என் மலர்
விளையாட்டு

பியூனஸ்அயர்ஸ்:
அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த கால்பந்து சகாப்தம் டிகோ மாரடோனா. உலகம் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பெற்றவர்.
60 வயதான மரடோனா கடந்த 2 வாரத்திற்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவுக்கு ஆபரேஷன் செய்து கொண்டார். நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது மறைவு செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
அர்ஜெண்டினாவின் அடையாளமாக அறியப்பட்ட மரடோனாவின் மறைவை யொட்டி அந்நாட்டில் 3 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அறிவித்திருந்தார். அதன்படி நேற்றில் இருந்து, நாளை வரை துக்கம் கடைப்பிடிக்கப்படும்.
மரடோனாவின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி அந்நாட்டு அதிபர் மாளிகையின் அலுவலக வளாகத்தில் பிரதான அறையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சவப்பெட்டி மீது அர்ஜெண்டினா நாட்டு தேசிய கொடி போர்த்தப்பட்டு இருந்தது. அதோடு அவர் அணிந்த 10-ம் நம்பர் எண் பொறித்த ஜெர்சியும் வைக்கப்பட்டு இருந்தது.
அர்ஜெண்டினா அதிபர் அல்பர்ட்டோ பெர்னான்டஸ், 1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து மரடோனாவின் உடலுக்கு கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்து ரசிகர்கள் தங்களது வாழ்நாள் நாயகனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஒரு கட்டத்துக்கு பிறகு மக்கள் அதிக அளவில் வரத் தொடங்கியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தினரை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.
இதேபோல உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களிலும், மரடோனாவின் படத்துக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் தெருக்களில் மரடோனாவுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு விட்டனர்.
மரடோனாவின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் முன்னாள், இந்நாள் விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இருவரும் காயத்தால், உடல் தகுதி பெறவில்லை. இதனால் அவர்கள் இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லவில்லை.
இஷாந்த் சர்மாவுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியின் தொடக்கத்திலேயே விலகினார். ரோகித் சர்மாவுக்கு இடது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐ.பி.எல்.லில் சில ஆட்டங்கள் விளையாடவில்லை. ஆனால் இறுதிப்போட்டியில் விளையாடி கோப்பையை வென்று கொடுத்தார்.
இருவரது உடல் தகுதியும், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் கண்காணிக்கப்பட்டது. முழுமையாக உடல் தகுதி பெறாததால், முதல் 2 டெஸ்டில் இருவரும் ஆடமாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து இஷாந்த் சர்மா முற்றிலும் விலகி உள்ளார். அவர் உடல் தகுதி மற்றும் தனிமை காலத்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லாததால், டெஸ்ட் தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கடடுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்து டிசம்பர் 11-ந் தேதி மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது. உடல் தகுதி பெறாவிட்டால் அவர் ஆஸ்திரேலியா செல்லமாட்டார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் இன்று தொடங்கியது.
கொரோனா தொற்று பரவலால் இந்திய அணியின் சில தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டன. மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடிய பிறகு இந்திய அணி களம் காணும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. அதுவும் ஸ்டேடியத்தில் கணிசமான அளவுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருப்பதால் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும்.
இந்திய அணியில் காயத்தால் ரோகித் சர்மா இடம் பெறாதது பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகிறது. கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இந்தியாவின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறார்கள். அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்ட இவர்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமாகும்.
ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டும் விராட் கோலி சாதனையின் விளிம்பில் நிற்கிறார். இந்த தொடருக்குள் அவர் 133 ரன்கள் எடுத்தால் 12 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சிறப்பை பெறுவார். பந்து வீச்சில் பும்ரா, ஷமி, ஜடேஜா, சாஹல் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக தென்படுகிறது. ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல் பேட்டிங்கில் மிரட்டக்கூடியவர்கள். உள்ளூர் சூழல் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான அம்சமாகும்.அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மிகச்சிறந்த வீரர். எங்களுக்கு எதிராக நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். அவரின் காயம் துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் இருப்பார் என்று கருதுகிறேன். அகர்வால் சிறப்பாக விளையாடி வருகிறார்’ என்றார். தங்கள் அணி சரியான கலவையில் அமைந்திருப்பதாக கூறிய பிஞ்ச், மைதானத்திற்கு ரசிகர்கள் வருகை தர இருப்பது வீரர்களை உற்சாகப்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்திய அணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஆஸ்திரேலிய வீரர்கள் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
சிட்னி மைதானம் பெரும்பாலும் பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும். சுழற்பந்து வீச்சும் ஓரளவு எடுபடும். கடைசியாக இங்கு நடந்த 7 ஒரு நாள் போட்டிகளில் 6-ல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் முதலில் பேட் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 312 ரன்.
இந்திய அணி இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. வானிலையை பொறுத்தவரை நன்கு வெயில் அடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சிட்னியில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பந்து வீசுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.






