search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் மேகாலயா எம்.பி., வான்விரோய் கர்லூகி
    X

    இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் மேகாலயா எம்.பி., வான்விரோய் கர்லூகி

    • காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி 230 பேர் பலியாகினர்.
    • ஜெருசலேமுக்கு மேகாலயா எம்.பி., வான்விரோய் கர்லூகி தனது குடும்பத்துடன் புனிய யாத்திரை சென்றார்.

    இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 300 ஆகவும், காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி 230 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.

    காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதால் அங்குள்ள பொதுமக்களை வெளியேறும்படி இஸ்ரேல் அதிபர் கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில், இஸ்ரேலில் போருக்கு மத்தியில் மேகாலயா எம்.பி., வான்விரோய் கர்லூகி சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜெருசலேமுக்கு மேகாலயா எம்.பி., வான்விரோய் கர்லூகி தனது குடும்பத்துடன் புனிய யாத்திரை சென்றார்.

    இந்நிலையில், போர் பகுதி அருகே சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், வான்விரோய் கர்லூகி பாதுகாப்பாக நாடு திரும்ப வழிவகை செய்வதாக மேகாலயா முதல்வர் உறுதி செய்துள்ளார்.

    Next Story
    ×