என் மலர்tooltip icon

    விளையாட்டு

    லாகூரில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் 2-1 எனத் தொடரை வென்றது.
    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் லாகூரில் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானும், 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.

    தொடரை கைப்பற்றுவதற்கான வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி லாகூரில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. டேவிட் மில்லர் அதிகபட்சமாக 45 பந்தில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 85 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 30 பந்தில் 42 ரன்கள் அடித்தார். 3-வது வீரராக களம் இறங்கிய பாபர் அசாம் 30 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார்.

    ஹசன் அலி ஆட்டமிழக்காமல் 7 பந்தில் 20 ரன்கள் விளாச, பாகிஸ்தான் 18.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷாம்சி 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியும் பயனில்லை.

    முகமது நவாஸ் ஆட்ட நாயகன் விருதையும், முகமது ரிஸ்வான் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
    சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் இந்தியா 2-வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுக்க, 2-வது நாள் ஆட்ட முடிவில் 249 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ரோகித் சர்மா 161 ரன்களும்,  ரஹானே 67 ரன்களும், ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும் எடுத்தனர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். மொயீன் அலி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே ரோரி பேர்ன்ஸை இஷாந்த் சர்மா சாய்த்தார். அதன்பின் அஷ்வின், அக்சார் பட்டேல் சுழற்பந்து வீச்சில் அசத்த இங்கிலாந்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது.

    அஷ்வின் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட் சாய்க்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 59.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 134 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சார் பட்டேல், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா முதல் இன்னிங்சில் 195 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    195 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைத்ததால் ஷுப்மான் கில், ரோகித் சர்மா தடுமாறினர். ரோகித் சர்மா இன்று முழுவதும் தாக்குப்பிடிக்க ஷுப்மான் கில் 14 ரன்னில் ஜேக் லீச் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து புஜாரா களம் இறங்கினார்.

    இந்தியா இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 25 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் உள்ளது.

    தற்போது வரை இந்தியா 249 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கைவசம் 9 விக்கெட் உள்ளது. 300 ரன்கள் முன்னிலைப் பெற்றாலே இங்கிலாந்து அணியால் சேஸிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். இதனால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
    டாக்காவில் நடைபெற்ற வங்காளதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
    வங்காளதேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் போட்டியில் 390-க்கும் மேலான இலக்கை வெஸ்ட் இண்டீஸ் எட்டி அபார வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் 2-வது டெஸ்ட் டாக்காவில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 409 ரன்கள் குவித்தது. 2-வது நாளில் இருந்து ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதனால் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 296 ரன்னில் சுருண்டது.

    113 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. வங்காளதேச அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 117 ரன்னில் சுருண்டது. தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 113 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் ஒட்டுமொத்தமாக 230 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    இதனால் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 46 பந்தில் 50 ரன்கள் அடித்து நல்ல தொடக்கம் கொடுத்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து கொண்டே இருந்தனர்.

    இதனால் போட்டி பரபரப்பாகவே சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் 188 ரன்கள் எடுப்பற்குள் வங்காளதேசம் 9 விக்கெட்டை இழந்தது, ஆனால் மெஹிதி ஹசன் அதிரடியாக விளையாடியதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. என்றாலும் துணிச்சலாக நம்பிக்கையுடன் பந்து வீசிக் கொண்டிருந்தனர். வங்காளதேச அணியின் ஸ்கோர் 213 ரன்னாக இருக்கும்போது, மெஹிதி ஹசன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-0 எனக் கைப்பற்றியது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய கார்ன்வெல், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார்.
    சென்னை சேப்பாக்கம் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 329 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும், உதிரியாக ஒரு ரன் கூட கொடுக்காமல் சாதனைப் படைத்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்தது.

    இதில் ஒரு விஷேசம் என்ன வென்றால் 329 ரன்களையும் இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்தே எடுத்தனர். இங்கிலாந்து வைடு, நோ-பால், பை, லெக் பை என உதிரியாக ஒரு ரன் கூட கொடுக்கவில்லை.

    சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து நன்றாக டர்ன் ஆகிய நிலையிலும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் சிறப்பாக கீப்பிங் செய்தார்.

    329 ரன்கள் வரை உதிரியாக ஒரு ரன் கூட கொடுக்காததன் மூலம் 66 வருட கிரிக்கெட் சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது. இதற்கு முன் 1955-ல் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக உதிரியாக ஒரு ரன்கூட கொடுக்காமல் பாகிஸ்தானை 328 ரன்னில் ஆல்-அவுட் ஆக்கியது.

    தென்ஆப்பிரிக்கா எதிராக 252, 247 என இரண்டு முறை இங்கிலாந்து உதிரி ரன்கள் கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 236 ரன்களில் உதிரி ஏதும் கொடுக்கவில்லை.
    இடது கை பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக விளங்கும் அஷ்வின், 200 முறை அவர்களை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோருக்குப்பின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஷ்வின் திகழ்ந்து வருகிறார். இந்திய ஆடுகளத்தில் அவரை எதிர்த்து விளையாடுவது எளிதான காரியம் அல்ல.

    குறிப்பாக இடது கை பேடஸ்மேன்களை மிக அதிக அளவில் திணறடிப்பார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஜோ ரூட், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இடது கை பேட்ஸ்மேன்கள்.

    இருவரையும் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 முறை இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன் எந்தவொரு பந்து வீச்சாளர்களும் இத்தனை முறை இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
    சென்னை சேப்பாக்கம் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் அஷ்வின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 134 ரன்னில் சுருண்டது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ரோகித் சர்மா 161 ரன்களும்,  ரஹானே 67 ரன்களும், ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும் எடுத்தனர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். மொயீன் அலி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே ரோரி பேர்ன்ஸை இஷாந்த் சர்மா சாய்த்தார். அதன்பின் அஷ்வின், அக்சார் பட்டேல் சுழற்பந்து வீச்சில் அசத்த இங்கிலாந்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது.

    இஷாந்த் சர்மா

    அஷ்வின் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட் சாய்க்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 59.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 134 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சார் பட்டேல், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    195 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா, ஒசாகா கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-வது வரிசையில் உள்ள நமோமி ஒசாகா (ஜப்பான்)-14-ம் நிலை வீராங்கனையான கார்பின் முகுருஜா (ஜெர்மனி) மோதினார்கள்.

    இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. முதல் செட்டை முகுருஜா 6-4 என்ற கணக்கில் வென்றார். ஆனால் அதற்கு அடுத்த செட்டில் ஒசாகா சுதாரித்து ஆடி 6-4 என்ற கணக்கில் வென்றார்.

    அதே உத்வேகத்துடன் விளையாடி 3-வது செட்டையும் அவர் 7-5 என்ற கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர்: 4-6, 6-4, 7-5.

    முகுருஜா கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் இறுதி போட்டி வரை முன்னேறி இருந்தார். ஆனால் தற்போது 4-வது சுற்றோடு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

    10-வது வரிசையில் உள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்றில் பெலாரசை சேர்ந்த சபலென்காவை எதிர்கொண்டார். இதில் செரீனா 6-4, 2-6, 6-4 என் செட் கணக்கில் வென்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் சூவி 6-4, 6-2 என்ற கணக்கில் வாண்டரஸ் சோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    சென்னையில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.
    சென்னை:

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் துவக்க வீரர் ரோகித் சர்மா அபாராமாக ஆடினார். ஆனால் மறு முனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.

    சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். துணை கேப்டன் ரகானே(67 ரன்கள்)  ஓரளவு சிறப்பாக ஆடினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 88 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் குவித்து இருந்தது. 

    2- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் அக்சர் படேல் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. எனினும், அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார். ஆனால், மறு முனையில் யாரும் நிலைத்து நிற்காததால் இந்திய அணி 95.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 329- ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

    இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் பேட் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் 2 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா, அக்சர் படேல் தலா 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர். பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

    சென்னையில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்தது.
    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்குடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது.அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா, 161 ரன்கள் குவித்தார். ரகானே 67 ரன்கள் சேர்த்தார்.

    இந்நிலையில் இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்தது. அக்சர் பட்டேல் 5 ரன்களிலும், இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். அரை சதம் கடந்த ரிஷப் பன்ட், தொடர்ந்து நிதானமாக ஆடினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. 96வது ஓவரில் குல்தீப் யாதவ் (0), முகமது சிராஜ் (4) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரிஷப் பன்ட் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இங்கிலாந்து அணி தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஓலி ஸ்டோன் 3 விக்கெட், ஜேக் லீச் 2 விக்கெட், ஜோ ரூட் ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. துவக்க வீரர் ரோரி பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் இஷாந்த் சர்மாவிடம் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் டாம் சிப்லி, லாரன்ஸ் இருவரும் நிதானமாக ஆடினர்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், மெத்வதேவ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 69-ம் நிலை வீரரான கேமரூன் நோர்ரியை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பானக நடைபெற்ற  இந்த ஆட்டத்தில் நடால் 7-5, 6-2, 7-5 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 14-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் 6-3, 6-3, 4-6, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் போராடி செர்பியாவின் கிராஜ்னோவிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.
    சர்வதேச டென்னிசில் மெத்வதேவ் தொடர்ச்சியாக பெற்ற 17-வது வெற்றி இதுவாகும். அத்துடன் 5 செட் வரை நீடித்த ஒரு ஆட்டத்தில் மெத்வதேவ் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
    டாக்காவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்துள்ளது.
    டாக்கா:

    வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போனர் 90 ரன்னிலும், சில்வா 92 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 82 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 409 ரன்கள் குவித்தது.
     
    வங்காளதேசம் அணி சார்பில் அபு ஜயத், தைஜுல் இஸ்லாம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 71 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. அந்த அணியின் ரஹிம் 54 ரன்னும், விக்கெட் கீப்பர் லித்தன் தாஸ் 71 ரன்னும், மெஹிதி ஹசன் 57 ரன்னும் எடுத்தனர். இறுதியில், வங்காளதேசம் 296 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கார்ன்வால் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, 113 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
    லாகூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.
    லாகூர்:

    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் அரை சதம் (51 ரன்) அடித்து ஆட்டமிழந்தார். பஹிம் அஷ்ரப் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிரிடோரியஸ் அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 145 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர் ரீஸா ஹென்ரிக்ஸ், வான் பிஜியன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹென்ரிக்ஸ் மற்றும் வான் பிஜியன் தலா 42 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி 16.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் 25 ரன்னும், கிளாசன் 17 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    தென் ஆப்பிரிக்கா அணியின் பிரிடோரியஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
     
    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி 14-ம் தேதி நடைபெற உள்ளது.
    ×