என் மலர்
இஸ்ரேல்
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 300 ஆகவும், காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி 230 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.
காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதால் அங்குள்ள பொதுமக்களை வெளியேறும்படி இஸ்ரேல் அதிபர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, ஹமாஸ் தாக்குதலால் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது. 2000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள குடியிருப்புகளைக் கைப்பற்றிய ஹமாஸ் பயங்கரவாதிகளால் இஸ்ரேலிய குடும்பம் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி, குண்டு சத்தங்களுக்கு மத்தியில் இந்த குடும்பம் பயத்தில் உறைந்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இவர்களைப் போன்ற பல குடும்பங்கள் இஸ்ரேலில் பிணைக் கைதிகளாக சிக்கி தவித்து வருவதாக தகவல் வௌியாகி உள்ளது.
- ஹமாஸ் தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்
- இஸ்ரேலின் பதிலடியில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்
யூத மதத்தினருக்கான உலகின் ஒரே நாடான இஸ்ரேலுக்கும் அதன் அண்டையில் உள்ள பாலஸ்தீனத்திற்கும் பல வருடங்களாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. அவ்வப்போது இரு தரப்பினரும் பரஸ்பர ராணுவ தாக்குதல்களில் ஈடுபடுவதும் பிறகு சில மாதங்கள் தாக்குதல் நிறுத்தம் நடைபெறுவதும் வழக்கம். இஸ்ரேலுக்கெதிராக பாலஸ்தீனத்தில் பல பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
நேற்று காலை, பாலஸ்தீனித்தின் ஹமாஸ் உள்ளிட்ட பல பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேலின் பல பகுதிகளில் வான், தரை, மற்றும் கடல் வழியாக ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது. எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இத்தாக்குதலால் இஸ்ரேலில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்; 1800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
"ஹமாஸ் அமைப்பு தனது செயலுக்கான விலையை கொடுக்க போகிறது" என எச்சரித்த இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்திருக்கிறது.
இஸ்ரேலில் சனிக்கிழமையன்று நடைபெற்றதை போன்ற சம்பவம், இனி எப்போதும் நடைபெறாதவாறு பார்த்து கொள்ளப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தன் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்தார்.
இந்நிலையில், இரு நாட்டிற்கும் இடையே உள்ள காசா முனை (Gaza Strip) பகுதியில் இஸ்ரேலிய ராணுவ படை நடத்திய பதிலடி தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டவர்கள் பிணைக்கைதிகளாக உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ படை தெரிவித்திருக்கிறது.
மேலும் பல போராளிகளின் மறைவிடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அங்கு இஸ்ரேலிய படையினர் இல்லாத நகரமே இல்லை எனுமளவிற்கு எதிர்தாக்குதலை தீவிரமாக்கியுள்ளது இஸ்ரேல்.
பயங்கரவாதிகளின் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்க கூடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி 230 பேர் பலியாகினர்.
- ஜெருசலேமுக்கு மேகாலயா எம்.பி., வான்விரோய் கர்லூகி தனது குடும்பத்துடன் புனிய யாத்திரை சென்றார்.
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 300 ஆகவும், காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி 230 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.
காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதால் அங்குள்ள பொதுமக்களை வெளியேறும்படி இஸ்ரேல் அதிபர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், இஸ்ரேலில் போருக்கு மத்தியில் மேகாலயா எம்.பி., வான்விரோய் கர்லூகி சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெருசலேமுக்கு மேகாலயா எம்.பி., வான்விரோய் கர்லூகி தனது குடும்பத்துடன் புனிய யாத்திரை சென்றார்.
இந்நிலையில், போர் பகுதி அருகே சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வான்விரோய் கர்லூகி பாதுகாப்பாக நாடு திரும்ப வழிவகை செய்வதாக மேகாலயா முதல்வர் உறுதி செய்துள்ளார்.
- நேற்று காலை, ஹமாஸ் இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்தியது
- இஸ்ரேலிற்கு கல்வி, பணி மற்றும் சுற்றுலாவிற்காக இந்தியர்கள் சென்று வருகிறார்கள்
யூத மதத்தினருக்கான உலகின் ஒரே நாடான இஸ்ரேலுடன் அதன் அண்டையில் உள்ள பாலஸ்தீனம் பல தசாப்தங்களாக சண்டையிட்டு வருகிறது. பாலஸ்தீனத்தில் பல போராளி குழுக்கள் இந்த நோக்கத்திற்காக செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது இரு தரப்பினருக்கும் போர் நடைபெறுவதும், பல திடீர் தாக்குதல்கள் மற்றும் உயிர்சேதங்களுக்கு பிறகு சில மாதங்கள் அமைதி திரும்புவதும் வழக்கம்.
ஆனால் நேற்று காலை, எதிர்பாராதவிதமாக இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் பெரும் உயிர்பலியை சந்தித்தது. இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்திருப்பதாக அறிவித்த இஸ்ரேல், "ஹமாஸ் அமைப்பு தனது செயலுக்கான விலையை கொடுக்க போகிறது" என எச்சரித்து போரை தீவிரமாக்கியுள்ளது.
அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கும் நிலையை எடுத்திருக்கும் அதே சமயம் ஈரான் உட்பட பல அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கின்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார். பல வருடங்களாக இஸ்ரேலிற்கு கல்வி, பணி மற்றும் சுற்றுலாவிற்காக இந்தியர்கள் சென்று வருகிறார்கள்.
இந்நிலையில் அதிகரிக்கும் போர் பதற்றத்தின் காரணமாக இந்தியாவிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கு விமான சேவையை வழங்கி வந்த டாடா குழுமம் இயக்கும் ஏர் இந்தியா, வரும் அக்டோபர் 14 வரை பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவினரின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இந்திய-டெல் அவிவ் இருவழி விமான சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
- காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
- இந்த திடீர் தாக்குதலால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பெய்ரூட்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லெபனான் நாடும் தாக்குதலில் குதித்துள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டு வரு கிறது.
இந்நிலையில், வடக்கு இஸ்ரேலில் லெபனான் தாக்குதல் நடத்தி உள்ளது. சிரியாவின் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பான கோலன் குன்றுகள் மீதுள்ள 3 இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதுதொடர்பாக லெபனான் ஆயுத குழுவான ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கூறுகையில், வடக்கு இஸ்ரேலில் குண்டு-ஏவுகணை தாக்குதலை நடத்தினோம். ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் ஷெபாபார்ம்ஸ் பகுதியில் உள்ள 3 இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தளங்களை குறிவைத்து தாக்கினோம். பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையாக இருக்கிறோம் என தெரிவித்தனர்.
மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். லெபனானின் தாக்குதலையடுத்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறுகையில், இஸ்ரேல் எல்லைக்குள் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து லெபனானில் பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் பகுதிகளில் துப்பாக்கியால் சுட்டு வருகிறது.
- காசாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துள்ளது.
- மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நேற்று இரவு முழுவதும் காசா நகரம் இருளில் மூழ்கியது.
ஜெருசலேம்:
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 300 ஆகவும், காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி 230 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.
காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதால் அங்குள்ள பொதுமக்களை வெளியேறும்படி இஸ்ரேல் அதிபர் கேட்டுக் கொண்டார்.
காசாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நேற்று இரவு முழுவதும் காசா நகரம் இருளில் மூழ்கியது.
இந்நிலையில், காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீட்டை இஸ்ரேல் விமானப்படை தாக்கி அழித்துள்ளது. இந்த வீடு ஹமாஸ் அமைப்பின் ஆயுத கட்டமைப்பாக செயல்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
- இஸ்ரேலில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என தமிழக மாணவர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
- அரசு முழு உதவிகளையும் செய்கிறது. தேவையில்லாமல் வெளியில் செல்லவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஜெருசலேம்:
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் அழிக்கப்படும். எனவே காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறும்படி இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல்-காசா முனை எல்லையில் உள்ள ஸ்டெரோட் நகருக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர் அங்குள்ள போலீஸ் நிலையத்தைக் கைப்பற்றினர். இதையடுத்து இஸ்ரேல் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, போலீஸ் நிலையத்தை மீட்டனர். இதில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தெற்கு நகரமான ஒபாகிமில் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மக்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்தனர். அங்கு இஸ்ரேல் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளை மீட்டனர். அங்கு நடந்த சண்டையில் ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
- பாலஸ்தீன ஊடுருவல்காரர்கள் இங்கு வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
- தெற்கு இஸ்ரேல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான கேரள மக்கள் பணிபுரிகின்றனர்.
இஸ்ரேல் மீது, பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இஸ்ரேலில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களின் நிலையை அவர்கள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கிவிட்டன. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை காப்பாற்ற நமது நாடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சூழலில் இஸ்ரேலில் இருக்கும் கேரள மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக பதுங்கு குழிகளை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது. இது குறித்து அங்கு 8 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரியும் கேரளாவை சேர்ந்த ஷைனிபாபு என்பவர் கூறுகையில், பாலஸ்தீன ஊடுருவல்காரர்கள் இங்கு வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
தற்போது தெற்கு இஸ்ரேல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான கேரள மக்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் மருத்து வமனையில் செவிலியர்க ளாகவும், தனியாக வசிக்கு முதியோர்களுக்கு பராமரிப்பாளர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் போரினால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக அவர்கள் இஸ்ரேலில் உள்ள பதுங்கு குழிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். நானும் தற்போது பதுங்கு குழியில் தான் உள்ளேன். கடந்த காலங்களில் இதுபோன்ற சூழ்நிலைகள் இருந்துள்ளன. ஆனால் தற்போது மிகவும் வலுவானதாக தெரிகிறது என்றார்.
- ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியது.
- ராக்கெட் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு புதிதல்ல.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே 1948-ம் ஆண்டில் இருந்தே போர் நடந்து வருகிறது. 1948-ல் பாலஸ்தீனத்திலிருந்து பிரித்தானியர் வெளியேறிய பிறகு, இஸ்ரேலும் அரபு நாடுகளும் போரைத் தொடங்கின. 1949-ல் ஜனவரி 20 அன்று இஸ்ரேல், அரபு நாடுகளுடன் போர் நிறுத்தத்தை அறிவித்தபோது போர் முடிவுக்கு வந்தது.
1967-ல் இஸ்ரேலுக்கும் எகிப்திய-ஜோர்டானிய-சிரியாக் கூட்டணிக்கும் இடையிலான 6 நாள் போரின் விளைவாக மேற்குக் கரை, காசா பகுதி, சினாய் மற்றும் கோலன் குன்றுகளை இஸ்ரேல் கைப்பற்றியது.
1973: எகிப்து மற்றும் சிரியாவினால் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடைபெற்றது. யோம் கிக்கர் போர் என்று அழைக்கப்படும் சண்டை, போருக்கு முந்தைய நிலையைத் தக்கவைக்க போர் நிறுத்தத்துடன் முடிவுக்கு வந்தது.
2008-ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களை எதிர்கொள்ள காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை எடுத்தது காசா போர் என்று அழைக்கப்படுகிறது. 2009-ல் போர் நிறுத்தம்.
2014: ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியது.
2021: ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலிய போலீசாரும் பாலஸ்தீனியர்களும் மோதிக்கொண்டனர். இந்த மோதல் காஸா பகுதிக்கும் பரவியதையடுத்து, ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் போர் வெடித்துள்ளது. இதற்கு மிக முக்கியமாக கருதப்படுவது அல்-அக்ஸா மசூதி தான். இந்தப் பகுதியில் இஸ்ரேல் காட்டிய அதீத ஆர்வம் தான் தற்போதைய தாக்குதலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் பென் கெவிர் 3 முறை இங்கு வந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹமாஸ், இதனை சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்ல தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
2005 போர் நிறுத்தத்திற்குப் பிறகு 2014-ல் கடுமையான சண்டை நடந்தது. அதன் பிறகு, 3 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க ராக்கெட் தாக்குதல் எதுவும் இல்லை. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் பிரச்சனை மீண்டும் தீவிரமடைந்தது. மே 2021 இல், அல்-அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதல்கள் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ராணுவப் போருக்கு வழிவகுத்தது. கடந்த ஆண்டு இஸ்ரேல் ராணுவத்துடனான மோதலில் 151 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். தற்போது பிரச்சனை பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.
ராக்கெட் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு புதிதல்ல. வான் கவசங்கள் மற்றும் வெடிகுண்டு தங்குமிடங்கள் பொதுவாக ராக்கெட்டுகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இப்போது நேரடியாக எல்லையைத் தாண்டி நகரங்களின் தெருக்களில் துப்பாக்கிச் சூடு நடத்தும் தாக்குதல் உள்ளது.
- இஸ்ரேல் படைகள் காசாவில் ஹமாஸ் அமைப்பினருடன் சண்டையிட்டு வருகின்றன.
- ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இருதரப்பிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் கடந்த இரு தினங்களில் வடக்கு எல்லை மற்றும் தெற்கில் சுற்றுப்பயணம் செய்தார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேலியப் படைகள் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று தெரிவித்தார்.
- இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.
- காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர்.
ஜெருசலேம்:
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இஸ்ரேலின் எல்லையோர நகரங்களில் சில பகுதிகளை ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால் அந்த பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் தொடங்கியுள்ளனர். மேலும், இஸ்ரேல் போர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் இடையிலான மோதலில் இதுவரை 530க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் 2வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இதனால், இஸ்ரேல் - காசா இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
போரை தீவிரப்படுத்தப் போவதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவுறுத்தியுள்ளார்.
- ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 250 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
- போரை தீவிரப்படுத்த உள்ளதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் அறிவுறுத்தினார்.
ஜெருசலேம்:
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 250 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதேபோல், ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிசும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போரை தீவிரப்படுத்தப் போவதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்த உள்ளோம் எனவும் அறிவித்துள்ளார். இதனால் காசா பகுதியில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.






