என் மலர்tooltip icon

    இத்தாலி

    • "இத்தாலிய என்சைக்ளோபீடியா" 2023 வருடத்திற்கான சொல் என ஃபெமிசைட்-ஐ பட்டியலிட்டது
    • கொலை வழக்குகளில் இத்தாலிய நீதிமன்றங்கள் ஆண்களுக்கு குறைவான தண்டனையையே வழங்குகின்றன

    2023ல் இத்தாலி நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் கணவர், ஆண் நண்பர், அல்லது தங்களை நன்கு அறிந்து பழகி வரும் அல்லது பழகி பிரிந்த ஆண் ஆகியோரால் கொல்லப்பட்டுள்ளனர்.

    இத்தகைய கொலைகளுக்கு "ஃபெமிசைட்" (femicide) என பெயரிடப்பட்டுள்ளது.

    "இத்தாலிய என்சைக்ளோபீடியா" (Italian encyclopedia) 2023 வருடத்திற்கான சொல் என ஃபெமிசைட்-ஐ பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது.

    இத்தாலியின் பிரதமர் "ஜியோர்ஜியா மெலனி" (Giorgia Meloni) ஒரு பெண் எனும் நிலையில், ஃபெமிசைட் குற்றங்களை அவர் கண்டும் காணாமல் இருக்கிறாரா என பெண்ணுரிமைவாதிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


    இத்தகைய பல கொலை வழக்குகளில் இத்தாலிய நீதிமன்றங்களும் ஆண்களுக்கு குறைவான தண்டனையையே வழங்குகிறது.

    பாலின சமத்துவத்தில் ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி மிகவும் பின் தங்கியுள்ளது. குறிப்பாக, ஆணுக்கு சமமான ஊதியம் வழங்கப்படாததால், அந்நாட்டில் பெண்கள் ஆண்களை சார்ந்திருக்கும் நிலையில் உள்ளனர்.

    ஐரோப்பாவில், 70களில் நடைபெற்ற பெண்ணுரிமை இயக்க போராட்டங்களில் முன்னிலை வகித்த நாடு இத்தாலி.

    ஆனால், அதற்கு பிந்தைய தசாப்தங்களில் அங்கு எவ்வாறு பெண்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியது என சமூக அறிவியல் நிபுணர்கள் வியப்புடன் கேள்வி எழுப்புகின்றனர்.

    தற்போதைய பிரதமரான ஜியோர்ஜியா மெலனி பெண்ணுரிமை அமைப்புகளின் சித்தாந்தங்களில் இருந்து விலகி இருப்பதை இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் கூறுகின்றனர்.

    ரோமானிய நாகரீக காலகட்டத்தில் இருந்தே பல நூற்றாண்டுகளாக பெண்கள் மீது ஆண்கள் தாக்குதல் நடத்துவது இத்தாலி சமூகத்தில் நடைமுறை வாழ்க்கையில் குற்றமாக கருதப்படாத நிலை அங்கு நிலவுவது இதற்கு மற்றொரு காரணம்.

    • பெண் 12 முறை கருச்சிதைவு அடைந்ததாகவும், பிரசவத்தின் மூலம் 5 குழந்தைகள் இருப்பதாகவும் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • மோசடிக்கு கூட்டாளி ஒருவரும் உதவி செய்துள்ளார்.

    இத்தாலியை சேர்ந்த பார்பரா ஐயோலே என்ற 50 வயதான பெண் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்ப நாடகமாடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல், இணையத்தில் பேசு பொருளாகி வருகிறது.

    பார்பரா மாநில அரசு வழங்கிய மகப்பேறு உதவித்தொகைகளை பெறுவதற்காகவும், வேலையில் இருந்து ஓய்வு பெறுவதற்காகவும் இதுபோன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்காக அவர் போலி மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். அவர் 12 முறை கருச்சிதைவு அடைந்ததாகவும், பிரசவத்தின் மூலம் 5 குழந்தைகள் இருப்பதாகவும் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது இந்த மோசடிக்கு கூட்டாளி ஒருவரும் உதவி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • விட்டோரியோ இமானுவேல் தெற்கு நகரமான நேபிள்ஸில் பிறந்தார்.
    • விட்டோரியோ இமானுவேல் சுவிட்சர்லாந்தில் இன்று மறைந்தார்.

    இத்தாலியின் கடைசி மன்னரின் மகனும், சவோயின் இளவரசர் விட்டோரியோ இமானுவேல் சுவிட்சர்லாந்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

    இதுதொடர்பாக, சவோய் அரச குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் "இளவரசர் விட்டோரியோ இமானுவேல் தனது குடும்பத்தினரால் சூழப்பட்ட ஜெனீவாவில் காலமானார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    1937ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி தெற்கு நகரமான நேபிள்ஸில் பிறந்த விட்டோரியோ இமானுவேல், 1861 முதல் 1945 வரை ஒருங்கிணைந்த இத்தாலியில் ஆட்சி செய்த அரச குடும்பத்தின் தலைவராக ஆனார்.

    அவர் 1946ல் அரியணையை ஆக்கிரமித்த, நாட்டின் கடைசி மன்னரான இரண்டாம் உம்பர்டோவின் மகன் ஆவார்.

    • "தி கேப்சர் ஆஃப் செயின்ட் பீட்டர்", ஓவியர் ருடிலியோ மானெட்டி என்பவரால் வரையப்பட்டது
    • கண்காட்சியில் இருந்த ஓவியத்தில் இடது மேற்புறத்தில் ஒரு மெழுகுவர்த்தி காணப்பட்டது

    ஐரோப்பாவில் உள்ள பண்டைய நாடு, இத்தாலி. ரோமானிய கலாச்சாரத்தை பறைசாற்றும் அந்நாட்டில் பழங்கால ஓவியங்களுக்கும் ஓவியர்களுக்கும் இன்றளவும் ஆர்வலர்கள் அதிகம்.

    அந்நாட்டின் 605 இடங்களை கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும், கலாச்சார அமைச்சருமான 71 வயதான விட்டோரியொ ஸ்கார்பி (Vittorio Sgarbi) பழமையான கலைப்பொருட்கள் மற்றும் அரிய ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்.

    2013ல், இத்தாலியின் வடக்கு பீட்மான்ட் பகுதியில் உள்ள ஒருவருக்கு சொந்தமான கோட்டையில் பல ஆண்டுகளாக இருந்த 17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ருடிலியோ மானெட்டி (Rutilio Manetti) எனும் ஓவியர் வரைந்த "தி கேப்ச்சர் ஆஃப் செயின்ட் பீட்டர்" (The Capture of Saint Peter) எனும் ஓவியம் திருடு போனது.

    2021ல் அமைச்சர் ஸ்கார்பி ஏற்பாடு செய்திருந்த ஒரு கண்காட்சியில் இந்த ஓவியம் மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    2013ல் காணாமல் போன ஓவியம் போலவே இது இருந்தாலும், இந்த ஓவியத்தின் இடது மேற்புறத்தில் ஒரு மெழுகுவர்த்தி தென்பட்டது.


    சுமார் 20 வருடங்களுக்கு முன் தனது தாயார் வாங்கிய ஒரு பழமையான வில்லாவில் இதை கண்டெடுத்ததாகவும், இதுதான் ருடிலியோ மானெட்டியின் "அசல்" ஓவியம் என்றும் 2013ல் களவு போனது "நகல்" என்றும் ஸ்கார்பி கூறி வந்தார்.

    ஆனால், 2013ல் களவு போன ஓவியத்தில் கைதேர்ந்த ஓவிய நிபுணர்களை கொண்டு ஸ்கார்பி சில மாற்றங்கள் செய்து புதியதாக காட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையடுத்து காணாமல் போன ஓவியத்தை தேடவும், ஸ்கார்பியின் ஓவியம் உண்மையா அல்லது 2013ல் களவு போன ஓவியமா என கண்டறியவும் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    இதை தொடர்ந்து எழுந்த விமர்சனங்களின் விளைவாக அமைச்சர் விட்டோரியோ ஸ்கார்பி, தற்போது தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    "நான் எந்த குற்றமும் செய்யவில்லை. விசாரணைக்கு எனது பதவி இடையூறாக இருக்க கூடும் என்பதால், நான் பதவி விலகுகிறேன். இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலனிக்கு தகவல் தெரிவித்து விட்டேன்" என அமைச்சர் ஸ்கார்பி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேரரசர் கான்ஸ்டன்டைன், கான்ஸ்டான்டினோபில் எனும் புதிய நகரை நிர்மாணித்தார்
    • ரோம் நகரிலிருந்து 160 கி.மீ. தொலைவில் ஸ்பெல்லோ நகரில் இத்தலம் உள்ளது

    280 (கி.பி.) நூற்றாண்டிலிருந்து 337 (கி.பி.) நூற்றாண்டு வரை ரோமானிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்டவர், பேரரசர் கான்ஸ்டன்டைன் (Emperor Constantine).

    கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய முதல் ரோமானிய பேரரசரான இவர், ரோமானிய தலைநகரை கான்ஸ்டான்டினோபில் (Constantinople) எனும் புதிய நகரை நிர்மாணித்து அங்கு மாற்றியமைத்தார்.

    தாங்கள் கடைபிடிக்கும் ஒரு திருவிழாவை வெகு தூரம் சென்று கொண்டாட வேண்டியுள்ளதால், அதனை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே கொண்டாட அனுமதிக்கும்படி பேரரசர் கான்ஸ்டன்டைனிடம் மக்கள் கடிதம் எழுதி கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு பதிலளித்த பேரரசர், அவரது மூதாதயரை நினைவு கூரும் விதமாக அவர்களுக்கு ஒரு வழிபாட்டு தலத்தை அமைத்து தரும்படி மக்களை கேட்டுள்ளார்.

    இந்த பதில் கடிதம் "ரீ ஸ்கிரிப்ட்" (rescript) எனும் பெயரில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.


    அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாநில செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தை (Saint Louis University) சேர்ந்த வரலாற்று பேராசிரியர் டக்ளஸ் பாய்ன் (Prof. Douglas Boin) தலைமையில் ஒரு குழுவினர் இத்தாலியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர்.

    ரீ ஸ்கிரிப்டை தீவிரமாக ஆய்வு செய்த பேரா. பாய்ன், ஒரு நீண்ட ஆராய்ச்சியை முன்னெடுத்தார்.

    அதன் விளைவாக கான்ஸ்டன்டைன் நகர மக்கள், பேரரசரின் மூதாதையருக்கு அமைத்து கொடுத்த வழிபாட்டு தலம், தற்போது, ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    இத்தாலி தலைநகர் ரோம் நகரிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில், ஒரு சிறு மலையில் உள்ள ஸ்பெல்லோ எனும் நகரில், ஒரு வாகன நிறுத்த இடத்திற்கு கீழே, பேரா. பாய்ன் குழுவினர் நடத்திய ஆராய்ச்சியில் 1600 வருடத்திற்கும் முற்பட்ட இந்த பழமையான வழிபாட்டு தலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

    பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பண்டைய நாகரீகத்தை காட்டும் வகையில் இத்தாலியில் உள்ள பல புராதன சின்னங்களின் வரிசையில் இந்த ஸ்பெல்லோ வழிபாட்டு தலமும் இடம் பெறும் என பேரா. பாய்ன் தெரிவித்தார்.

    தற்போது 3 சுற்றுச்சுவர்களை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சி குழுவினர், மீண்டும் கோடை கால விடுமுறை முடிந்ததும் முழுவதுமாக ஆராய்ச்சியை தொடர உள்ளனர்.

    • குடும்ப உறவினரை சமன் திருமணம் செய்து கொள்ள மறுத்தார்
    • சமன், தன் ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்

    இத்தாலி (Italy) நாட்டில் பொலோக்னா (Bologna) நகருக்கு அருகே நொவெல்லாரா (Novellara) பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த சமன் அப்பாஸ் (18) தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    2020ல் உறவுக்கார ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு சமனை அவர் குடும்பத்தினர் வற்புறுத்தி வந்துள்ளனர். அதை அவர் மறுத்ததால் ஏற்பட்ட சச்சரவின் விளைவாக அந்நாட்டு அரசிடம் புகலிடம் தேடிய சமன், ஒரு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    கடந்த 2021ல், தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த சமன், வீட்டில் இருந்த தனது பாஸ்போர்ட்டை எடுத்து கொள்ள அங்கு சென்றார். அப்போது மீண்டும் திருமண சர்ச்சை ஏற்பட்டது. அவர் பெற்றோர் சமனின் ஆண் நண்பரை மருமகனாக ஏற்க மறுத்தனர்.

    அன்றிலிருந்து சமன் திடீரென மாயமானார். ஆண் நண்பர் இது குறித்து காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் அவர்கள் சமனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முற்பட்டனர்.

    ஆனால், சமனின் பெற்றோர் தங்கள் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.

    அப்பகுதியில் இருந்த வீடியோ காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று கையில் மண்வெட்டி, கடப்பாரை, பக்கெட் உள்ளிட்டவைகளுடன் 5 பேர் அவ்வீட்டை விட்டு வெளியே சென்று சுமார் 3 மணி நேரம் கழித்து திரும்புவது தெரிய வந்தது.

    காவல்துறையினரின் தேடலில் ஒரு வருடம் கழித்து சமனின் உடல் ஒரு பாழடைந்த பண்ணை வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடலில் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டிருந்தது.

    இவ்விவகாரத்தில் கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்த இத்தாலி அரசின் கோரிக்கைக்கு இணங்க பாகிஸ்தானிலிருந்த சமனின் தந்தையும், பிரான்சில் இருந்த சமனின் மாமாவும் இத்தாலிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். தாயார் வேறு எங்கோ தப்பி ஓடி விட்டார்.

    குடும்பத்தினரிடம் காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், சமனின் பெற்றோர், தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள மறுத்த மகளை கொலை செய்ய திட்டம் தீட்டினர். சமனின் கழுத்தை அவளது மாமா நெரித்து கொலை செய்துள்ளார்.

    இவ்வழக்கில் தந்தைக்கும் தாய்க்கும் ஆயுள் தண்டனையும், கொலை செய்த சமனின் மாமாவிற்கு 14 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கியது இத்தாலி நீதிமன்றம். இதனிடையே தாயாரை காவல்துறை தேடி வருகிறது.

    • பிரதர்ஸ் ஆஃப் இத்தாலியின் சந்திப்பில் ரிஷி சுனக், எலான் மஸ்க் ஆகியோரும் பங்கேற்றனர்
    • ஐரோப்பிய கலாச்சாரம் மதிக்கும் கோட்பாடுகளும், அளிக்கும் உரிமைகளும் உயர்வானவை என்றார் மெலோனி

    மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புக அகதிகள் சிறு கப்பல்கள் மூலம் தினசரி வந்து கொண்டே இருக்கிறார்கள். சமீப சில காலங்களாக இவ்வாறு நுழையும் அகதிகளால் உள்நாட்டில் சட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. பல ஐரோப்பிய நாடுகளின் தேர்தல்களில் வாக்குகளை ஈர்க்க இதை ஒரு விவாத பொருளாக சில தலைவர்கள் முன்னெடுத்தனர்.

    சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைவதை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்க அந்நாடுகளின் தலைவர்கள் பல கட்டமாக சந்தித்து வருகின்றனர்.

    அகதிகள் நுழைவதை கட்டுப்படுத்த இத்தாலி தலைநகரான ரோம் நகரில், Giorgio Meloni) தீவிர வலது சாரி அமைப்பான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி (Brothers of Italy) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜியோர்ஜியோ மெலோனி (உரையாற்றினார். இதில் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது உரையில் மெலோனி தெரிவித்ததாவது:

    நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம் என நான் நினைக்கிறேன். இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய கலாச்சார மையங்கள் சவுதி அரேபியாவின் நிதியுதவியால் நடப்பவை என்பதை நான் கவனிக்காமல் இல்லை. சவுதி அரேபியா நாட்டில் மத கோட்பாடுகளை கை விடுவது, தன்பாலின சேர்க்கை போன்றவைகளுக்கு மரண தண்டனை, கல்லெறி தண்டனை போன்றவற்றை வலியுறுத்தும் ஷரியா (Sharia) சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த கலாச்சாரத்தை ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் புகுத்த நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாகரிகம் பல தசாப்தங்களாக வளர்த்து வந்த மதிப்புக்குரிய அம்சங்களிலிருந்தும் மக்களுக்கு அளிக்கும் உரிமைகளிலிருந்து இந்த கலாச்சாரம் மாறுபட்டு நிற்கிறது. நான் ஷரியா சட்டத்தை இத்தாலியில் புகுத்த அனுமதிக்க மாட்டேன்.

    இவ்வாறு மெலோனி கூறினார்.

    கடந்த 2022 அக்டோபர் முதல் ஐரோப்பியாவின் முக்கிய நாடான இத்தாலியில், பிரதமராக பதவி வகிக்கும் ஜியோர்ஜியா மெலோனி (46), தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தரைவழியாக ஊடுருவும் ரேடார் மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டன
    • 900 வருடங்களுக்கு முற்பட்ட நகர் கண்டறியப்பட்டது என டாக்டர். லவ்னாரோ கூறினார்

    பண்டையகால நாகரிகங்களில் சரித்திர புகழ் வாய்ந்தவை கிரேக்க மற்றும் ரோமானிய நாகரிகங்கள்.

    ஐரோப்பாவில் உள்ள இத்தாலி, பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த மனித நாகரிக வளர்ச்சியை கண்ட நாடு. இதற்கு சான்றாக இத்தாலி முழுவதும் பழமை மாறாத கட்டிங்கள் இன்றும் சுற்றுலா பயணிகளை ஈர்த்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக (Cambridge University) தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று, டாக்டர். அலெஸ்ஸாண்ட்ரோ லவ்னாரோ (Dr. Alessandro Launaro) தலைமையில் மத்திய இத்தாலியில் உள்ள இன்டராம்னா லிரெனஸ் (Interamna Lirenas) எனும் இடத்தில் அகழ்வாரய்ச்சிகள் நடத்தியது. சுமார் 20 ஏக்கர் பரப்பில் பல இடங்களில் தரைவழியாக ஊடுருவும் திறன் வாய்ந்த ரேடார் கருவிகளை கொண்டு ஆய்வுகளை நடத்தியது.

    இதன் தொடர்ச்சியாக, ஆராய்ச்சியாளர்கள், கி.பி. 3-ஆம் நூற்றாண்டு காலகட்ட நகரமான லாசியோ பகுதியில் பல தடயங்களை கண்டெடுத்துள்ளனர். தற்போது பயிர் நிலங்களாக உள்ள இந்நகர் அக்காலத்தில் சுமார் 2 ஆயிரம் வீடுகளை கொண்ட நகரமாக விளங்கியது தெரிய வந்துள்ளது.


    "எவரும் இதற்கு முன்பு தோண்டி பார்க்க முயற்சிக்காத பகுதியில் எங்கள் ஆய்வை தொடங்கினோம். தோண்டிய பிறகு முதலில், மேற்புரத்தில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. சில உடைந்த மண்பானைகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், கீழே நீர் நிலைகள் தோன்றவில்லை. 900 வருட பழமை வாய்ந்த நகரத்தின் அறிகுறிகள் காணப்பட்டன" என டாக்டர். லவ்னாரோ தெரிவித்தார்.


    லிரி நதிக்கு அருகே நடத்தப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சியில், ஒரு கிடங்கு, வழிபாட்டு தலம், 1500 பேர் அமர கூடிய கலையரங்கம், பண்ணை விலங்குகளுக்கான 19 திறந்தவெளி கூடங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


    எந்த போரினாலும் இந்நகர் அழிக்கப்பட்ட தடயங்கள் எதுவும் காணப்படவில்லை. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற லொம்பார்ட் படையெடுப்பின் போது இந்நகரில் வாழ்ந்த மக்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

    • ரெயிலுக்குள் இருந்தவர்கள் முன்னும் பின்னுமாக விழுந்தனர்.
    • விபத்து காரணமாக அவ்வழித்தடத்தில் சில மணி நேரம் ரெயில்கள் இயக்கப்படவில்லை.

    ரோம்:

    இத்தாலி நாட்டின் போலோக்னா நகரில் இருந்து ரிமினி என்ற இடத்துக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. அங்குள்ள பென்சா-போர்லி பகுதிகளுக்கு இடையே சென்றபோது அதே தண்டவாளத்தில் மற்றொரு ரெயிலும் வந்து கொண்டிருந்தது.

    இதனையறிந்த டிரைவர்கள் உடனடியாக ரெயிலை நிறுத்த முயன்றனர். எனினும் இரு ரெயிலும் நேருக்கு நேர் மோதியது. இதில் சில ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.

    அப்போது ரெயிலுக்குள் இருந்தவர்கள் முன்னும் பின்னுமாக விழுந்தனர். இதில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த 17 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக அவ்வழித்தடத்தில் சில மணி நேரம் ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே ரெயில்கள் நேருக்கு நேர் மோதிய காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி மேட்டியோ சல்வினி தெரிவித்தார்.

    • கி.பி. 1109லிருந்து கி.பி. 1119க்கு இடைப்பட்ட காலத்தில் இரட்டை கோபுரங்கள் உருவாக்கப்பட்டன
    • கோபுரத்தை சுற்றி நகர நிர்வாக அமைப்பு உயரமான உலோக தடுப்பு அமைக்க உள்ளது

    வட இத்தாலியில் உள்ள போலோனா (Bologna) நகரில் இரு மிக பெரிய கோபுரங்கள் அருகருகே உள்ளன. உலக அளவில் பல வரலாற்று நூல்கள், குழந்தைகளுக்கான பாடல்களிலும், பயண கட்டுரைகளிலும் இந்த இரு கோபுரங்களுக்குமே சிறப்பான இடம் உண்டு.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோபுரங்களில் சற்று உயரமானது "அசினெல்லி" (Asinelli); உயரம் குறைவானது "கரிசெண்டா" (Garisenda). கி.பி. 1109-ஆம் வருடத்தில் இருந்து கி.பி. 1119-ஆம் வருட காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த இரு உயரமான கோபுரங்கள், இவற்றை உருவாக்கிய குடும்பங்களின் பெயர்களாலேயே வழங்கப்படுகின்றன.

    இதில் சிறிய கோபுரமான கரிசெண்டா, 157 அடி உயரம் உடையது. இதை விட உயரமாக, (சுமார் 200 அடி) இருந்த இந்த கோபுரம் 14-வது நூற்றாண்டில் சரியும் அபாயத்தில் இருந்ததால், அதனை தடுக்க செய்யப்பட்ட கட்டிட பணிகளின் காரணமாக தற்போது உள்ள உயரத்தை அடைந்திருக்கிறது. 


    இந்நிலையில், தற்போது 4 டிகிரி அளவிற்கு சாய்ந்துள்ள கரிசெண்டா, சாய்ந்து கொண்டே வருவது அதிகரித்துள்ளதால், இடிந்து விழ கூடிய அபாயத்தை எட்டியுள்ளதாக கட்டிட வல்லுனர்களின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனை நகர செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    2019லிருந்தே கரிசெண்டா கோபுர கட்டித்தின் உறுதித்தன்மை குறித்து ஆராய்ச்சி செய்து வரும் அறிவியல் வல்லுனர் குழு, இதன் வீழ்ச்சிக்கான அபாயம் குறித்து முன்னரே எச்சரித்திருந்தது.

    கடந்த அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட துல்லிய சென்சார் பதிவுகளின்படி, முன்னெப்போதும் இல்லாத அழுத்தம் அதன் தரைப்பகுதிக்கு தரப்படுவதாகவும், அதன் காரணமாக அடித்தளத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கற்களில் தோன்றியுள்ள விரிசல்கள், மெதுவாக மேலே செங்கற்களுக்கும் பரவும் என இக்குழு தெரிவித்தது.

    இத்தகவலையடுத்து, பாதுகாப்பிற்காக கரிசெண்டா கோபுரத்தை சுற்றி ஒரு குறிப்பிட்ட பகுதி வரை உயரமான உலோக தடுப்பு அமைத்து மக்கள் நடமாட்டம் தடை செய்ய நகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கரிசெண்டா திடீரென விழுந்தாலும், அக்கம்பக்கத்திலுள்ள கட்டிடங்களுக்கு சேதாரம் குறைவாக இருக்கும் என நம்பப்படுகிறது.

    இரு கோபுரங்களையும் இணைக்கும் அனைத்து சாலை போக்குவரத்தையும் நகர நிர்வாக அமைப்பு, மூடி விட்டது. 


    இருப்பினும், கோபுரம் கீழே விழ போகும் நாள் அல்லது மாதம் குறித்து இதுவரை காலவரையறை ஏதும் நிபுணர்களால் குறிப்பிடப்படவில்லை. வல்லுனர்கள், இந்த கோபுரம் 3 மாதத்திலிருந்து 10 வருடங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயம் உள்ளதாக மட்டுமே எச்சரித்துள்ளனர்.

    சுமார் 1000 வருடங்களாக அந்நகர மக்கள் பெருமைப்படும் ஒரு வரலாற்று சின்னமாகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கலை வடிவமாகவும் விளங்கி வந்த கோபுரம் விரைவில் இடியும் எனும் செய்தி அந்நகர மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் தரை தளத்தில் வசித்து வருபவர்கள் மேல் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    • 190 குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    டஸ்கனி:

    இத்தாலி டஸ்கனி நகரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டியது. இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    சில இடங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகள் முன் நிறுத்தி வைத்து இருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் தரை தளத்தில் வசித்து வருபவர்கள் மேல் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இதில் வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி விட்டனர். 2 பேரை காணவில்லை. இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சாலைகளிலும் வெள்ளம் ஆறு போல ஓடுகிறது.

    இத்தாலியில் வரலாற்று நகரமான புளோரன்ஸ் அருகே உள்ள கேம்பி பிசென்சியோவில் 190 குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது அங்கு நிலைமை மோசமாக உள்ளதால் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாள் இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜியாம்ப்ரூனோவின் கருத்துக்களுக்காக தன்னை மதிப்பிடக்கூடாது.
    • எதிர்காலத்தில் அவரது நடத்தை பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன்.

    ஜியாம்ப்ருனோவும் மெலோனியும் கடந்த 10 ஆண்டுகளாக திருமணம் செய்துக் கொள்ளாமல் உறவில் இருந்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஏழு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    இந்நிலையில், இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இன்று தனது நீண்டகால காதலர் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவை பிரிந்ததாக அறிவித்தார்.

    அவர் சமீபத்தில் தொலைக்காட்சியில் பாலியல் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டதை தொடர்ந்து ஜார்ஜியா இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கிட்டத்தட்ட 10 வருடங்கள் நீடித்த ஆண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவுடனான எனது உறவு இங்கே முடிவடைகிறது. எங்கள் பாதைகள் சில காலமாக வேறுபட்டன. அதை ஒப்புக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

    நாம் இருந்த தருணங்களைப் பாதுகாப்பேன், நமது நட்பைப் பாதுகாப்பேன், தன் தாயை நேசித்து, தந்தையை நேசிக்கும் ஏழு வயதுச் சிறுமியை எப்படியும் பாதுகாப்பேன். என்னிடம் எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கிடையே, இந்த முடிவுக்குப் பிறகு ஜியாம்ப்ரூனோவின் கருத்துக்களுக்காக தன்னை மதிப்பிடக்கூடாது என்றும் எதிர்காலத்தில் அவரது நடத்தை பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ×