என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேலில் குண்டு வெடிப்பு- பயந்து நடுங்கும் குடும்பம்! வைரலாகும் வீடியோ
    X

    இஸ்ரேலில் குண்டு வெடிப்பு- பயந்து நடுங்கும் குடும்பம்! வைரலாகும் வீடியோ

    இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது.

    இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 300 ஆகவும், காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி 230 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.

    காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதால் அங்குள்ள பொதுமக்களை வெளியேறும்படி இஸ்ரேல் அதிபர் கேட்டுக் கொண்டார்.

    இதற்கிடையே, ஹமாஸ் தாக்குதலால் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது. 2000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள குடியிருப்புகளைக் கைப்பற்றிய ஹமாஸ் பயங்கரவாதிகளால் இஸ்ரேலிய குடும்பம் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி, குண்டு சத்தங்களுக்கு மத்தியில் இந்த குடும்பம் பயத்தில் உறைந்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இவர்களைப் போன்ற பல குடும்பங்கள் இஸ்ரேலில் பிணைக் கைதிகளாக சிக்கி தவித்து வருவதாக தகவல் வௌியாகி உள்ளது.

    Next Story
    ×