என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டி நடந்தது.
    • இதில் நம்பர் 2 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் சாம்சொனோவாவுடன் மோதினார்.

    இதில் சாம்சொனோவா 7-6 (7-2), 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

    முன்னணி வீராங்கனையான சபலென்கா இதில் தோற்றதன் மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டி நடைபெற்றது.
    • இதில் முன்னணி வீரர்களான மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் வென்று காலிறுதிக்கு முன்னேறினர்.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் முசேட்டியுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், போலந்து வீரர் ஹுயுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார். இதில் அல்காரஸ் 3-6, 7-6 (7-2), 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 4-6, 3-6 என்ற நேர்செட்டில் மான்பில்சிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
    • இகா ஸ்வியாடெக் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    டொராண்டோ:

    கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொராண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-2, 7-5 என்ற செட்டில் இத்தாலியின் அர்னால்டியை விரட்டியடித்தார். இன்னொரு ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 4-6, 3-6 என்ற நேர்செட்டில் மான்பில்சிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே), மெக்டொனால்டு (அமெரிக்கா), ஜானிக் சின்னெர் (இத்தாலி) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 7-6 (8-6), 6-2 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    2-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் பெட்ரா மார்டிச்சை (குரோஷியா) தோற்கடித்தார். இதே போல் கிவிடோவா (செக்குடியரசு), டேனிலி காலின்ஸ் (அமெரிக்கா), வான்ட்ரோசோவா (செக்குடியரசு), லேலா பெர்னாண்டஸ் (கனடா), கரோலினா முச்சோவா (செக்குடியரசு), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோரும் வெற்றியை ருசித்தனர்.

    • கனடா ஓபன் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்று போட்டி நடந்தது.
    • இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி முடிவடைய உள்ளது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜேமி முர்ரே- நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியைச் சந்தித்தது.

    இதில் போபண்ணா ஜோடி 6-3, 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டி நடைபெறுகிறது.
    • இதில் முன்னணி வீரர்களான சிட்சிபாஸ், ஸ்வெரேவ் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி முடிவடைய உள்ளது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் 13-ம் நிலை வீரரான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்பெயின் வீரர் புகினோ உடன் மோதினார். இதில் புகினோ 6-1, 6-2 என்ற கணக்கில் வென்று 3வத் சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், டென்னிஸ் தரவ்ரிசையில் 4வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் மான்பில்சுடன் மோதினார். இதில் மான்பில்ஸ் 6-4, 6-3 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • செர்பியா வீரர் லாஜோவிச்சை சீனாவின் ஜாங் 2-0 என வீழ்த்தினார்
    • ஆஸ்திரியாவின் டி நோவக்கை பிரேசிலின் செய்போத் 2-0 என வீழ்த்தினார்

    ஆஸ்திரியாவில் கிட்ஜ்புகேல் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ஹுயேஸ்லர்- ஜெர்மனியின் ஆல்மையர் மோதினர். இதில் ஆல்மையர் 2-1 என வெற்றி பெற்றார்.

    முதல் செட்டை 7(7)-6(5) என ஹுயேஸ்லர் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டை 2-6 எனவும், 3-வது செட்டை 4-6 எனவும் இழந்தார். இதனால் ஆல்மையர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஓ'கானெல்-ஐ செர்பிய வீரர் எல். ஜெரே 2-0 என வீழ்த்தினார்.

    ஆஸ்திரியாவின் டி நோவக்கை பிரேசிலின் செய்போத் 2-0 என வீழ்த்தினார். செர்பியா வீரர் லாஜோவிச்சை சீனாவின் ஜாங் 2-0 என வீழ்த்தினார்.

    • ஜோகோவிச் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார்.
    • தமது டென்னிஸ் மட்டையை ஜோகோவிச் உடைத்தார்.

    செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். அந்த ஆத்திரத்தில் தமது டென்னிஸ் மட்டையை ஜோகோவிச் உடைத்தார். இந்த செயலுக்காக அவருக்கு 8,000 டாலர் அபராதம் விதித்துள்ளது விம்பிள்டன் டென்னிஸ் நிர்வாகம்.

    8,000 டொலர் அபராதம் என்பது தனியொரு டென்னிஸ் விளையாட்டு வீரருக்கு விதிக்கப்படும் பெருந்தொகை என்றே கூறப்படுகிறது.

    சுமார் 1.2 மில்லியன் பவுண்டுகளை பரிசாக வென்றுள்ள ஜோகோவிச், அது விரக்தியை ஏற்படுத்திய தருணம் எனவும், அல்கராஸ் அருமையான விளையாட்டை வெளிப்படுத்தினார் எனவும், வெற்றி பெற தகுதியான வீரர் அவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    பிபிசி ஒன் தொலைக்காட்சியில் சுமார் 11.3 மில்லியன் பேர்கள் இறுதிப் போட்டியை கண்டுகளித்துள்ளனர். டென்னிஸ் மட்டையை உடைத்தது மட்டுமின்றி, நடுவர் கடிந்துகொள்ளும் நிலைக்கும் ஜோகோவிச் தள்ளப்பட்டார்.

    • ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார்.
    • ரஷியாவின் மெத்வதேவ் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்.

    லண்டன்:

    சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. 

    கார்லோஸ் அல்காரஸ் தொடர்ந்து 29-வது வாரமாக நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். ஜோகோவிச் 2-வது இடத்திலும், ரஷியாவின் மெத்வதேவ் 3-வது இடத்திலும், நார்வேயின் கேஸ்பர் ரூட் 4-வது இடத்திலும் உள்ளனர்.

    இதேபோல, பெண்கள் ஒற்றையரில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிடத்திலும், பெலாரசின் சபலென்கா 2-வது இடத்திலும், கஜகஸ்தானின் ரிபாகினா 3-வது இடத்திலும் தொடருகிறார்கள்.

    விம்பிள்டன் பட்டத்தை முதல் முறையாக உச்சிமுகர்ந்த செக் குடியரசின் மார்கெட்டா வோன்ட்ரோசோவா கிடுகிடுவென 32 இடங்கள் எகிறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த நிலை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் அமைப்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
    • ஜோகோவிச்சை வீழ்த்தி, ஸ்பெயினை சேர்ந்த 20 வயது வீரரான கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    விம்பிள்டன் தொடரின் ஆடவர் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, ஸ்பெயினை சேர்ந்த 20 வயது வீரரான கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    இந்நிலையில் விம்பிள்டன் அமைப்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸை வாழ்த்தி விம்பிள்டன் அமைப்பு ஒரு போஸ்டரை வடிவமைத்துள்ளது. அதில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்று, கருப்பு நிற சட்டை அணிந்த ஒரு குழுவிற்கு மத்தியில் அல்காரஸ் நின்று அமைதி என்று கூறுவது போல வாய் மீது வைரல் வைத்துள்ளார்.


    அந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்ட விம்பிள்டன் அமைப்பு, விம்பிள்டனின் புதிய சாம்பியன் எனவும், அல்காரஸை மாஸ்டர் என குறிப்பிட்டுள்ளது. அந்த போஸ்டரை, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

    • புல்தரை மைதானமான இந்த போட்டியில் நான் தோல்வி அடைவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை.
    • என் மகன் இன்னும் சிரித்துக்கொண்டே இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. நேற்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 2-வது வரிசையில் உள்ள ஜோகோவிச்சை (செர்பியா) வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

    இந்நிலையில் தோல்வி குறித்து கண்ணீர் விட்டு ஜோகோவிச் பேசியது சுற்றி இருந்தவர்களை உருக செய்தது.

    தோல்வி குறித்து ஜோகோவிச் கூறியதாவது:-



    20 வயதில் முதிர்ச்சி அடைந்த வீரர் போல் அல்காரஸ் அபாரமாக விளையாடினார். அவரது மன உறுதியை பாராட்டுகிறேன். பலம் மற்றும் பலவீனங்களை கொண்டுள்ள ஒரு முழுமையான வீரராக திகழ்கிறார். அவரது சர்வீஸ்கள் சிறப்பாக இருந்தது.

    விம்பிள்டன் பட்டத்தை பெற அவர் தகுதியானவர். விம்பிள்டனில் சவால் நிறைந்த இறுதிப் போட்டிகளில் இதற்கு முன்பு நான் வெற்றி பெற்று இருக்கிறேன். அதில் 2 போட்டிகளில் நான் தோல்வியை தழுவி இருக்க வேண்டியது. புல்தரை மைதானமான இந்த போட்டியில் நான் தோல்வி அடைவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை.

    2019 இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரருக்கு எதிராக தான் வெற்றி பெற்றிருக்கக் கூடாது. அதற்கான பழிவாங்கல் தான் இன்று என்னை அல்கராஸ் வீழ்த்தியது.

    மேலும் ஜோகோவிச் நேர்காணலை நிறுத்துவதற்கு முன் கண்ணீர் சிந்தி அழுதார்.

    ஆமாம், என் மகன் இன்னும் சிரித்துக்கொண்டே இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. லவ் யூ, என்னை ஆதரித்ததற்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை, இது போன்ற போட்டிகளில் நாம் ஒருபோதும் தோற்க விரும்புவதில்லை. ஆனால் நன்றாக தெரியும், இந்த கன நேர உணர்ச்சிகள் எல்லாம், தீர்ந்த பின்னர் நான் மிகவும் பெருமை உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் கடந்த காலங்களில் பல நெருக்கமான போட்டிகளில் வென்று பட்டத்தையும் வென்றுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அல்காரஸ் பெறும் இரண்டாவது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.
    • ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், செர்பியாவின் ஜோகோவிச்சை 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    20 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ், விம்பிள்டன் கோப்பைக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இதன்மூலம் விம்பிள்டனில் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு அல்காரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்காரசுக்கு 24.50 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு 12.25 கோடி ரூபாய் கிடைத்தது.

    இந்நிலையில், வெற்றி பெற்ற அல்காரஸ் பேசுகையில், ஜோகோவிச்சை எதிர்த்து ஆடியது அற்புதமான தருணம். அவரைப் பார்த்து தான் டென்னிஸ் விளையாட தொடங்கினேன். நான் பிறந்த காலகட்டத்திலேயே பல பட்டங்களை அவர் வென்றுள்ளார். அவரை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

    தோல்விக்கு பிறகு ஜோகோவிச் பேசுகையில், வெற்றி பெற்ற அல்காரசுக்கு வாழ்த்துக்கள். சிறப்பான வீரரிடம் தோல்வி அடைந்துள்ளேன். தாம் தோற்க வேண்டிய பல சாம்பியன் பட்டங்களை வென்று இருப்பதால், இன்று வெல்ல வேண்டியதை தோற்றுவிட்டேன், இதனால் இரண்டும் சமம் ஆகிவிட்டது என தெரிவித்தார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது.

    தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.

    ஜோகோவிச் விம்பிள்டனில் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை பட்டம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு அல்காரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    கொரோனா பாதிப்பால் 2020-ம் ஆண்டு போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×