என் மலர்
நீங்கள் தேடியது "கலீதா ஜியா"
- வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
- கலீதா ஜியா மீண்டும் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்றனர்.
டாக்கா:
வங்கதேசத்தில் புதிய இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய அரசாங்கம் போலீசாரை களம் இறக்கியதை தொடர்ந்து சுமார் 200 பேர் இறந்தனர். இதனால் வன்முறை தீவிரமான நிலையில் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீண்டும் பிரதமராக பதவியேற்க வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள் நேற்று பெரும் பேரணி நடத்தினர்.
தலைநகர் டாக்காவில் சாலையில் குவிந்த அவர்கள் கட்சிக் கொடிகளை ஏந்தியும், பதாகைகளை சுமந்தபடியும் சென்றனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- பேராசிரியரான முகமது யூனுஸ் 2006ல் உலக புகழ் பெற்ற நோபல் பரிசை வென்றார்.
- முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து, வங்கதேச அரசின் தலைமை ஆலோசகராக நோபர் பரிசு வென்ற முகமது யூனுஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காள தேசத்தின் சிட்டகாங் பல்கலைக்கழக (Chittagong University) பேராசிரியரான முகமது யூனுஸ் (Muhammad Yunus) 2006ல் உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசை வென்றார்.
1976ல் வறுமையில் வாழ்பவர்களிடம் ஈடாக எதையும் கோராமல் சிறு தொகைகளை கடனாக வழங்கும் கிராமின் வங்கி (Grameen Bank) எனும் பொருளாதார சித்தாந்தத்திற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான நல நிதியில் சட்ட விதிகளை பின்பற்றாமல் முறைகேடு செய்ததாக அவருக்கு இந்தாண்டு தொடக்கத்தில் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவுக்கு 2018-ம் ஆண்டு ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






