search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Armistice"

    • பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.
    • மனிதாபிமானமற்ற தீமையின் உச்சமும் ஆகும்.

    காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வடகொரியா வின் சர்வதேச அமைப்புக ளுக்கான துணை வெளி யுறவுத்துறை மந்திரி கிம்சன் கியோங் கூறும்போது, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்த கூட்டாளியைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்டவிரோத மற்றும் நியாயமற்ற இரட்டைத் தரங்களின் வெளிப்பாடு மட்டுமல்ல, மனிதாபிமானமற்ற தீமையின் உச்சமும் ஆகும்" என்றார்.

    • இரு தரப்புக்கும் 5 நாட்களாக சண்டை நடந்து வந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சண்டையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே பாலஸ்தீனிய ஆயுத குழுவின் தலைவர் காதர் அதானென், கடந்த 2-ந் தேதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார். இதையடுத்து காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஆயுதக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். இரு தரப்புக்கும் 5 நாட்களாக சண்டை நடந்து வந்த நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காசாமுனை பகுதியில் உள்ள போராளி குழுவின் தலைவர் ஒருவர் கூறும்போது, 5 நாட்கள் கடுமையாக நடந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. எகிப்தின் தொடர்ச்சியான முயற்சியால் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம் என்றார்.

    ×