என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
Byமாலை மலர்27 Nov 2020 1:57 PM GMT (Updated: 27 Nov 2020 1:57 PM GMT)
இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்து விளையாடியதால் ஏராளமான ரன்களை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி்யை தழுவியது. இந்தியா முகமது ஷமி, பும்ரா, சைனி, சாஹல், ஜடேஜா ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடியது.
ஒரு பவுலருக்கு பந்து வீச்சு எடுபடவில்லை என்றால், தொடர்ந்து அவரே பந்து வீச வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இன்றைய நிலைமையும் இதுதான்.
முகமது சமி மட்டுமே 60 ரன்களுக்கு கீழ் விட்டுக்கொடுத்தார். பும்ரா (73), சைனி (83), சாஹல் (89), ஜடேஜா (63) அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.
பேட்டிங்கில் விராட் கோலி (21), ஷ்ரேயாஸ் அய்யர் (2), கேஎல் ராகுல் (12) ஏமாற்றம் அளித்தனர். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஹர்திக் பாணட்யா இன்னும் பந்து வீசவில்லை. இது இந்திய அணிக்கு பாதிப்பாக உள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டி குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘போட்டிக்கு தயாராக போதுமான நேரங்கள் எங்களுக்கு கிடைத்தது. ஒரு அணியாக சிறப்பாக செயல்பட முடியாத நிலையில், எந்தவொரு காரணத்தையும் சொல்லி தப்பிய நினைக்கவில்லை.
நாங்கள் அதிக அளவில் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பின்னர், களம் இறங்கிய முதல் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி இதுவாகும். இருந்தாலும் நாங்கள் அதிகமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளோம்.
உடல் அசைவு (body language ) 25-26 ஓவருக்குப்பின் ஏமாற்றம் அளித்தது. பீல்டிங்கில் கோட்டை விட்டால், தரனமான அணி உங்களுக்கு காயத்தை ஏற்படுத்தும்.
சில பார்ட்-டைம் பந்து வீச்சாளர்களிடம் சில ஓவர்களை பெறும் வகையில் நாங்கள் வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
துரதிருஷ்டவசமாக ஹர்திக் பாண்ட்யாவால் தற்போது வரை பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நாங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த பகுதியை நாங்கள் கவனிக்க வேண்டும். எந்தவொரு அணியின் பேலன்ஸ்-க்கும் இது முக்கிய பகுதியாக அமையும். ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் இதை செய்கிறார்கள். எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் வைத்திருக்க முக்கியமானது விக்கெட்டை வீழ்த்துவது. அதை நாங்கள் செய்யவில்லை.’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X