என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது - வைகோ| MDMK
    X

    விஜய் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது - வைகோ| MDMK

    • தி.மு.க.விற்காக என்னால் முடிந்த அளவிற்கு பிரசாரம் செய்வேன்.
    • ஹிட்லர் மறுபிறவி எடுத்து தற்போது வெள்ளை மாளிகையில் அமர்ந்துள்ளார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை. மயானங்களில் உடல்களை எரிக்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்காக மயானங்களில், சோலார் பேனல் அமைக்க வேண்டும்.

    தி.மு.க. கூட்டணியில் எந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில், ஒருகாலமும் நான் போட்டியிட மாட்டேன். மன நிறைவுடன் பாராளுமன்றத்தில் பணியாற்றி, 1300 முறை பேசியிருக்கின்றேன். தி.மு.க. சமூகநீதிக்கான இயக்கம். கூட்டணி கட்சிகளுடன், சமூக நீதி கடைபிடிக்கப்படும்.

    துத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மிருகங்கள் காட்டில் இல்லாமல் வீட்டில் உள்ளது. ஈவு இரக்கமற்ற மிருகங்கள். இதுவரை இல்லாத சட்டத்தை கொண்டு வந்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். எல்லா ஆட்சியிலும் இதுபோன்று நடந்துள்ளது. இதனை தடுக்க முதலமைச்சர் முயற்சித்து வருகிறார்.

    தி.மு.க.விற்காக என்னால் முடிந்த அளவிற்கு பிரசாரம் செய்வேன். தி.மு.க. கூறினால் அந்த அந்த தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்வேன்.

    விஜய் இப்போது தான் அரசியலில் நுழைந்து பிரவேசம் செய்கிறார். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.

    கடந்த சில தினங்களாக உலகம் மற்றும் இந்திய நாட்டு மக்கள் அவதிகுள்ளாகுவதற்கு மூலக்காரணம் டிரம்ப் தான்.

    ஹிட்லர் மறுபிறவி எடுத்து தற்போது வெள்ளை மாளிகையில் அமர்ந்துள்ளார். அவர் அதிபராக இருப்பதற்கு தகுதியற்றவர். உளறுவதில், கோமாளியை விட லிமிட் இல்லாமல் மோசமாக பேசுகிறார் டிரம்ப்.

    மோடியும், அமித்ஷாவும், தங்களது தகுதிகளை இழந்து, தகுதியில்லாமல் தி.மு.க.வை அழிப்பேன் என்று பேசுகிறார்கள். எதிர்கட்சிகளை மிரட்டி அடியபணிய வைக்கும், பா.ஜ.க. விற்கு தி.மு.க. பற்றி பேச என்ன யோக்கிதம் உள்ளது.

    தமிழ்நாட்டை ஏற்கனவே இருந்த கவர்னர் சீரழித்தார். இப்போது வந்தவரும் சளைத்தவர் அல்ல, அவரை போல செயல்படுவார் என சந்தேகம் எழுகிறது.

    மோடி எவ்வளவு குட்டி கரணம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது. திருச்சியில் அவரை வரவேற்கவே ஆள் இல்லை. ஏன் கைத்தட்டவே ஆள் இல்லை. மோடி தமிழ்நாட்டில் நுழையவே முடியாது என்றார்.

    Next Story
    ×