என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனிய போராளி குழுவுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
    • துப்பாக்கி சண்டையில் இரண்டு போராளிகள் உள்பட 3 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது.

    ஜெருசேலம்:

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் இருந்து வருகிறது. மேலும் இஸ்ரேல் மீது ஹமாய் அமைப்பினர் மற்றும் பாலஸ்தீனிய போராளி குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    பாலஸ்தீனியத்தின் மேற்கு கரையில் சில பகுதிகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள ஜெனின் நகரில் ஆயுதக்குழுவினர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த 4 நாட்களுக்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாலஸ்தீனியர்கள் 12 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக இஸ்ரேலில் பாலஸ்தீனியர் ஒருவர் நடத்திய கார் மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் காயம் அடைந்தனர். அதன்பின் ஜெனின் நகரில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது.

    இதனால் பதட்டம் சற்று தணிந்து இருந்தது. இந்த நிலையில் மேற்கு கரையில் மீண்டும் சண்டை ஏற்பட்டது. நாப்லஸ் அருகே இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனிய போராளி குழுவுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு போராளிகள் உள்பட 3 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது. இதனால் மீண்டும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது.
    • இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

    ஜெனின்:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

    ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்தப் பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    இந்நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. நூற்றுக்கணக்கான வீரர்களை கோட்டைக்குள் அனுப்பியது.

    இந்தத் தாக்குதலில் குறைந்தது 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    • பல இஸ்ரேலிய துருப்புக்கள் காயமடைந்திருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது.
    • பாலஸ்தீனத் தாக்குதல்களில் இந்த ஆண்டு குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே 20-ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இன்று வரை, பல வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனியர்கள் தாக்குதல்கள் நடத்துவதும், இதற்கெதிராக இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

    இன்று நடைபெற்ற ஒரு தாக்குதலில், மேற்குக்கரை (West Bank) நகரமான ஜெனின் தெருக்களில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய மிகப்பெரிய துப்பாக்கி சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 29 பேர் காயமடைந்ததாகவும், பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    உயிரிழந்தவர்கள் கலீத் அசாசா (21), கஸ்ஸாம் அபு சரியா (29), மற்றும் அகமது சக்ர் (15) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

    இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த சண்டையில் பல இஸ்ரேலிய துருப்புக்கள் காயமடைந்திருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது.

    ஜெனின் நகரிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு வீடியோ காடசி, இஸ்ரேலிய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, ராணுவ நடவடிக்கையின்போது அப்பகுதியில் ஒரு ராக்கெட்டை ஏவுவதைக் காட்டுகிறது.

    ஜெனின் நகரம், வட மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீனியத்தின் ஒரு முக்கிய நகரம். பாலீஸ்தீன போராளிகள் நிறைந்த பகுதி. இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களும் பல மாதங்களாக வன்முறையில் சிக்கித் தவிக்கின்றனர். குறிப்பாக, மேற்குக்கரை பகுதியில் நடந்த வன்முறைகளில் இந்த ஆண்டு, கிட்டத்தட்ட 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீன வன்முறை வெடித்ததற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் மேற்குக்கரையில் இரவு நேர திடீர் சோதனைகளை நடத்தி வருகிறது. அவ்வாறான காலங்களில், இஸ்ரேலியர்களுக்கு எதிரான பாலஸ்தீனத்தின் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றது.

    இறந்தவர்களில் பெரும்பாலானோர் போராளிகள் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் ஊடுருவல்களை எதிர்த்து கல் எறிந்த இளைஞர்கள் மற்றும் மோதலில் ஈடுபடாத மற்றவர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

    இஸ்ரேலியர்களுக்கு எதிரான பாலஸ்தீனத் தாக்குதல்களில் இந்த ஆண்டு குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் நாட்டில் வெயில் மண்டையை பிளக்கிறது.
    • இஸ்ரேல் அரசாங்கம் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    ஜெருசலேம் :

    இஸ்ரேல் நாட்டில் வெயில் மண்டையை பிளக்கிறது. அங்கு மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியசை தாண்டியது. இது இஸ்ரேல் வரலாற்றில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்ப அளவாகும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மைய தரவுகள் கூறுகின்றன.

    இந்த வெப்பக்காற்று காரணமாக மின்துறையின் உள்கட்டமைப்பு சேதம், மின்சார தடைகள் போன்றவற்றை இஸ்ரேல் எதிர்கொண்டது. இதன் காரணமாக பல இடங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டன. எனவே இதன் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இஸ்ரேல் அரசாங்கம் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    அதன் ஒருபகுதியாக அங்கு குளிர்காய்வதற்காக தீ மூட்டுவதால் வெப்பநிலை மேலும் அதிகரித்ததையடுத்து அங்கு காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை தீ மூட்டுவதற்கு தடை விதித்து அந்த நாட்டின் தீயணைப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே வெப்ப அலை காரணமாக இஸ்ரேல் நாட்டில் சுமார் 220 திறந்தவெளி பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. எனினும் தீயணைப்பு துறையினரின் துரிதமான நடவடிக்கையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    • பாலாட்டா அகதிகள் முகாமில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனை நடத்தினர்.
    • 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள பாலாட்டா அகதிகள் முகாமில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனை நடத்தினர்.

    அவர்கள் முகாமுக்குள் புல்டோசர் களுடன் புகுந்தனர். இதனால் இஸ்ரேல் ராணுவத்துக்கும்-பாலஸ்தீனர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

    • இரு தரப்புக்கும் 5 நாட்களாக சண்டை நடந்து வந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சண்டையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே பாலஸ்தீனிய ஆயுத குழுவின் தலைவர் காதர் அதானென், கடந்த 2-ந் தேதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார். இதையடுத்து காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஆயுதக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். இரு தரப்புக்கும் 5 நாட்களாக சண்டை நடந்து வந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காசாமுனை பகுதியில் உள்ள போராளி குழுவின் தலைவர் ஒருவர் கூறும்போது, 5 நாட்கள் கடுமையாக நடந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. எகிப்தின் தொடர்ச்சியான முயற்சியால் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம் என்றார்.

    • காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
    • இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பதற்றம் நீடித்து வருகிறது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். பதிலுக்கு இஸ்ரேலும் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.

    இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு அல்-அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் போலீசார் நுழைந்து பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது குண்டுகளை வீசினர்.

    இதனால் காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. மேலும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் அங்கிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பதற்றம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில் சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. 6-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள், இஸ்ரேலின் வடகிழக்கு பகுதி நோக்கி வீசப்பட்டது. இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது. ஒரே ஒரு ஏவுகணை மட்டும் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து கோலன் குன்றுகளில் உள்ள ஒரு வயலில் விழுந்தது.

    இதில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் சிரியாவில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத குழு தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    சிரியாவில் இருந்து ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது.

    இதற்கிடையே மேற்கு கரையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 வயது பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கற்கள், வெடிபொருட்களை வீசிய பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் மீது அவன் அதிவேகமாக காரை ஏற்றி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது.

    டெல்அவிவ்:

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெருசேலத்தில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகைக்கு கூடியிருந்த முஸ்லீம்கள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி விட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பாலஸ்தீன பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேலை நோக்கி சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் படையினர் காசா நகரத்தின் மீதும், அண்டை நாடான தெற்கு லெபனானிலும் வான்வெளி தாக்குதலை நடத்தியது.

    குண்டுகளை வீசியதால் காசா நகர கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த நிலையில் மேற்கு கரை பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்த 2 பெண்களை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இதனால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த பதற்றத்திற்கு மத்தியில் இஸ்ரேல் டெல்அவிவ் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.அங்குள்ள காப்மண் கடற்கரை பகுதி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. தினமும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். நேற்று இந்த கடலோர பகுதியில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அதிவேகமாக வந்த கார் சுற்றுலா பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது பற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் மீது காரை ஏற்றிய மர்ம நபரை பிடிக்க முயன்றனர்.

    அப்போது அவன் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதையடுத்து போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர். விசாரணையில் அவன் பயங்கரவாத கும்பலை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.

    சுற்றுலா பயணிகள் மீது அவன் அதிவேகமாக காரை ஏற்றி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது. இந்த சம்பவம் இஸ்ரேலில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்று வருகிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கு இடையே மோதல் வெடித்தது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு செயல்பட்டு வருகிறார். இவர்மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேல் நீதித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் நேதன்யாகு தலைமையில் பாராளுமன்றத்தில் புதிதாக சட்டம் கொண்டு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சட்டம் அமலாகும் பட்சத்தில் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரம் குறையும். மேலும், கோர்ட்டின் உத்தரவுகளை மீறவும் இஸ்ரேல் அரசுக்கு அதிகாரம் வழங்கும். அதேபோல், நீதிபதிகள் நியமிப்பதிலும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும். இது நீதித்துறையை முடக்கும் செயல் எனக்கூறி இஸ்ரேலில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மக்கள் போராட்டங்களுக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    அந்த வகையில் போராட்டத்திற்கு டெல் அவிவ் விமான நிலைய ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து வேலையை புறக்கணித்தனர். இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டு டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பாய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும், நீதித்துறை மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெ ர்சாக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய நீதித்துறை சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், புதிய நீதித்துறை சிர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒப்புதல் அளித்தார். போராட்டக்காரர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    • நீதித்துறை அதிகாரத்தை குறைக்கும் முடிவை எதிர்த்து இஸ்ரேலில் பெரும் போராட்டம் நடைபெற்றது.
    • எதிர்க்கட்சி தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாட்டில் புதிதாக இயற்றப்பட்ட நீதித்துறை தொடர்பான சட்ட மசோதாவிற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதாவின்படி அரசு நியமிக்கும் 9 பேர் கொண்ட குழுக்கள் மூலமாக, சுப்ரீம் கோர்ட்டைத் தவிர மற்ற நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதாகும்.

    முன்னதாக நீதிதுறையின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சம நிலையை மீட்டெடுக்கவும் நீதித்துறையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்திருந்தார்.

    இதையடுத்து, இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என எதிர்க்கட்சி தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இஸ்ரேல் அரசின் முடிவை எதிர்த்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் இஸ்ரேல் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல் அவிவ்வில் கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஏராளமான போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சூழலில் நீதித்துறை அதிகாரத்தை மாற்றியமைக்கும் மசோதாவை இந்த வாரம் பாராளுமன்றத்தில் பிரதமர் நேதன்யாகு தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியானது.

    • இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
    • மோதல் சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

    மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    இதனிடையே, மேற்குகரையின் ஹவ்ரா பகுதியில் இஸ்ரேலிய சகோதரர்கள் 2 பேரை பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் கடந்த மாதம் 26-ம் தேதி சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், 2 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மேற்குகரையின் ஜெனின் அகதிகள் முகாமில் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜெனின் முகாமிற்கு இஸ்ரேல் படைகள் சென்றன.

    அப்போது, இஸ்ரேல் படையினர் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரபுக்கும் இடையே நடந்த மோதலில் இஸ்ரேலிய சகோதரர்களை சுட்டுக்கொலை செய்த பயங்கரவாதி உள்பட பாலஸ்தீனிய ஆயுத குழுவை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 60 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனிய ஆயுத குழுக்களை சேர்ந்தவர்கள். அதேபோல், இந்த ஆண்டு இதுவரை பாலஸ்தீனியர்கள் தாக்குதலில் 14 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேலிய ராணுவம் அதன் படைகள் வடக்கு மேற்குக் கரை நகரத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியது.
    • பாலஸ்தீனியர்கள் டயர்களை எரித்தும், ராணுவ வாகனங்களை தாக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அந்த பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இதில் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில், மேற்கு கரை நகரமான நப்லஸ் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு போராளி குழுவினரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

    இஸ்ரேலிய ராணுவம் அதன் படைகள் வடக்கு மேற்குக் கரை நகரத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியது. பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படைகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும், பதிலுக்கு பாலஸ்தீனியர்கள் டயர்களை எரித்தும், ராணுவ வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு படைகள் அந்த நகரை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    ×