுள்ளார்.

    9. சுந்தரருக்குக் கண்ணொளியும், பொன்னும் அளித்த தலம்.

    10. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் தாம் வழிபட்ட இறைவனது திருவடிகளை, இங்கு வைத்துக் கோவில் கட்டி வழிபட்டார்.

    11. இத்தலத்தில் முதல் யுகத்தில் சண்டன், பிரசண்டன் என்ற இரு கழுகுகளும், இரண்டாவது யுகத்தில் சம்பாதி, சடாயு எனும் இரு கழுகு அரசர்களும் மூன்றாவது யுகத்தில் சம்புகுந்தன், மாகுந்தன் எனும் இருவரும் சாபம் பெற்று கழுகுகளாய் பிறந்து முக்தி பெற்றனர்.

    12. இக்கலியுகத்தில் பூஷா, விருத்தா என்கிற இரு முனிவர்கள் சாரூபப் பதவி வேண்டி தவம் செய்தனர். இறைவன் தோன்றி வரம் தரும்போது மறுத்து சாயுச்சியப் பதவி வேண்டினர். இறைவன் 'இப்பதவியில் சில காலம் இருங்கள். பிறகு சாயுச்சியம் தருகிறோம்' என்றதையும் ஏற்காது மறுத்ததால் 'கழுகுருவம் அடைக' என்ற சாபம் பெற்று கழுகுகளாய் பிறந்து சம்பு, ஆதியெனும் பெயருடன் மலைக்கோவிலை வலம் வந்து தாங்கள் உண்டாக்கிய பட்சி தீர்த்தம் அருகில் உள்ள பாறையில் நாள்தோறும் அமுதுண்டு இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

    13. நந்திதேவர் கயிலையில் இருந்து எடுத்து வந்த சிகரத்தில் ஒன்றை இம்மலையில் வைத்ததால் இது தென்கயிலாயம் என்று புகழப்படுகிறது.

    14. இத்தலத்திற்கு சிவபுரி என்றும் பெயர் உண்டு. இப்பெயர் ஆவணங்களில் இருக்கிறது.

    15. இத்தலவிருட்சம், வாழை-கதலி எனவே இத்தலத்தை கதலிவனம் என்றும் அழைக்கிறார்கள்.

    16. இந்திரன் வழிபட்டதற்கு அடையாளமாக இங்கு மலைமீது இடிவிழுந்து சிவலிங்கத் திருமேனியினைத் திருமஞ்சனம் செய்கிறது. இது குறித்து பல நூல்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்தது இத்தலம்.

    17. மறைமலையடிகளார் எனும் சாமி வேதாசலம் அவர்களை, அவர்கள் தாய், தந்தையர் இப்பதியில் சங்குதீர்த்தத்தில் நீராடி மலைவலம் வந்து திரிபுரசுந்தரியையும், வேதகிரிப் பெருமானையும் வழிபட்டு பெற்றெடுத்தனர். மறைமலையடிகளாருக்கு இத்தலத்தின் மீது ஈடுபாடு அதிகம்.

    18. தமிழ் தாத்தா ஸ்ரீஉ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் இங்குள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு வந்து தங்குவார்.அவர் 1942 முதலில் தம் வாழ்நாள் இறுதியுணர்ந்து, இங்கு வந்து தங்கி, 28-4-1942ல் திருவாவடுதுறை மடத்தில் உள்ள நடைத்திண்ணையில் பூதவுடல் நீத்து இறைவனடி சேர்ந்தார்.

    19. ஸ்ரீவரகவி கன்னியப்ப முதலியார் திரிபுரசுந்தரி அம்மன் மீது இரட்டை மணிமாலை பாடி இருக்கிறார்.

    20. இத்தலத்தில் மலைமீது தவமே உருவாய ஸ்ரீசுப்பய்ய சுவாமிகள் தவமியற்றி இறைவனடி சேர்ந்தார். அவர் சமாதி மலை வலப்பாதையில் அழகுற இருக்கிறது.

    • திருவண்ணாமலைக்கு முன்பே இத்தலத்தில்தான் கிரிவலம் தொடங்கியதாக குறிப்புகள் உள்ளன.
    • திருக்கழுக்குன்றம் மலை சுற்றளவு 3 கிலோமீட்டர் நீளமாகும். இதை சுமார் 1 மணி நேரத்தில் வலம் வந்து விடலாம்.

    திருக்கழுக்குன்றம் தலத்தில் கிரிவலம் செல்வது புக்தி தரும் சிறப்பு பெற்றது.

    திருவண்ணாமலைக்கு முன்பே இத்தலத்தில்தான் கிரிவலம் தொடங்கியதாக குறிப்புகள் உள்ளன.

    திருக்கழுக்குன்றம் மலை சுற்றளவு 3 கிலோமீட்டர் நீளமாகும். இதை சுமார் 1 மணி நேரத்தில் வலம் வந்து விடலாம்.

    எனவே திருவண்ணாமலை கிரிவலத்துடன் ஒப்பிடுகையில் திருக்கழுக்குன்றத்தில் செய்யப்படும் கிரிவலம் மிக எளிதானதாக கருதப்படுகிறது.

    குறிப்பாக சென்னையில் இருந்து செல்பவர்களுக்கு திருக்கழுக்குன்றம் கிரிவலம் மிகவும் திருப்தி தருவதாக உள்ளது.

    ஆனால் திருக்கழுக்குன்றம் மலை சுற்றுப்பாதை கடந்த சில மாதங்களாக குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

    சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்துவிட்டதால் நடப்பதற்கு உகர்ந்ததாக இல்லாமல் இருந்தது.

    இதனால் கிரிவல பக்தர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது கிரிவலபாதையில் புதிய சாலை அமைத்துள்ளனர்.

    எனவே பக்தர்கள் மிக எளிதாகவும், வசதியாகவும் கிரிவலத்தை செய்து முடிக்கலாம்.

    • திருக்கழுக்குன்றத்தில் சங்குதீர்த்தத்தில் புனித நீராடல் முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு லட்சத்தீபம் ஏற்றும் திருவிழா நடைபெறும்.
    • லட்சத்தீபம் ஏற்றியபிறகு சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

    திருக்கழுக்குன்றத்தில் சங்குதீர்த்தத்தில் புனித நீராடல் முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு லட்சத்தீபம் ஏற்றும் திருவிழா நடைபெறும்.

    திருக்கழுக்குன்றத்து மலைக்கோவில், தாழகோவில் மற்றும் 12 தீர்த்தங்கள், மாடவீதிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் லட்சத்தீபம் ஏற்றப்படும்.

    இதற்காக லட்சத்திற்கும் மேற்பட்ட அகல்விளக்குகளை பல்வேறு உபயதாரர்கள்  கோவிலுக்கு வாங்கி கொடுப்பர்.

    அதுபோல லட்சத்தீபம் ஏற்றுவதற்கு தேவையான எண்ணெயையும் நிறைய உபயதாரர்கள் வாங்கி அன்பளிப்பாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பர்.

    எனவே லட்சத்தீபங்களை ஏற்றுவதற்கு தேவையான அகல்விளக்குகள், திரிகள், எண்ணெ தயார் நிலையில்  இருக்கும்.

    பக்தர்களுக்கு அவை வழங்கப்படும். தேவையான அளவிற்கு அகல்விளக்குகளை வாங்கி பக்தர்கள் தங்கள் கைப்பட தீபம் ஏற்றலாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இந்த வாய்ப்பு கிடைக்கும்.

    லட்சத்தீபம் ஏற்றியபிறகு சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அதன்பிறகு வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளும் வீதி உலா வருவார்கள்.

    அதை தரிசித்துவிட்டு வீடு திரும்பினால் அளவற்ற பலன்கள் கிடைக்கும்.

    • 10-ம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் அம்மன் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிய ருளினார்.

    நிறைவு நாளான 10-ம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    காலை 5.35 மணிக்கு அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 6.35 மணிக்கு நிலைக்கு வந்தது.

    நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், கண்காணிப்பாளர் அஜித், தலைமை கணக்கர் அம்பலவாணன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், பணியாளர்கள் ஆவுடையப்பன், செல்வகுத்தாலம், முருகேசன், கார்த்திகேயன், பால்ராஜ், மாரிமுத்து, ஜெகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

    ×