search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    விம்பிள்டன் டென்னிஸ் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவாரா? இத்தாலி வீரருடன் இன்று மோதல்
    X

    விம்பிள்டன் டென்னிஸ் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவாரா? இத்தாலி வீரருடன் இன்று மோதல்

    • இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதுகிறார்கள்.
    • 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள ஜோகோ விச் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.

    இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதுகிறார்கள்.

    23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள ஜோகோ விச் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளார்.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நடப்பு சாம்பியனான அவர் விம்பிள்டன் டென்னிசில் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்.

    இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு அரை இறுதியில் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்காரெஸ் (ஸ்பெயின்)-மெட்வடேவ் (ரஷியா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் வோன்ட் ரோசோவா (செக்குடியரசு)-ஜாபியர் (துனிசியா) ஆகியோர் மோதுகிறார்கள்.

    Next Story
    ×