என் மலர்
அமெரிக்கா
- சமீபத்தில் மாதத்திற்கான நல்லாசிரியை விருது பெற்றார்
- கேசிக்கு அதிகபட்சமாக 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலம் டென்னிசி. இம்மாநிலத்தின் தென்கிழக்கில் உள்ளது சட்டனூகா.
இங்குள்ள மத்திய உயர்நிலை பள்ளியில் 2020 ஆண்டு முதல் கணித ஆசிரியையாக பணிபுரிந்தவர் 28 வயதான கேசி மெக்ராத்.
மாதாமாதம் அளிக்கப்படும் நல்லாசிரியர் விருதை சமீபத்தில் இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது "மாணவர்கள் மற்றும் மாணவியர்களுடன் பேசி பழகி நல்லுறவை ஏற்படுத்தி அதனை வளர்ப்பது எனக்கு விருப்பமான ஒன்று" என ஒரு நிருபரிடம் கேசி தெரிவித்தார்.
வாலிபால் விளையாட்டிலும் பயிற்சியாளராக ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
இவர் தனது மாணவர்களில் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக சில மாதங்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டார். அவரை காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தினர். மேலும் மார்ச் மாதம் இவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
நீண்ட விசாரணைக்கு பிறகு அவர் மீது ஹாமில்டன் கவுன்டி காவல்துறை வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியது. அதில் கேசி மீது சாட்டப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஆகஸ்ட் 14 அன்று, "18 வயது நிரம்பாத சிறுவன் என தெரிந்திருந்தும் அச்சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட பெருங்குற்றம்" புரிந்ததால் கேசி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
ரூ. 8 லட்சம் பிணையில் வெளியே வந்துள்ள கேசி, மீண்டும் செப்டம்பர் 6 அன்று ஹாமில்டன் கவுன்டி கிரிமினல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
அங்குள்ள சட்டப்படி கேசிக்கு அதிகபட்சமாக 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
- வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கையை ரஷியா, சீனா தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தின.
- கடந்த மாதம் வடகொரிய ராணுவ அணிவகுப்பில் ரஷியா, சீனா அதிகாரிகள் பங்கேற்றுள்ளார்கள்.
நியூயார்க்:
வடகொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.
சமீபத்தில் வடகொரியா 2-வது முறையாக ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
இந்தநிலையில் வடகொரியாவில் ஏவுகணை சோதனைகள் நடைபெறுவதை கண்டித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் விவாதம் கொண்டு வரப்பட்டது.
இதில் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள ரஷியா, சீனா ஆகியோரை தவிர 13 உறுப்பினர்கள் வடகொரிய ராணுவம் உளவு செயற்கை கோளை ஏவுவதற்கு கண்டனம் தெரிவித்தன.
ஆனால் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கையை ரஷியா, சீனா தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தின. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன் பீல்டு கூறும்போது, "வடகொரியா விவகாரம் எங்களை ஒன்றிணைக்கும் ஒரு பிரச்சினையாக இருக்க வேண்டும். ஆனால் 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சீனா, ரஷியாவின் இடையூறுகளால் இந்த கவுன்சில் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. வடகொரியாவின் அணுசக்தி அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கான தங்கள் பொறுப்பை ரஷியாவும், சீனாவும் ஏற்கவில்லை.
கடந்த மாதம் வடகொரிய ராணுவ அணிவகுப்பில் ரஷியா, சீனா அதிகாரிகள் பங்கேற்றுள்ளார்கள். இரு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுகிறார்கள். கவுன்சில் நடவடிக்கைகளை தொடர்ந்து தடுக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மே மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியா மீது புதிய தடைகளை விதிக்கும் தீர்மானத்தை சீனாவும், ரஷியாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
- 2 கத்திக்குத்துகள் கேட்டியின் இதய பகுதியை தாக்கியது
- மெக்நெய்ல் குற்றத்தை ஒப்பு கொண்டாலும் நீதிபதி தயவு காட்ட மறுத்தார்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளது பே டவுன் பகுதி.
இங்குள்ள ஒரு ஓட்டலிற்கு 35 வயதான டான்ட்ரேவியாஸ் ஜமால் மெக்நெய்ல் மற்றும் 47 வயதான கேட்டி ஹவுக் வந்தனர். இவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
ஆனால் இருவருக்குமிடையே ஏதோ சில காரணங்களுக்காக வாக்குவாதம் தொடங்கி அது சண்டையாக மாறியது. இந்த சண்டையின் போது கோபமடைந்த மெக்நெய்ல், கேட்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். அதில் 2 கத்திக்குத்துகள் கேட்டியின் இதய பகுதியை தாக்கியது.
உள்ளே நடைபெறும் சண்டையை அறிந்து கொண்ட ஓட்டல் நிர்வாகிகள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விரைவாக வந்து உள்ளே சென்று பார்த்த போது கேட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அங்கு மெக்நெய்ல் பயன்படுத்திய கத்தி அருகில் இருந்தது. அருகிலேயே மெக்நெய்ல் கடுங்கோபத்தில் நின்றிருந்தார்.
அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கேட்டி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனையில் அவர் உடலில் 27 முறை கத்திக்குத்து ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மெக்நெய்ல் கைது செய்யப்பட்டு ஹாரிஸ் கவுன்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மெக்நெய்ல் மீது ஏற்கெனவே பல்வேறு கிரிமினல் வழக்குகள் இருந்தன. வழக்கு விசாரணையின் போது, கேட்டியை கொன்றதாக ஒப்பு கொண்ட மெக்நெய்ல் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
ஆனால் அவர் மீது தயவு காட்ட மறுத்த நீதிபதி, அவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
ஒரு பொறுப்புள்ள தாயாக வாழ்ந்தவர் மீது எந்தவித சிந்தனையுமின்றி கொடூரமான தாக்குதல் நடத்தி அவரை கொன்றவருக்கு இது சரியான தண்டனை என இந்த தீர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
- இரண்டாம் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற அவரது தாய் முயற்சித்தார்
- டிரான் மீது சுமார் 107 முறை கத்திக்குத்து விழுந்தது
வாஷிங்டன் பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் 21 வயதான ஏஞ்சலினா டிரான்.
இவர் தனது தாயுடனும், தாயின் இரண்டாம் கணவர் கியெப் கெய்ன் சவ் ஆகியோருடன் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பீகான் ஹில் பகுதியில் வசித்து வந்தார். கியெப், கடந்த வருடம் வரை வியட்னாமில் வாழ்ந்து, சென்ற வருடம்தான் அமெரிக்காவிற்கு வந்திருந்தார்.
இவரது தாய்க்கும், மாற்றாந்தந்தைக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கம்.
இரண்டாம் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற அவரது தாய் முயற்சித்தார். இதனால் பொருளிழப்பு ஏற்படும் என அஞ்சிய அவரது இரண்டாவது கணவர் சமீபத்தில், ஒரு நாள் இரவு டிரானின் தாயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றியதில் கியெப், டிரானின் தாயின் முகத்திலும் தலையிலும் சுமார் 15 முறை கைகளாலேயே குத்தினார். அப்போது தனது படுக்கையறையில் உறங்கி கொண்டிருந்த டிரான், சத்தம் கேட்டு எழுந்து வந்து, உடனடியாக தாயாரை காக்க முயன்றார்.
தாயார் தாக்கப்படுவதை தடுக்க கியெப்பின் கைகளை டிரான் பிடித்து கொள்ள, உடனே டிரானின் தாயார் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதையடுத்து கியெப்பின் கோபம் டிரான் மீது திரும்பியது. இதனால் கியெப் ஒரு பெரிய கத்தியை எடுத்து டிரான் நெஞ்சில் சரமாரியாக பல முறை குத்தினார்.
தனது உடை முழுவதும் ரத்த கறை இருந்ததால், இதற்கு பிறகு கியெப் உடைகளை மாற்றி கொண்டார். பிறகு ஒரு கத்தியால் டிரானை மீண்டும் தாக்கினார். டிரான் மீது 107 கத்திக்குத்துகள் விழுந்தன. கத்தி குத்துக்கு ஆளான டிரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே டிரானின் தாய், தான் ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து அமெரிக்காவின் அவசர உதவி எண்ணை அழைத்தார். காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர். கத்தியுடன் நின்றிருந்த கியெப் காவலர்களின் மிரட்டலுக்கு அஞ்சி கத்தியை கீழே போட்டதும் அவரை உடனடியாக கைது செய்தனர். அவர் கிங் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
டிரானின் தாயாரையும் கொல்ல வீடு முழுவதும் அவரை தேடி வந்த கியெப்பின் நோக்கம், காவல்துறையினரின் வருகையால் தடைபட்டு, டிரான் தாயாரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
நன்றாக படிக்க கூடியவரான ஏஞ்சலினா டிரான் ஒரு சமூக பொறுப்புள்ள மாணவி என்றும், பிறருக்கு உதவிகள் செய்யும் நல்லெண்ணம் கொண்டவர் என்றும் கூறும் அவரை அறிந்தவர்கள், அவருக்கு நேர்ந்த கோர முடிவு குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- சம்பவம் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள சுனாபி நகரில் நடைபெற்றுள்ளது.
- ‘டைவ்’ அடித்து குதித்து நீந்தி சென்று தனது முதல் முயற்சியிலேயே அந்த செல்போனை மீட்டு கொண்டு வந்து உரியவரிடம் ஒப்படைத்தார்.
தொலைந்து போன செல்போனை கண்டுபிடிப்பதற்காக வாலிபர் ஒருவர் ஏரியில் குதித்து அதனை மீட்ட வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள சுனாபி நகரில் நடைபெற்றுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஏரியையொட்டி நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக அவரது செல்போன் ஏரிக்குள் விழுந்துள்ளது. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கதறி உள்ளார். இதைப்பார்த்த சைமன் என்ற வாலிபர் உடனடியாக ஏரிக்குள் 'டைவ்' அடித்து குதித்து நீந்தி சென்று தனது முதல் முயற்சியிலேயே அந்த செல்போனை மீட்டு கொண்டு வந்து உரியவரிடம் ஒப்படைத்தார்.
இதை அங்கிருந்தவர்கள் பார்த்து சைமனை பாராட்டிய காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ 5 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதோடு, நெட்டிசன்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
- டிரம்பிற்கு P01135809 எனும் அடையாள எண் கொடுக்கப்பட்டது
- புகைப்படத்துடன் எந்த நிலையிலும் சரணடையாதே என செய்தி வெளியிட்டார்
அமெரிக்காவின் அதிபராக 2017-லிருந்து 2021 வரை பதவி வகித்த குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77), 2020 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன் முறைகேடாக வெற்றி பெற முயற்சிப்பதாக அப்போது குற்றம்சாட்டி வந்தார். அந்த தேர்தல் நடந்து, முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் போது இரு கட்சியை சேர்ந்த பலர் மோதிக்கொண்டதில் வன்முறை வெடித்தது.
அப்போது உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டர் (தற்போதைய எக்ஸ்), டிரம்ப் தெரிவிக்கும் கருத்துக்களால் வன்முறை அதிகரிக்கலாம் என கூறி டிரம்பின் கணக்கை முடக்கியது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, பைடன் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார்.
சிறிது நாட்களில் டிரம்ப் மற்றும் ஜார்ஜியா மாநில அமைச்சர் பிராட் ராஃபன்ஸ்பெர்கர் (Brad Raffensperger) ஆகிய இருவருக்குமிடையே ஜனவரி 2, 2021 அன்று ஒரு தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக ஆடியோ ஒன்று வெளியானது.
அந்த ஆடியோவில் "பைடனை முந்துவதற்கு 11,780 வோட்டுகளை தேட முயலுங்கள்" என டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜார்ஜியா வழக்கு என பெயரிடப்பட்ட இந்த வழக்கில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் பெரும் குற்றச்சாட்டு உட்பட 13 பிரிவுகளில் வழக்கு பதிவாகி, நீண்ட விசாரணைக்கு பிறகு டிரம்ப் குற்றவாளி என ஃபல்டன் கவுன்டி ஜூரியால் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அதிகாரிகளிடம் டொனால்ட் டிரம்ப் சரணடைந்தார்.
அவர் அட்லாண்டா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறைக்கு வரும் கைதிகளுக்கு கடைபிடிக்கப்படும் அனைத்து நடைமுறைகளும் அவருக்கும் கடைபிடிக்கப்பட்டது.
அதன்படி, அவரை காவல்துறையினர் மக் ஷாட் (mug shot) எனப்படும் புகைப்படத்தை எடுத்தனர். அவருக்கு P01135809 எனும் அடையாள எண்ணும் கொடுக்கப்பட்டது.
அங்கு சுமார் 20 நிமிடங்கள் இருந்து பிறகு ஜாமீனில் வெளி வந்தார் டிரம்ப்.
சென்ற வருடம் டுவிட்டர் தளத்தை விலைக்கு வாங்கிய உலகின் நம்பர் 1 கோடீசுவரர் எலான் மஸ்க், டிரம்பின் கணக்கை மீண்டும் அக்டிவ் செய்துள்ளார். ஆனாலும் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தைத்தான் பயன்படுத்தி வருகிறார்.
சிறையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சொந்த வலைதளமான "ட்ரூத்" தளத்தில் "தேர்தல் இடைமறிப்பு; எப்போதும் சரண்டைய கூடாது" என குறுஞ்செய்தியுடன் டிரம்ப் வெளியிட்டார்.
உலகின் முன்னணி நாடான அமெரிக்காவின் அதிபராக பதவியிலிருந்த டிரம்ப், பொதுவாக நற்பெயருக்கு இழுக்காக கருதப்படும் சிறையில் எடுக்கப்படும் மக் ஷாட்களை, தானே வலைதளத்தில் வெளியிட்டுள்ள மன உறுதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இதனை ரசித்த எலான் மஸ்க், அதை மீண்டும் தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டு "அடுத்த லெவல்" என இரண்டே வார்த்தைகளில் கருத்து கூறியிருக்கிறார்.
- குடியரசு கட்சியின் வேட்பாளர்கள் கலந்து கொண்ட ஒரு விவாத நிகழ்ச்சியை ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தியது
- விவாதத்திற்கு பிறகு கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட நபராக விவேக் ராமசாமி இருந்தார்
2024-ல் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தயாராகி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கிராண்ட் ஓல்ட் பார்ட்டி (GOP) என அழைக்கப்படும் குடியரசு கட்சியின் வேட்பாளராக யாரை அறிவிப்பது என அக்கட்சியில் தீவிர பரிசீலனை நடந்து வருகிறது.
டிரம்ப் ஆதரவாளர்களான புளோரிடா கவர்னர் ரான் டிசான்டிஸ், தொழிலதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் ராமசுவாமி, முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வட டகோடா மாநில கவர்னர் டக்ளஸ் பர்கம், செனட்டர் டிம் ஸ்காட் மற்றும் நியூ ஜெர்ஸி கவர்னர் க்ரிஸ் க்ரிஸ்டீ ஆகியோருடன் டிரம்பை எதிர்க்கும் அர்கன்ஸாஸ் மாநில முன்னாள் கவர்னர் அஸா ஹட்சின்ஸன் உட்பட பல வேட்பாளர்கள் குடியரசு கட்சியிலேயே களத்தில் உள்ளனர்.
குடியரசு கட்சியின் வேட்பாளர்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு விவாத நிகழ்ச்சி, ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியால் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாநிலத்தில் உள்ள மில்வாக்கி பகுதியில் நடத்தப்பட்டது.
இதில் அக்கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் நிற்க விரும்பும் 8 வேட்பாளர்கள் பங்கேற்றனர். ஆனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.
இதனை ஒரு பிரசார மேடையாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் நிலைப்பாடுகளை குறித்த கருத்து தெரிவித்தவர்களில் விவேக் ராமசாமியின் சிந்தனைகளும், செயல் திட்டங்களும் பேசுபொருளானது.
இந்த விவாத நிகழ்ச்சிக்கு பின்னர் அங்குள்ள பல ஊடகங்கள் அவரை பாராட்டி வரும் நிலையில், கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட நபராகவும் விவேக் ராமசாமி இருந்தார்.
விவேக்கிற்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை குறிக்கும் விதமாக கட்சிக்கான நிதியளிப்பில் ஏராளமானோர் முன்வந்து நன்கொடையளித்து வருகின்றனர்.
நிகழ்ச்சி முடிந்த சுமார் ஒரு மணி நேரத்திலேயே விவேக் ராமசாமியின் பிரசாரத்திற்கு ஆதரவாக சுமார் ரூ.4 கோடி ரூபாய் ($450000) இதுவரை நன்கொடை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமரானது போல, அமெரிக்காவிலும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அதிபர் ஆனால், வெள்ளையர்களால் ஆளப்பட்ட நாட்டை சேர்ந்தவர்கள் வெள்ளையர்களின் நாட்டை ஆள்கிறார்கள் எனும் சிறப்பு இந்தியாவிற்கு கிடைக்கும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.
- 2020 தேர்தல் முடிவை மாற்றியமைக்க சதி செய்ததாக குற்றச்சாட்டு
- 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையில விடுவிக்கப்பட்டுள்ளார்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். தேர்தல் முடிவை மாற்றியமைக்க சதி செய்ததாக இவர் மீது ஜார்ஜியாக உள்ளிட்ட இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டது.
இதில் ஜார்ஜியா நீதிமன்றத்திலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் டிரம்ப், வழக்கு தொடர்பான விசயங்களால் இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் சரணடைந்து ஜாமீன் பெற்று வருகிறார்.
அந்த வகையில் அமெரிக்க நேரப்படி 24-ந்தேதி இரவு, 7 மணியளவில் ஜார்ஜியா வழக்கு தொடர்பாக அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். பலத்த பாதுகாப்புடன் சிறையில் சரணடைந்த நிலையில், சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர்.
சுமார் 20 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. அதன்பின் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய பின், விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார்.
இந்த வழக்கில் 25-ந்தேதிக்குள் டிரம்ப் சரணடைய வாய்ப்புள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். அதேவேளையில், நான் சரணடையப் போகிறேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுழற்சி வேகம் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகளால் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.
- செவ்வாய் கிரகத்துக்கான இன்சைட் போன்ற புவி இயற்பியல் நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறோம்.
வாஷிங்டன்:
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இன்சைட் லேண்டரை அனுப்பியது. இந்த லேண்டர் கடந்த 2018-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து ஆய்வை தொடங்கியது. எரிசக்தி தீர்ந்ததால் இந்த திட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் இன்சைட் லேண்டர் சேகரித்து அனுப்பிய தரவுகளை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆய்வில் செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது தெரிய வந்தது. இந்த பகுப்பாய்வில் வேகமாக சுழல்வதன் காரணமாக செவ்வாய் கிரகத்தில் ஒரு நாளின் நீளம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லி விநாடி அளவு குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
சுழற்சி வேகம் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகளால் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.
அதே வேளையில் செவ்வாய் கிரகத்தின் நிறை, அதன் மேற்பரப்பில் நடக்கும் நிகழ்வு உள்ளிட்ட கிரகத்தில் மெல்ல மெல்ல ஏற்பட்டு வரும் மாற்றம் ஆகியவை சுழற்சி வேகம் அதிகரிப்பதற்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
பனிக்கட்டிகள் நிறைந்த துருவப்பகுதிகளில் பனிக்கட்டி படிவதாலும், பனிக்கட்டி புதைவால் நிலப்பரப்பு உயர்ந்து வருவதாலும் இது நிகழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இதுதொடர்பாக இன்சைட்டின் முதன்மை ஆய்வாளர் புரூஸ்பெனர்ட் கூறும்போது, மிகவும் துல்லியத்துடன் சமீபத்தில் அளவீட்டை பெறுவது மிகவும் அருமையாக உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கான இன்சைட் போன்ற புவி இயற்பியல் நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறோம். தற்போதைய ஆய்வு முடிவுகள் பல ஆண்டுகளின் உழைப்பை பயனுள்ளதாக்குகின்றன என்றார்.
- டொனால்ட் டிரம்ப் சிறை செல்வார் என பலர் நம்புகின்றனர்
- குற்றவாளி என உறுதியானாலும் அதிபர் வேட்பாளராக ஆதரவளிப்பீர்களா என கேட்கப்பட்டது
அமெரிக்காவின் 45வது அதிபராக 2017லிருந்து 2021 வரை பதவியில் இருந்தவர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவில் அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒரு வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்க்கப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் சிறை தண்டனை பெறுவது உறுதி என நம்பப்படுகிறது.
ஆனால் குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்திருக்கிறார்.
இந்நிலையில் 2024ல் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தயாராகி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கிராண்ட் ஓல்ட் பார்ட்டி (GOP) என அழைக்கப்படும் குடியரசு கட்சியின் வேட்பாளராக யாரை அறிவிப்பது என அக்கட்சியில் தீவிர பரிசீலனை நடந்து வருகிறது.
குடியரசு கட்சியின் வேட்பாளர்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு விவாத நிகழ்ச்சி, ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியால் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாநிலத்தில் உள்ள மில்வாக்கி பகுதியில் நடத்தப்பட்டது.
இதில் அக்கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் நிற்க விரும்பும் 8 வேட்பாளர்கள் பங்கேற்றனர். ஆனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.
8 பேரில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரை பிறர் ஆதரிக்க முழு சம்மதம் தெரிவித்து ஒரு ஒப்புதலை அவர்கள் கையெழுத்திட்டனர்.
அந்நிகழ்ச்சியில் 8 வேட்பாளர்களிடமும் அமெரிக்காவை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள், அவற்றை எதிர் கொள்ள அந்த வேட்பாளர்கள் வைத்திருக்கும் திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
ஒரு முக்கிய கேள்வியாக அவர்களிடம், "டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என உறுதியானாலும் அவரை 2024 தேர்தலில் அதிபர் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க ஆதரவளிப்பீர்களா?" என கேட்கப்பட்டது.
8 பேரில் அர்கன்ஸாஸ் மாநில முன்னாள் கவர்னர் அஸா ஹட்சின்ஸன் தவிர அனைத்து வேட்பாளர்களும் டிரம்பை ஆதரிக்க தயார் என கையை உயர்த்தினர்.
ஃப்ளோரிடா கவர்னர் ரான் டிசான்டிஸ், தொழிலதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் ராமசுவாமி, நிக்கி ஹேலே, முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வட டகோடா மாநில கவர்னர் டக்ளஸ் பர்கம், செனட்டர் டிம் ஸ்காட் மற்றும் நியூ ஜெர்ஸி கவர்னர் க்ரிஸ் க்ரிஸ்டீ ஆகியோர் டிரம்பிற்கு ஆதரவாக தங்கள் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர்.
கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவரையோ, அரசியலமைப்பு சட்டத்தால் அனுமதிக்கப்படாத ஒருவரையோ வேட்பாளராக நிறுத்துவது குடியரசு கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது என்பதை தனது எதிர்ப்புக்கு காரணமாக ஹட்சின்ஸன் தெரிவித்தார்.
அமெரிக்க மக்களிடமும், தனது கட்சியினரிடமும் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் டொனால்ட் டிரம்ப் என இதன் மூலம் உறுதியாகிறது என வலைதளங்களில் இது குறித்து கருத்துக்கள் பதிவாகியுள்ளது.
- தைவான் உடன் நட்பு பாராட்டி வருவதற்கு சீனா தொடர்ந்து கண்டனம்
- கம்ப்யூட்டர் சாப்ட்வேர், உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகளை தைவானுக்கு வழங்குகிறது
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தைவான் தங்களின் ஒரு பகுதி எனக் கூறி வரும் சீனா, அடிக்கடி ராணுவம் மூலம் தைவானை அச்சுறுத்தி வருகிறது. அதேவேளையில் தைவான் அமெரிக்காவுடன் நட்புடன் பழகி வருகிறது.
இந்த நிலையில் தைவானுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய பணமதிப்பில் 4127.07 கோடி ரூபாய்) ஆயுதங்கள் விற்க ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
நவீன எஃப்-16 போர் விமானத்தின் உபகரணங்கள், உதிரிப்பாகங்கள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உள்ளிட்டவை அதில் அடங்கும். சீனா அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் முந்தையதை வட நவீன ஆயுதங்களை உள்ளடக்கியதாகும்.
தைவானின் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் வகையிலும், அந்த நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமெரிக்கா இந்த ஆயுதங்களை விற்பனை செய்கிறது. சீனாவிற்கு தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு இது உதவியாக இருக்கும்.
சீனாவின் வான் தாக்குதல், பிராந்தியத்தை பாதுகாத்தல், எஃப்-16 புரோகிராம் தொடர்பாக அமெரிக்காவுடன் இயங்கும் தன்மை அதிகரித்தல் போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்.
- இத்திட்டத்தில் உங்களின் கூட்டாளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
வாஷிங்டன்:
சந்திரயான்-3 திட்ட வெற்றி குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' பாராட்டு தெரிவித்துள்ளது. 'நாசா' தலைவர் பில் நெல்சன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமையை பெற்ற இந்தியாவுக்கும் வாழ்த்துகள். இத்திட்டத்தில் உங்களின் கூட்டாளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






