search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது என்று பிரதமர் மோடி நினைக்கின்றார்- அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு
    X

    எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது என்று பிரதமர் மோடி நினைக்கின்றார்- அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு

    • மக்களுக்கான அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது தி.மு.க.
    • தமிழக அரசு கூட்டுறவு சங்க கடன்களை ரத்து செய்துள்ளது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பட்ஜெட் மற்றும் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தமிழகம் மற்றும் தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் சிலர் பேசி வருகின்றனர். வீடு இல்லாதவர்களை கண்டறிந்து, 8 லட்சம் பேர் அடையாளப் படுத்தப்பட்டு, அவர்களில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பேருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்டுள்ள கனவு இல்லம் மூலமாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட உள்ளன.

    இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம் என்று அண்ணாமலை கூறுகிறார். யாரோ பெத்த பிள்ளைக்கு பெயர் வைப்பது உங்கள் பழக்கம், கருணாநிதியின் கனவு இல்லம் திட்டம் என்பது தமிழக அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    மத்திய அரசு பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்களை வைத்துள்ளது. வரலாறு திருத்தப்படுகிறது. வரலாற்றை மாற்றி அழிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியை நாம் மகான் என்கிறோம். ஆனால் அவர்கள் வேறு கதை சொல்கின்றனர். பொய் சொல்லி, பிரிவு ஏற்படுத்தி, நம்மை ஏமாற்ற நினைக்கின்றனர். இங்குள்ள மக்கள் யாரும் ஏமாறமாட்டார்கள்.

    எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது என்று பிரதமர் மோடி நினைக்கின்றார். தி.மு.க.வை மோடி மட்டு மல்ல, உங்க அப்பன் வந்தாலும் அழிக்க முடியாது. மக்களுக்கான அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது தி.மு.க.

    கல்வி கடன், விவசாய கடன், மகளிர் கடன் ஆகியவற்றை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்யவில்லை. தமிழக அரசு கூட்டுறவு சங்க கடன்களை ரத்து செய்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலமாக பா.ஜ.க. பெரும் ஊழல் செய்துள்ளது.

    90 சதவீத நிறுவனங்கள் பா.ஜ.க.விற்கு தேர்தல் நிதி கொடுத்துள்ளது.கொரோனா தடுப்பூசி தயாரித்த ஜூரம் நிறுவனம் மட்டும் 300 கோடி ரூபாய் பா.ஜ.க.விற்கு நிதி அளித்து உள்ளது.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகம் வெற்றி பெற இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×