search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rome"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேரரசர் கான்ஸ்டன்டைன், கான்ஸ்டான்டினோபில் எனும் புதிய நகரை நிர்மாணித்தார்
    • ரோம் நகரிலிருந்து 160 கி.மீ. தொலைவில் ஸ்பெல்லோ நகரில் இத்தலம் உள்ளது

    280 (கி.பி.) நூற்றாண்டிலிருந்து 337 (கி.பி.) நூற்றாண்டு வரை ரோமானிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்டவர், பேரரசர் கான்ஸ்டன்டைன் (Emperor Constantine).

    கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய முதல் ரோமானிய பேரரசரான இவர், ரோமானிய தலைநகரை கான்ஸ்டான்டினோபில் (Constantinople) எனும் புதிய நகரை நிர்மாணித்து அங்கு மாற்றியமைத்தார்.

    தாங்கள் கடைபிடிக்கும் ஒரு திருவிழாவை வெகு தூரம் சென்று கொண்டாட வேண்டியுள்ளதால், அதனை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே கொண்டாட அனுமதிக்கும்படி பேரரசர் கான்ஸ்டன்டைனிடம் மக்கள் கடிதம் எழுதி கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு பதிலளித்த பேரரசர், அவரது மூதாதயரை நினைவு கூரும் விதமாக அவர்களுக்கு ஒரு வழிபாட்டு தலத்தை அமைத்து தரும்படி மக்களை கேட்டுள்ளார்.

    இந்த பதில் கடிதம் "ரீ ஸ்கிரிப்ட்" (rescript) எனும் பெயரில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.


    அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாநில செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தை (Saint Louis University) சேர்ந்த வரலாற்று பேராசிரியர் டக்ளஸ் பாய்ன் (Prof. Douglas Boin) தலைமையில் ஒரு குழுவினர் இத்தாலியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர்.

    ரீ ஸ்கிரிப்டை தீவிரமாக ஆய்வு செய்த பேரா. பாய்ன், ஒரு நீண்ட ஆராய்ச்சியை முன்னெடுத்தார்.

    அதன் விளைவாக கான்ஸ்டன்டைன் நகர மக்கள், பேரரசரின் மூதாதையருக்கு அமைத்து கொடுத்த வழிபாட்டு தலம், தற்போது, ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    இத்தாலி தலைநகர் ரோம் நகரிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில், ஒரு சிறு மலையில் உள்ள ஸ்பெல்லோ எனும் நகரில், ஒரு வாகன நிறுத்த இடத்திற்கு கீழே, பேரா. பாய்ன் குழுவினர் நடத்திய ஆராய்ச்சியில் 1600 வருடத்திற்கும் முற்பட்ட இந்த பழமையான வழிபாட்டு தலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

    பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பண்டைய நாகரீகத்தை காட்டும் வகையில் இத்தாலியில் உள்ள பல புராதன சின்னங்களின் வரிசையில் இந்த ஸ்பெல்லோ வழிபாட்டு தலமும் இடம் பெறும் என பேரா. பாய்ன் தெரிவித்தார்.

    தற்போது 3 சுற்றுச்சுவர்களை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சி குழுவினர், மீண்டும் கோடை கால விடுமுறை முடிந்ததும் முழுவதுமாக ஆராய்ச்சியை தொடர உள்ளனர்.

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த முதல் சுற்றில் செர்பிய வீரர் டுகோவிச் மற்றும் ஜப்பான் வீரர் நிஷிகோரி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர். #ItalianOpen #NovacDjokovic #KeiNishikori
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நேற்று முதல் தொடங்கியது. இந்த தொடர் வரும் 20-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. இதில் செர்பிய வீரர் நோவாக் டுகோவிச் மற்றும் உக்ரேனிய வீரர் அலெக்சாண்டர் டோகோபோலோவ் ஆகியோர் மோதினர்.

    முதலில் இருந்தே டுகோவிச் சிறப்பாக விளையாடினார். இதனால் 6-1 என்ற கணக்கில் எளிதில் முதல் சுற்றை கைப்பற்றினார். இதேபோல் இரண்டாவது பொறுப்பாக விளையாடியதால் 6-3 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றிலும் வென்றார்.

    இறுதியில், டுகோவிச் 6-1 6-3 என்ற கணக்கில் டோகோபோலோவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், மற்றொரு போட்டியில் ஜப்பான் வீரர் நிஷிகோரியும், ஸ்பெயின் வீரர் பெலிசியானோ லோபசும் மோதினர். இந்த போட்டியில் நிஷிகோரி போராடி 7-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
    #ItalianOpen #NovacDjokovic #KeiNishikori
    ×