என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சொந்த மண்ணில் கேப்டனாக அதிக வெற்றி என்ற சாதனைப் பட்டியலில் எம்எஸ் டோனியுடன் இணைந்துள்ளார் விராட் கோலி.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 482 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 164 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதல் இன்னிங்சில் 5 விக்கெட், 2-வது இன்னிங்சில் சதம், 3 விக்கெட் வீழ்த்திய அஷ்வின் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

    விராட் கோலி தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் பெற்ற 21-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் பட்டியலில் எம்எஸ் டோனியுடன் இணைந்துள்ளார் விராட் கோலி. எம்எஸ் டோனி தலைமையில் இந்திய அணி இந்திய மண்ணில் 21 வெற்றிகள் பெற்றிருந்தது. தற்போது விராட் கோலி  அதை சமன் செய்துள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    சென்னை:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

    அதிகபட்சமாக ரோகித் சர்மா 161 ரன்னும், ரஹானே 67 ரன்னும், ரிஷாப் பண்ட் ஆட்டம் இழக்காமல் 58 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 134 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஆர்.அஸ்வின் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, அஸ்வினின்(106 ரன்கள்) அபார சதம், விராட் கோலியின் (62 ரன்கள்) பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால்  286- ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    இதன் மூலம் இங்கிலாந்துக்கு 482 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.

    இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து திணறியது. இன்று 4- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இந்திய அணியின் அக்‌ஷர் படேல், அஸ்வின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். 54.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 17-ம் நிலை வீரரான இத்தாலியின் பாபியோ போக்னினியை எதிர்கொண்டார்.

    2 மணி 16 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் போக்னினியை விரட்டியடித்து 13-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் நாட்டு வீரர் சிட்சிபாஸ்சை சந்திக்க இருந்த 10-ம் நிலை வீரரான இத்தாலியின் பெரேட்டினி முந்தைய சுற்று ஆட்டத்தின் போது வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் குணமடையாததால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் சிட்சிபாஸ் 4-வது சுற்றில் ஆடாமலேயே 2-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் ரபெல் நடால்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-4, 6-2, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் மெக்டொனால்டை தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் கால் பதித்தார். மெட்விடேவ் தொடர்ச்சியாக பெற்ற 18-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 29 நிமிடம் தேவைப்பட்டது. இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-2, 7-6 (7-3) என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் போது அவரை எதிர்த்து ஆடிய 28-ம் நிலை வீரரான காஸ்பெர் ரூட் (நார்வே) வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இதனால் ஆந்த்ரே ரூப்லெவ் வெற்றி பெற்று முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் மெட்விடேவ்-ஆந்த்ரே ரூப்லெவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் 57-ம் நிலை வீராங்கனையான செல்பி ரோஜர்சை (அமெரிக்கா) விரட்டியடித்து தொடர்ந்து 3-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

    தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் செக்குடியரசு வீராங்கனை கரோலினா முசோவா 7-6 (7-5), 7-5 என்ற நேர்செட்டில் 16-வது இடத்தில் உள்ள எலிசி மெர்டென்சுக்கு (பெல்ஜியம்) அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கால்இறுதியில் கரோலினா முசோவா, ஆஷ்லி பார்ட்டியை எதிர்கொள்கிறார்.

    இதேபோல் 61-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 6-1, 7-5 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் டோனா வெகிச்சை வெளியேற்றி முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி கண்டார். கால்இறுதியில் ஜெனிபர் பிராடி- ஜெசிகா பெகுலா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2-வது இன்னிங்சில் அஷ்வின் சதம் விளாச இந்தியா 286 ரன்கள் அடித்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

    பந்து மிகப்பெரிய அளவில் டர்ன் ஆகும் நிலையில் 482 ரன்கள் இலக்கை எதிர்பார்க்க முடியாத நிலை என்ற சூழ்நிலையில் இங்கிலாந்து களம் இறங்கியது. இங்கிலாந்து அணி 17 ரன்கள் எடுத்திருந்தபோது தொடக்க ஜோடியை சாய்த்தார் அக்சார் பட்டேல். டாம் சிப்லி 3 ரன் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேறினார்.

    அடுத்து வந்த டொமினிக் லாரன்ஸ் அடித்து விளையாட தொடங்கினார். மறுமுனையில் ரோரி பேர்ன்ஸ் 25 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் வெளியேறினார். நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஜேக் லீச் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் களம் இறங்கினார். கடைசி ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்து ஜோ ரூட்டின் பேடில் பட்டது. அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இந்தியா ரிவியூ சென்றது. பந்து ஸ்டம்பை தாக்கினாலும், நடுவர் முடிவு என அறிவிக்கப்பட்டது. இதனால் ஜோ ரூட் அவுட்டில் இருந்து தப்பினார்.

    இங்கிலாந்து இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் 7 விக்கெட் உள்ள நிலையில், 429 ரன்கள் தேவை.
    கட்டமைப்பை முன்னேற்றியதால்தான் இந்தியா உலகின் டாப் கிரிக்கெட் அணியாக உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகின் தலைசிறந்த அணியாக விளங்கியது. ஆனால் தற்போது அந்த அணியால் உலக அணிகளுக்கு சமமாக ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. ஆசிய கண்டத்தில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணி எது என்றால், அது பாகிஸ்தானாகத்தான் இருந்தது.

    அதே சமயம் இந்திய அணி தலைசிறந்த அணியாக தற்போது விளங்கி வருகிறது. இதற்கு இந்தியாவின் கிரிக்கெட் கட்டமைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம்தான் காரணம் என பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில் ‘‘தற்போது இந்தியாவை பார்த்தீர்கள் என்றால், உலகின் டாப் அணியாக திகழ்கிறது. ஏனென்றால், நாம் அவர்களைவிட திறமையானவர்களை பெற்றிருந்த போதிலும், அவர்கள் அவர்களுடைய கட்டமைப்பில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

    அதேபோல் பாகிஸ்தானிலும் கட்டமைப்பை வலுப்படுத்தி அணியை தயார் செய்ய சிறிது காலம் பிடிக்கும். ஆனால், பாகிஸ்தான் அணி உலகின் சிறந்த அணியாகும் என்பதை நான் நம்புகிறேன்.

    உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், தற்போது கிரிக்கெட் பற்றி யோசிக்க நேரம் கிடைப்பதில்லை. போட்டியை கூட பார்ப்பதில்லை. ஆனால், தற்போது எங்களுடைய கிரிக்கெட் கட்டமைப்பு மாற்றம் அடைந்துள்ளது. இது மெதுவாக முன்னேற்றம் அடையும்’’ என்றார்.
    அஷ்வின் சதம் அடிக்க, விராட் கோலி அரைசதம் அடிக்க இந்தியா 2-வது இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆக, இங்கிலாந்து வெற்றிக்கு 482 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்தது. முதல் பந்தில் இருந்து சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகள் டர்ன் ஆக ஆரம்பித்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க கஷ்டப்பட்டனர். என்றாலும் ரோகித் சர்மா 161 ரன்களும், ரஹானே 67 ரன்களும், ரிஷப் பண்ட் 58 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி 4 விக்கெட்டும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 134 ரன்னில் சுருண்டது. அஷ்வின் ஐந்து விக்கெட் அள்ளினார். இங்கிலாந்து அணியில் பென் போக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார்.

    195 ரன்கள்  முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வருவதால் இந்திய பேட்ஸ்மேன்கள் 2-வது இன்னிங்சில் திணறினார்கள். ஒரு கட்டத்தில் இந்தியா 106 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது. ஷுப்மான் கில் (14), ரோகித் சர்மா (26), புஜாரா (7), ரஹானே (8), ரிஷப் பண்ட் (10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    7-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. விராட் கோலி அரைசதம் அடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 96 ரன்கள் சேர்த்தது.

    மறுமுனையில் அஷ்வின் அபாரமாக விளையாடி 134 பந்தில் சதம் விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் அஷ்வினின் ஐந்தாவது சதம் இதுவாகும். கரடு முரடான ஆடுகளத்தில் நிலைத்து நின்று விளையாடுவதே பெரிய விஷயம். ஆனால் அஷ்வின் சதம் அடித்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

    ரஹானே விக்கெட்டை வீழ்த்திய மொயீன் கான்

    தொடர்ந்து விளையாடிய அவர் 106 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா 2-வது இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஜேக் லீச், மொயீன் அலி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    ஒட்டுமொத்தமாக இந்தியா 481 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. மிகப்பெரிய இலக்கு எட்ட வேண்டிய சூழ்நிலையில் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
    சென்னை சேப்பாக்கம் 2-வது டெஸ்டில் கரடு முரடான ஆடுகளத்தில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அஷ்வின் சதம் விளாசி அசத்தினார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 134 ரன்னில் சுருண்டது.

    ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வருவதால் இந்திய பேட்ஸ்மேன்கள் 2-வது இன்னிங்சில் திணறினார்கள். ஒரு கட்டத்தில் இந்தியா 106 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. விராட் கோலி அரைசதம் அடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அஷ்வின் அபாரமான விளையாடி 134 பந்தில் சதம் விளாசினார். இந்த ஜோடி 96 ரன்கள் சேர்த்தது.

    சர்வதேச கிரிக்கெட்டில் அஷ்வினின் ஐந்தாவது சதம் இதுவாகும். கரடு முரடான ஆடுகளத்தில் நிலைத்து நின்று விளையாடுவதே பெரிய விஷயம். ஆனால் அஷ்வின் சதம் அடித்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் இந்திய மண்ணில் அதிக விக்கெட் எடுத்து 2-வது என்ற பெருமையை அஸ்வின் தட்டி சென்றார்.

    சேப்பாக்கம் டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வினின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. சுழற்பந்து வீரரான அவர் 43 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய மண்ணில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் கும்ப்ளேக்கு அடுத்தபடியாக அஸ்வின் 2-வது இடத்தை பிடித்தார். அவர் ஹர்பஜன்சிங்கை முந்தினார்.

    35 வயதான அஸ்வின் 76 டெஸ்டில் 391 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதில் இந்தியாவில் 268 விக்கெட் (45 டெஸ்ட்) எடுத்துள்ளார். சொந்த மண்ணில் கும்ப்ளே 350 விக்கெட் (63) வீழ்த்தி உள்ளார். ஹர்பஜன் சிங் 265 விக்கெட் (55) எடுத்துள்ளார். ஆனால் சராசரியில் கும்ப்ளே யை விட அஸ்வின் சிறப்பான நிலையில் உள்ளார்.

    இடக்கை பேட்ஸ்மேனான ஸ்டூவர்ட் பிராட்டை அஸ்வின் அவுட் செய்தார். இதன் மூலம் அவர் டெஸ்டில் இடது கை பேட்ஸ்மேன்களில் 200 விக்கெட் கைப்பற்றிய (மொத்த விக்கெட் 398 ) முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். தற்போதுள்ள வீரர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) 190 விக்கெட்டுடன் 3-வது இடத்தில் உள்ளார். அஸ்வின் 29-வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5-வது நிகழ்வாகும். கும்ப்ளேவுக்கு அடுத்தப்படியாக உள்ளார். இவர் 35 முறை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார்.

    சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மோசமானதா? என்பது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மற்றும் வார்னே டுவிட்டரில் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    சேப்பாக்கம் ஆடுகளத்தில் முதல் நாளில் இருந்தே பந்து திரும்பியதால் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். ஆனாலும் இந்திய வீரர்களில் ரோகித்சர்மா, ரகானே, ரி‌ஷப்பண்ட் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள்.ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் சிறப்பாக ஆட முடியவில்லை.

    இதற்கிடையே இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சேப்பாக்கம் ஆடுகளத்தை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டார். இதற்கு ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே பதில் அளித்தார். இருவருக்கும் இடையே நடந்த வாதம் டுவிட்டரில் வார்த்தை போராக மாறியது. அதன் விவரம் வருமாறு:-

    வாகன்:- சேப்பாக்கம் ஆடுகளம் அதிர்ச்சிகரமாக உள்ளது. இந்தியா சிறப்பாக ஆடியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இது 5 நாள் நடைபெறும் டெஸ்ட் ஆட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட ஆடுகளம் அல்ல.

    வார்னே:- டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானது. காரணம் முதல் டெஸ்டில் முதல் 2 நாட்களில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. ஆனால் 2-வது டெஸ்டில் முதல் நாளில் இருந்தே பந்து திரும்புகிறது. இங்கிலாந்து அணி இந்தியாவை 220 ரன்களுக்கு சுருட்டி இருக்க வேண்டும்.

    இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை ரோகித் சர்மா நிரூபித்து காட்டி உள்ளார்.

    வாகன்:- இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ததை போல் முதல் டெஸ்டில் ஆடி இருந்தால் டிரா செய்து இருக்கலாம். இந்த ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்தது அல்ல.

    வார்னே:- முதல் டெஸ்டில் கடைசி சில நாட் களில் தான் ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்தது. இந்தியாவுக்கு வாய்ப்பு இல்லை என்ற போது ஆடுகளம் குறித்து யாரும் ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

    இந்த டெஸ்டில் குறைந்த பட்சம் இரண்டு அணிகளுக்கும் முதல் பந்தில் இருந்தே ஒரே நிலை தான். இங்கிலாந்து மோசமாக பந்து வீசியது. ரோகித், ரி‌ஷப்பண்ட், ரகானே ஆகியோர் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை காண்பித்துள்ளனர்.

    பந்து பிட்ச் ஆன பிறகு பாதையில் விலகுவதற்கும், சுழல்வதற்கும் வித்தியாசம் இல்லை. பேட்டிங்குக்கும், பந்து வீச்சுக்கும் இடையே எப்போதும் நியாயமான போட்டி வேண்டும்.

    இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை விட இந்தியா சிறப்பாக பேட்டிங் செய்துள்ளது. அபாரமாக பந்தும் வீசியுள்ளது. இந்த ஆடுகளம் அதிகப்படியாக பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது.

    வாகன்:- அனைத்து வகையிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால் முதல் பந்தில் இருந்தே ஆடுகளம் ஒரே மாதிரி இல்லை. உள்நாட்டில் சாதகம் பெற ஆடுகளத்தை எப்படி வேண்டுமோ அப்படி தயாரித்துக்கொள்ளலாம்.

    ஆனால் டெஸ்ட் ஆட்டத்துக்கு இந்த ஆடுகளம் மோசமானது. நான் இந்திய அணியாக இருந்திருந்தால் இதையே தான் செய்திருப்பேன்.

    இவ்வாறு இருவரும் டுவிட்டரில் சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து விவாதித்து கொண்டனர்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன் குவித்தது. இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 134 ரன்னில் சுருண்டது.

    பென் போக்ஸ் அதிகபட்சமாக 42 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். அஸ்வின் 5 விக்கெட்டும், இசாந்த் சர்மா, அக்‌ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    195 ரன்கள் முன்னிலையில் 2-வதுஇன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன் எடுத்து இருந்தது.

    சுப்மன் கில் 14 ரன்னில் ஜேக் லீச் பந்தில் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா 25 ரன்னிலும் , புஜாரா 7 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 249 ரன்கள் முன்னிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.

    ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. 65 ரன்னில் 4 விக்கெட்டுகள் விழுந்தன.

    ரோகித்சர்மா 26 ரன்னிலும், ரி‌ஷப்பண்ட் 8 ரன்னிலும் லீச் பந்தில் ஆட்டம் இழந்தனர். புஜாரா 7 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

    ரகானே 10 ரன் எடுத்து இருந்த போது மொய்ன் அலி பந்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அக்‌ஷர் படேல் 7 ரன்னிலும் வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 106 ஆக இருந்தது. பந்து வீச்சுக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் விக்கெட்டுகள் எளிதில் விழுகின்றன. இதனையடுத்து விராட் கோலியும் அஸ்வினும் நிதானாமாக ஆடி வருகின்றனர்.

    உணவு இடைவேளை வரை இந்திய அணி 351 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று உள்ளது. இதனால் இந்த டெஸ்டில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இந்த டெஸ்டை பொறுத்த வரை இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேறினார்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6, (7-4), 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் 14-ம் நிலை வீரரான மிலோஸ் ராவ்னிக்கை (கனடா) வெளியேற்றி 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச் பெற்ற 300-வது வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட்டில் செர்பியாவின் துசன் லாஜோவிச்சை சாய்த்து தொடர்ந்து 2-வது முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
    லாகூரில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் 2-1 எனத் தொடரை வென்றது.
    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் லாகூரில் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானும், 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.

    தொடரை கைப்பற்றுவதற்கான வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி லாகூரில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. டேவிட் மில்லர் அதிகபட்சமாக 45 பந்தில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 85 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 30 பந்தில் 42 ரன்கள் அடித்தார். 3-வது வீரராக களம் இறங்கிய பாபர் அசாம் 30 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார்.

    ஹசன் அலி ஆட்டமிழக்காமல் 7 பந்தில் 20 ரன்கள் விளாச, பாகிஸ்தான் 18.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷாம்சி 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியும் பயனில்லை.

    முகமது நவாஸ் ஆட்ட நாயகன் விருதையும், முகமது ரிஸ்வான் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
    ×