என் மலர்
இஸ்ரேல்
- இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன.
- இதைச் செய்யாமல் மவுனம் காப்பவருக்கு இஸ்ரேலில் கால் வைக்க தகுதி இல்லை.
ஜெருசலேம்:
இஸ்ரேல், காசா இடையிலான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களை அழிக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் முக்கியத் தளபதி கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுப்போம் என ஈரான் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் 200-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியது. ஹைபர்சோனிக் வகை ஏவுகணை மூலம் இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாகஅவர் கூறியதாவது:
இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர். இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. இதனை செய்யாமல் மவுனம் காக்கும் யாருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க தகுதி கிடையாது. ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி மற்றும் தற்போது ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவு கூரப்படுவார் என தெரிவித்தார்.
- கடுமையான போரின் மத்தியில் நாங்கள் இருக்கிறோம்.
- இஸ்ரேலின் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்போம்.
பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு முதல் 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.
அவற்றை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்து வரும் சூழலில் மக்கள் பாதுகாப்பு பங்கர்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், "ஈரான் போர்க்குணமிக்க நாடு அல்ல, ஆனால் அது எந்த அச்சுறுத்தலுக்கும் எதிராக உறுதியாக நிற்கிறது என்பதை நேதன்யாகுவுக்கு தெரியப்படுத்துங்கள். இது எங்களது சக்தியின் ஒரு பகுதி மட்டும்தான். ஈரானுடன் மோதலில் ஈடுபட வேண்டாம்," என்று கூறி இஸ்ரேலுக்கு ஈரான் அதிபர் பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது எக்ஸ் தள பதிவில், "இன்று லெபனானில் வீழ்ந்த எமது மாவீரர்களின் குடும்பங்களுக்கு எனது இதயத்தின் ஆழத்திலிருந்து என் இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன். கடவுள் அவர்களின் இரத்தத்தை ஆசீர்வதிக்கட்டும். நம்மை அழிக்க முயற்சிக்கும், ஈரானின் தீய நிலைக்கோட்டிற்கு எதிராக கடுமையான போரின் மத்தியில் நாங்கள் இருக்கிறோம்."
"இது நடக்காது - ஏனென்றால் நாம் ஒன்றாக நிற்போம், கடவுளின் உதவியால் - நாங்கள் ஒன்றாக வெல்வோம். நாங்கள் தெற்கில் கடத்தப்பட்டவர்களையும், வடக்கில் உள்ள எங்கள் குடியிருப்பாளர்களையும் திருப்பித் தருவோம். இஸ்ரேலின் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்போம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- லெபனானில் போர் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
நியூயார்க்:
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஈரானில் இருந்து 100க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. இதனால் ஏவுகணை தாக்குதலை குறிக்கும் வகையில் இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான் இந்த பதிலடி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடையும் மோதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்த பிறகு விரிவடைவதை நான் கண்டிக்கிறேன். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எங்களுக்கு முற்றிலும் போர் நிறுத்தம் தேவை" என்று அதில் அன்டோனியோ குட்டரெஸ் பதிவிட்டுள்ளார்.
தனது மற்றொரு பதிவில், "லெபனானில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதைப் பற்றி நான் மிகவும் கவலையடைகிறேன். உடனடி போர் நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
லெபனானில் போர் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்" என்று அதில் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
- தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
- இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
டெல் அவிவ்:
இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய பிரஜைகளும் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றமாறு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக வெளியாகி உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
உள்ளூர் அதிகாரிகளால் (https://www.oref.org.il/eng) அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தயவு செய்து எச்சரிக்கையுடன் இருங்கள், தேவையற்ற பயணங்களை நாட்டிற்குள் தவிர்க்கவும் மற்றும் பாதுகாப்பு தங்குமிடங்களுக்கு அருகில் இருக்கவும். தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் எங்கள் நாட்டவர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.
ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தூதரகத்தின் 24 x7 ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளவும்:
தொலைபேசி எண்கள்:
A. +972-547520711
B. +972-543278392
மின்னஞ்சல்: cons1.telaviv@mea.gov.in
இந்தியப் பிரஜைகள் யாராவது தூதரகத்தில் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால், தயவுசெய்து இதற்கான இணைப்பில் (https://forms.gle/ftp3DEXgJwH8XVRdA) பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது.
இஸ்ரேல்:
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.
ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது.
இதையடுத்து ஈரான் ஏவிய ஏவுகணைகள் இஸ்ரேலில் விழாத வகையில் வானிலேயே அயன் டோம் இடைமறித்து அழிக்கிறது.
மழையாக பொழியும் ஏவுகணைகளை தடுத்து இஸ்ரேல் இரும்பு கோட்டையாக இருந்து காக்கிறது.
- ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
- மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.
இஸ்ரேல்:
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.
ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாகி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேலை குறிவைத்து ஏவப்படும் ஏவுகணைகளை தகர்க்குமாறு அமெரிக்க படைகளுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்.
- மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரேல்:
பாலஸ்தீனத்தின் காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த நிலையில் ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாய்டு ஆஸ்டின் கூறியதாவது:-
இஸ்ரேலை பாதுகாப்பதற்கான உரிமை அந்நாட்டுக்கு இருக்கிறது. இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போன்று, இஸ்ரேலின் வடக்கு எல்லைகளில் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தாக்குதல்கள் நடத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய, அதன் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்த வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம்.
மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அமெரிக்காவின் கூட்டாளிகளுக்கு, ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு இயக்கங்களிலிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதில் அமெரிக்கா வலுவாக உள்ளது.
அதேபோல, போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை தடுப்பதிலும் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக ராணுவ தாக்குதல்களை நிகழ்த்தினால் ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.
ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாகிறது.
- மக்களின் நலன்களை விட பிராந்திய மோதல்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
- நமது இரு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் சமாதானமாக இருக்கும்.
ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் கொல்லப்பட்டதை யடுத்து இஸ்ரேலை பழித் தீர்ப்போம் என்று ஈரான் தெரிவித்தது. இந்த நிலையில் ஈரான் அரசுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன் யாகு நேரடி எச்சரிக்கை விடுத்தும், ஈரான் மக்களுக்கு ஆதரவாக தெரிவித்தும் உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-
இஸ்ரேல் உங்களுடன் நிற்கிறது என்பதை ஈரான் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், உங்களை அடி பணியச் செய்யும் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
ஈரான் அரசு தனது சொந்த மக்களின் நலன்களை விட பிராந்திய மோதல்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த அரசு ஈரானை ஆழமான இருளிலும் ஆழமான போரிலும் ஆழ்த்துகிறது.
இந்த ஆட்சி உங்களை படுகுழிக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது. பெரும் பாலான ஈரானியர்களுக்கு இந்த அரசாங்கம் தங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை என்பது தெரியும்.
உங்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால் மத்திய கிழக்கு முழுவதும் வீணான போர்களுக்காக பில்லியன் கணக்கான டாலர்களை வீணாக்குவதை நிறுத்திவிடும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தத் தொடங்கும்.
அணு ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டுப் போர்களுக்காக விரயமாக்கப்பட்ட பணம் அனைத்தும் உங்கள் குழந்தைகளின் கல்விக்காகவும், உங்கள் உடல்நலத்தை மேம்படுத்துவதற்காகவும், நாட்டின் உள்கட்டமைப்பு, தண்ணீர், கழிவுநீர் மற்றும் உங்களுக்குத் தேவையான மற்ற எல்லா விஷயங்களிலும் முதலீடு செய்யப்பட்டதா என்று கற்பனை செய்து பாருங்கள்.
ஈரான் சுதந்திரமாக இருக்கும் காலம், மக்கள் நினைக்கும் அந்த தருணம் மிக விரைவில் வரும். யூத மக்கள்-பாரசீக மக்கள் இறுதியாக சமாதானமாக இருப்பார்கள். நமது இரு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் சமாதானமாக இருக்கும்.
ஹமாஸ் மற்றும் ஹிஸ் புல்லாவை நீங்கள் ஆதரிக்கவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் உங்கள் தலைவர்கள் ஆதரிக்கிறார்கள். உங்களுடன் இஸ்ரேல் துணையாக நிற்கிறது என்றார்.
- மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் பற்றி பிரதமர் நேதன்யாகுவிடம் பேசினேன்.
- சூழல் மோசமடையாமல் தடுத்து பிணைக்கைதிகள் பாதுகாப்பான முறையில் விடுதலை செய்யப்பட வேண்டும்
லெபனான்
பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கடந்த ஒரே வாரத்தில் 1000 துக்கும் அதிகமான லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடியும், அண்டை நாடான சிரியாவுக்க்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கடந்த வெள்ளிக்கிழமைஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தலைநகர் பெய்ரூட்டில் உயிரிழந்தார். அவ்வமைப்பின் உயர் மட்டத் தலைவர்கள் 20 பேரும் உயிரிழந்தனர்.
அமைதி
இருப்பினும் லெபனான் மீதான வான்வழி மற்றும் தாரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் நேற்றைய தினம் [செப்டம்பர் 30] அலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மேற்குஆசியாவில் நிலவும் சூழல் பற்றி பிரதமர் நேதன்யாகுவிடம் பேசினேன். பயங்கரவாதத்துக்கு உலகத்தில் இடம் கிடையாது. பிராந்தியத்தில் நிலவும் சூழல் மோசமடையாமல் தடுத்து பிணைக்கைதிகள் பாதுகாப்பான முறையில் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும். அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
லெபனான் சூழல் கைமீறிச் சென்றால் ஹாமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாகச் சிக்கியுள்ள இஸ்ரேலியர்களுக்கு ஆபத்து நேரும் என்ற முகாந்திரத்தில் நேதன்யாகுவிடம் மோடி தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியதாகத் தெரிகிறது .
- ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.
ஜெருசலேம்:
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து கடந்த வாரம் முதல் இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் படுகாயம் அடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து, லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா கமாண்டர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரே வாரத்தில் லெபனானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். போர் பதற்றம் காரணமாக மக்கள் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.
இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள தாஹியே பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
இந்நிலையில், லெபனான் மீது நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மற்றொரு உயர்மட்ட தலைவரான நபில் கவுக் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் முக்கிய தலைவர்களை இழந்து வருவது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
- லெபனான் ராணுவத்தை விட வலிமையான ஒரு படையாக மாற்றினார்.
- ஹிஸ்புல்லாவை அரசியல் மற்றும் ராணுவ சக்தியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஹிஸ்புல்லா இயக்க தலைவராக 32 ஆண்டுகளாக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலுக்கு கடும் சவாலாக விளங்கினார்.
1960-ம் ஆண்டு பெய்ரூட்டின் கிழக்கு போர்ஜ் ஹம்மூத் பகுதியில் பிறந்தவர். அவரது தந்தை காய்கறி கடை நடத்தி வந்தார். ஹசனின் இளமைக் காலத்தில் லெபனான் உள்நாட்டு போரில் சிக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து லெபனானை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.
இதையடுத்து இஸ்ரேலை வீழ்த்த ஹிஸ்புல்லா இயக் கம் உருவாக்கப்பட்டது. இதில் ஹசன் நஸ்ரல்லா இணைந்தார். 1992-ம் ஆண்டு அப்போதைய ஹிஸ் புல்லா தலைவராக இருந்த அப்பாஸ் அல்-முசாவி, இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் அந்த இயக்கத்துக்கு தனது 32-வது வயதில் ஹசன் நஸ்ரல்லா தலைவரானார்.
தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுடனான போரை நஸ்ரல்லா தொடர்ந்து முன்னின்று நடத்தினார். அங்கிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின் வாங்கியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு எதிரான முதல் அரபு வெற்றியை ஹெஸ்பொலா அடைந்து விட்டதாக நஸ்ரல்லா அறிவித்தார்.

மத்திய கிழக்கில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஈரானுடன் நெருக்கமான தொடர்பு களைக் கொண்ட அவர் அதுமட்டுமல்லாது ஹிஸ்புல்லாவை ஒரு அரசியல் மற்றும் ராணுவ சக்தியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
அவரது தலைமையின் கீழ், பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் மற்றும் ஈராக், ஏமனில் உள்ள போராளிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்த, ஈரானிடம் இருந்து ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளையும் பெற்றார். ஹிஸ்புல்லா இயக்கத்தை, லெபனான் ராணுவத்தை விட வலிமையான ஒரு படையாக மாற்றினார்.
லெபனான் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஹிஸ்புல்லா இயக்கம் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- நெதன்யாகுவின் நிலைப்பாடு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த முன்மொழிவுக்கான நம்பிக்கையை தகர்த்தது.
- லெபனான் தெற்குப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டார்.
இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடான லெபனானுக்கும் இடையே தீராப்பகை நிலவியது. குறிப்பாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடுக்க தொடங்கிய நாளில் இருந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துகிறது. இருதரப்பு மோதல் பிராந்திய அளவில் பெரிய போராக வெடிக்கும் அபாயம் இருப்பதாக உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.
இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான முழு வலிமையான ராணுவத் தாக்குதல்களை, அதன் ராக்கெட் வீச்சை நிறுத்தும் வரை தொடர இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நாங்கள் முழு பலத்துடன் ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து தாக்குவோம். எங்கள் எல்லா இலக்குகளையும் அடையும் வரை நாங்கள் நிறுத்த மாட்டோம், அவற்றில் முக்கியமானது வடக்கில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்புவது என்றார்.
நேதன்யாகுவின் இந்த நிலைப்பாடு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த முன்மொழிவுக்கான நம்பிக்கையை தகர்த்தது.
முன்னதாக, அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டின் இடையே அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அமைதி பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு ஏதுவாக 21 நாள் போர் நிறுத்தத்தை உடனடியாக அறிவிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
லெபனான் தெற்குப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.






