search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2வது டி20 போட்டி - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 139 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    ரிஷப் பண்ட்

    2வது டி20 போட்டி - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 139 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    • முதலில் ஆடிய இந்தியா 138 ரன்களை எடுத்துள்ளது.
    • வெஸ்ட் இண்டீசின் ஒபெட் மெகாய் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    செயிண்ட் கிட்ஸ்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1- 0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி செயிண்ட் கிட்சின் பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணி முதலாவதாக பேட்டிங் தொடங்கியது. முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 11 ரன்னிலும், ஷ்ரேயஸ் அய்யர் 10 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 7 ரன்னிலும், அஸ்வின் 10 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 12 பந்தில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 31 ரன்னும், ஜடேஜா 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஒபெட் மெகாய் 6 விக்கெட்டு, ஹோல்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் 139 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    Next Story
    ×