என் மலர்tooltip icon

    கனடா

    • ரெஜினா மாகாணத்தில் நடந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது என்று துணை கமிஷனர் பிளாக்மோர் தெரிவித்தார்.
    • கனடா வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் கொடூரமான சம்பவங்களில் இதுவும் ஒன்று.

    ரெஜினா:

    கனடாவின் ரெஜினா மாகாணம், ஜேம்ஸ் ஸ்மித் கிரீ நேசன் மற்றும் வடக்கு சஸ்காடூனில் உள்ள வெல்டன் கிராமத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய இந்த தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

    இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 2 பேர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரெஜினா மாகாணத்தில் நடந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது என்றும். 13 இடங்களில் இந்த தாக்குதல் நடத்திருப்பதாகவும், துணை கமிஷனர் பிளாக்மோர் தெரிவித்தார்.

    சந்தேகிக்கப்படும் குற்றவாளிகள்
    சந்தேகிக்கப்படும் குற்றவாளிகள்

    கனடா வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் கொடூரமான சம்பவங்களில் இதுவும் ஒன்று. கடந்த 2020ம் ஆண்டு போலீஸ் அதிகாரி போல் மாறுவேடமிட்ட நபர் நோவா ஸ்கோடியா மாகாணத்தின் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து எரித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர். 2019 இல் டொராண்டோவில் ஒரு நபர், நடைபாதையில் நடந்து சென்றவர்கள் மீது வேனை ஏற்றியதில், 10 பேர் கொல்லப்பட்டனர்.

    • சரியான நேரத்தில் பாராசூட்டை திறக்காததால் இந்த விபரீதம் நடத்துள்ளது.
    • ‘டிக்-டாக்’கில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரை பின்தொடர்கின்றனர்.

    ஒட்டாவா :

    கனடாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி டான்யா பர்தாசி. 21 வயதான இவர் கடந்த 2017-ம் ஆண்டின் 'மிஸ் கனடா' அழகி போட்டியில் அரைஇறுதி சுற்று வரை சென்று புகழ் பெற்றார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்து வந்த டான்யா பர்தாசி 'டிக்-டாக்' பிரபமும் கூட. 'டிக்-டாக்'கில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரை பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் டான்யா பர்தாசி கனடாவின் பிரபல 'ஸ்கைடைவிங்' பயிற்சி நிறுவனத்தில் 'ஸ்கைடைவிங்' பயிற்சி பெற்று வந்தார். அவர் பலமுறை பயிற்சியாளருடன் சேர்ந்து விமானத்தில் இருந்து குதித்து 'ஸ்கைடைவிங்' செய்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று டான்யா பர்தாசி முதல் முறையாக தனியாக விமானத்தில் இருந்து குதித்து 'ஸ்கைடைவிங்' செய்தார். ஆனால் அவர் தரையிறங்குவதற்கு முன்பு சரியான நேரத்தில் பாராசூட்டை திறக்க தவறிவிட்டார். தரையில் இருந்து மிகவும் குறைவான உயரத்தில் இருந்தபோது தாமதமாக பாராட்டை திறந்ததால் டான்யா பர்தாசி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 'டிக்-டாக்' பிரபலம் டான்ய பர்தாசி 'ஸ்கைடைவிங்' விபத்தில் உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிபோட்டியில் பாப்லோ புஸ்டா, ஹல்க்ராசுடன் மோதினார்.
    • இதில் பாப்லோ புஸ்டா வெற்றி பெற்றுக் கோப்பையை கைப்பற்றினார்.

    டொரண்டோ:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் ஸ்பெயின் வீரர் பாப்லோ புஸ்டா, போலந்து வீரர் ஹுபர்ட் ஹல்க்ராசை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முதல் செட்டை ஹல்க்ராஸ் 6-3 என கைப்பற்றினார். அடுத்து சுதாரித்துக் கொண்ட பாப்லோ புஸ்டோ அடுத்த இரு செட்களை கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், புஸ்டா 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஹல்கிராசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிபோட்டியில் சிமோனா ஹாலெப், மியாவுடன் மோதினார்.
    • இதில் சிமானோ ஹாலெப் வென்று கோப்பையை கைப்பற்றினார்.

    டொரண்டோ:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் ரோமானியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாத் மியாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முதல் செட்டை ஹாலெப் 6-3 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை மியா 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ஹாலெப் 6-3 என கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், சிமோனா ஹாலெப் 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் மியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
    • காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் முன்னணி ஜோடியை சானியா மிர்சா ஜோடி வீழ்த்தியது.

    ஒட்டாவா:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் இணைந்து விளையாடி வருகிறார்.

    நேற்று முன்தினம் நடந்த முதல்சுற்றில் சானியா- மேடிசன் ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த நிலையில் காலிறுதிக்கு முந்தய சுற்றில் இந்திய-அமெரிக்க ஜோடி, ரஷியாவின் முன்னணி வீராங்கனைகள் வெரோனிகா குடெர்மெடோவா மற்றும் எலிஸ் மெர்டென்சை இன்று எதிர்கொண்டனர். இந்த போட்டியில் சானியா- மேடிசன் ஜோடி 3-6, 6-4, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    • போப் பிரான்சிஸ் கனடா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • இந்த கிரீடம் வரலாற்றுச்சிறப்பு மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

    டொராண்டோ :

    உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் தலைவர், போப் பிரான்சிஸ் ஆவார்.

    அவர் கனடா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்பட்ட உறைவிட பள்ளிகளில் தங்கிப்படித்து வந்த பழங்குடியின மாணவர்கள், உடல் ரீதியில், பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டது குறித்து அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியதோடு மட்டுமின்றி, அதற்காக அவர் மனதார மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

    அங்கு அல்பெர்டா மாகாணத்தில் உள்ள மாஸ்க்வாசிஸ் நகரத்தில் 19-ம் நூற்றாண்டில் தேவாலய பள்ளியாக விளங்கிய எர்மெனிஸ்கின் உறைவிட பள்ளிக்கு சென்றிருந்தபோதுதான், போப் ஆண்டவர் இந்த மன்னிப்பை கேட்டார்.

    அதைத் தொடர்ந்து அங்கு அவருக்கு ஒரு மாறுபட்ட அனுபவம் காத்திருந்தது.

    அங்கு அவருக்கு பழங்குடியின மக்களின் பாரம்பரிய கிரீடத்தை அணிவித்தனர். அந்த கிரீடத்தில் வெண்மையான வெள்ளை சிறகுகள், வண்ணமயமான மணிகள் இடம் பெற்றிருந்தன.

    அந்த காலத்தில் கத்தோலிக்க திருச்சபை உறைவிட பள்ளியில் துன்புறுத்தல்களுக்கு மத்தியில் உயிர் தப்பிய சீப் வில்டன் லிட்டில்சைல்ட் என்பவர் அந்த கிரீடத்தை போப் ஆண்டவருக்கு அணிவித்தபோது அங்கிருந்த பழங்குடியின மக்கள் அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அப்போது தனக்கு பாரம்பரிய கிரீடம் அணிவித்தவரின் கைகளில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இந்த கிரீடம், பூர்வீக அமெரிக்க படைத்தளபதிகள், போர் வீரர்கள் அணியும் மரியாதையின் சின்னமாக விளங்கியது, வரலாற்றுச்சிறப்பு மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

    • போப் பிரான்சிஸ் 6 நாள் பயணமாக கனடா சென்றுள்ளார்.
    • போப் பிரான்சிஸ் பழங்குடியின மக்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் மத்தியில் உரையாற்றினாா்.

    ஒட்டாவா :

    கனடாவில் 1900-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவர்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட பள்ளிகளில் தங்கி கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட்டனா்.

    அப்படி தேவாலய பள்ளிகளில் படித்த பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மாணவர்கள் உடல் ரீதியிலும், பாலியல் ரீதியிலும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் தற்போதைய அரசு இதை ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பும் கோரியது.

    இந்த நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் 6 நாள் பயணமாக கனடா சென்றுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்வாக அல்பெர்டா மாகாணத்தின் தலைநகர் எட்மான்டனில் 19-ம் நூற்றாண்டில் தேவாலய பள்ளிக்கூடமாக இருந்த மிகவும் பாழடைந்த கட்டிடத்துக்கு சென்று அங்கு கூடியிருந்த பழங்குடியின மக்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் மத்தியில் உரையாற்றினாா்.

    அப்போது 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் பழங்குடியின மாணவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார்.

    • மர்ம நபர் சுட்டத்தில் சிலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
    • போலீசாரை நோக்கி மர்ம நபர் தாக்குதல் நடத்தினார்.

    வான்கூவர்:

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான் கூவர் நகரில் வீடற்ற மக்கள் சாலைகளில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார்.

    இதில் பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். ஆனால் மர்ம நபர் சுட்டத்தில் சிலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அப்போது போலீசாரை நோக்கி மர்ம நபர் தாக்குதல் நடத்தினார். இதையடுத்து அவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மர்ம நபர் குறித்த விவரங்களையும், துப்பாக்கி சூடுக்கான காரணத்தையும் போலீசார் வெளியிட வில்லை. இது தொடர்பாக போலீஸ் தலைைம அதிகாரி காலிப் பயானி கூறும்போது,

    துப்பாக்கி சூடுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். துப்பாக்கி சூடு நடத்தியவருக்கும் பலியானவர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருந்ததா என்பது குறித்து தெரியவில்லை. ஆண் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றார். அமெரிக்காவை ஒப்பிடும்போது கனடாவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பது அரிதானது. ஏனென்றால் அந்நாட்டில் துப்பாக்கி வாங்க கடும் கட்டுப்பாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
    • ரிக்மண்ட் ஹில் விஷ்ணு கோவிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

    ஒட்டாவா:

    கனடா ஆண்டோரியோவில் ரிச்மண்ட் ஹில் யாங்கே தெருவில் பிரசித்தி பெற்ற விஷ்ணு கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அமைந்துள்ளது.

    நேற்று இரவு இந்த காந்தி சிலையை யாரோ சேதப்படுத்தினர். மேலும் கரி பூசி அவமதிப்பும் செய்தனர். இந்த செயலில் ஈடுபட்டது யார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கனடாவில் உள்ள இந்திய துணைத்தூ தரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ரிக்மண்ட் ஹில் விஷ்ணு கோவிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். இது வெறுக்கத்கக்க, காழ்ப்புணர்ச்சி ஆகும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கனடா போலீசாருக்கு தெரிவித்து உள்ளோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கியில் புகுந்த 2 பேர் அதிக ஆயுதங்களை வைத்திருந்தனர். அவர்கள் கவச உடை அணிந்திருந்தனர்.
    • இரண்டு நபர்கள் பற்றிய எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.

    ஒட்டாவா:

    கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமெரிக்க எல்லை அருகே உள்ள வான்கூவர் தீவில் இருக்கும் சானிச்சில் ஒரு வங்கி செயல்பட்டு வருகிறது.

    இந்த வங்கிக்குள் இரண்டு பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தனர். இதைப்பார்த்த வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் வங்கிக்கு விரைந்து வந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர். வங்கிக்குள் இருக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.

    அப்போது 2 மர்ம நபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மர்ம நபர்கள் சுட்டதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    இதற்கிடையே மர்ம நபர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கி அருகே வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, வங்கியில் புகுந்த 2 பேர் அதிக ஆயுதங்களை வைத்திருந்தனர். அவர்கள் கவச உடை அணிந்திருந்தனர்.

    6 போலீஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்றார்.

    ஆனால் அந்த இரண்டு நபர்கள் பற்றிய எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை. வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கில் புகுந்தார்களா? அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தடுப்பூசி செலுத்தி இருப்பதால் தற்போது நன்றாக இருப்பதை உணர்கிறேன்.
    • கடந்த 5 மாதங்களில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, "எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    பொது சுகாதார வழி காட்டுதல்களை பின்பற்றி தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். தடுப்பூசி செலுத்தி இருப்பதால் தற்போது நன்றாக இருப்பதை உணர்கிறேன். எனவே நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    கடந்த 5 மாதங்களில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வாரம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஜஸ்டின் ட்ரூடோ நாடு திரும்பி இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    • பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
    • தடுப்பூசி போடாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஒட்டாவா:

    கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர்  பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிக்கப்பட்டது.

    இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

    எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் பொது சுகாதார வழிகாட்டு தல்களைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி இருப்பதால் தற்போது நன்றாக இருக்கிறேன்.

    எனவே, நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நமது சுகாதார அமைப்பையும், மற்றவர்களையும் மற்றும் நம்மையும் பாதுகாப்போம்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஜஸ்டின் ட்ரூடோ முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தனிமைப்படுத்துல் மற்றும் சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்தார்.

    ×