என் மலர்
விளையாட்டு
மும்பை:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்த போட்டியை ஸ்டார் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அதிக அளவில் இந்த போட்டியை டெலிவிஷனில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல ஐ.பி.எல். போட்டி டிஜிட்டலிலும் ஒளிபரப்பாகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த போட்டியை நேடியாக காணலாம்.
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஐ.பி.எல். போட்டி 6 மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரசிகர்கள் போட்யின் வர்ணனையை கேட்க முடியும்.
ஐ.பி.எல். போட்டிக்காக ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் ஹாட்ஸ்டார் நிறுவனம் பல்வேறு சலுகைகளையும் அளித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டியை டிஜிட்டலில் ஒளிபரப்புவதால் விளம்பரம் மூலம் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துக்கு ரூ.2000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியை நேடியாக ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு 95 சதவீத விளம்பரங்கள் பதிவாகி விட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
வழக்கமாக ஒளிபரப்பு செய்யும் நேரத்தைவிட தற்போது கூடுதலாக 30 நிமிட நேரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. போட்டிக்கு முன்னதாக நடைபெறும் அலசல் குறித்த விவாதம் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) ‘யூடியூப்’ சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் நிலைமையை நன்றாக புரிந்து கொண்டு நெருக்கடியான தருணத்திலும் திறமையை வெளிப்படுத்த முடியும். தரமான மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் அங்கம் வகிப்பதால் இந்த ஆண்டு எங்களுக்கு சிறப்பானதாக அமையும் என்றும், கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் நம்புகிறோம். நாங்கள் அதிக தவறுகள் இழைக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் விரைவில் முடிந்த அளவுக்கு வேகமாக செயல்பட முயற்சிக்க வேண்டியது அவசியமானதாகும்.
கடந்த 4 வருடங்களாக நான் அவ்வப்போது தான் 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறேன். தற்போது எனக்கு நிறைய புரிதல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திறமையை மேம்படுத்துவது என்பது இன்னும் சவாலானது தான். 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப்போட்டி (சதம் அடித்தது) மட்டுமின்றி அந்த தொடர் முழுவதும் எனக்கு நன்றாக அமைந்தது. கடந்த ஆண்டில் (2019) சில ஆட்டங்களில் சரியாக ரன்கள் எடுக்காவிட்டாலும் என் திறமை மீது நம்பிக்கை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் என்னை தக்கவைத்தது. மற்ற அணிகளாக இருந்தால் நிச்சயம் என்னை நீக்கி இருப்பார்கள்’ என்றார்.






