என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க ஓபன்: அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் ஏமாற்றம்
Byமாலை மலர்11 Sep 2020 10:31 AM GMT (Updated: 11 Sep 2020 10:31 AM GMT)
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் 3-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறினார்.
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் 3-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தரநிலை பெறாத அஸ்ரென்காவுடம் மோதினார்.
முதல் செட்டை 6-1 என செரீனா வில்லியம்ஸ் எளிதில் கைப்பற்றினார். இதனால் செரீனா வில்லியம்ஸ் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஸ்ரென்கா 2-வது செட்டில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பயனாக 2-வது செட்டை 6-3 என அஸ்ரென்கா கைப்பற்றினார். 3-வது செட்டிலும் அஸ்ரென்கா கையே ஓங்கியது. இதனால் அந்த செட்டையும் 6-3 எனக் கைப்பற்றி 1-, 6-3, 6-3 என செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா - அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் நவோமி ஒசாகா 7(7)-6(1), 3-6, 6-3 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஒவோமி ஒசாகா - அஸ்ரென்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X