என் மலர்
வங்காளதேசம்
- ரெஸ்டாரன்ட் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து கட்டடம் முழுவதும் பரவியது.
- 22 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் ரெஸ்டாரன்ட் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ரெஸ்டாரன்டில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென அனைத்து மாடிகளுக்கும் பரவியது. அந்த கட்டத்தில் மேலும் சில ரெஸ்டாரன்ட்கள், துணிக்கடைகள் செயல்பட்டு வந்துள்ளனர்.

35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் சிக்கித் தவித்த 75 பேரை மீட்டனர். அதில் 42 பேர் மயக்க நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 22 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
- 5-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்றது.
- நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.
டாக்கா:
5-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை எதிர்கொண்டது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் போட்டி முடிவை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதல் 5 பெனால்டி வாய்ப்புகளையும் இரு அணியினரும் கோலாக மாற்றியதால் 5-5 என்ற கணக்கில் சமநிலை நிலவியது. இதையடுத்து, சடன்டெத் முறை அமலுக்கு வந்தது.
இதிலும் இரு அணியினரும் வாய்ப்புகளை தவறவிடாமல் கோல் அடித்ததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை நீடித்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் 11-11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தபோது, ஆட்டத்தை நிறுத்திய நடுவர்கள் வெற்றியாளரை முடிவு செய்ய 'டாஸ்' முறையை கொண்டு வந்தனர்.
டாஸ் போடப்பட்டதில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத வங்காளதேச வீராங்கனைகள் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், மைதானத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். சிலர் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசினர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது.
அதன்பின் போட்டி அதிகாரிகள், நடுவர்கள் இருதரப்பினரையும் கலந்து ஆலோசித்து இந்தியா, வங்காளதேசத்தை கூட்டு சாம்பியன்களாக அறிவித்தனர். இரு அணியின் கேப்டன்களும் கோப்பையை கூட்டாகப் பெற்றுக் கொண்டனர்.
- தேர்தலை நியாயமான முறையில் நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும்- எதிர்க்கட்சி
- ஆளும் அவாமி லீ கட்சி தலைமையிலான அரசாங்கம் அதனை ஏற்கவில்லை.
வங்காளதேசம் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனால் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காளதேச நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.
300 இடங்களில் 264 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டபோது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதன் கூட்டணி கட்சியான ஜதியா கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் மொத்தம் 350 தொகுதிகள் உள்ளன. இதில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே 300 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். ஆனால் ஒரு வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலை நியாயமான முறையில் நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும். அதன் தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆளும் அவாமி லீ கட்சி தலைமையிலான அரசாங்கம் அதனை ஏற்கவில்லை.
இதனால் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மேலும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைவருமான கலீதா ஜியா (வயது 78) வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்ட 5 பள்ளிக்கூடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது.
இந்த பதற்றத்துக்கு மத்தியில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. எனவே தேர்தலை அமைதியான முறையில் நடத்த நாடு முழுவதும் போலீசார், ராணுவத்தினர் என சுமார் 7½ லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
- தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார்.
டாக்கா:
அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தொடர்ந்து 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடுதழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். மேலும், பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு மற்றும் தேர்தல் செயலி செயலிழப்பு ஆகியவற்றுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தனது வாக்கை இன்று பதிவுசெய்தார். அப்போது பேசிய அவர், இந்த நாட்டில் ஜனநாயகம் தொடர வேண்டும் என தெரிவித்தார்.
- ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
- இத்தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
காபூல்:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டம் வரும் 11ம் தேதி மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முஜீப் உர் ரஹ்மான் அணிக்கு திரும்பியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி விவரம் வருமாறு:
இப்ராகிம் ஜட்ரான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஷரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், பசல்ஹக் பரூக்கி, பரீத் அஹ்மத், நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்படின் நைப், ரஷித் கான்.
- அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
- அங்கு 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்கா:
அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தொடர்ந்து 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவிய பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதற்கு ஆளும் கட்சி மறுப்பு தெரிவித்ததால், முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கருதி அவர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கலீதா ஜியா ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சிட்டகாங், காசிபூர் நகரில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்ட 5 பள்ளிக்கூடங்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். கடந்த 16 மணி நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறியதாக தீயணைப்பு சேவை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு மற்றும் தேர்தல் செயலி செயலிழப்பு ஆகியவற்றுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் அங்கு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
- வங்காள தேசத்தில் நாளை 12 வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது
- அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
வங்க தேசத்தில் நாளை 12 வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 350 நாடாளுமன்ற தொகுதிகளில் 50 தொகுதிகள் அரசால் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 300 தொகுதிகளுக்கு நாளை(ஜன.7) தேர்தல் நடைபெறுகிறது
90 பெண்கள், 79 சிறுபான்மையர் உட்பட 1,970 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். ஆளும் கட்சியான அவானி லீக் கட்சி சார்பில் 266 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியான ஜாட்டியா கட்சி 265 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த தேர்தல் ஆளும் கட்சியான அவானி லீக் கட்சிக்கும், எதிர்கட்சியான ஜாட்டியா கட்சிக்கும் இடையேயான போட்டியாக கருதப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. தற்போது செயல்பட்டு வரும் அரசின் தலைமையில் தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக வங்க தேசத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால், கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத புத்த மதம்-இந்து மதம்-கிறிஸ்துவ மதத்தின் ஐக்கிய கூட்டமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வங்க தேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரி காஜி ஹபிபுல் அவால், நம்பகத்தன்மை நிறைந்த தேர்தலில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த தேர்தல் தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் காலை 8 மணிக்கு தொடங்கி, வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்கும் வரை நடைபெரும் என தெரிவித்தார். மேலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
- 9.5 மில்லியன் மக்கள் கிராமின் வங்கிகளால் பயனடைந்தனர்
- 170 உலக பிரபலங்கள் அவர் சார்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினர்
வங்காள தேசத்தின் சிட்டகாங் பல்கலைக்கழக (Chittagong University) பேராசிரியரான முகமது யூனுஸ் (Muhammad Yunus) என்பவர், 1976ல் வறுமையில் வாழ்பவர்களிடம் ஈடாக எதையும் கோராமல் சிறு தொகைகளை கடனாக வழங்கும் கிராமின் வங்கி (Grameen Bank) எனும் பொருளாதார சித்தாந்தத்திற்காக 2006ல் உலக புகழ் பெற்ற நோபல் பரிசை வென்றார்.
2022 ஜனவரி மாத காலகட்டத்தில் சுமார் 9.5 மில்லியன் மக்கள் கிராமின் வங்கியால் பயனடைந்தனர்.
தற்போது 83 வயதாகும் முகமது யூனுஸ், வங்காள தேசத்தில் லாப நோக்கமற்ற (not-for-profit) சேவை உணர்வோடு கிராமின் தொலைதொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான நல நிதியில் சட்ட விதிகளை பின்பற்றாமல் முறைகேடு செய்ததாக யூனுஸ் மற்றும் 3 பணியாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்நாட்டின் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
2023 ஆகஸ்ட் மாதம் உலகளாவிய பிரபலங்கள் 170 பேர் பேராசிரியர் யூனுஸ் மீதான சட்டரீதியான தாக்குதலை நிறுத்துமாறு வங்காள தேச பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
விசாரணை நிறைவுற்ற நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், பேராசிரியர் முகமது யூனுஸ் மற்றும் 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து 6 மாத சிறை தண்டனையும் வழங்கியுள்ளது.
"எந்த விதிமுறைகளுக்கும் பொருந்தாத தீர்ப்பு இது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை" என பேராசிரியர் யூனுஸ் இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.
வங்காள தேச பிரதமர் ஹசினா ஷேக் (Sheikh Hasina) ஒரு முறை, "பேராசிரியர் யூனுஸ், ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சுபவர்" என கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேசத்தில் தீயணைப்பு படையில் முதல் முறையாக பெண்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- இது பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என உள்துறை மந்திரி கூறினார்.
டாக்கா:
உலக அளவில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் தடம்பதித்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்டை நாடான வங்காளதேசத்திலும் தீயணைப்புத் துறையில் பணிபுரிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தலைநகர் டாக்கா அருகே உள்ள புர்பாச்சலில் 15 பெண்கள் தீயணைப்பு வீரர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு முன்னரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பெண்கள் பணிபுரிந்துள்ளனர். ஆனால் தீயணைப்பு வீரர்களாக பெண்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதுதொடர்பாக அந்த நாட்டின் உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கமல் கூறுகையில், இது பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என தெரிவித்தார்.
- நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- கிளென் பிலிப்ஸ், சாண்ட்னர் ஜோடி 70 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தது.
டாக்கா:
வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 172 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 35 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் சான்ட்னெர், கிளென் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டும், அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடி 87 ரன்கள் எடுத்தார்.
8 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர் ஜகிர் ஹசன் பொறுப்புடன் ஆடி 59 ரன்கள் எடுத்தார்.
இதனால் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 144 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டும், சான்ட்னெர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன. ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து நியூசிலாந்து தத்தளித்தது.
7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில் நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
- வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட் வீழ்த்தினார்.
சில்ஹெட்:
நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28-ம் தேதி தொடங்கியது.
டாஸ் வென்ற வங்களாதேசம் முதலில் களமிறங்கியது. அந்த அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் ஹசன் ஜாய் 86 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டும், அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வில்லியம்சன் சதம் அடித்தார்.
இதனால் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது.
வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டும், மோமினுல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ சதமடித்து அசத்தினார்.

இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாண்டோ 105 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 67 ரன்னும், மெஹிதி ஹசன் 50 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டும், இஷ் சோதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
- இலங்கைக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகனான தேர்வு செய்யப்பட்டார்.
- வங்காளதேசம் தனது கடைசி லீக் போட்டியில் நவம்பர் 11-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதுகிறது.
சிட்டகாங்:
டெல்லியில் நேற்று நடந்த உலக கோப்பை லீக் தொடரில் வங்காளதேசம், இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இலங்கை 279 ரன்களில் ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய வங்காளதேசம் 41.1 ஓவரில் 282 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின்போது ஷகிப் அல் ஹசனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் 3 முதல் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, உலக கோப்பை 2023 தொடரில் இருந்து ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.
நவம்பர் 11-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






