search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பதிலடி தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி: இஸ்ரேல் அறிவிப்பு
    X

    பதிலடி தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி: இஸ்ரேல் அறிவிப்பு

    • ஹமாஸ் தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்
    • இஸ்ரேலின் பதிலடியில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்

    யூத மதத்தினருக்கான உலகின் ஒரே நாடான இஸ்ரேலுக்கும் அதன் அண்டையில் உள்ள பாலஸ்தீனத்திற்கும் பல வருடங்களாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. அவ்வப்போது இரு தரப்பினரும் பரஸ்பர ராணுவ தாக்குதல்களில் ஈடுபடுவதும் பிறகு சில மாதங்கள் தாக்குதல் நிறுத்தம் நடைபெறுவதும் வழக்கம். இஸ்ரேலுக்கெதிராக பாலஸ்தீனத்தில் பல பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    நேற்று காலை, பாலஸ்தீனித்தின் ஹமாஸ் உள்ளிட்ட பல பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேலின் பல பகுதிகளில் வான், தரை, மற்றும் கடல் வழியாக ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது. எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இத்தாக்குதலால் இஸ்ரேலில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்; 1800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

    "ஹமாஸ் அமைப்பு தனது செயலுக்கான விலையை கொடுக்க போகிறது" என எச்சரித்த இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்திருக்கிறது.

    இஸ்ரேலில் சனிக்கிழமையன்று நடைபெற்றதை போன்ற சம்பவம், இனி எப்போதும் நடைபெறாதவாறு பார்த்து கொள்ளப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தன் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்தார்.

    இந்நிலையில், இரு நாட்டிற்கும் இடையே உள்ள காசா முனை (Gaza Strip) பகுதியில் இஸ்ரேலிய ராணுவ படை நடத்திய பதிலடி தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டவர்கள் பிணைக்கைதிகளாக உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ படை தெரிவித்திருக்கிறது.

    மேலும் பல போராளிகளின் மறைவிடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அங்கு இஸ்ரேலிய படையினர் இல்லாத நகரமே இல்லை எனுமளவிற்கு எதிர்தாக்குதலை தீவிரமாக்கியுள்ளது இஸ்ரேல்.

    பயங்கரவாதிகளின் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்க கூடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×