என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்றது.
    • இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீரரான அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில், முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என எளிதில் கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 2-வது செட்டை 7-6 (8-6) என போராடி வென்றார். மூன்றாவது செட்டை 6-2 என அல்காரஸ் கைப்பற்றினார். அதிரடி காட்டிய ஜோகோவிச் நான்காவது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை அல்காரஸ் 6-4 என கைப்பற்றினார்.

    இறுதியில், அல்காரஸ் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்தப் போட்டி சுமார் 4.45 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

    விம்பிள்டன் பட்டத்தை அல்காரஸ் முதல் முறையாக கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் பட்டத்தை அதிக முறை வென்றவர் ரோஜர் பெடரர்.
    • ஜோகோவிச்சை வீழ்த்தி 2-வது முறையாக கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் அல்காரஸ் உள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள் டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் 23 கிராண்ட் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 2- வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) - உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) மோதுகிறார்கள்.

    விம்பிள்டன் பட்டத்தை அதிக முறை வென்றவர் ரோஜர் பெடரர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவர் 8 தடவை சாம்பியனாகி இருந்தார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினால் பெடரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்வார். அவர் விம்பிள்டன் போட்டியில் 7 முறை வெற்றி பெற்றுள்ளார்.

    36 வயதான நடப்பு சாம்பியன் ஜோகோவிச் விம்பிள்டனில் 2018 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை பட்டம் பெற்றுள்ளார். கொரோனா பாதிப்பால் 2020 ஆண்டு போட்டி நடைபெறவில்லை.

    அபாரமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாகவும், ஒட்டு மொத்தமாக 24-வது கிராண்ட் சிலாமையும் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபனை 3 தடவையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றுள்ளார்.

    20 வயதான அல்காரஸ் முதல்முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாடுகிறார். அமெரிக்க ஓபன் சாம்பியனான அவர் ஜோகோவிச்சின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஜோகோவிச்சை வீழ்த்தி 2-வது முறையாக கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் அல்காரஸ் உள்ளார்.

    சமபலம் வாய்ந்த இருவரும் மோதும் விம்பிள்டன் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் நேருக்கு நேர் மோதுவது 3-வது முறையாகும். இதுவரை நடந்த 2 ஆட்டத்தில் தலா 1 வெற்றியை பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை வான்ட்ரோ சோவா சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜபேரை (துனிசியா) வீழ்த்தி முதல் கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றார்.

    • மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது.
    • மார்கெட்டா வோண்ட்ருசோவா- ஆன்ஸ் ஜெபருடன் மோதினார்.

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில், செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வோண்ட்ருசோவா- துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் ஆகியோர் மோதினர்.

    இதில் வோண்ட்ருசோவா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜெபரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதியில் நம்பர் 1 வீரரான அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 1 வீரரான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசும், ரஷியாவின் டேனில் மெத்வதேவும் மோதினர்.

    இதில், அல்காரஸ் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கார்லோஸ் அல்காரஸ் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதியில் நம்பர் 2 வீரரான ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 2 வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சும், இத்தாலியின் ஜானிக் சின்னரும் மோதினர்.

    இதில், ஜோகோவிச் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு சாம்பியனான அவர் விம்பிள்டன் டென்னிசில் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    • இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதுகிறார்கள்.
    • 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள ஜோகோ விச் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.

    இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதுகிறார்கள்.

    23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள ஜோகோ விச் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளார்.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நடப்பு சாம்பியனான அவர் விம்பிள்டன் டென்னிசில் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்.

    இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு அரை இறுதியில் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்காரெஸ் (ஸ்பெயின்)-மெட்வடேவ் (ரஷியா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் வோன்ட் ரோசோவா (செக்குடியரசு)-ஜாபியர் (துனிசியா) ஆகியோர் மோதுகிறார்கள்.

    • விம்பிள்டன் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதிப் போட்டி நடந்தது.
    • இதில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி தோல்வி அடைந்தது.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி, நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப், பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியுடன் மோதியது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் போபண்ணா-மேத்யூ எப்டென் ஜோடி 5-7, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதியில் நம்பர் 2 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் நம்பர் 2 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவும், துனீசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபேரும் மோதினர்.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் சபலென்கா முதல் செட்டை கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜபேர் இரண்டாவது மற்றும் 3வது செட்டை வென்றார்.

    இதன்மூலம் ஜபேர் 6-7 (5-7), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக் நாட்டு வீராங்கனை மார்கெடா வோண்ட்ரசோவா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவுடன் மோதினார்.

    இதில் வோண்ட்ரசோவா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    • நேற்று நடைபெற்ற இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.
    • 43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரையிறுதியை எட்டுவது இது 3-வது முறையாகும்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூர்- பார்ட் ஸ்டீவன்ஸ் ஜோடியை சந்தித்தது.

    இதில் போபண்ணா ஜோடி 6-7 (3-7), 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரையிறுதியை எட்டுவது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டிகள் லண்டனில் நடந்தது.
    • ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று போட்டியில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யுபங்குடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் முதல் செட்டை வென்றார். சுதாரித்துக் கொண்ட யுபங் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4, 5வது செட்களை மெத்வதேவ் வென்றார்.

    இறுதியில் மெத்வதேவ் 6-4, 1-6, 4-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார். இதில் அல்காரஸ் 7-6 (7-3), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டி லண்டனில் நடந்தது.
    • இதில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, 6ம் இடத்திலுள்ள துனிஷியா வீராங்கனை ஆன்ஸ் ஜபேருடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ரிபாகினா முதல் செட்டை கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட ஜபேர் 2வது, 3வது செட்களை வென்றார்.

    இதன்மூலம் ஜபேர் 6-7 (5-7(ம் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கெய்சுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • போபண்ணா- மேத்யூ எப்டென் ஜோடி 7-5, 4-6, 7-6 (10-5) என்ற செட் கணக்கில் அமெரிக்கா இணையை தோற்கடித்தது.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் கூட்டணி டேவிட் பெல் (நெதர்லாந்து)-ரீஸ் ஸ்டால்டெர் (அமெரிக்கா) இணையை எதிர்கொண்டது.

    இந்த ஆட்டத்தில் போபண்ணா- மேத்யூ எப்டென் கூட்டணி 7-5, 4-6, 7-6 (10-5) என்ற செட் கணக்கில் டேவிட் பெல் - (அமெரிக்கா) இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

    ×