என் மலர்
டென்னிஸ்
- சீன வீராங்கனை கின்வென் செங்கை வீழ்த்தி அஸரென்கா கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
- பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியனான ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 3-6, 0-6 என்ற நேர்செட்டில் ருமேனியாவின் இரின் கெமிலியா பெகுவிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.
அடிலெய்டு:
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-2, 7-5 என்ற நேர்செட்டில் சீனாவின் கின்வென் செங்கை விரட்டியடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியனான ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 3-6, 0-6 என்ற நேர்செட்டில் ருமேனியாவின் இரின் கெமிலியா பெகுவிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.
மற்ற ஆட்டங்களில் லின்டா நோஸ்கோவா (செக்குடியரசு), ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) வெற்றி பெற்று கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர்.
- நடால் ஓய்வு பெறும் முடிவை எடுக்கலாம் என்று தகவல் பரவியது
- தொடர்ந்து டென்னிஸ் விளையாடிக் கொண்டிருப்பதாக நடால் பேட்டி
பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த இவர் 22 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று உள்ளார். இதற்கிடையே யுனைடெட் கோப்பை கலப்பு அணி போட்டியில் ரபேல் நடால், இங்கிலாந்தின் கேமரூன் நோரியிடம் தோல்வி அடைந்தார். இதனால் நடால் ஓய்வு பெறும் முடிவை எடுக்கலாம் என்று தகவல் பரவியது. ஆனால் அதை நடால் மறுத்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, 'நான் என் போட்டியில் தோற்றேன். ஒவ்வொரு முறையும் நான் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வரும்போது நான் ஓய்வு பெறவேண்டும் என்று தோன்றுகிறது. இதனால் என் ஓய்வு பற்றி நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள். ஆனால் ஓய்வு பெறுவது பற்றி இன்னும் என் மனதில் தோன்றவில்லை. அந்த நாள் வரும்போது உங்களிடம் தெரிவிப்பேன். எனவே அதைப்பற்றி கேட்கவேண்டாம். ஏனென்றால் இங்கு நான் டென்னிஸ் விளையாடி கொண்டே இருக்கிறேன்' என்றார்.
- ஏடிபி பைனல்ஸ் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், காஸ்பர் ரூட் மோதினர்.
- ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.
துரின்:
உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. பைனல்ஸ் எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
குரூப் சுற்று முடிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ், காஸ்பர் ரூட் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல் அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர்.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-3 என எளிதில் வென்றார்.
இதன்மூலம் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்திய ஜோகோவிச் கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.
- அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் மகன் இஷானுக்கு பெற்றோராக இருக்கிறார்கள்.
- சானியா தனது விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் ஒரு ரகசிய இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தம்பதிகள் தற்போது எல்லை தாண்டிய காதல் கதையை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்கள். இந்த ஜோடி விவாகரத்து செய்துகொள்ளபோவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 2010 இல் 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி தற்போது முறைப்படி விவாகரத்து செய்துவிட்டதாக கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
சானியா மிர்சா கடந்த சில நாட்களாக இந்தியாவில் வசித்து வருகிறார்.அவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார். ஆம், அவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்" என்று பாகிஸ்தானில் உள்ள மாலிக்கின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் உறுதிப்படுத்தினார்.
சோயப் தனக்கு துரோகம் செய்து ஏமாற்றியதை சானியா கண்டுபிடித்ததை தொடர்ந்து இது நடந்து உள்ளது. அப்போதுதான் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். இருப்பினும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் மகன் இஷானுக்கு பெற்றோராக இருக்கிறார்கள்.
சமீபத்தில், சானியா தனது விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் ஒரு ரகசிய இடுகையைப் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில், "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண!" என குறிப்பிட்டு இருந்தார்.
இதை பார்த்த அவரது ரசிகர்கள் கவலைப்படத் தொடங்கினர். சமீபத்தில் இருவரும் தங்கள் மகனின் பிறந்த நாளை ஒன்றாக கொண்டாடினர். சோயிப் இன்ஸ்டாகிராமில் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாலும், சானியா வெளியிடவில்லை.
சோயிப் தனது இன்ஸ்டாவில் "நீங்கள் பிறந்தவுடன், நாங்கள் மிகவும் அடக்கமாகிவிட்டோம், வாழ்க்கை எங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. நாம் ஒவ்வொரு நாளும் ஒன்றாக இருப்பதில்லை, சந்திப்பதில்லை, ஆனால் பாபா உங்களைப் பற்றியும் உங்கள் புன்னகையைப் பற்றியும் ஒவ்வொரு நொடியும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் கேட்கும் அனைத்தையும் அல்லா உங்களுக்கு வழங்குவார். பாபாவும் அம்மாவும் உன்னை நேசிக்கிறார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
- டென்னிஸ் போட்டி வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யூ.டி.ஏ. வெளியிட்டு வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மகளிர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பாரீஸ்:
டென்னிஸ் போட்டியில் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யூ.டி.ஏ. வெளியிட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சான் டீகோ ஓபன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசியா நாட்டின் டோன்னா வெகிச் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இகா ஸ்வியாடெக் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இது, நடப்பு ஆண்டில் அவர் பெறும் 64-வது சாதனை வெற்றியாகும்.
இந்த தரவரிசை பட்டியலில் ஆன்ஸ் ஜேபியர் 2-வது இடத்திலும், ஆனெட் கொன்டாவிட் 3-வது இடத்திலும், ஆரைனா சபலென்கா 4-வது இடத்திலும், ஜெஸ்சிகா பெகுலா 5-வது இடத்திலும் உள்ளனர்.
- சர்வதேச டென்னில் போட்டிகளில் இருந்து சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஓய்வு பெற்றார்.
- தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் ரோஜர் பெடரர்.
பெர்ன்:
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அண்மையில் ஓய்வு முடிவை அறிவித்தார்.
20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அவருக்கு பல்வேறு நபர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏடிபி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.
அந்த வீடியோவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரோஜர் பெடரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் டென்னிஸ் விளையாடுவதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின்போது கிடைத்தது. டென்னிஸ் விளையாட்டில் நீங்கள் ஒரு சிறந்த வீரர். உங்களுடைய வாழ்வில் அடுத்த பயணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், விராட் கோலியின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்ட ரோஜர் பெடரர், நன்றி விராட் கோலி.. விரைவில் இந்தியா வருவேன் எனத் தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு டென்னிஸ் வீரர் பெடரர் நன்றி தெரிவித்தது வைரலாகி வருகிறது.
- சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை லிண்டா வெற்றி பெற்றார்.
- வீராங்கனை லிண்டாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கவுரவித்தார்.
சென்னை:
சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற ஒற்றையர் இறுதிப்போட்டியில் 17 வயதான செக் குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா, போலந்தின் மேக்டா லினெட்டுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேக்டா லினெட்டுவை 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லின்டா புருவிர்தோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை லிண்டாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கவுரவித்தார்.
ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு கேடயம் மற்றும் ரூ.26.44 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பிடித்த போலந்து வீராங்கனை மேக்டா லினெட்டுக்கு கேடயம் மற்றும் ரூ.15.73 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக, மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
- இறுதிப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்.
- அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் போட்டியை ரசித்து பார்த்தனர்.
நுங்கம்பாக்கம்:
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரங்கனை லிண்டா புருவிர்தோவாவும், போலந்து வீராங்கனை மக்டா லினெட்டும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-6, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் செக் குடியரசு வீரங்கனை லிண்டா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 17 வயதான அவர் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும்.

இந்த போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டார் கண்டு ரசித்தனர்.
- இறுதிப் போட்டியில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி, லுசா ஸ்டெபானி இணை வெற்றி.
- அன்னா லின்கோவா- நடிலா ஜலாமிட்ஸ் இணை தோல்வி.
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் கனடாவை சேர்ந்த கேப்ரியல்லா டாப்ரோஸ்கி- பிரேசிலை சேர்ந்த லுசா ஸ்டெபானி இணை, ரஷியாவின் அன்னா லின்கோவா- ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் இணையை எதிர் கொண்டது.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே மிகச் சிறப்பாக விளையாடிய கேப்ரியல்லா டாப்ரோஸ்கி-லுசா ஸ்டெபானி இணை 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அன்னா லின்கோவா -நடிலா ஜலாமிட்ஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
- இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் மக்டா லினெட் (போலந்து) லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.
- இளம் வீராங்கனையான லிண்டா முதல் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தப் போட்டியில் 3-வது வரிசையில் உள்ள மக்டா லினெட் (போலந்து)- கேத்தே சுவான் (இங்கிலாந்து) மோதினார்கள். இதில் லினெட் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது கேத்தே காயத்தால் விலகினார். இதனால் மக்டா லினெட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மற்றொரு அரையிறுதியில் லிண்டா புருவர்தோவா (செக்குடியரசு) 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் நாடியா போடோரோவை (அர்ஜென்டினா) கடும் போராட்டத்துக்கு பிறகு வீழ்த்தினார்.
இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் மக்டா லினெட் (போலந்து) லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.
3-ம் நிலை வீராங்கனையான மக்டா லினெட் இதுவரை 2 டபிள்யூ. டி.ஏ. பட்டத்தை பெற்றுள்ளார். சென்னை ஓபன் போட்டியில் வெற்றி பெற்று அவர் 3-வது பட்டத்தை வெல்வாரா? என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.
30 வயதான மக்டா தற்போது உலக தரவரிசையில் 66-வது இடத்தில் உள்ளார். 2020-ம் ஆண்டில் அவர் 33-வது வரிசையில் இருந்ததே சிறப்பான நிலையாகும். கிராண்ட்சிலாம் போட்டியை பொறுத்தவரை மக்டா லினெட் 3-வது சுற்று வரை நுழைந்ததே சிறப்பாகும்.
ஒட்டு மொத்த டென்னிஸ் போட்டியில் 403 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். 309 போட்டியில் தோற்றுள்ளார்.
இந்த போட்டியில் 28-வது வரிசையில் உள்ள லிண்டா மிகவும் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். 17 வயதான அவர் உலக தர வரிசையில் 130-வது இடத்தில் உள்ளார். இளம் வீராங்கனையான லிண்டா முதல் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.
முன்னதாக நடைபெறும் இரட்டையர் இறுதி போட்டியில் டாப் ரோஸ்கி (கனடா)-ஸ்டெபானி (பிரேசில்) ஜோடியுடன் லின்கோவா (ரஷியா)- ஜலாமிட்ஸ் (ஜார்ஜியா) ஜோடி மோதுகிறது.
- மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.
- நாளை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டங்கள் இன்று இரவு 7 மணிக்கு நடந்தன.
முதல் அரையிறுதியில் அர்ஜெண்டினாவின் நாடியா போடோரோஸ்கா, செக் குடியரசைச் சேர்ந்த லிண்டாவுடன் மோதினார். இதில்
முதல் செட்டை இழந்த லிண்டா, அடுத்த இரு சுற்றுகளை கைப்பற்றினார்.
இறுதியில், லிண்டா 5-7, 6-2 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இரண்டாவது அரையிறுதியில் போலந்தின் மக்டா லினெட், இங்கிலாந்தின் கேத்தே சுவானுடன் மோதினார். முதல் செட்டில் 3 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக சுவான் விலகினார். இதனால் லினெட் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் லிண்டாவும், மக்டா லினெட்டும் மோத உள்ளனர்.
இறுதிப் போட்டியை நேரில் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பையும் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கால் இறுதி ஆட்டத்தில் கேத்தே சுவான்- ஹிபினோ மோதினார்கள்.
- இன்று இரவு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன.
ஒரு கால் இறுதி ஆட்டத்தில் இந்த போட்டியின் 3-வது வரிசையில் உள்ள மக்டா லினெட் (போலந்து) ஏழாம் நிலை வீராங்கனையான ரெபேக்கா மரினோ (கனடா) மோதினார்கள்.
முதல் செட்டில் இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டை பிரேக்கருக்கு சென்றது. இதில் லினெட் 12-10 என்ற கணக்கில் வென்றார்.
2-வது செட்டிலும் அவரது ஆதிக்கமே இருந்தது. இந்த செட்டிலும் மக்டா லினெட் 6-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 7-6 (12-10), 6-3
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் கேத்தே சுவான் (இங்கிலாந்து)-ஹிபினோ (ஜப்பான்) மோதினார்கள்.
கேத்தே சுவான் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார். அதற்கு பதிலடியாக ஹிபினோ 2-வது செட்டை 6-3 என்று கைப்பற்றினார். இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 3-வது செட்டை கேத்தே சுவான் 6-3 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-3, 3-6, 6-3

போட்டியின் முடிவில் கைகுலுக்கிக் கொண்ட லிண்டா (இடது)-வார்வரா கிராசெவா.
முன்னதாக நடந்த கால் இறுதி ஆட்டங்களில் நாடியா போடோ ரோஸ்கா (அர்ஜென்டினா) 1-6, 6-4, 6-2 என்ற கணக்கில் யூஜின் பவுச்சர்ட்னடயும் (கனடா), லிண்டா புருவிர்தோவா (செக் குடியரசு) 6-4, 6-3 என்ற கணக்கில் வார்வரா கிராசேவாவையும் (ரஷியா)வீழ்த்தினார்கள்.
இன்று இரவு 7 மணிக்கு அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு அரை இறுதியில் நாடியா போடோ ரோஸ்கா (அர்ஜென்டினா)-லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.
அதைத்தொடர்ந்து நடை பெறும் 2-வது அரை இறுதியில் மக்டா லினெட் (போலந்து)-கேத்தே சுவான் (இங்கிலாந்து) மோதுகிறார்கள்.






