என் மலர்tooltip icon

    கனடா

    • புகையிலை பொருட்களில் சுகாதார எச்சரிக்கைகளை விடுப்பது என்பது, அத்தியாவசிய தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்க உதவும்.
    • உலக அளவில் ஒவ்வொரு சிகரெட் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்கும் முதல் நாடாக கனடா மாறவுள்ளது.

    டொரண்டோ:

    கனடா நாட்டில் சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை தடுப்பதற்கான நோக்கில் ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

    இதுபற்றி கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான மந்திரி கரோலின் பென்னட் செய்தியாளர்களிடம் கூறும்போது, புகையிலை பொருட்களில் தனியாக இதுபோன்ற சுகாதார எச்சரிக்கைகளை விடுப்பது என்பது, அத்தியாவசிய தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்க உதவும்.

    சமூக சூழ்நிலைகளால் ஒரு முறை சிகரெட் புகைக்க செல்லும் இளைஞர், சிகரெட் பாக்கெட்டின் மீது உள்ள எச்சரிக்கை வாசகங்களை புறந்தள்ளி விட்டு செல்கிறார். இது தவிர்க்கப்படும் என கூறியுள்ளார்.

    இந்த எச்சரிக்கை பற்றிய புதிய மாற்றத்திற்கான ஆலோசனை காலம் இன்றில் இருந்து தொடங்க இருக்கிறது. வருகிற 2023ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இருந்து புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என அரசு எதிர்பார்க்கிறது.

    அந்த சிகரெட்டுகளின் மீது பதிக்கப்படும் சரியான வாசகம் மாற்றப்படலாம் என கூறியுள்ள பென்னட் தற்போது, ஒவ்வொரு முறை இழுக்கும்போதும் விஷம் உள்ளே செல்கிறது என்ற வாசகம் ஒப்புதலுக்காக உள்ளது என்று கூறியுள்ளார்.

    இதனால் உலக அளவில், ஒவ்வொரு சிகரெட் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்கும் முதல் நாடாக கனடா மாறவுள்ளது.

    • பத்மாசனத்தில் அடி வயிறு அமுக்கப்படுவதால் அதிக வயிற்று தசை குறையும், இடை பெருக்காது.
    • பெண்கள் திருமணத்திற்கு முன்பே இந்த ஆசனம் செய்தால் திருமணமானவுடன் சுகப்பிரசவம் உண்டாகும்.

    செய்முறை

    விரிப்பில் முதலில் கிழக்கு திசை அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். முதலில் பத்மாசனம் போடவும். (இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடையிலும் போட்டு அமரவும்.)

    இப்பொழுது பத்மாசனத்திலேயே இருந்து மெதுவாக அவசரப்படாமல் குப்புறபடுக்கவும். (படத்தை பார்க்கவும். ஸ்டெப் 1 , ஸ்டெப் 2)

    இரு கைகளையும் இருதய பக்கத்தில் வைத்து மூச்சை இழுத்துக்கொண்டே மெதுவாக தலையையும், கைகளையும் உயர்த்தி மேலே பார்க்கவும். அந்நிலையில் மூச்சடக்கி ஒரு பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு தரையில் நெற்றியை வைக்கவும்.

    பின் மெதுவாக கைகளை ஊன்றி எழுந்து பத்மாசனத்திலேயே அமரவும். பின் பத்மாசனத்திலிருந்து சாதாரணமாக அமரவும்.

    பலன்கள்

    தோள்கள், மார்பு, வயிறு, இடை முதலியவற்றில் தசைகளும் கட்டுக் கோப்பாக இருக்கும். அதனைச் சார்ந்த உள் உறுப்புகளும் வளமாக இயங்கச் செய்யும், இந்த ஆசனம் செய்தால் மார்பக புற்று நோய் நிச்சயம் வராது.

    தாய்மார்கள் தயவு செய்து உங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை இளம் வயதிலியேயே இந்த ஆசனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி தினமும் காலை, மாலையில செய்ய சொல்லுங்கள். வளர்ந்து வரும் காலங்களில் அவர்களுக்கு மார்பக புற்று நோய் வராது. திருமணம் ஆன பிறகும், குழந்தை பிறந்த பிறகும், மார்பக கட்டிகள் வராது. மேலும் இளமையாகவே இருப்பார்கள்.

    பத்மாசனத்தில் அடி வயிறு அமுக்கப்படுவதால் அதிக வயிற்று தசை குறையும், இடை பெருக்காது. மாதவிடாய் பிரச்சினைகள் வராது. செரிமானம் நன்கு நடக்கும். குடல் சுத்தமாகின்றது. சிறுநீரகம் சம்மந்தமான பிரச்சினைகள் வராது.

    தொடை தசைகள் பெரிதாக இருப்பது பெண்களின் அழகு தோற்றத்தை பாதிக்கும். இந்த ஆசனம் செய்வதால் தொடைப் பகுதியில் உள்ள அதிக தசைகள் எளிதாக எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் குறைந்து அழகான தோற்றத்துடனும், இளமையுடனும் திகழலாம்.

    மூட்டுக்கள் பலம் பெரும். மூட்டு வலி வராது. பெண்கள் திருமணத்திற்கு முன்பே இந்த ஆசனம் செய்தால் திருமணமானவுடன் சுகப்பிரசவம் உண்டாகும்.

    முகம், கன்னம் தசைகள் பளபளப்பாகவும், சுருக்கம் இல்லாமலும் இருக்கும்.

    சிலருக்கு தோள்பட்டை சமமாக இல்லாமல் சற்று இறங்கியிருக்கும். அதனை இவ்வாசனம் செய்தால் சரி செய்துவிடும். நுரையீரல் நன்கு இயங்கும். சளி பிடித்தல், ஜலதோஷம் நீங்கும்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    ×