search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை வீரரை வீழ்த்திய மகிழ்ச்சியில் மும்பை
    X
    சென்னை வீரரை வீழ்த்திய மகிழ்ச்சியில் மும்பை

    ஐபிஎல் கிரிக்கெட்: வாட்சன், விஜய் அவுட் - பவர் பிளேயில் திணறிய சென்னை சூப்பர் கிங்ஸ்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.
    துபாய்:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டு வருகிறது.

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

    163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன், விஜய் களமிறங்கினர். ஆனால் விஜய் 1 ரன்னிலும், வாட்சன் 4 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

    தற்போது பேட்டிங் பவர் பிளே முடிவடைந்தது. சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 எடுத்துள்ளது. அம்பதி ராய்டு 26 ரன்களுடனும்  டூபிளசிஸ் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    Next Story
    ×