இஸ்ரேலில் உள்ள ஆயிரக்கணக்கான கேரள மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்

பாலஸ்தீன ஊடுருவல்காரர்கள் இங்கு வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். தெற்கு இஸ்ரேல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான கேரள மக்கள் பணிபுரிகின்றனர்.
இஸ்ரேலில் உள்ள ஆயிரக்கணக்கான கேரள மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்
Published on

இஸ்ரேல் மீது, பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இஸ்ரேலில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களின் நிலையை அவர்கள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கிவிட்டன. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை காப்பாற்ற நமது நாடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சூழலில் இஸ்ரேலில் இருக்கும் கேரள மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக பதுங்கு குழிகளை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது. இது குறித்து அங்கு 8 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரியும் கேரளாவை சேர்ந்த ஷைனிபாபு என்பவர் கூறுகையில், பாலஸ்தீன ஊடுருவல்காரர்கள் இங்கு வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

தற்போது தெற்கு இஸ்ரேல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான கேரள மக்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் மருத்து வமனையில் செவிலியர்க ளாகவும், தனியாக வசிக்கு முதியோர்களுக்கு பராமரிப்பாளர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் போரினால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக அவர்கள் இஸ்ரேலில் உள்ள பதுங்கு குழிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். நானும் தற்போது பதுங்கு குழியில் தான் உள்ளேன். கடந்த காலங்களில் இதுபோன்ற சூழ்நிலைகள் இருந்துள்ளன. ஆனால் தற்போது மிகவும் வலுவானதாக தெரிகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com