என் மலர்
விளையாட்டு
இதில் பிவி சிந்து 21-14, 21-17 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில் பெய்வென்னிடம் பிவி சிந்து தோற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம்பிடித்துள்ளார். இரண்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
விக்கெட் கீப்பர் பணியையும் சேர்ந்து கவனிப்பதால் அவரை மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கி விளையாட அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
விரைவில் டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் இடம் பிடிப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேஎல் ராகுலின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
கேஎல் ராகுல் குறித்து பிரையன் லாரா கூறுகையில் ‘‘நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் ஏன் சேர்க்கப்படவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவருடைய ஆட்ட நுணுக்கம், அவர் பேட்டிங் செய்வதை நான் பார்த்த வகையில் எந்த அணிக்கு எதிராகவும் அவருக்கு பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை.
அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கான திறனை பெற்றுள்ளார். அவரது இடத்தை தற்காத்துக் கொள்ளும் திறனையும் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்குப் பிறகு முதல் நபராக அவரது பெயரை என்னால் தெரிவிக்க முடியும். எனக்கு பிடித்த பேட்ஸ்மேன் கேஎல் ராகுல்’’ என்றார்.
இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டிகள் தள்ளிப் போகலாம் என அம்மாநில மந்திரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆர்சிபி அணிகள் விளையாட இருக்கும் போட்டிகள் குறித்து மத்திய அரசிடம் ஆலோசனைக் கேட்டுள்ளது கர்நாடக அரசு.
இதுகுறித்து கர்நாடக மாநில மருத்துவக் கல்வி மந்திரி டாக்டர் கே. சுதாகர் கூறுகையில் ‘‘நான் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், கர்நாடக மாநிலத்தில் போட்டிகள் நடைபெறும் வகையில் ஐபிஎல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் போட்டிகள் நடைபெறுவது குறித்து மகாராஷ்டிரா அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது. நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் வழிகாட்டுதல் அறிவுரைக்காக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளேன்’’ என்றார்.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் போன்ற ஆட்டங்களை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா ஒபன் பேட்மிண்டன் தொடர் நடைபெறும் என இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ‘‘திட்டமிட்டபடி மார்ச் 24-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை நடைபெறும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் துாிதமான வகையில் மேற்கொள்ளப்படும். போட்டியை ரசிகர்கள் யாருமின்றி பூட்டிய மைதானத்திற்குள் (Closed Doors) நடத்தும் வாய்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அடங்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வசவாதா மற்றும் புஜாரா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய வசவாதா சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் அரையிறுதியில் குஜராத் அணிக்கெதிராக சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புஜாரா 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது.
சவுராஷ்டிரா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 384 ரன்கள் குவித்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய குஜராத் 425 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் தீப் நான்கு விக்கெட்டும், சர்பாஸ் அகமது 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
இரண்டு அணி வீரர்களும் போட்டிக்கு தயாராகி வருகிறார்கள். கொரோனா வைரஸ் பீதியால் இரு அணி வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டாக்டர்கள் ஆலோசனைப்படி கடைபிடிக்க இருக்கிறார்கள்.
போட்டியின்போது புதுப்பந்தை பளபளப்பாக வீரர்கள் உமிழ்நீரை பயன்படுத்துவார்கள். உமிழ்நீரை தொட்டு பந்தை நன்றாக தேய்ப்பார்கள். இதனால் பந்து ஷைனிங் ஆகி ஸ்விங் ஆகும்.
இப்படி வீரர்கள் செய்தால் நோய் பரவ வாய்ப்புள்ளது. டாக்டர் ஆலோசனைக்கு பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புவனேஷ்வர் குமார் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த விஷயம் குறித்து சிந்தித்துள்ளோம். ஆனால், உமிழ்நீரை பயன்படுத்தமாட்டோம் என்பதை தற்போது என்னால் கூற இயலாது. ஏனென்றால், உமிழ்நீரை பயன்படுத்தாவிடில், பந்தை ஷைனிங் செய்வது எப்படி?.
அப்புறம் எங்களது பந்தை துவம்சம் செய்தால், நாங்கள் சரியாக பந்து வீசவில்லை என்று ரசிகர்கள் கூறுவார்கள். இன்று மாலை அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இதுகுறித்து முடிவு செய்யப்பட்டும். மேலும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்படும்’’ என்றார்.
ஆனால் காயம் காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதனால் வெள்ளி பதக்கம் பெற்றார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவிலும் பலருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது. உலகத்தையே இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.
இந்த போட்டிக்கு தடைவிதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
உலகம் முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 42 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதில் 3 ஆயிரத்து 497 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் வேகமாக பரவி, மனித இனத்துக்கு மிகப்பெரிய சவாலாக திகழும் இந்த வைரஸ் நோய்க்கு மருந்து இல்லை.
மிகப்பெரிய அளவில் அழிவை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஐ.எப்.எல். என்ற கால்பந்து விளையாட்டு போட்டி தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை நடத்தி வருகிறது. நடப்பாண்டில் நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் போட்டியை சுமார் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான ரசிகர்கள் ஒரே நேரத்தில் ஒரே மைதானத்தில் பார்வையிடுவார்கள்.
இதனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் இருந்தால், இந்த வைரஸ் வேகமாக பிறருக்கு பரவ தொடங்கிவிடும். இதனால், மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்.
எனவே, இந்திய கிரிக்கெட் வாரியம் வருகிற 29-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடத்த உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தடைவிதிக்க வேண்டும். இந்த போட்டியை நடத்த அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
புதுடெல்லி:
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோவில் நடந்தது.
2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதிவரை நடக்கிறது.
ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஈட்டி எறியும் வீரர் ஷிவபால்சிங் தகுதி பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் அவர் 85.47 மீட்டர் தூரம் எறிந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் தனது 5-வது முயற்சியில் இதை தொட்டு ஒலிம்பிக்குக்கு முன்னேறினார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற 2-வது ஈட்டி எறியும் வீரர் ஷிவபால் ஆவார். ஏற்கனவே நீரஜ் சோப்ரா தகுதி பெற்று இருந்தார். நீரஜ் கடந்த ஜனவரி மாதம் 87.86 மீட்டர் தூரம் எறிந்து இருந்தார்.
தடகளத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை 6 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவினாஷ் சாப்ளே (3 ஆயிரம் மீட்டர்), ஸ்டீபிள் சேஸ், இர்பான், (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), பாவ்னா ஜாட் (பெண்கள் 20 கிலோ மீட்டர் நடை பந்தயம்), ஆகியோர் முன்னேறி இருந்தனர். இதேபோல 4ஜ்400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா தகுதி பெற்று இருந்தது.
வில்வித்தையில் இருந்து 4 பேரும், குத்துச்சண்டையில் 8 பேரும், துப்பாக்கி சுடுதலில் 15 பேரும், மல்யுத்தத்தில் 4 பேரும், குதிரையேற்றத்தில் ஒருவரும், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இதே போல ஆக்கி ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் தகுதி பெற்றுள்ளது.
இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘கடந்த காலத்தில் நாங்கள் மைக் ஹசி அல்லது மைக்கேல் பெவன் ஆகியோரை தலைசிறந்த வீரர்களாக இருந்தனர். அதேபோல் எம்எஸ் டோனி பினிஷர் பணியில் மாஸ்டர். இங்கிலாந்துக்கு ஜோஸ் பட்லர் சிறப்பாக செயல்படுகிறார்’’ என்றார்.
52 கிலோ எடைபிரிவு அரையிறுதி போட்டியில் அமித் பங்கல் தோல்வியடைந்தார். இதனால் வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல் 69 கிலோ எடைபிரிவில் லோவ்லினா போர்கோகைன் தோல்வியடைந்து வெண்கல பதக்கம் வென்றார். மூன்று பேரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.






