என் மலர்tooltip icon

    விளையாட்டு

    14-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 10-ந்தேதி நடக்கிறது.
    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டு தோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் நடந்தது.

    இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில்தான் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் 2021-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இந்தியாவில் நடக்குமா? அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்படுமா? என்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்தியாவில் நடத்தப்பட்டால் போட்டி நடக்கும் மைதானங்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்வது என்றும் ஆலோசிக்கப்பட்டது.

    14-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 10-ந்தேதி நடக்கிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைத்துக்கொள்ளும் விவரங்களை ஜனவரி 21-ந்தேதி முதல் அந்த மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    அதோடு அணி மாறும் வீரர்கள் விவரங்களையும் அறிவித்து விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 48-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூருவை வீழ்த்தியது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூருவை வீழ்த்தியது. மும்பை அணியில் முர்தடா பால் 9-வது நிமிடத்திலும், பிபின்சிங் 15-வது நிமிடத்திலும், ஒபிசே 84-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

    9-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 7-வது வெற்றியை பெற்றதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. பெங்களூரு அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-கோவா அணிகள் சந்திக்கின்றன.
    செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா.
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நேற்றுமுன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியின் அன்ரிச் நோர்ஜே-யின் (6 விக்கெட்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 157 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா டீன் எல்கர் (127), வான் டெர் டுஸ்சென் (67) ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் 302 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 145 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் தொடக்க பேட்ஸ்மேன் கருணாரத்னே 103 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்களில் திரிமானே 31 ரன்களும், டிக்வெல்லா 36 ரன்களும், டி சில்வா 16 ரன்களும் அடித்தனர்.

    மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேற இலங்கை 211 ரன்னில் சுருண்டது. இதனால் 66 ரன்கள் முன்னிலை பெற்று தென்ஆப்பிரிக்கா அணிக்கு 67 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் 2-வது இன்னிங்சில் லுங்கி நிகிடி 4 விக்கெட்டும், சிபாம்லா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 67 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுக்க 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மார்கிராம் 36 ரன்களும், டீன் எல்கர் 31 ரன்களும் சேர்த்தனர்.

    ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
    நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கடந்த மூன்று போட்டிகளில் இரட்டை சதம், சதம், இரட்டை சதம் என 639 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
    நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கொரோனாவால் சுமார் ஆறு மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நிலையில், தற்போது சேர்த்து வைத்து ரன்கள் குவித்து வருகிறார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டிசம்பர் 3-ந்தேதி தொடங்கிய முதல் போட்டியில் 251 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. மனைவிக்கு குழந்தை பிறந்ததால் 2-வது போட்டியில் விளையாடவில்லை.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியிலும் சதம் விளாசினார். முதல் இன்னிங்சில் 129 ரன்களும், 2-வது இன்னிங்சில் 21 ரன்களும் அடித்தார். இந்த போட்டியில் நியூசிலாந்து கடைசி நேரத்தில் பாகிஸ்தானை ஆல்-அவுட் ஆக்கி 101 ரன்னில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் மீண்டும் ஒரு டபிள் செஞ்சூரி (238) ரன்கள் விளாசினார். மூன்று போட்டிகளில் தொடர்ந்து இரட்டை சதம், சதம், இரட்டை சதம் விளாசியுள்ளார்.

    நான்கு இன்னிங்சில் (251, 129, 21, 238) 639 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 159.75 ஆகும். கேன் வில்லியம்சன் ஆட்டத்தை பார்த்து இவர் மனிதனா? அல்லது ரன் மெஷினா? என கிரிக்கெட் விமர்சகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.
    பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டத்தில் வில்லியம்சனின் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 659 ரன்கள் குவித்துள்ளது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 297 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 286 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் வில்லியம்சன் 112 ரன்னும், ஹென்றி நிக்கோல்ஸ் 89 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 11 ரன்கள் பின்தங்கி கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் நியூசிலாந்து தொடர்ந்து ஆடியது.

    நிக்கோல்ஸ் மிகவும் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். 212 பந்துகளில் 10 பவுண் டரியுடன் 100 ரன்னை தொட் டார். 37-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 7-வது சதமாகும்.

    ஸ்கோர் 440 இருந்தபோதுதான் இந்த ஜோடி பிரிந்தது. நிக்கோல்ஸ் 157 ரன்னில் முகமது அப்பாஸ் பந்தில் அவுட் ஆனார். 4-வது விக்கெட் ஜோடி 369 ரன் குவித்தது முக்கியமானதாகும். அடுத்து வாட்லிங் களம் வந்தார்.

    நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 447 எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அப்போது வில்லியம்சன் 177 ரன்னுடனும், வாட்லிங் 3 ரன்னுடனும் இருந்தனர்.

    மழை விட்ட பிறகு போட்டி தொடங்கியதும் வாட்லிங் 7 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து மிச்சேல் ஆட வந்தார். மறுமுனையில் இருந்த வில்லியம்சன் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். 327 பந்தில் 24 பவுண்டரியுடன் அவர் 200 ரன்னை தொட்டார்.

    இதேபோல மிச்சேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து நியூசிலாந்து அணி 659 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் வில்லியம்சன் டிக்ளேர் செய்ததாக அறிவித்தார்.

    இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை இழந்து 8 ரன்கள் எடுத்திருந்தனர்.

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இது அவரது 4-வது இரட்டை சதம் ஆகும்.
    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அவரது 4-வது இரட்டை சதம் ஆகும்.

    இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 251 ரன்னும் (டிசம்பர் 2020), இலங்கைக்கு எதிராக 242 ரன்னும் (ஜனவரி 2015), வங்கதேசத்துக்கு எதிராக 200 ரன்னும் (பிப்ரவரி 2019) எடுத்து இருந்தார்.

    இந்த 4 இரட்டை சதங்களையும் அவர் நியூசிலாந்து மைதானங்களில் தான் அடித்தார். 4-வது இரட்டை சதம் மூலம் நியூசிலாந்து வீரர்களில் அதிக இரட்டை சதம் அடித்த மெக்கலமை வில்லியம்சன் சமன் செய்தார்.

    இந்த டெஸ்டில் வில்லியம்சனும், நிக்கோலசும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடியாக 369 ரன் குவித்து சாதனை படைத்தனர். 4-வது விக்கெட்டுக்கு நியூசிலாந்தின் அதிக ரன் இதுவாகும்.

    ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணியின் 3-வது சிறந்த ரன் குவிப்பாகும். 1991-ம் ஆண்டு ஜோன்ஸ்- மார்டின்குரோவ் ஜோடி இலங்கைக்கு எதிராக 467 ரன் (3-வது விக்கெட்) குவித்ததே சாதனை ஆகும்.

    அதற்கு அடுத்தபடியாக 1972-ல் டர்னர்-ஜார்விஸ் ஜோடி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 387 ரன் குவித்து இருந்தது.
    வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம் என்றும் அடுத்த கட்ட சவால்களை எதிர்கொள்ள தயார் என இந்திய கிரிக்கெட் வீரர் டி நடராஜன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    சிட்னி:

    காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து உமேஷ் யாதவ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக 18 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டார்.

    முதல் முறையாக டெஸ்ட் அணியில் இணைந்துள்ள நடராஜனுக்கு  முன்னணி வீரர்கள் பலர் வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த டி நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் வெள்ளை நிற ஜெர்சி அணிந்து நடராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ’வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம். அடுத்தகட்ட சவால்களை எதிர்கொள்ள தயார்’ என பதிவிட்டுள்ளார்.


    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
    சிட்னி:

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் காயம் காரணமாக விலகி இருக்கிறார். வீட்டில் விழுந்ததில் விலா பகுதியில் ஏற்பட்ட காயத்தால் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் பேட்டின்சன் இடம் பெறமாட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

    பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு முன்பு அவர் முழு உடல் தகுதியை எட்டினால் கடைசி டெஸ்டுக்கான அணியில் சேர்க்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. பேட்டின்சனுக்கு பதிலாக மாற்று வீரர் யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை.
    பேட்டிங் பயிற்சியின்போது இந்திய வீரர் கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.
    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டித்தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கும் இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போதுவரை 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், மெல்போர்ன் மைதானத்தில் கடந்த 2-ம் தேதி பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர்\பேட்ஸ்மேனான கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது அவரது இடது கை மணிக்கட்டில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, அவருக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுவர 3 வாரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.

    இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் கேஎல் ராகுல் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.   
    பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டின் மூன்றாவது நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து 3 விக்கெட்டுக்கு 400 ரன்கள் குவித்துள்ளது.
    கிறிஸ்ட்சர்ச்:

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அசார் அலி 93 ரன்னும், விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஃபாஹிம் அஷ்ரப் 48 ரன்னும், கோஹர் 34 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமிசன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டும், சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், டாம் பிளெண்டல் களமிறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 52 ரன்கள் எடுத்தது. பிளெண்டல் 16 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து டாம் லாதமும் 33 ரன்னில் வெளியேறினார். ராஸ் டெய்லர் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஹென்றி நிகோல்ஸ் வில்லியம்சனுக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார். கேன் வில்லியம்சன் மீண்டும் ஒரு சதமடித்து அசத்தினார்.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் 112 ரன்னுடனும், நிகோல்ஸ் 89 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. கேன் வில்லியம்சன், நிகோல்ஸ் ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். இருவரும் ரன்களை குவித்தனர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு விளாசினர். நிகோல்ஸ் சதமடித்தார். கேன் வில்லியம்சன் 150 ரன்கள் அடித்தார்.

    மூன்றாம் நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 400 ரன்கள் குவித்துள்ளது. கேன் வில்லியம்சன் 153 ரன்னுடனும், நிகோல்ஸ் 138 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தியது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி.யை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தியது. 9-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சென்னை அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு-மும்பை அணிகள் சந்திக்கின்றன.
    செஞ்சூரியனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ஜேயின் (6 விக்கெட்) சிறப்பான பந்து வீச்சால் இலங்கை அணி 157 ரன்னில் சுருண்டது. தொடக்க வீர்ர குசால் பெரேரா அதிகபட்சமாக 60 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கரின் சிறப்பான பேட்டிங்கால் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் விளாசியது. எல்கர் 92 ரன்களுடனும், டுஸ்சென் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டீன் எல்கர் சதம் அடித்து 127 ரன்னில் வெளியேறினார். டுஸ்சென் அரைசதம் அடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த டு பிளிஸ்சிஸ் (8), டி காக் (10), டெம்பா பவுமா (19) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    இலங்கை அணி தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 5 விக்கெட் சாய்த்தார். 145 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

    லுங்கி நிகிடி அபாரமாக பந்து வீசி குசால் பெரேரா (1), குசால் மெண்டிஸ் (0), திரிமனே (31) ஆகியோரை சொற்ப ரன்னில் வீழ்த்தினார். மினோத் பனுகாவை (1) நோர்ஜோ வெளியேற்றினார். இருந்தாலும் திமுத் கருணாரத்னே சிறப்பாக விளையாடி இலங்கையின் ஸ்கோர் உயர்ந்தது.

    2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 5 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கருணாரத்னே 91 ரன்களுடனும், டிக்வெல்லா 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இருவரும் நாளை சிறப்பாக விளையாடினால் இலங்கை அணி 150 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற வாய்ப்புள்ளது. இல்லையெனில் தோல்வியை சந்திக்கும்.
    ×