என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
கனடாவில் பரபரப்பு - மேலும் ஒரு சீக்கியர் சுட்டுக் கொலை
- கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் சீக்கிய இளைஞர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
- விசாரணை நடத்திய போலீசார் இது படுகொலை என சந்தேகிக்கின்றனர்.
ஒன்டாரியோ:
கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் சன்ராஜ் சிங் (24) என்ற சீக்கிய இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு காயங்களால் இறந்து கிடந்தார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது மரணத்திற்கு கொலையே காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர், கனடாவில் இந்த மாதத்தில் இது போன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
டிசம்பர் 3-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பதிலளித்த எட்மண்டன் நகர் காவல் துறையினரால் சன்ராஜ் சிங் கண்டுபிடிக்கப்பட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் இந்திய வம்சாவளியான 21 வயது கொண்ட பவன்பிரீத் கவுர் என்ற சீக்கிய இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
ஒரே மாதத்தில் சீக்கியர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடந்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்