என் மலர்
விளையாட்டு
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டு தோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் நடந்தது.
இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில்தான் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் 2021-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்தியாவில் நடக்குமா? அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்படுமா? என்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்தியாவில் நடத்தப்பட்டால் போட்டி நடக்கும் மைதானங்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்வது என்றும் ஆலோசிக்கப்பட்டது.
14-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 10-ந்தேதி நடக்கிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைத்துக்கொள்ளும் விவரங்களை ஜனவரி 21-ந்தேதி முதல் அந்த மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதோடு அணி மாறும் வீரர்கள் விவரங்களையும் அறிவித்து விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 297 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 286 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் வில்லியம்சன் 112 ரன்னும், ஹென்றி நிக்கோல்ஸ் 89 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 11 ரன்கள் பின்தங்கி கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் நியூசிலாந்து தொடர்ந்து ஆடியது.
நிக்கோல்ஸ் மிகவும் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். 212 பந்துகளில் 10 பவுண் டரியுடன் 100 ரன்னை தொட் டார். 37-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 7-வது சதமாகும்.
ஸ்கோர் 440 இருந்தபோதுதான் இந்த ஜோடி பிரிந்தது. நிக்கோல்ஸ் 157 ரன்னில் முகமது அப்பாஸ் பந்தில் அவுட் ஆனார். 4-வது விக்கெட் ஜோடி 369 ரன் குவித்தது முக்கியமானதாகும். அடுத்து வாட்லிங் களம் வந்தார்.
நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 447 எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அப்போது வில்லியம்சன் 177 ரன்னுடனும், வாட்லிங் 3 ரன்னுடனும் இருந்தனர்.
மழை விட்ட பிறகு போட்டி தொடங்கியதும் வாட்லிங் 7 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து மிச்சேல் ஆட வந்தார். மறுமுனையில் இருந்த வில்லியம்சன் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். 327 பந்தில் 24 பவுண்டரியுடன் அவர் 200 ரன்னை தொட்டார்.
இதேபோல மிச்சேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து நியூசிலாந்து அணி 659 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் வில்லியம்சன் டிக்ளேர் செய்ததாக அறிவித்தார்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை இழந்து 8 ரன்கள் எடுத்திருந்தனர்.
இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 251 ரன்னும் (டிசம்பர் 2020), இலங்கைக்கு எதிராக 242 ரன்னும் (ஜனவரி 2015), வங்கதேசத்துக்கு எதிராக 200 ரன்னும் (பிப்ரவரி 2019) எடுத்து இருந்தார்.
இந்த 4 இரட்டை சதங்களையும் அவர் நியூசிலாந்து மைதானங்களில் தான் அடித்தார். 4-வது இரட்டை சதம் மூலம் நியூசிலாந்து வீரர்களில் அதிக இரட்டை சதம் அடித்த மெக்கலமை வில்லியம்சன் சமன் செய்தார்.
இந்த டெஸ்டில் வில்லியம்சனும், நிக்கோலசும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடியாக 369 ரன் குவித்து சாதனை படைத்தனர். 4-வது விக்கெட்டுக்கு நியூசிலாந்தின் அதிக ரன் இதுவாகும்.
ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணியின் 3-வது சிறந்த ரன் குவிப்பாகும். 1991-ம் ஆண்டு ஜோன்ஸ்- மார்டின்குரோவ் ஜோடி இலங்கைக்கு எதிராக 467 ரன் (3-வது விக்கெட்) குவித்ததே சாதனை ஆகும்.
அதற்கு அடுத்தபடியாக 1972-ல் டர்னர்-ஜார்விஸ் ஜோடி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 387 ரன் குவித்து இருந்தது.
A proud moment to wear the white jersey 🇮🇳 Ready for the next set of challenges 👍🏽#TeamIndia@BCCIpic.twitter.com/TInWJ9rYpU
— Natarajan (@Natarajan_91) January 5, 2021
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டித்தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போதுவரை 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், மெல்போர்ன் மைதானத்தில் கடந்த 2-ம் தேதி பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர்\பேட்ஸ்மேனான கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது அவரது இடது கை மணிக்கட்டில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவருக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுவர 3 வாரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.
இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் கேஎல் ராகுல் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி.யை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தியது. 9-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சென்னை அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு-மும்பை அணிகள் சந்திக்கின்றன.






