என் மலர்
டென்னிஸ்
- கார்சியா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- 5-வது வரிசையில் இருக்கும் ரூப்லெவ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் நெட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.
உலகின் 4வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) இன்று காலை நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த கேதரின் செபோவை எதிர்கொண்டார்.
இதில் கார்சியா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
5-வது வரிசையில் இருக்கும் ஷபலென்கா (பெலாரஸ்) முதல் சுற்று ஆட்டத்தில் செக் குடியரசுவை சேர்ந்த டெரிசா மார்ட்டின்கோவை சந்தித்தார். இதில் ஷபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.
மற்ற ஆட்டங்களில் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), பிளிஸ்கோவா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) வைல்டு கார்டு வீரரான டொமினிக் தீமை (ஆஸ்திரியா) சந்தித்தார்.
இதில் 5-வது வரிசையில் இருக்கும் ரூப்லெவ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் நெட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.
- நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்வியாடெக் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.
நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் ஜூலே நீமியரை தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார். ஸ்வியாடெக் அடுத்து கொலம்பியாவின் கமிலா ஒசோரியோவை சந்திக்கிறார்.
3-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் ஜாக்குலின் கிறிஸ்டியனை(ருமேனியா) விரட்டியடித்தார்.
முன்னாள் சாம்பியன்கள் பெலாரசின் விக்டோரியா அஸரென்கா, அமெரிக்காவின் சோபியா கெனின் இடையிலான ஆட்டத்தில் அஸரென்கா 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் தடையை கடந்தார்.
மரியா சக்காரி (கிரீஸ்), கோகோ காப், மேடிசன் கீஸ், டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), எம்மா ரடுகானு (இங்கிலாந்து), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), விம்பிள்டன் சாம்பியன் எலினா ரைபகினா (கஜகஸ்தான்), ஆஸ்டாபென்கோ (லாத்வியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் முதல் சுற்றில் நடால், ஸ்வியாடெக் வெற்றி பெற்றனர்.
- ஆஸ்திரேலிய ஓபன் முன்னாள் சாம்பியனான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா தோல்வியடைந்தார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் டேனில் மெத்வதேவ் (ரஷியா) தன்னை எதிர்த்த மார்கோஸ் கிரோனை (அமெரிக்கா) 6-0, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் பந்தாடினார்.
4-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் குவான்டின் ஹேஸ்சை (பிரான்ஸ்) வெளியேறினார்.
ஹர்காக்ஸ் (போலந்து), ஷபோவலோவ், அலியாசிம் (கனடா), ஜேனிக் சினெர் (இத்தாலி), பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா), கேமரூன் நோரி (இங்கிலாந்து) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
முன்னாள் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 7-6 (7-3), 3-6, 6-1, 6-7 (2-7), 4-6 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் மோல்கனிடம் (சுலோவேனியா) போராடி வீழ்ந்தார்.
ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் நிக் கிரியாஸ் கால் முட்டி காயம் காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியது உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு ஆளாக்கியது.
- பந்து எடுத்து போடும் சிறுவன் அதனை எடுத்து சென்றுவிட்டான் என புகார் கூறியுள்ளார்.
- பொறுமை இழந்த நடால் எனது டென்னிஸ் பேட் திரும்ப வரவேண்டும் என கூறுகிறார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தின்போது, நடப்பு சாம்பியனான ரபேல் நடால், தனது விருப்பத்திற்குரிய பேட் காணாமல் போய் விட்டது என்றும் பந்து எடுத்து போடும் சிறுவன் அதனை எடுத்து சென்றுவிட்டான் எனவும் புகாராக கூறியுள்ளார்.
இதனால், போட்டி தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. அது சர்வதேச பரபரப்பு செய்தியாகவும் மாறியது. போட்டி பாதிக்கப்பட்டது பற்றி ஆஸ்திரேலிய ஓபன் நிர்வாகம் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், பொறுமை இழந்த நடால் தனது டென்னிஸ் பேட்டை தேடி பார்க்கிறார். எனக்கு, எனது டென்னிஸ் பேட் திரும்ப வரவேண்டும் என நடுவரிடம் கூறுகிறார்.
தனது பேட் கிடைக்காமல் போகவே, வழியின்றி வேறொரு டென்னிஸ் பேட்டை எடுத்து கொண்டு நடால் விளையாட சென்றார். அதன்பின் போட்டி தொடர்ந்தது. எனினும், போட்டியில் ஜாக் டிரேப்பருக்கு எதிராக கடுமையாக போராடி 7-5, 2-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மூன்றரை மணிநேரம் நீடித்த இந்த போட்டியில் பெற்ற வெற்றியானது, நடப்பு ஆண்டில் நடாலுக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும்.
நடால் பயன்படுத்திய பேட்டை, பந்து எடுத்து போடும் சிறுவன் தவறுதலாக எடுத்தது பின்னர் தெரியவந்தது. ரிப்பேர் செய்யவேண்டும் என நினைத்து எடுத்துச் சென்றிருக்கிறான். பின்னர் நடாலிடம் பேட்டை ஒப்படைத்ததும் குழப்பம் தீர்ந்தது.
- முதல் சுற்றில் பிரிட்டன் வீரர் ஜேக் ட்ரேப்பரை நடால் வீழ்த்தினார்.
- ஆடவர் ஒற்றையர் போட்டியில் இதுவரை 20 சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ளார்
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரிட்டன் வீரர் ஜேக் ட்ரேப்பரை எதிர்கொண்டார். மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இப்போட்டியில் 7-5, 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் போட்டியில் இதுவரை 20 சாம்பியன் பட்டங்கள் வென்று நோவக் ஜோகோவிச், ரோஜர் பெடரர் ஆகியோரின் சாதனையுடன் இணைந்துள்ள நடால், ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வெல்லும் முனைப்புடன் வெற்றிக் கணக்கை தொடங்கி உள்ளார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்ல ரபெல் நடால், ஜோகோவிச் இடையே கடும் போட்டி.
- ஓய்வு பெற்ற ரோஜர் பெடரர் 20 கிராண்ட் சிலாமுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
மெல்போர்ன்:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை மறுநாள் (16-ந் தேதி) தொடங்குகிறது. 29-ந் தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.
ஸ்பெயினை சேர்ந்த ரபெல் நடாலும், செர்பியா நாட்டை சேர்ந்த ஜோகோ விச்சும் கிராண்ட் சிலாம் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை நடாலும், விம்பிள்டனை ஜோகோவிச்சும் கைப்பற்றி இருந்தனர். இருவரும் 43 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்று உள்ளனர். நடால் 22 கிராண்ட் சிலாமுடன் (ஆஸ்திரேலிய ஓபன் 2, பிரெஞ்சு ஓபன் 14, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 4) முதல் இடத்திலும், ஜோகோவிச் 21 கிராண்ட் சிலாமுடன் (ஆஸ்திரேலிய ஓபன் 9, பிரெஞ்சு ஓபன் 2, விம்பிள்டன் 7, அமெரிக்க ஓபன் 3) 2-வது இடத்திலும் உள்ளனர்.
ஓய்வு பெற்ற ரோஜர் பெடரர் 20 கிராண்ட் சிலாமுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்ல ரபெல் நடால், ஜோகோவிச் இடையே கடும் போட்டி நிலவும். இந்த போட்டியின் முதல்நிலை வீரராக நடால் உள்ளார். ஜோகோவிச் 4-வது வரிசையில் இருக்கிறார்.
கேஸ்பர் ரூட் (நார்வே), சிட்சிபாஸ் (கிரீஸ்), ரூப் லெவ் (ரஷியா), பெலிக்ஸ் (கனடா), மெட்வதேவ் (ரஷியா) உள்ளிட்ட வீரர்கள் அவர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள்.
பெண்கள் பிரிவில் கடந்த முறை ஆஸ்லே பார்டி சாம்பியன் பட்டம் பெற்றார். போலாந்தை சேர்ந்த இகா சுவிடெக் இந்தப் போட்டியின் முதல் நிலை வீராங்கனையாக உள்ளார்.
ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஷபலென்கா (பெலாரஸ்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), மரியா ஷகாலி (கிரீஸ்) சோகோ கபூர் (அமெரிக்கா) உள்ளிட்ட வீராங்கனைகளும் சாம்பியன் பட்டத்தை பெறுவதற்கான போட்டியில் உள்ளனர்.
- விலகலுக்கான காரணத்தையும் அவர் அறிவிக்கவில்லை.
- நவோமி ஒசாகாவுக்குப் பதிலாக டயானா யஸ்த்ரேம்ஸ்கா பிரதானச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
மெல்பர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா விலகியுள்ளார். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 16-ம்தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை நவோமி ஒசாகா பங்கேற்கவிருந்தார். ஆனால் திடீரென போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். விலகலுக்கான காரணத்தையும் அவர் அறிவிக்கவில்லை.
நவோமி விலகல் தொடர்பான அறிவிப்பை ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்குழு அதிகாரப்பூர்வமாக நேற்று தெரிவித்துள்ளது. நவோமி ஒசாகாவுக்குப் பதிலாக டயானா யஸ்த்ரேம்ஸ்கா பிரதானச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார் என்றும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக் குழு அறிவிப்புச் செய்துள்ளது.
- இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், செபாஸ்டியன் கோர்டாவை சந்தித்தார்.
- இதில் ஜோகோவிச் 6-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
அடிலெய்டு:
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்,
தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவை சந்தித்தார்.
முதல் செட்டை 7-6 (8-10) என்ற கணக்கில் ஜோகோவிச் இழந்தார். சுதாரித்து ஆடிய ஜோகோவிச், இரண்டாவது செட்டை 7-6 (7-3) என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், ஜோகோவிச் 6-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- நெதர்லாந்து வீரர் டாலோன் கிரிக்ஸ்பூர் 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- அவருக்கு ரூ.88 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
புனே:
5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 95-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீரர் டாலோன் கிரிக்ஸ்பூர் 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்ஜியை வீழ்த்தி முதல்முறையாக ஏ.டி.பி.சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அவருக்கு ரூ.88 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெல்ஜியத்தின் சாண்டெர் கில்லி-ஜோரான் லீஜென் ஜோடி 6-4, 6-4 என்ற நேர்செட்டில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்-ஸ்ரீராம் பாலாஜி (இருவரும் தமிழ்நாடு) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.
- இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா-லின்டா நோஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
- நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள இரினா கெமிலியா பெகுவை (ருமேனியா) எதிர்கொண்டார்.
1 மணி 18 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் இரினா கெமிலியா பெகுவை தோற்கடித்து டபிள்யூ.டி.ஏ.சர்வதேச போட்டியில் 19-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்ட 18 வயது செக்குடியரசு வீராங்கனை லின்டா நோஸ்கோவா 6-3, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆன்ஸ் ஜாபியருக்கு (துனிசியா) அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டியை எட்டினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா-லின்டா நோஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதன் இரட்டையர் பிரிவு இறுதிபோட்டியில் அமெரிக்காவின் ஆசியா முகமத்-டெய்லர் டவுன்சென்ட் ஜோடி 6-2, 7-6 (7-2) என்ற நேர்செட்டில் ஸ்டாம் ஹன்டெர் (ஆஸ்திரேலியா)-கேத்ரினா சினியகோவா (செக்குடியரசு) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா, தரநிலையில் 37-வது இடத்தில் இருக்கும் யோஷிஹிடோ நிஷிகாவை (ஜப்பான்) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த மோதலில் செபாஸ்டியன் கோர்டா 7-6 (7-5), 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது யோஷிஹிடோ காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் செபாஸ்டியன் கோர்டா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இன்னொரு ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், தரநிலையில் 7-வது இடத்தில் உள்ளவருமான டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டம் 1 மணி 30 நிமிடம் நடந்தது. இறுதிப்போட்டியில் ஜோகோவிச், செபாஸ்டியன் கோர்டாவை சந்திக்கிறார்.
- அடுத்த மாதம் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி ஆட்டமாகும்.
- ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 36 வயதான அவர் கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார்.
இந்த நிலையில் சானியா மிர்சா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அடுத்த மாதம் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி ஆட்டமாகும்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டபிள்யூ.டி.ஏ. இறுதி போட்டிக்கு பிறகு டென்னிஸ் ஆடுவதை நிறுத்திக் கொள்ள போகிறேன். துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் பிப்ரவரி மாதம் நடக்கிறது.
இந்த போட்டியோடு நான் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு சானியா மிர்சா கூறியுள்ளார்.
சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 2016-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். 2011 பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் தோற்றார்.
கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்சா 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றார். 2009-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார்.
வருகிற ஆஸ்திரேலிய ஓபனில் சானியா மிர்சா, கஜகஸ்தான் வீராங்கனை அனாடேனிலாவுடன் இணைந்து ஆடுகிறார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வருகிற 16ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.
கடந்த ஆண்டு சானியா மிர்சா ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜூவ் ராமுடன் இணைந்து கால் இறுதி வரை முன்னேறி இருந்தார்.
ஒற்றையர் பிரிவில் சானியா மிர்சா 2007ம் ஆண்டு 27வது வரிசையில் இருந்ததே சிறப்பான நிலையாகும். 2005ல் அமெரிக்க ஓபனில் 4வது சுற்று வரை முன்னேறியதே அவரது சிறந்த நிலையாகும்.
இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 24-வது வரிசையில் உள்ளார்.
- மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி நேற்று நடந்தது.
- இதில் இந்திய ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தை வென்று இறுதிக்குள் நுழைந்தது.
புனே:
5-வது மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி நேற்று நடந்தது.
இந்தியாவின் பாலாஜி, நெடுஞ்செழியன் ஜோடி, இங்கிலாந்தின் காஷ், பாட்டேன் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் இந்திய ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.






