என் மலர்
டென்னிஸ்
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் யானிக் ஹாப்மன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஹாப்மனை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- இறுதிப் போட்டியில் நோஸ்கோவாவும், அனிசிமோவாவும் மோதினர்.
- இதில் 2வது செட்டை நோஸ்கோவா கைப்பற்றினார்.
பீஜிங்:
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடைபெற்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
பரபரப்பான இந்த போட்டியில் முதல் செட்டை அனிசிமோவாவும் 2-வது செட்டை நோஸ்கோவாவும் கைப்பற்றினர். சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் கடைசி செட்டை அனிசிமோவா 6-2 என கைப்பற்றினார்.
இறுதியில் அனிசிமோவா 6-0, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் ரூப்லெவ் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரு ரூப்லெவ், ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகா உடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஜப்பான் வீரர் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-1, 6-4 என வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதனால் ரூப்லெவ் தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 2 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் டேனியல் அல்டமையர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா, லிண்டா நோஸ்கோவா மோதினர்
- இந்த போட்டியில் முதல் செட்டை நோஸ்கோவாவும் 2-வது செட்டை பெகுலாவும் கைப்பற்றினர்.
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) லிண்டா நோஸ்கோவா (செக்) ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த போட்டியில் முதல் செட்டை நோஸ்கோவாவும் 2-வது செட்டை பெகுலாவும் கைப்பற்றினர். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் நோஸ்கோவா 7-6 (8-6) 3-வது செட்டை கைப்பற்றினார்.
இதனால் 6-3, 6-1, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நோஸ்கோவா முன்னேறினார். இறுதிப்போட்டியில் நோஸ்கோவாவும் அனிசிமோவாவும் நாளை மோதுகின்றனர்.
- மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கோகோ காப், சக நாட்டவரான அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
- இந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கோகோ காப் படுதோல்வியடைந்தார்.
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கோகோ காஃப் (அமெரிக்கா), சக நாட்டவரான அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கோகோ காஃப் படுதோல்வியடைந்தார். அவர் 1-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். அனிசிமோவா அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், குரோஷியாவின் மரின் சிலிச் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 7-6 (7-2), 6-4 என்ற நேர் செட்டில் மரின் சிலிச்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- காலிறுதி ஆட்டம் ஒன்றில் சோனய் கர்தல் (பிரிட்டிஷ்), லிண்டா நோஸ்கோவா (செக்) உடன் மோதினார்.
- இந்த ஆட்டத்தில் நோஸ்கோவா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் சோனய் கர்தல் (பிரிட்டிஷ்), லிண்டா நோஸ்கோவா (செக்) உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் நோஸ்கோவா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இவர் அரையிறுதியில் ஜெசிகா பெகுலாவுடன் நாளை மோதுகிறார்.
- ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), சகநாட்டவரான எம்மா நவரோ உடன் மோதினார்.
- முதல் செட்டை பெகுலா இழந்தார்.
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), சகநாட்டவரான எம்மா நவரோ உடன் மோதினார்.
இந்த மோதலில் முதல் செட்டை பெகுலா இழந்தார். இதனையடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா அடுத்த 2 செட்டையும் கைப்பற்றினார்.
இதன்மூலம் 6-7 (2-7), 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி பெகுலா அரையிறுதிக்கு முன்னேறினார்.
- சீனா ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் கோகோ காப், சக நாட்டு வீராங்கனை அனிசிமோவாவை எதிர்கொள்கிறார்.
- சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அனிசிமோவா 6-7(4-7), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது.
- நான்காவது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, செக் நாட்டின் மேரி பவுஸ்கோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜாஸ்மின் பவுலினி 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-7 (4-7), 6-1 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.






