என் மலர்
மேற்கிந்தியத் தீவு
- முதலில் விளையாடிய இந்தியா 188 ரன்கள் குவித்தது.
- இந்தியா தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
அவர்களுக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றனர். ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தினார். துவக்க வீரர் இஷான் கிஷன் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் - தீபக் ஹூடா அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.
அணியின் ஸ்கோர் 114 ஆக இருக்கும்போது இந்த ஜோடியை வால்ஷ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் தீபக் ஹூடா ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38 ரன்கள் விளாசினார். இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 64 ரன்கள் விளாசினார்.

அவரது ஸ்கோரில் 8 பவுண்டரி, 2 சிக்சரும் அடங்கும். சஞ்சு சாம்சன் 15 ரன்கள், தினேஷ் கார்த்திக் 12 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள், அக்சர் பட்டேல் 9 ரன்கள், அவேஷ் கான் 1 ரன் (நாட் அவுட்) எடுக்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. எனினும் இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாத அந்த அணி 15.4 ஓவர் முடிவில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹெட்மயர் 56 ரன்கள் அடித்தார்.

ஹோல்டர், கீமோ பால், ஒடியன் ஸ்மித், ஓபேட் மெக்காய் ஆகியோர் டக் அவுட்டானார்கள். இதையடுத்து இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
அக்சர் படேல், குல்தீப் யாதவ், தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றியது.
- அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 40 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-1 என ஏற்கனவே கைப்பற்றி உள்ளது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் இன்று லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றனர். ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தினார்.
துவக்க வீரர் இஷான் கிஷன் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் - தீபக் ஹூடா அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.
அணியின் ஸ்கோர் 114 ஆக இருக்கும்போது இந்த ஜோடியை வால்ஷ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் தீபக் ஹூடா ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38 ரன்கள் விளாசினார். இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 64 ரன்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரி, 2 சிக்சரும் அடங்கும்.
சஞ்சு சாம்சன் 15 ரன்கள், தினேஷ் கார்த்திக் 12 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள், அக்சர் பட்டேல் 9 ரன்கள், அவேஷ் கான் 1 ரன் (நாட் அவுட்) எடுக்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-1 என ஏற்கனவே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
லாடர்ஹில்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி லாடர்ஹில் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் 44 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்னும், சஞ்சு சாம்சன் 30 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவரில் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பூரன் மற்றும் பாவல் ஆகியோர் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்திருந்தபோது சர்வதேச அரங்கில் 16,000 ரன்களைக் கடந்த 7வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.
அவர் டெஸ்டில் 3,137 ரன்னும், ஒருநாள் போட்டியில் 9,376 ரன்னும், டி20 போட்டியில் 3,487 ரன்னும் எடுத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி, வீரேந்திர சேவாக் மற்றும் எம்,எஸ்,டோனி ஆகியோர் 16,000 ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்கள் குவித்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசினார்.
சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பண்ட் 31 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரியுடன் 44 ரன்கள் குவித்தார். தீபக் (21), தினேஷ் கார்த்திக் (6), சஞ்சு சாம்சன் (30 நாட் அவுட்), அக்சர் பட்டேல் 20 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரான்டன் கிங் 13 ரன்னுடன் வெளியேறினார். கெயில் மேயர்ஸ் 14 ரன்னுக்கு அவுட்டானார்.
கேப்டன் பூரன் மற்றும் பாவல் ஆகியோர் தலா 24 ரன்கள் அடித்து அவுட்டாகினர். ஹெட்மயர் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஹோல்டர் 13 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர் முடிவில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை கைப்பற்றியது. இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், அவேஷ்கான், அக்சர் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
- இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்கள் குவித்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி, இன்று லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசினார். சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் தீபக் ஹூடா-ரிஷப் பண்ட் ஜோடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். ரிஷப் பண்ட் 31 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரியுடன் 44 ரன்கள் குவித்தார். தீபக் (21), தினேஷ் கார்த்திக் (6), சஞ்சு சாம்சன் (30 நாட் அவுட்), அக்சர் பட்டேல் 20 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 164 ரன்களை எடுத்துள்ளது.
- அடுத்து ஆடிய இந்தியா 165 ரன்களை எடுத்து வென்றது.
செயிண்ட் கிட்ஸ்:
வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி செயிண்ட் கிட்சின் பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கைல் மேயர்ஸ் அரை சதமடித்தார். அவர் 50 பந்தில் 73 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பாவெல் 23 ரன்னும், ஹெட்மயர் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா 11 ரன் எடுத்திருந்தபோது காயமடைந்து பெவிலியன் திரும்பினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி சிறப்பாக ஆடியது. சூர்யகுமார் அரை சதமடித்தார். அய்யர் 24 ரன்னில் அவுட்டானார். சூர்யகுமார் 44 பந்துகளில் 4 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 76 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்ட்யா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெறச் செய்தார்.
இறுதியில், இந்தியா 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில்
இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 164 ரன்களை எடுத்துள்ளது.
- வெஸ்ட் இண்டீசின் கைல் மேயர்ஸ் 73 ரன்கள் எடுத்தார்.
செயிண்ட் கிட்ஸ்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் டி20 தொடர் 1- 1 என சமனிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி செயிண்ட் கிட்சின் பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவதாக பேட்டிங் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் கிங் 20 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் அதிரடியாக ஆடிய கைல் மேயர்ஸ் அரை சதமடித்தார். அவர் 50 பந்தில் 73 ரன்கள் எடுத்து வெளியேறினார். பாவெல் 23 ரன்னும், ஹெட்மயர் 20 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- முதலில் பேட் செய்த இந்தியா 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
செயிண்ட் கிட்ஸ்:
வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19.4 ஓவரில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்திக் பாண்ட்யா 31 ரன்னும், ஜடேஜா 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 12 பந்தில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஒபெட் மெகாய் 6 விக்கெட்டு, ஹோல்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 139 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 52 பந்தில் 68 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கைல் மேயர்ஸ் 8 ரன்னும், நிகோலஸ் பூரன் 12 ரன்னும், ஹெட்மயர் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தில் டேவன் தாமஸ் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிபெறச் செய்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. டேவன் தாமஸ் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.
- முதலில் ஆடிய இந்தியா 138 ரன்களை எடுத்துள்ளது.
- வெஸ்ட் இண்டீசின் ஒபெட் மெகாய் 6 விக்கெட் வீழ்த்தினார்.
செயிண்ட் கிட்ஸ்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1- 0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி செயிண்ட் கிட்சின் பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணி முதலாவதாக பேட்டிங் தொடங்கியது. முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 11 ரன்னிலும், ஷ்ரேயஸ் அய்யர் 10 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 7 ரன்னிலும், அஸ்வின் 10 ரன்னிலும் அவுட்டாகினர்.
ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 12 பந்தில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 31 ரன்னும், ஜடேஜா 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஒபெட் மெகாய் 6 விக்கெட்டு, ஹோல்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் 139 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய இந்தியா 190 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 122 ரன்களே எடுத்தது.
டிரினிடாட்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் அவுட்டானார்.
முன்னதாக ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கப்திலை பின்னுக்கு தள்ளினார்.
ரோகித் சர்மா இதுவரை 129 டி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,443 ரன்கள் எடுத்துள்ளார். 2-வது, 3-வது இடங்களில் முறையே கப்தில் (3,399 ரன்), விராட் கோலி (3,308 ரன்) ஆகியோர் உள்ளனர்.
- முதலில் ஆடிய இந்தியா 190 ரன்கள் எடுத்தது.
- ரோகித் சர்மா 64 ரன்னும், தினேஷ் கார்த்திக் 41 ரன்னும் எடுத்தனர்.
டிரினிடாட்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் அவுட்டானார்.
சூர்யகுமார் யாதவ் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் அய்யர் டக் அவுட்டானார். ரிஷப் பண்ட் 14 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னிலும், ஜடேஜா 16 ரன்னிலும் அவுட்டாகினர்.
கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி19 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி திணறியது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஷமார் புரூக்ஸ் 20 ரன்னும், நிகோலஸ் பூரன் 18 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் அஷ்வின், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்கிறது.
- இந்தியாவுக்கு எதிரான டி20 அணியில் ஹெட்மயர் இடம் பெற்றுள்ளார்.
டிரினிடாட்:
இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் அணியில் ஹெட்மயர் மீண்டும் இணைகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம்:
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷமார் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மயர், டேவன் தாமஸ், ரோவ்மேன் பாவல், ஒடியன் ஸ்மித், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், கீமோ பால், டொமினிக் டிரேக்ஸ், அல்சாரி ஜோசப், ஒபெட் மெக்காய், அக்கேல் ஹொசைன், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்.






