search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலினுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லை- ராமதாஸ் தாக்கு
    X

    மு.க.ஸ்டாலினுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லை- ராமதாஸ் தாக்கு

    திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லை என்று ராமதாஸ் பேசினார். #LokSabhaElections2019 #PMK #Ramadoss #MKStalin
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    தென்மாவட்டத்தில் பா.ம.கவுக்கு முதல்முறையாக வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராகுல்காந்தி அறிவித்துள்ள மாதம் ரூ.6000, ஆண்டுக்கு ரூ.72,000 உதவித்தொகை திட்டமானது மாதவருமானம் ரூ.1000-க்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில் பார்த்தால் தமிழகத்தில் இந்த திட்டத்தின் மூலம் யாரும் பயன்பெற முடியாது.

    காங்கிரஸ் ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பு திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை. அதேபோல் 18 ஆண்டுகாலம் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் செய்வதாக கூறியுள்ள திட்டங்களை அப்போது ஏன் செயல்படுத்தவில்லை.

    ஊழலில் கூட்டணி அமைத்த காங்கிரஸ், தி.மு.க பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. பதவி சுகம், வெற்றிக்கனவு ஆகிய அனைத்தும் தேர்தலுக்கு பின் தி.மு.க மறந்துவிட வேண்டிய நிலை ஏற்படும்.

    அந்த ஆசை கருணாநிதியோடு முடிந்துவிட்டது. மு.க.ஸ்டாலினுக்கு கடமையும், கண்ணியமும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அ.தி.மு.க கூட்டணியை ஆதரித்தால் அவர்களது கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு பா.ம.க துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMK #Ramadoss #MKStalin
    Next Story
    ×