என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் 5 பேரை கடத்தியுள்ளோம் என பயங்கரவாத குழுவினர் கூறியுள்ளனர்.
    • பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும்.

    கீவ்:

    இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் 250 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். 779 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் எக்ஸ் சமூக பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பயங்கரவாத தாக்குதலில் உறவினர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும். தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களை பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

    பயங்கரவாதத்திற்கு இடமளிப்பவர்கள் மற்றும் அதற்கு நிதியளிப்பவர்கள், உலகத்திற்கு எதிரான ஒரு குற்றத்தில் ஈடுபடுபவர்கள் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தி கூறியுள்ளார்.

    உலகில் பயங்கரவாதத்திற்கு இடம் தர கூடாது என்றும் இஸ்ரேலின் சுய பாதுகாப்புக்கான உரிமை மறுக்க முடியாதது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

    இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் 5 பேரை கடத்தியுள்ளோம் என பயங்கரவாத குழுவினர் கூறியுள்ளனர். எனினும், இதற்கு இஸ்ரேல் பதிலளிக்கவில்லை. இஸ்ரேல் போரில் ஈடுபட்டு உள்ளது என்றும் இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார்.

    • காசா பகுதியில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

    ஜெனீவா:

    இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா பகுதியில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் குழுவினரின் இருப்பிடங்களை குறித்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனிடையே இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என்றும், கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு உறுதுணையாக நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் போராளிகளின் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் வன்முறைகளைத் தவிர்த்து அமைதிக்கான வழியை தேடுமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்."

    இவ்வாறு டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

    • பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
    • ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. தொடர்ந்து காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன போராளிகளை வாழ்த்துவதாகவும், பாலஸ்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை பாலஸ்தீன போராளிகளுக்கு துணை நிற்போம் எனவும் ஈரான் தலைவர் அயடோலா அலி காமேனியின் பாதுகாப்பு ஆலோசகர் ரஹீம் சஃபாவி கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    • இஸ்ரேல் மீது ஹமஸ் பயங்கரவாத அமைப்பு ஏவுகணை தாக்குதல்.
    • ஹமஸ் படையினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.

    காசா எல்லையில் உள்ள ஹமஸ், சில பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆயுதக்குழுக்கள் இணைந்து இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின.

    சற்றும் எதிர்பாராத நேரத்தில் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது 20 நிமிடங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிக ராக்கெட்கள் ஏவப்பட்டன. இதுதவிர இஸ்ரேல் நகரங்களுக்குள் நுழைந்த ஹமஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

     

    இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹமஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர் என்றும், 908 பேர் படுகாயம் அடைந்தது இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    திடீர் தாக்குதலை தொடர்ந்து ஹமஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 1,600-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இஸ்ரேல் அரசும் ராணுவத்தை களமிறக்கி பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    ஆபரேஷன் அக்சா ஃபிளட் என்ற பெயரில், காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுத குழுக்கள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின. மிக கொடூரமான தாக்குதலோடு, இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளுக்குள் ஹமஸ் ஆயுதக்குழு நுழைந்து துப்பக்கிச்சூடு நடத்தி வருகிறது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அரசும் தனது ராணுவத்தை களமிறக்கி பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர் துவங்கிவிட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்துவிட்டது. இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ ஒன்றில், காசா மற்றும் இஸ்ரேல் இடையேயான தடுப்பு வேலி தகர்க்கப்படும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதோடு ரத்த காயங்களுடன் பெண் ஒருவரை ஹமஸ் பயங்கரவாதிகள் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய மற்றொரு வீடியோ வெளியாகி உள்ளது.

    இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஹமஸ் தாக்குதலை எதிர்த்து, இஸ்ரேல் தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் 170-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் அறிவித்து இருக்கிறது. 

    • இஸ்ரேலில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
    • இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இஸ்ரேல் மீது ஹமஸ் பயங்கரவாதிகள் இன்று பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, இஸ்ரேலில் போர் பிரகடன நிலையை அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இதனால், அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹமஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் நநேர்திர மோடி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இஸ்ரேல் மீது ஹமஸ் நடத்தும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த போரில் உயிரிழந்த அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்கிறோம்.இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஹமஸ் இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும்.
    • ஹமஸ்-ஐ அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இருக்கிறது.

    பாலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது இன்று மிக கொடூரமான தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களுக்குள் அத்துமீறி நுழைந்தனர். பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, போர் துவங்கிவிட்டது என்று இஸ்ரேல் பிரதமர் அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.

    "இஸ்ரேல் குடிமக்களே, நாம் போரில் இருக்கிறோம். இது கூட்டு முயற்சியோ அல்லது எதிர்ப்பு நடவடிக்கையோ இல்லை. இது போர். ஹமாஸ் இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். எதிரிகள் இதுவரை சந்திக்காத பதிலடியை சந்திக்க உள்ளனர்," என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து உள்ளார்.

     

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதல்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு வங்கி பகுதிகளில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    காசாவில் ஆட்சி செய்து வரும் ஹமஸ்-ஐ அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இருக்கிறது. தாக்குதலுக்கு முன்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதாக ஹமஸ் அறிவித்து இருந்தது. ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அரசு காசாவில் தாக்குதல் நடத்த போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.

    திடீர் தாக்குதல் மற்றும் போர் காரணமாக சிம்சாட் தோரா விடுமுறை தினத்திலும் சைரன் மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் அப்பகுதி முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. பொது மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

    வெடிகுண்டு தாக்குதல் ஒருபுறமும், மற்றொரு புறம் மோட்டார்சைக்கிள் மற்றும் பாராகிளைடர்கள் மூலம் இஸ்ரேலுக்குள் புகுந்த காசா பயங்கரவாதிகள் மற்றும் இஸ்ரேல் படையினர் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

    • வீட்டில் பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    ஜெருசலேம்:

    வடக்கு இஸ்ரேலின் அரபு நகரில் உள்ள ஒரு வீட்டில் மா்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அந்த வீட்டில் பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    • மருத்துவமனையில் இருந்து வந்ததும் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதாக கூறி உள்ளார்.
    • நோயாளியின் இதயம் மிக மெதுவாகத் துடிக்கும்போது, இதயத்தை சீராக துடிக்கச் செய்வதற்காக பேஸ்மேக்கர் பொருத்தப்படுகிறது.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உடல்நிலை இன்று பாதிக்கப்பட்டதையடுத்து அவர் ரமத் கானில் உள்ள ஷேபா மருத்துவமனைக்கு சென்றார். அவரது இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருந்ததால் அவருக்கு உடனடியாக பேஸ்மேக்கர் கருவி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆபரேசன் செய்து பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் பிரதமர் நேதன்யாகு கொண்டு வந்த நீதித்துறை சீர்திருத்த திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சீர்திருத்தம் ஜனநாயகத்தை சிதைக்கும் என அரசின் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். பிரதமருக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.

    முன்னதாக நேதன்யாகு வெளியிட்ட வீடியோவில் எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து வந்ததும் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதாகவும் கூறி உள்ளார். துணை பிரதமர் லெவின்தான் இந்த நீதித்துறை மாற்றத்தின் மூளையாக இருக்கிறார்.

    கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதித்துறை சீர்திருத்த திட்டம் தொடர்பான தீர்மானம் மீது பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனால் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று இரவு இஸ்ரேல் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தி ஈடுபட்டனர். அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஜெருசலேமுக்குள் அணிவகுத்து சென்று பாராளுமன்றத்திற்கு அருகில் முகாமிட்டனர்.

    பாராளுமன்றம் சென்று தீர்மானம் மீது வாக்களிக்க ஏதுவாக சரியான நேரத்தில் பிரதமர் நேதன்யாகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறும் அமைச்சரவையின் வாராந்திர கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

    நோயாளியின் இதயம் பலவீனமாகி மிக மெதுவாகத் துடிக்கும்போது மயக்கம் ஏற்படும். இதுபோன்ற சமயங்களில் இதயத்தை சீராக துடிக்கச் செய்வதற்காக பேஸ்மேக்கர் பொருத்தப்படுகிறது. இதய செயலிழப்புக்கு சிகிச்சையளிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். இதயத்திற்கு மின் துடிப்புகளை அனுப்புவதன் மூலம், இந்த சாதனம் ஒரு நபரின் இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்திருக்கும். பேஸ்மேக்கர் பொருத்திக்கொண்ட நோயாளிகள், சில நாட்களுக்குள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம். பேஸ்மேக்கர் பொருத்தும் செயல்முறைக்காக மருத்துவமனையில் குறைந்தது ஒருநாள் தங்கியிருக்க வேண்டும். பேஸ்மேக்கரின் செயல்பாடுகளை மருத்துவர்கள் கண்காணித்து உறுதி செய்தபின் வீடு திரும்பலாம்.

    • நீர்ச்சத்து குறைந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    • சுட்டெரிக்கும் வெயிலில் தொப்பிகூட அணியாமல், தண்ணீர் குடிக்காமல் ஏரியில் நேரத்தை செலவிட்டதாக கூறினார்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வடக்கு இஸ்ரேலின் பிரபலமான சுற்றுலா மையமான கலிலி கடலுக்கு நேதன்யாகு வெள்ளிக்கிழமை சென்றிருந்தார். கோடைகால வெப்ப அலை அதிகமாக இருந்த நிலையில், அங்கு சென்ற நேதன்யாகுவின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    நேற்று அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டதையடுத்து அவரை டெல் அவிவ் அருகே உள்ள ஷேபா மருத்துவ மையத்திற்கு சென்று பரிசோதனை செய்யும்படி அவரது மருத்துவர் அறிவுறுத்தியிருக்கிறார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் நேதன்யாகு அலவலகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. நீர்ச்சத்து குறைந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே, ஒரு வீடியோ பதிவில், சுட்டெரிக்கும் வெயிலில் நெதன்யாகு தனது மனைவியுடன் தொப்பிகூட அணியாமல், தண்ணீர் குடிக்காமல் ஏரியில் நேரத்தை செலவிட்டதாக கூறினார். எனினும் இது நல்லது அல்ல என்று கூறிய அவர், அனைவரும் வெயிலில் நிற்பதை குறைக்க வேண்டும் என்றும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    பிரதமருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாராந்திர இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அவன் தலை கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட முற்றிலுமாக பிரிந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    • சிறுவன் குணமடைந்திருப்பது ஒரு அதிசயம் என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் நம்புகிறார்கள்.

    கார் மோதியதால் கழுத்து அறுபட்ட 12-வயது இஸ்ரேலி சிறுவனுக்கு இஸ்ரேல் மருத்துவர்கள் மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து தலையை மீண்டும் கழுத்தில் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். அந்த சிறுவன் தற்போது நலமாக உள்ளான்.

    சுலைமான் ஹசன் எனப்படும் அந்த சிறுவன் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவன் மீது கார் மோதியிருக்கிறது. இதில் அவனது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. தசைநார்கள் கிழிந்து முதுகுத்தண்டின் மேற்பகுதியிலிருந்து அவரது மண்டை ஓடு பிரிந்து விட்டது. கிட்டத்தட்ட அவனது கழுத்து துண்டான நிலைதான் இருந்தது.

    விபத்து ஏற்பட்ட உடனேயே அச்சிறுவன் விமானத்தில் ஹடாசா மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர அறுவை சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்பட்டான். மருத்துவர்கள் கடுமையாக முயற்சி செய்து மரணத்தின் விளிம்பில் இருந்து அந்த சிறுவனை காப்பாற்றி உள்ளனர்.

    அவன் தலை கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட முற்றிலுமாக பிரிந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சிகிச்சையை மேற்பார்வையிட்ட எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். ஓஹட் எய்னவ் கூறியதாவது:

    இது பல மணிநேரம் நடந்த ஒரு அறுவை சிகிச்சை. சேதமடைந்த பகுதியில் புது பிளேட்டுகள் பொருத்த வேண்டியிருந்தது. எங்களின் திறமையாலும், புதுமையான தொழில்நுட்பத்தினாலும், எங்களால் சிறுவனை காப்பாற்ற முடிந்தது. மருத்துவர் குழு சிறுவனின் உயிரை காப்பாற்ற போராடியது.

    நரம்பு, உணர்திறன் மற்றும் அசைவில் எந்தவித செயலிழப்புகளும் இல்லாமல் அந்த சிறுவன் செயல்படுவதும், இந்த அரிய அறுவை சிகிச்சைக்கு பிறகு எந்தவித உதவியின்றி அவனால் நடக்க முடிவதும், ஒரு சாதாரண விஷயம் அல்ல. மிகவும் அரிதான அறுவை சிகிச்சைகளை செய்வதற்கு மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் தேவை. இது ஒரு பொதுவான அறுவை சிகிச்சையும் அல்ல. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பதின் வயதினருக்கு இதை போன்ற அறுவை சிகிச்சையை செய்வது கடினம். இதை செய்வதற்கு ஒரு தேர்ந்த அறிவும் அனுபவமும் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர் குழு தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிறுவன் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 50% மட்டுமே இருந்ததால், அவர் குணமடைந்திருப்பது ஒரு அதிசயம் என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் நம்புகிறார்கள்.

    இந்த அறுவை சிகிச்சை கடந்த மாதம் நடந்திருக்கிறது. ஆனாலும் இம்மாதம் வரை மருத்துவர்கள் முடிவுகளை வெளியிடவில்லை.

    அந்த சிறுவன், கழுத்தை முதுகெலும்புடன் நேராக வைப்பதற்கான அசையாமல் இருப்பதற்கான பிரத்யேக சாதனம் (cervical splint) பொருத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். அவன் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிப்பதாக மருத்துவமனை கூறியிருக்கிறது.

    அந்த சிறுவனின் தந்தை எந்த நேரத்திலும் மகனை விட்டு செல்லவில்லை. தனது ஒரே மகனை காப்பாற்றியதற்காக மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

    • போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
    • இஸ்ரேல் பாராளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

    ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்தபடி இருந்தது. இந்நிலையில் போராட்டங்களுக்கு மத்தியில் நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதா இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

    இஸ்ரேல் பாராளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது. இங்கு மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகள் கிடைத் தன. எதிராக 56 வாக்குகள் பதிவானது. இதற்காக மசோதா பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    முன்னதாக பாராளுமன்றம் முன்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சில எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வெளியே இழுத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதாவை திரும்பப்பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் அம்மசோதாவை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டதால் மக்களின் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

    ×