என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை நான்கு முறை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியால் கடந்த 2013-ல் இருந்து முதல் போட்டியில் வெற்றி பெற முடியாத சோதனையாக இருந்து வருகிறது.
    ஐ.பி.எல். 2020 சீசன் நேற்று தொடங்கியது. அபு தாபியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    இந்தத் தோல்வி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான சாதனை தொடர்ந்து கொண்டு வருகிறது. மும்பை இந்தியன்ஸ் தொடரை சிறப்பான வகையில் தொடங்கியது கிடையாது. முதலில் தோல்வியடைந்து வாழ்வா? சாவா? என்ற நிலைக்கு வந்து அதன்பின் விஸ்வரூம் பெறும்.

    அந்த அணி கடந்த 2013-ல் இருந்து தொடக்க போட்டியை வென்றது கிடையாது. நேற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததால், தொடர்ச்சியாக 8 சீசன்களில் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

    சிஎஸ்கே, கேகேஆர்,  ஆர்பிஎஸ் அணிகளிடம் தலா இரண்டு முறையும் ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகளிடம் தலா ஒருமுறையும் தோல்வியடைந்துள்ளன.

    மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டிகளில் இதுவரை வெற்றி கண்டதில்லை. இதற்கு முன் ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்தன. நேற்றைய போட்டியின் மூலம் 6-வது முறையாக தோல்வியடைந்துள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட் லீக்கில் ஒரே அணிக்கு கேப்டனாக இருந்து 100 வெற்றிகளை பெற்ற முதல் நபர் என்ற சாதனையை எம்.எஸ். டோனி படைத்துள்ளார்.
    ஐபிஎல் 2020 சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. அம்பதி ராயுடு மற்றும் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் அரைசதம், சாம் கர்ரன் அதிடி ஆட்டம் ஆகியவற்றால் 4 பந்துகள் மீதமுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஒரே அணிக்கு கேப்டனாக 100 வெற்றிகளை தேடிக்கொடுத்தவர் என்ற பெருமையை எம்.எஸ். டோனி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு கேப்டனாக 100 வெற்றிகள் பெற்ற நபர் என்ற பெருமையை பெற்றிருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

    மேலும், லுங்கி நிகிடி பந்தில் குருணால் பாண்ட்யாவை கேட்ச் பிடித்து ஆட்டமிக்கச் செய்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 250 பேர் அவுட்டாக்கிய முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
    அம்பதி ராயுடு, டுபெலிசிசுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இருவரையும் பாராட்டுகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியுள்ளார்.

    அபுதாபி:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று தொடங்கியது. அபுதாபியில் நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. சவுரப் திவாரி 31 பந்தில் 42 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்), குயின்டன் டி காக் 20 பந்தில் 33 ரன்னும் ( 5 பவுண்டரி) எடுத்தனர்.

    நிகிடி 3 விக்கெட்டும், ஜடேஜா, தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டும், பியூஸ் சாவ்லா, சாம் கரண் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 4 பந்து எஞ்சியிருந்த நிலையில் 163 ரன் இலக்கை எடுத்தது. சி.எஸ்.கே. அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அம்பதி ராயுடு 48 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி 3 சிக்சர்), டுபெலிசிஸ் 44 பந்தில் 58 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர். இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 84 பந்தில் 115 ரன் எடுத்தது முக்கிய அம்சமாகும்.

    போல்ட், பேட்டின்சன், பும்ரா, குணால் பாண்ட்யா, ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் 4 முறை மும்பை இந்தியன்சிடம் தோற்றதற்கு சரியான பதிலடி கொடுத்தது.

    இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

    எங்களது ஆட்டத்தில் பல இடங்களில் முன்னேற்றம் தேவை. முதல் போட்டி இதை உணர்த்தியது. இந்த போட்டி மூலம் வீரர்கள் பல வி‌ஷயங்களை உணர்ந்து இருப்பார்கள். ஆடுகளத்தின் தன்மை உள்பட பல்வேறு வி‌ஷயங்களை முதல் போட்டியிலேயே அறிந்து கொள்ள முடியாது.

    பேட்டிங்கில் தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்தது. நாம் முன்னேற்ற பாதையில் இருக்க வேண்டும் என்றால் இது மாதிரியான நிகழ்வு இருக்கக்கூடாது. இதை வீரர்கள் கற்றுக்கொண்டிருப்பார்கள்.

    அம்பதி ராயுடு, டுபெலிசிசுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இருவரையும் பாராட்டுகிறேன். எங்கள் அணியில் சர்வதேச போட்டியில் ஓய்வுபெற்ற வீரர்கள் அதிகமாக உள்ளனர். நல்ல வேளையாக அவர்களுக்கு காயம் ஏற்பட வில்லை.

    அனுபவம் பலன் அளிக்கக்கூடியது. ஒவ்வொருவரும் அதைப்பற்றிதான் பேசுகிறார்கள். 300 ஒருநாள் போட்டியில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். 11 பேர் கொண்ட அணி அனுபவமும், இளமையும் இணைந்ததாக இருக்க வேண்டும். இந்த கலவையால் தான் சிறப்பாக ஆட முடியும்.

    இளம் வீரர்களுக்கு களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அனுபவ வீரர்களின் ஆலோசனை தேவை. ஐ.பி.எல். போட்டியில் 60 முதல் 70 நாட்கள் சீனியர் வீரர்களுடன் இளம் வீரர்கள் இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித்சர்மா கூறும்போது, ‘‘நாங்கள் போதுமான அளவுக்கு ரன்களை எடுக்கவில்லை. சி.எஸ்.கே. வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள்’’ என்றார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 22-ந்தேதி சார்ஜா வில் சந்திக்கிறது.

    மும்பை அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 23-ந்தேதி அபுதாபியுல் எதிர் கொள்கிறது.

    இத்தாலி ஓபன் டென்னிசில் செர்பியாவின் ஜோகோவிச் ஜெர்மனி வீரர் டொமினிக் கோப்பெரை போராடி தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் டொமினிக் கோப்பெரை (ஜெர்மனி) போராடி தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    பெண்கள் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அஸரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி-பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில் துபாயில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இறுதி சுற்றை எட்டாத ஒரே அணியான டெல்லி அணி இந்த முறை மிகுந்த நம்பிக்கையுடன் தயாராகியுள்ளது. ஷிகர் தவான், பிரித்வி ஷா, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஹெட்மயர், ரிஷாப் பண்ட் என்று டெல்லி அணி மிரட்டலான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. அஸ்வின், ரஹானேயின் வருகை கூடுதல் பலம் சேர்க்கும்.

    ஆனால் ரஹானேவுக்கு இடம் கிடைப்பது சந்தேகமே என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘அணி மிகவும் சரியான கலவையில் அமைந்துள்ளது. பேட்டிங்கில் மிடில் வரிசைக்கு தான் நிறைய போட்டி நிலவுகிறது. ரஹானே மூலம் எங்களது பேட்டிங் மேலும் வலுவடைந்துள்ளது. ரிஷாப் பண்ட் கடந்த ஆண்டை போல் இந்த சீசனிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கிறேன். துபாய் ஆடுகளம் அனேகமாக வேகம் குறைந்து தான் இருக்கும். ஆனால் கொஞ்சம் அதிகமாக பவுன்ஸ் ஆகும் என்று நினைக்கிறேன். ஆட்டங்கள் பல நடக்கும் போது ஆடுகளத்தன்மை மாறும். அப்போது சுழற்பந்து வீச்சுக்கு இன்னும் அதிகமாக ஒத்துழைக்கலாம்’ என்றார்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கும்பிளேயின் பயிற்சியில், புதிய கேப்டன் லோகேஷ் ராகுல் தலைமையில் களம் காணுகிறது. சமீபத்தில் இங்கிலாந்து தொடரின் கடைசி ஒரு நாள் போட்டியில் கிளைன் மேக்ஸ்வெல் 7 சிக்சருடன் அதிரடியாக சதம் அடித்தார். அவர் பார்முக்கு திரும்பியிருப்பது பஞ்சாப் அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும். சரியான அணி கலவைக்காக முதல் ஆட்டத்தில் ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்ல் வெளியே உட்கார வைக்கப்படலாம். கரிபியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஓவருக்கு சராசரி 5.29 ரன் வீதமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டிய பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் ஐ.பி.எல்.-லிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மயங்க் அகர்வால், நிகோலஸ் பூரன், சர்ப்ராஸ் கான், முகமது ஷமி, காட்ரெல் என்று தரமான வீரர்கள் அணியில் உள்ளனர்.

    பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘இளமையும், அனுபவமும் கலந்த அருமையான அணியாக உள்ளோம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சீசனை மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் முனைப்புடன் எதிர்நோக்கி இருக்கிறோம்’ என்றார்.

    மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி அதில் 14-ல் பஞ்சாப்பும், 10-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    438 நாள்களுக்கு பிறகு லைவ் கிரிக்கெட் விளையாட வந்த டோனி சந்தித்த முதல் பந்திலேயே அம்பயர் அவுட் கொடுத்தது சென்னை மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
    அபுதாபி:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது.

    அபிதாபியில் நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. இறுதியில்  5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான முதல் போட்டியில் ஏழாவது பேட்ஸ்மேனாக 438 நாட்களுக்கு பிறகு லைவ் கிரிக்கெட் விளையாட வந்த டோனி சந்தித்த முதல் பந்திலேயே அம்பயர் அவுட் கொடுத்தது சென்னை மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பும்ரா வீசிய அந்த பந்து டோனிக்கு இடது பக்கமாக சென்று கீப்பர் டி காக்கை அடைந்தது. அதற்கு மும்பை வீரர்கள் அப்பீல் செய்ய, அம்பயர் ஒரு நொடி கூட யோசிக்காமல் உடனடியாக அவுட் கொடுத்தார்.

    உடனே எதிர்முனையில் நின்று கொண்டிருந்த டுபிளசிஸிடம் தெரிவித்த டோனி, அம்பயரின் முடிவை எதிர்த்து ரீவ்வியூ சென்றார்.

    அதில் டோனியின் பேட்டில் பந்து படவே இல்லை என தெரிந்ததும் டிவி அம்பயர் களத்தில் நின்று கொண்டிருந்த அம்பயரின் முடிவை பின்வாங்கிக் கொள்ளும்படி தெரிவிக்க, நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்றார் டோனி.

    டிஆர்எஸ் முறையை டோ ரிவிவிவ் சிஸ்டம் என அவரது ரசிகர்கள் அன்போடு அழைப்பார்கள். அப்படி, டோனியின் கணிப்பு மற்றொரு முறை தவறாமல் இருந்துள்ளது என அவரது ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
    அம்பதி ராயுடு அதிரடியாக விளையாட மும்பை அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
    துபாய்:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. சவுரவ் திவாரி 42 ரன்களும், டி காக் 33 ரன்களும் எடுத்தனர்.

    சென்னை அணி சார்பில் எங்கிடி 3 விக்கெட்டும், தீபக் சஹர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
     
    இதைத்தொடர்ந்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

    தொடக்கத்திலேயே விஜய் 1 ரன்னிலும், வாட்சன் 4 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பவர் பிளே முடிந்து சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 எடுத்துள்ளது. தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடுவும், டூ பிளசிசும் பொறுப்புடன் ஆடினர்.

    குறிப்பாக, அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு டு பிளசிஸ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதனால் சென்னை அணியின் ரன் வேகம் அதிகரித்தது.

    இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு 48 பந்தில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டூ பிளசிசும் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோற்றதற்கு சென்னை அணி பழி தீர்த்துக் கொண்டது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது.
    அபுதாபி:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டு வருகிறது.

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

    163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன், விஜய் களமிறங்கினர். ஆனால் விஜய் 1 ரன்னிலும், வாட்சன் 4 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

    அடுத்து வந்த டூபிளசிஸ், அம்பதி ராயுடு ஜோடி சிறப்பான ஆட்டத்தி வெளிப்படுத்தியது. ராயுடு 48 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

    சென்னை அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை வெற்றி பெற 4 ஓவர்களில் இன்னும் 42 தேவைப்படுகிறது.

    டூபிளசிஸ் 41 ரன்களுடனும், ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.
    துபாய்:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டு வருகிறது.

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

    163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன், விஜய் களமிறங்கினர். ஆனால் விஜய் 1 ரன்னிலும், வாட்சன் 4 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

    தற்போது பேட்டிங் பவர் பிளே முடிவடைந்தது. சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 எடுத்துள்ளது. அம்பதி ராய்டு 26 ரன்களுடனும்  டூபிளசிஸ் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.
    துபாய்:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டு வருகிறது.

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி மும்பை அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

    தொடக்க வீரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர்.

    ரோகித் சர்மா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 
    ஆனால், மறு முனையில் அதிரடியாக ஆடிய டிகாக் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து சாம் கரன் பந்து வீச்சில் அவுட் ஆனார். 

    பின்னர் வந்த சூர்ய குமார் யாதவ் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய சவ்ரப் திவாரி 42 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

    அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 14 ரன்னிலும் போலாட்டு 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. 

    சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக லிங்கிடி 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹார் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது.
    துபாய்:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டு வருகிறது.

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி மும்பை அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

    தொடக்க வீரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர்.

    நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

    ஆனால், மறு முனையில் அதிரடியாக அடிய டிகாக் 20 பந்துகளில் 33 ரன்கள் 
    எடுத்து சாம் கரன் பந்து வீச்சில் அவுட் ஆனார். சூர்ய குமார் யாதவ் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தற்போது 12 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் மும்பை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.  திவார் 27 ரன்னிலும், பாண்டியா 12 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் பேட்டிங் பவர் பிளேயான முதல் 6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்தது.
    துபாய்:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டு வருகிறது.

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி மும்பை அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

    தொடக்க வீரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர்.

    நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால், மறு முனையில் அதிரடியாக அடிய டிகாக் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து சாம் கரன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    தற்போது பேட்டிங் பவர் பிளேயான முதல் 6 ஓவரில் மும்பை அணி 2 விக்கெட்டுகள் இழந்து 51 ரன்கள் எடுத்துள்ளது. சூர்ய குமார் யாதவ் 1 ரன்னிலும் திவார் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    ×